Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   16 JAN, 2024 | 04:52 PM

image
 

இந்திய கோடீஸ்வரர் முகேஸ்அம்பானி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வத்தினைவெளியிட்டுள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தனது ஜியோ பிளாட்போர்ம்  நிறுவனத்தின் ஊடாக  தொலைத்தொடர்பு வர்த்தகத்திற்குள் ஆழமாக கால்பதிக்க எண்ணியுள்ள முகேஸ் அம்பானி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வத்தினைவெளியிட்டுள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது.

சமீபத்தைய நிதி நெருக்கடிகாரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு புத்துயுர் கொடுப்பதற்காக அதிகாரிகள் பல நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில்  நஸ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் தொடர்பில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொமின் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக நவம்பர் பத்தாம் திகதிக்குள் இலங்கை விண்ணப்பங்களை கோரிய நிலையில் முகேஸ் அம்பானியின் ஜியோ பிளட்போர்ம் இது குறித்து ஆர்வம் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 12ம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம் ஸ்ரீலங்கா டெலிகொமின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வம் வெளியிட்டுள்ளவர்களில் ஜியோ பிளாட்போர்மும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம்  ரிலையன்சின் ஜியோ உலகளாவிய தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்து  ஆதிக்கம் செலுத்தலாம் என நம்புகின்றது . தற்போது ஜியோ இந்திய சந்தையில் முன்னணியில் காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/174082

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா பாஸ்கரனைக் கூப்பிடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kapithan said:

லைக்கா பாஸ்கரனைக் கூப்பிடுங்கள். 

இப்போது மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அம்பானி, லைக்கா, இன்னுமொரு சீன நிறுவனம்.

இப்போதே SLT தொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Cruso said:

இப்போது மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அம்பானி, லைக்கா, இன்னுமொரு சீன நிறுவனம்.

இப்போதே SLT தொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்பம். 

போட்டி லைக்காவிற்கும் அம்பானிக்கும்தான்.

லைக்கா வெற்றி பெறுகிறதோ இல்லையோ லைக்காவுடன் அம்பானி போட்டிக்கு வந்ததே பெரிய  விசயம்தானே 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

போட்டி லைக்காவிற்கும் அம்பானிக்கும்தான்.

லைக்கா வெற்றி பெறுகிறதோ இல்லையோ லைக்காவுடன் அம்பானி போட்டிக்கு வந்ததே பெரிய  விசயம்தானே 🤣

இந்தியர்களுக்கு கொடுக்க கூடாது என்பதுதான் இங்குள்ள சீனாவாதிகளின் போராட்டமே. அப்படி அதையும் மீறி கொடுக்கிறார்களா என்று பார்ப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

போட்டி லைக்காவிற்கும் அம்பானிக்கும்தான்.

லைக்கா வெற்றி பெறுகிறதோ இல்லையோ லைக்காவுடன் அம்பானி போட்டிக்கு வந்ததே பெரிய  விசயம்தானே 🤣

அம்பானி எப்படி இப்போ திடீரெனெ மிகுந்த பணக்காரர் ஆகிறார் என்பது தெரிந்தால் 

ஸ்ரீலங்கா டெலிகாம் அவருக்குத்தான் போகவேண்டும் என்றே 
ஐ எம் எவ் சொல்கிறது.........  கை நீட்டி கடன் வாங்கிய இலங்கை 
இனி மல்லுக்கட்ட பெரிதாக ஒன்றும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

அம்பானி எப்படி இப்போ திடீரெனெ மிகுந்த பணக்காரர் ஆகிறார் என்பது தெரிந்தால் 

ஸ்ரீலங்கா டெலிகாம் அவருக்குத்தான் போகவேண்டும் என்றே 
ஐ எம் எவ் சொல்கிறது.........  கை நீட்டி கடன் வாங்கிய இலங்கை 
இனி மல்லுக்கட்ட பெரிதாக ஒன்றும் இல்லை 

குட்டு வேண்டினாலும் மோதிரக் கையால் குட்டு வேண்ட வேண்டும். 

