Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                              இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024

                                              இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதாக கூறுகிறார்கள்.இந்த தேர்தலுக்காக சிங்கள கட்சிகள் இப்போதிருந்தே ஆயத்தமாகத் தொடங்கிவிட்டன.

                                              ஐக்கிய தேசிய கட்சி ராஜபக்ச கட்சி சார்பாக ரணிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சயித் பிரேமதாசவும் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அனுர குமாரவும் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.இனிவரும் காலங்களில் இன்னும் புதிதாக யார் வேண்டுமானாலும் களமிறங்கலாம்.

                                              இதுவரை இலங்கையில் நடந்த எந்த ஒரு தேர்தல்களிலும் நான் வாக்குச் செலுத்தவில்லை.இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள் சட்டதிட்டங்களைப் பற்றி எதுவும் இதுவரை அறிய முற்படவில்லை.

                                                எனவே இந்த வருடம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எந்த சிங்கள கட்சிக்கும் வாக்கு போட்டு பிரயோசனமில்லை.வழமை போன்றே ஏதாவது உத்தரவாதம் தருவார்கள்.இல்லாவிட்டால் வெளியே சொன்னால் சிங்கள மக்கள் இதைச் சாட்டாக வைத்தே எமக்கு வாக்குப் போட மாட்டார்கள் என்று சொல்லி இரகசியம் பேணுவார்கள்.வென்ற பின்பு இப்படி கதைத்ததையே மறந்துவிடுவார்கள்.

                                                ஆகையினால் அடுத்த தேர்தலில் யாராவது ஒரு தமிழர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் தமிழர்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன்.

                                                  ஆனாலும் இப்போ தான் தெரிகிறது போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை என்றால் இரண்டாவது யாருக்கு புள்ளடி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்து அதையும் கணக்கிலெடுப்பார்கள் என்கிறார்கள்.

                                                   அப்படியானால் தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக களமிறங்கி பிரயோசனம் இல்லை.இந்த நிலையில் பொது வேட்பாளராக இரு தமிழர்கள் களமிறங்கி முதலாவதாகவும் இரண்டாவதாவும் இரு தமிழர்களுக்கும் வாக்குப் போட்டால் தமிழர்களின் வாக்குகள் சிங்கள கட்சிகளுக்கு போவதை தடுக்கலாமா?

                                                    இப்படி செய்வார்களாக இருந்தால் முதலாவது அல்லது இரண்டாவது வேட்பாளரை மலையகத் தமிழர் ஒருவரை நிறுத்தலாம்.

                                                      இதுவரை ஜனாதிபதி தேர்தலுக்காக மக்களை ஒன்று சேர்த்து அவர்களை எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும் ஒழுங்குபடுத்தியதாக தெரியவில்லை.

                                                       வெளிநாடுகளே இலங்கையில் யார் ஜனாதிபதியாக வரப் போகிறார் என்று கருத்துக் கணிப்புகளை நடாத்தி முன்னணியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள தொடங்கிவிட்டார்.

                                                       ஐரோப்பா அமெரிக்கா போன்றவை ரணிலுக்கு ஆதரவாக மறைமுகமாக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.எதிரும் புதிருமாக இருந்த இந்தியாவும் ஜேவிபியும் ஒன்றாகியுள்ளனர்.இது யாருமே எதிர் பார்க்க ஒன்று.அரசியலில் வெட்கம் மானம் சூடு சுறணை இருக்கக் கூடாது என்பார்கள்.அதையே தான் இந்தியா செய்துள்ளது.

                                                       மாலைதீவை விட்ட மாதிரி இலங்கையையும் விட தயாரில்லை என்பதையே இந்தியாவின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. அனுர குமாரவைக் கூப்பிட்டு கதைத்த பின்பும் ஜேவிபி ஆதரவாளர்களிடமிருந்து இந்தியாவுக்கு எதிரான பழைய போக்கு மாறவில்லை என்கிறார்கள்.

