Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ‘Man of East’ பட்டம்

- 14 சிவில் அமைப்புகள் இணைந்து கௌரவப் பட்டம்

Rizwan Segu MohideenJanuary 27, 2024
Man-of-th-East-Senthil-Thondaman.jpg

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சேவையை பாராட்டி ‘Man of East’ எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று முன்தினம் (25) திருகோணமலையில் இடம்பெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கிழக்கில் உள்ள 14 சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சேவையை பாராட்டி ‘Man of East’ என்ற பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பேரவை, மக்கள் மறுமலர்ச்சி மன்றம்,பசுமை இல்லம், புதிய உதயம், பெண்கள் உதவி அறக்கட்டளை RI Association, திருக்கோணமலை மாவட்ட வணிக சங்கங்கள் உட்பட பல அமைப்புகள் இணைந்து ‘Man of East’ என்ற பட்டத்தை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் பல வருட காலமாக பல ஆளுநர்கள் இருந்த போதிலும் அவர்கள் செய்யாத பல வேலைதிட்டங்களை 5 மாத கால கட்டத்தில் செய்து முடித்தமைக்காகவும், ஆளுநரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வு உலக சாதனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டமைக் காகவும் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து மதத்தவர்களும் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

https://www.thinakaran.lk/2024/01/27/breaking-news/38656/கிழக்கு-ஆளுநர்-செந்தில்-4/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நேற்று முன்தினம் (25) திருகோணமலையில் இடம்பெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இலங்கையில் எனக்குத் தெரிந்து... தைப்பொங்கல் என்று சொல்லியே  கொண்டாடினார்கள்.
இப்ப என்ன புதுசாய்... சமத்துவ பொங்கல், தேசியப் பொங்கல் என்று. 
ஆள் ஆளுக்கு ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கின்றார்கள்.

இருக்கின்ற பிரச்சினைக்குள் இவர்கள் மேலும் மக்களை போட்டு குழப்புவது ஏன்.

மற்ற மொழிக்காரன் தமது கொண்டாட்டத்தை அதன் பாரம்பரியம் அழியாமல் அதே பெயருடன் தான் அழைப்பான். தமிழனுக்குத்தான்.... பொங்கல் என்றாலும் பிரச்சினை, புது  வருசம் என்றாலும் பிரச்சினை, தீபாவளி என்றாலும் பிரச்சினை கிழப்ப என்றே அரசியலில் உள்ள  சிலர் விசமத்தனமான வேலைகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நீ தூய தமிழனாய் இருந்தால் மேலேயுள்ள செய்திக்கு ஒரு Like ❤️ போடவும். 

  • கருத்துக்கள உறவுகள்

 ‘Man of East’ பட்டம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று... 
பிள்ளையான், கருணா போன்றவர்கள் கோவிக்க மாட்டார்களா.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

 ‘Man of East’ பட்டம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று... 
பிள்ளையான், கருணா போன்றவர்கள் கோவிக்க மாட்டார்களா.  🤣

அவர்கள் மலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு வருகை தந்த இந்திய விருந்தினர்களின் பார்வையில் இருப்பதால் இதனைத் தற்போது கவனிக்க நேரமிருக்காது

😁

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

அவர்கள் மலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு வருகை தந்த இந்திய விருந்தினர்களின் பார்வையில் இருப்பதால் இதனைத் தற்போது கவனிக்க நேரமிருக்காது

😁

spacer.png

spacer.png

spacer.png

ஓ..... அப்படியா சங்கதி. இப்போ... புரிந்து விட்டது. 😂
நடிகைகள் போய் முடிய... வந்து வள் வள் என்று கத்துவினம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் எனக்குத் தெரிந்து... தைப்பொங்கல் என்று சொல்லியே  கொண்டாடினார்கள்.
இப்ப என்ன புதுசாய்... சமத்துவ பொங்கல், தேசியப் பொங்கல் என்று. 
ஆள் ஆளுக்கு ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கின்றார்கள்.

இருக்கின்ற பிரச்சினைக்குள் இவர்கள் மேலும் மக்களை போட்டு குழப்புவது ஏன்.

