Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயத்தின் எல்லை கடந்த திலீபன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுயத்தின் எல்லை கடந்த திலீபன்

சமூக உலகில் சங்கமித்துக்கொள்ளும் தனி மனிதனிடம் மனிதத்துவம் எப்போது நிறைவு பெறுகிறது? மனித சிந்தனையை மிக ஆழமாகத் தூண்டி விடும் வினா இது.

தத்துவ வித்தகரும், அரசியற் சிந்தனையாளரும், சிறந்த மார்க்சியவாதியுமான ஜோன் போல் சாத்தரின் ஆழமான சிந்தனையூடாக அழகு தமிழிலே அதை நமக்கு விளக்குகின்றார் "தேசத்தின் குரல்' மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம்.

மனிதன் தனக்காக வாழாமல், தன் நலனுக்காக வாழாமல், தன் குடும்பம் என்ற குறுகிய வட்டத்துக்குள் வாழாமல், தனது சுயத்திற்கு அப்பால், மற்றவர்களுக்காக, மற்றவர்களின் நலனுக்காக, மானுடத்தின் நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழும் மாண்பே மகத்துவம். சுயத்தின் எல்லை கடந்து, தனி மனித நலனுக்கு அப்பால் மற்றவர்களுக்காக வாழ்பவன், மானுடத்தின் உயர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் உழைப்பவன் உண்மையான மனிதனாகச் சிறக்கிறான். மானுடத்தின் மனிதத்துவம் அவனிடமே நிறைவு பெறுகின்றது. இதுவே இருப்பியம் காட்டி நிற்கும் மனிதாபிமானம்.

தன் இனத்தின் இருப்புக்காகத் தன் சுயத்தைத் துறந்து, மானிட மாண்பை செயலில் காட்டி, நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஒரு தியாகியின் இருபதாவது ஆண்டு நிறைவு நாளில் நினைவு நாளில் அந்தத் தீபச் சுடரின் ஒளியின் ஊடாக மானிடத்தின் மாண்பை மேன்மையை நாம் தரிசிக்க ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது.

காந்தி தேசத்துக்கே காந்திய நெறியின் அர்த்தத்தைப் போதித்து உணர்த்தியவன் தியாகி திலீபன். தான் கொண்ட இலட்சியத்தில் இரும்பை ஒத்த உறுதியாக நின்று, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணா நோன்பு இருந்து, சுமார் இரண்டு வாரங்கள் அணுவணுவாய்ச் செத்து, ஈழத் தமிழ் அன்னைக்கு வேறு எந்தத் தலைமகனும் இயற்ற முடியாத தற்கொடையாகத் தன்னுயிரை ஈகமாக அர்ப்பணித்து, சரித்திரத்தில் சாகா இடம்பெற்ற ஒரு தியாகியின் இரண்டு தசாப்த காலம் கடந்த நினைவு தினம் இன்று.

மனித வாழ்வு அவலமானது; அபத்தமானது; துன்பங்கள், துயரங்கள் நிறைந்தது. இதுவே நமது இருப்பின் மெய்மை நிலை. இந்த உண்மை நிலையிலிருந்து யதார்த்தத்திலிருந்து யாரும் தப்பிவிட முடியாது. இந்த வாழ் நிலையை மனிதன் துணிச்சலுடன் எதிர்கொண்டேயாக வேண்டும். வாழ்வில் அர்த்தமில்லை என்று யாரும் கோழையாகி உயிரை மாய்த்து விட முடியாது. நாம் வாழ்ந்தேயாக வேண்டும். அபத்தமான வாழ்விலிருந்து மீளும் அர்த்தமே அதில்தான் உள்ளது என்பது நாம் யாவரும் அறிந்ததே.

ஆனால், தன் துன்பியலுக்காக மட்டுமல்லாமல், தன் இனத்தின் துன்பியலிலிருந்து அந்த இனத்தை விடுவிப்பதற்காக தன் மக்களின் மீட்சிக்காக தன் வாழ்வையும் உயிரையும் ஆகுதியாக்கி, அர்ப்பணம் செய்யத் துணிபவன் வீரத்தின் உச்சியில் வைத்துப் போற்றப்படுகின்றான். அவன் கோழை அல்லன். கோபுரத்தின் உச்சியில் வைத்துப் போற்றப்படும் கோமகனாகின்றான். இவ்வாறு குன்றின் உச்சியில் மின்னும் தாரகையாகத் திகழ்கிறான் திலீபன்.

உலக சரித்திரத்தில் இம்சைக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடி சத்தியத்தின் நிஜத்தை உலகுக்குப் பறைசாற்றுவித்த மாண்பாளர்களின் வரிசையிலே மகாத்மா காந்திக்கு முந்திய இடம் தியாகி திலீபனுக்கு உண்டு. ஆயுதப் போராளி, அஹிம்சைப் போராளியாகி சரித்திரம் படைத்த வரலாறு திலீபனுடையது.

ஆயுத விடுதலைப் போராட்டத்துக்குள் முகிழ்ந்த திலீபன் என்ற இளைஞன் காந்தீய வழியில் நெறிக்கப்பட்ட அறப் பாதையில் தானே தன்னை வருத்தி, மேற்கொண்ட சத்திய வேள்வியிலே மனவுறுதியுடனும் திடசங்கற்பத்துடனும் தளராது உயர்ந்து நின்று, தன்னையே ஆகுதியாக்கி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி, தன் இலட்சிய வேட்கையின்பால் உலகின் கவனத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தான்.