                                                        வெளிநாடுகள் தங்களுக்கேற்ற அரசியல் தலைவர்களை கொண்டுவர முயற்சி பண்ணுகிறார்கள்.இதில் அவர்களை குறை கூறி பிரயோசமில்லை.

                                                         இதே நிலையை அமெரிக்க இந்திய சங்கீதத்துக்கு ஆடாமல் மற்றவர்களை ஆட வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய  அரசியல் நிலவரத்தையும் அதற்காக  நடக்கும் நாடகங்களையும்  அலசியுள்ளீர்கள் ......பார்ப்பம் என்ன நடக்குதென்று.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன் ஐயா ஆய்வாளர் ஆகிவிட்டார்😃

சிங்கள மக்கள் என்ன செய்வார்கள் என்பது எவருக்கும் தெரியாது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2024 at 09:54, suvy said:

தற்போதைய  அரசியல் நிலவரத்தையும் அதற்காக  நடக்கும் நாடகங்களையும்  அலசியுள்ளீர்கள் ......பார்ப்பம் என்ன நடக்குதென்று.......!  😁

 

5 hours ago, கிருபன் said:

@ஈழப்பிரியன் ஐயா ஆய்வாளர் ஆகிவிட்டார்😃

சிங்கள மக்கள் என்ன செய்வார்கள் என்பது எவருக்கும் தெரியாது!

நான் இதுவரை இலங்கை தேர்தல்களில் வாக்களிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு வாக்கைச் செலுத்தினால் போதும் என்று தான் எண்ணியிருந்தேன்.

ஆனாலும் ஏமாற்றுவதற்கு வசதியாக இரண்டாவதாகவும் ஒருவருக்கு வாக்களிக்கும் முறை இருக்குதென்பதை இப்ப தான் தெரிந்து கொண்டேன்.

ஆரம்பத்தில் ஐயா விக்கினேஸ்வரன் தான் பொது வேட்பாளராக நிற்கிறேன் என்றதும் ஆமால்ல யாரோ ஒருவர் நின்று எல்லோரும் அவருக்கு வாக்கு போடலாம் தானே என்று தான் எண்ணினேன்.

ஆனால் இவர்கள் ஏமாற்றுகிறார்கள் 50 வீத வாக்கு கிடைக்கவில்லை என்றால் இரண்டாவதாக ரணிலுக்கு போடுவார்கள்.

இது முறைமுகமாக ரணிலுக்கான ஆதரவு என்று கஜேந்திரன் சொன்னபோதே இப்படி ஒரு சங்கதி இருக்கிறதா என்று விசாரித்து பார்த்ததில் அதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

அடுத்து இப்பவிருந்தே மக்களை தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டுமே ஆனால் தமிழர்கள் தரப்பில் எவருமே அதற்கான ஆயத்தங்கள் செய்யவில்லையே என்ற ஆதங்கங்தினாலேயே இதை எழுதினேன்.

நன்றி சுவி, கிருபன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2024 at 08:06, ஈழப்பிரியன் said:

அனுர குமாரவைக் கூப்பிட்டு கதைத்த பின்பும் ஜேவிபி ஆதரவாளர்களிடமிருந்து இந்தியாவுக்கு எதிரான பழைய போக்கு மாறவில்லை என்கிறார்கள்.

இந்தியா, அனுராவின் வாக்குகளை குறைக்கதான் அங்கு அழைத்தார்களோ தெரியவில்லை...
விமல் வீரவம்சா மற்றும் கம்பன்போல போன்றவர்களுக்கு இதனால் கொஞ்ச வாக்கு எண்ணிக்கை அதிகரிக்கும்..

இந்திய விரோத போக்கு சிங்கள மக்களிடம் 80% உண்டு இதை உடைப்பது சரியான கடினம்...