மற்ற மொழிக்காரன் தமது கொண்டாட்டத்தை அதன் பாரம்பரியம் அழியாமல் அதே பெயருடன் தான் அழைப்பான். தமிழனுக்குத்தான்.... பொங்கல் என்றாலும் பிரச்சினை, புது  வருசம் என்றாலும் பிரச்சினை, தீபாவளி என்றாலும் பிரச்சினை கிழப்ப என்றே அரசியலில் உள்ள  சிலர் விசமத்தனமான வேலைகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள். 

"தமிழ்" என்ற சொல் எந்த ஒர் பெரும் மக்கள் எழுச்சியிலும் வரக் கூடாது என்பதில் சிலர் கண்ணும்கருத்துமாக இருக்கின்றனர்...காரண்ம கேட்டால் அது இனப் பிரச்சனையை தூண்டுமாம்...இது புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களிலும் கடைப்பிடிக்கின்றனர்...

நல்லிணக்கம்,சமத்துவம்,சம உரிமை ...போன்ற சொற்களை பாவிப்பதில் சில சக்திகள் செயல் படுகின்றனர் ...சிங்கள கொடியுடன் ....சிங்களவருக்கு பொட்டும் விபூதி அணிந்து ,குல்லாவும் அணிந்து நல்லிணக்கத்துடன் செயல் படுவதாக பிரச்சாரம் செய்யும் அளவுக்கு சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் செயல் படுகின்றனர்..

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆட்சியாளர்கள் .....மாகாணசபை செயல்படுகின்றது என்ற செய்தியை இந்தியாவுக்கு சொல்கின்றனர்...13 ஆம் திருத்த சட்டம் நடை முறையில் உள்ளது...தமிழ் அரசியல் வாதிகள் திறம்பட செயல் படவில்லை என ஒர் விம்பத்தை உலகத்துக்கும் இந்தியாவுக்கும் காட்ட முயல்கின்றனர் .அதில வெற்றியும் கண்டுள்ளனர்...சமத்துவம் ,நல்லிணக்கம்,சமாதனம் கொடிகட்டி பறக்கின்றது....தமிழ் அரசியல்வாதிகள் இனவாத செயலில் ஈடு படுகின்றனர் என சொல்லாமல் சொலுகின்றனர்...

கிழக்கில் மைலத்த மடுவில் குடியேற்றம் நடை பெற வேணும் என்றால் ஆளுனருக்கு கிழக்கின் மனிதன் என்ற பட்டம் கொடுக்க வேணும் கண்டியளோ...மட்டக்கிளப்பு மேல் மாகாணத்தில் இருக்கின்றது என ஆளுனர் நினைத்துவிட்டார்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, putthan said:

"தமிழ்" என்ற சொல் எந்த ஒர் பெரும் மக்கள் எழுச்சியிலும் வரக் கூடாது என்பதில் சிலர் கண்ணும்கருத்துமாக இருக்கின்றனர்...காரண்ம கேட்டால் அது இனப் பிரச்சனையை தூண்டுமாம்...இது புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களிலும் கடைப்பிடிக்கின்றனர்...

நல்லிணக்கம்,சமத்துவம்,சம உரிமை ...போன்ற சொற்களை பாவிப்பதில் சில சக்திகள் செயல் படுகின்றனர் ...சிங்கள கொடியுடன் ....சிங்களவருக்கு பொட்டும் விபூதி அணிந்து ,குல்லாவும் அணிந்து நல்லிணக்கத்துடன் செயல் படுவதாக பிரச்சாரம் செய்யும் அளவுக்கு சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் செயல் படுகின்றனர்..

 இனவாத சிங்களத்தின்  அரசியல் வரலாறுகள் கண் முன்னே தெரிந்தும் நம்மவர்கள் இன்னும் நல்லிணக்க அரசியலில் நீந்த ஆசைப்படுகின்றார்கள்.
சுகமான நீரோட்டம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ‘Man of East’ பட்டம்