😁

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்திய பாதுகாப்பு, மற்றும் உளவு சம்பந்தப்பட்ட விவகாரமாக இருக்க வாய்ப்பிருக்கும் என கருதுகிறேன், இலங்கை அரசின் தகவல் பரிமாற்றம் ஒரு நெருக்கடிக்குள் தள்ளப்படலாம், சில தேசிய நிறுவனங்களை வெளியாருக்கு விற்க கூடாது, எனது கருத்து தவறாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

இது இந்திய பாதுகாப்பு, மற்றும் உளவு சம்பந்தப்பட்ட விவகாரமாக இருக்க வாய்ப்பிருக்கும் என கருதுகிறேன், இலங்கை அரசின் தகவல் பரிமாற்றம் ஒரு நெருக்கடிக்குள் தள்ளப்படலாம், சில தேசிய நிறுவனங்களை வெளியாருக்கு விற்க கூடாது, எனது கருத்து தவறாக இருக்கலாம். 

தொலைத் தொடர்பு தேசிய  பாதுகாப்புக்கானது எனும் கருதுகோள் பழையதாகிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

தொலைத் தொடர்பு தேசிய  பாதுகாப்புக்கானது எனும் கருதுகோள் பழையதாகிவிட்டது. 

உங்கள்கருத்திற்கு நன்றி, சாதாரண பத்திரிகை செய்திகளினடிப்படையாக கொண்டு சமூகமாற்றங்களை அடையாளம் காணுவதற்காக வியாபாரத்துறையில் முன்னாள் புலனாய்வாளர்கள் பயன்படுத்த பட்டுவதாக வாசித்துள்ளேன்.

https://trends.google.com/trends/?geo=AU&hl=en-US

முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் அரச பிரதிநிதிகளின் தொலைதொடர்புகள் ஒரு முக்கியமான விடயமாக இருக்காதா?

முன்னைய காலங்களை விட தற்கால தொலைதொடர்பில் மிகவும் பாதிப்பினை ஏற்படுத்த கூடிய நிலையில் (தொலை தொடர்பு, இணைய, பூகோள அமைவிட அவதானிப்பு) வளர்ந்துள்ளதாக கருதுகிரேன்.

தற்கால இலத்திரனியல் போருக்கு பெருமளவில் இந்த தொலைதொடர்பினை பயன்படுத்துகிறார்கள், வெளியில் இருந்து செய்யப்படும் செயலை கண்டுபிடித்துவிடலாம் ஆனால் அந்த சேவை வழங்குநரே செய்தால் வெளியே தெரியவாய்ப்பில்லை என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, vasee said:

உங்கள்கருத்திற்கு நன்றி, சாதாரண பத்திரிகை செய்திகளினடிப்படையாக கொண்டு சமூகமாற்றங்களை அடையாளம் காணுவதற்காக வியாபாரத்துறையில் முன்னாள் புலனாய்வாளர்கள் பயன்படுத்த பட்டுவதாக வாசித்துள்ளேன்.

https://trends.google.com/trends/?geo=AU&hl=en-US

முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் அரச பிரதிநிதிகளின் தொலைதொடர்புகள் ஒரு முக்கியமான விடயமாக இருக்காதா?

முன்னைய காலங்களை விட தற்கால தொலைதொடர்பில் மிகவும் பாதிப்பினை ஏற்படுத்த கூடிய நிலையில் (தொலை தொடர்பு, இணைய, பூகோள அமைவிட அவதானிப்பு) வளர்ந்துள்ளதாக கருதுகிரேன்.

தற்கால இலத்திரனியல் போருக்கு பெருமளவில் இந்த தொலைதொடர்பினை பயன்படுத்துகிறார்கள், வெளியில் இருந்து செய்யப்படும் செயலை கண்டுபிடித்துவிடலாம் ஆனால் அந்த சேவை வழங்குநரே செய்தால் வெளியே தெரியவாய்ப்பில்லை என கருதுகிறேன்.

புலனாய்வு பல்வேறு படிநிலைகளைத்தாண்டி எங்கோ சென்றுவிட்டது. அம்பானியிடம் சென்றால் என்ன லைக்காவிடம் சென்றால் என்ன அவற்றிடையே பாரிய மாற்றன்கள் ஏது இல்லை என்பது என் கருத்து. 

ஆனால் இந்தத் துறைகளைப் பயன்படுத்தித்தான் பல colour revolution களை செய்கிறார்கள் என்பது உண்மை. இதனால் சிறிய நாடுகள் தொலைத்தொடர்புத்துறையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் பாதுகாப்பானது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.