அவனது போராட்டக் காலகட்டமும், அதனை ஒட்டிய விளைவுகளும் அந்த நேரத்தில் இரண்டு முக்கிய உண்மைகளை நம் இனத்துக்குப் போதித்தன.

ஒன்று அதுவரை சுமார் மூன்று தசாப்த காலம் தமிழர் தம் தலைமையை அலங்கரித்து, பதவிகளை சுவீகரித்து, அறநெறிப் போராட்டத்தின் பெயரால் இனத்தை வழி தப்பி நடத்திச் சென்ற தலைவர்களுக்கு இருக்காத அறநெறி உறுதியும், திட சங்கற்பமும், தலைமைத்துவ மகத்துவமும், அந்தத் தலைமைகளிடமிருந்து அப்பொறுப்பை ஆயுத பலத்தின் பின்னணியில் பிடுங்கிக் கொண்ட இளைஞர்கள் மத்தியில் மிகுதியாக இருக்கின்றன என்பதை செயன்முறைச் சாதனையில் உதாரண புருஷனாகச் செய்து காட்டினான் திலீபன்.

அதாவது, வெறும் ஆயுதப் போராட்டத் துணிச்சல் தந்த வெறி மட்டுமல்ல, அறவழிப் போராட்டத்துக்கான திடசங்கற்பமும் இலட்சியப் பற்றுறுதியும் கொண்டது நமது புதிய இளந்தலைமுறைப் போராட்ட சக்தி என்பதை நம் மக்களுக்குப் பறைசாற்றுவித்தான் திலீபன். அறவழிப் போராட்டத்தில் கூட தமது முன்னைய தலைமைக்கு இல்லாத தகுதியும், உறுதியும் அடுத்த தலைமுறையிடம் நிறையவே உற்பவித்துள்ளன என்பதற்கு உதாரணமானான் அவன்.

அடுத்தது ஈழத் தமிழர்களைத் துன்பியல் சாகரத்திலிருந்து மீட்கும் உண்மை இரட்சகராக இந்தியா இருக்கும் என்று ஈழத் தமிழர் மனதில் படிந்திருந்த மாயையை புனைகதையை தவறான நம்பிக்கையை துடைத்தெறிந்து, உண்மையை நம் மக்களுக்கு உணர்த்தும் விளக்காகவும் விளங்கினான் திலீபன்.

இந்திய அதிகார வர்க்கத்தின் உள்நோக்கத்தில் தன்னுடைய வல்லாதிக்கத்தின் பூகோள, அரசியல் நலனே முக்கியமானது, ஈழத் தமிழரின் நீதி, நியாயமான அபிலாஷைகள் அல்ல என்ற உண்மையை திலீபன் உண்ணா நோன்பிருந்த அந்தப் பன்னிரு நாள் காலத்தில்தான் ஈழத் தமிழர் தாயகம் நன்கு உணர்ந்து தெளிந்துகொண்டது.

ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, அச்சமயத்தில் இரண்டு உடன்படிக்கைகளைச் செய்துகொண்டார். ஒன்று எழுத்தில். மற்றது வார்த்தைகளில். முதல் உடன்படிக்கை, இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு முதல்நாள் இரவு, புதுடில்லியில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நேரடியாகப் பேசி அவர் செய்து கொண்டது. அது எழுத்தில் வரையப்படாதது. கனவான்கள் இணக்கம்.

ஆனால் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவான்தனம் கனவாகிப் போனதால், அந்த உடன்பாடு காற்றில் பறந்தது. கரைந்தது. தியாகி திலீபனின் உண்ணாநோன்பு மூலம் அந்த உடன்பாடு கனவாகிப்போய், ராஜீவின் கனவான்தனம் காணாமற் போனதை ஈழத் தமிழினம் உணர்ந்தது.

அடுத்த உடன்படிக்கை இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடன் அவர் செய்துகொண்டது. அந்த உடன்பாடும் கூட சுமார் 19 ஆண்டுகள் கழித்து, இலங்கையின் தற்போதைய மஹிந்த அரசின் வடக்கு கிழக்குப் பிரிப்புடன் முற்றாகச் செத்துச் செயலிழந்து அடங்கிப் போய் விட்டது என்பதை உலகம் உணர்ந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இதுதான் நிஜத்தில் நிகழும் என்பதை, காந்தியின் நாமத்தைத் தனது பெயரில் கொண்ட அந்தத் தலைவருக்கு தனது காந்தீய நெறிப்பட்ட போராட்டத்தின் மூலம் அன்றே உணர்த்த முயன்றான் தியாகி திலீபன்.

அதைப் புரிந்துகொள்ள அன்று அவர் மறுத்ததால் மறந்ததால் இன்று இந்த நிலைமை. திலீபனின் நீதியான போராட்டத்துக்குப் பின்னால் புதைந்து கிடந்த மகத்துவத்தைப் புரிய மறுத்தமை, பல வரலாற்றுத் துன்பியல் நிகழ்வுகளுக்கு வழி சமைத்து விட்டதே.........!

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதம் பற்றிய வீடியோக் காட்சிகள்

http://video.google.com/videoplay?docid=-8...40888&hl=en

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.