- 14 சிவில் அமைப்புகள் இணைந்து கௌரவப் பட்டம்

Rizwan Segu MohideenJanuary 27, 2024
Man-of-th-East-Senthil-Thondaman.jpg

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சேவையை பாராட்டி ‘Man of East’ எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று முன்தினம் (25) திருகோணமலையில் இடம்பெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கிழக்கில் உள்ள 14 சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சேவையை பாராட்டி ‘Man of East’ என்ற பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பேரவை, மக்கள் மறுமலர்ச்சி மன்றம்,பசுமை இல்லம், புதிய உதயம், பெண்கள் உதவி அறக்கட்டளை RI Association, திருக்கோணமலை மாவட்ட வணிக சங்கங்கள் உட்பட பல அமைப்புகள் இணைந்து ‘Man of East’ என்ற பட்டத்தை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் பல வருட காலமாக பல ஆளுநர்கள் இருந்த போதிலும் அவர்கள் செய்யாத பல வேலைதிட்டங்களை 5 மாத கால கட்டத்தில் செய்து முடித்தமைக்காகவும், ஆளுநரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வு உலக சாதனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டமைக் காகவும் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து மதத்தவர்களும் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

https://www.thinakaran.lk/2024/01/27/breaking-news/38656/கிழக்கு-ஆளுநர்-செந்தில்-4/

ஐந்து மாத காலத்தில் அவர் செய்த வேலைகளை பட்டியலிடடாள் நாங்களும் தெரிந்து   கொள்ளுவோம். அல்லது பொங்கல் விழா நடத்தியது, மாடுபிடி விளையாட்டு நடத்தியது போன்றவற்றை சொல்கிறாரகலா?

கிழக்கு மாகாணம் என்று சொல்லும்போது மூவின மக்களும் வாழும் பிரதேசம். மூவின மக்களும் சேர்ந்து இந்த படத்தை வழங்கினார்களா இல்லை ஒரு சமூகம் மட்டும் வழங்கியதா?

எனவே இது இப்படியான காரியங்கள் அமைதிக்கு பதிலாக குழப்பங்களைஉருவாக்கி விட கூடாது. சில வேளைகளில் ஆளுநருக்கும் பிரச்சினைகளை உருவாக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2024 at 12:06, Cruso said:

ஐந்து மாத காலத்தில் அவர் செய்த வேலைகளை பட்டியலிடடாள் நாங்களும் தெரிந்து   கொள்ளுவோம். அல்லது பொங்கல் விழா நடத்தியது, மாடுபிடி விளையாட்டு நடத்தியது போன்றவற்றை சொல்கிறாரகலா?

கிழக்கு மாகாணம் என்று சொல்லும்போது மூவின மக்களும் வாழும் பிரதேசம். மூவின மக்களும் சேர்ந்து இந்த படத்தை வழங்கினார்களா இல்லை ஒரு சமூகம் மட்டும் வழங்கியதா?

எனவே இது இப்படியான காரியங்கள் அமைதிக்கு பதிலாக குழப்பங்களைஉருவாக்கி விட கூடாது. சில வேளைகளில் ஆளுநருக்கும் பிரச்சினைகளை உருவாக்கலாம். 

ஆளுனர் இலங்கை அரசின் பிரதிநிதி அவரை கொன்ரோல் பண்ணுவது மத்திய அரசு ...இவர் ....சு விடுவது என்றாலும்  அவர்களின் அனுமதி தேவை ...."சமத்துவம்" எனற வார்த்தை மத்திய அரசுக்கு இன்று அவசியமாக தேவைப்படுகிறது....தென் ஆபிரிக்கா அரசு மற்றும் ஏனைய நாடுகளுக்கு படம் காட்டுவதற்கு ...
மக்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பால்  இந்திய ,இலங்கை அரசுகளின் நலன் முக்கியம் ஆகவே இந்த பட்டம் நிச்சமாக அரசுகளின் செயல் மடடுமே...

On 28/1/2024 at 10:29, குமாரசாமி said:

 இனவாத சிங்களத்தின்  அரசியல் வரலாறுகள் கண் முன்னே தெரிந்தும் நம்மவர்கள் இன்னும் நல்லிணக்க அரசியலில் நீந்த ஆசைப்படுகின்றார்கள்.
சுகமான நீரோட்டம்.😂

எங்கன்ட சனம் நல்லிணக்கம் என்று மீண்டும் ,சேர் பொண் ராமநாதன் பாணியில் தொடர.....
அவர்கள் இன்றும் துட்டகெமுனுவின் துஸ்ட(பகை வெறுப்பு) அரசியலை கொண்டு செல்கின்றனர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.