சிறிலங்காவில் ...இந்தியாவுக்கு எதிரான கொள்கை உடைய சமுகங்கள் 
பெளத்த சிங்களவர்கள் 80%
கிறிஸ்தவ சிங்களவர்கள் 80%
முஸ்லீம் மக்கள் ..100%
இந்துக்கள் வட கிழக்கு 50%
கிறிஸ்தவ தமிழர்கள் 50%
மலையக மக்களின் ஆதரவு கொஞ்சம் அதிகமாக இருக்கும்....அது தான் இந்தியா அவர்களை அதிகம் நம்பியிருக்கு ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இந்தியா, அனுராவின் வாக்குகளை குறைக்கதான் அங்கு அழைத்தார்களோ தெரியவில்லை...
விமல் வீரவம்சா மற்றும் கம்பன்போல போன்றவர்களுக்கு இதனால் கொஞ்ச வாக்கு எண்ணிக்கை அதிகரிக்கும்..

இந்திய விரோத போக்கு சிங்கள மக்களிடம் 80% உண்டு இதை உடைப்பது சரியான கடினம்...

சிறிலங்காவில் ...இந்தியாவுக்கு எதிரான கொள்கை உடைய சமுகங்கள் 
பெளத்த சிங்களவர்கள் 80%
கிறிஸ்தவ சிங்களவர்கள் 80%
முஸ்லீம் மக்கள் ..100%
இந்துக்கள் வட கிழக்கு 50%
கிறிஸ்தவ தமிழர்கள் 50%
மலையக மக்களின் ஆதரவு கொஞ்சம் அதிகமாக இருக்கும்....அது தான் இந்தியா அவர்களை அதிகம் நம்பியிருக்கு ....

தனக்கு எதிரானவர்கள் கம்யூனிச போக்குடையவர்கள் என்று தெரிந்தும் இவர்களை கூப்பிட்டிருக்கிறது.

அடுத்த தேர்தலில் வென்றாலும் என்று இப்பவே தொடர்பை ஏற்படுத்துகிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

தனக்கு எதிரானவர்கள் கம்யூனிச போக்குடையவர்கள் என்று தெரிந்தும் இவர்களை கூப்பிட்டிருக்கிறது.

அடுத்த தேர்தலில் வென்றாலும் என்று இப்பவே தொடர்பை ஏற்படுத்துகிறார்களோ?

JVP வென்றாலும் ...இந்தியாவை எதிர்க்கும் சக்தி சிங்களவரிடம் உண்டு ....இந்தியா ஜனநாயக முறைப்படி சிறிலங்காவின் ராஜதந்திர நகர்வுகளை வெற்றி கொள்வார்களோ தெரியவில்லை.......சில சமயம் மறைமுக வன் முறைகளை பாவித்து சிங்களவரின் ராஜதந்திரத்தை தோற்கடிப்பார்கள்...

மேலும் மோடியின் ஆட்சி நிலைத்து நிற்பதை சிறிலங்காவும் ,அமேரிக்கவும் விரும்பவில்லை முக்கியமாக ரணில் ....இந்தியாவில் ஆட்சி மாற்றம் இந்த வருட தேர்தலில் ஏற்படின்...பல மாற்றங்கள் சிறிலங்காவில் ஏற்படலாம்....
இந்தியாவின் தேர்தல் நிலமையை பார்த்து சிறிலங்கா தேர்தலை வைக்கும்...
ராகுல் காந்தி ஆட்சி,அல்லது சிறுபான்மை ஆட்சி இந்தியாவில் அமைந்தால் ...ரணில் ,ராஜபக்சா மற்றும் ஏனைய கட்சிகள் மகிழ்ச்சி யடைவார்கள் ,சீனா,அமெரிக்கா போன்ற நாடுளும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

ராகுல் காந்தி ஆட்சி

இலங்கைத் தமிழரை அழித்ததோடு இந்திரா காங்கிரசும் வீழ்ந்தது.

அதிலிருந்து இன்னமும் எழும்புவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

அடுத்த தேர்தலிலும் பெரும்பான்மையான வெற்றியுடன் மோடி வருவார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கைத் தமிழரை அழித்ததோடு இந்திரா காங்கிரசும் வீழ்ந்தது.

நான் அப்படி நினைக்கவில்லை ஈழப்பிரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

நான் அப்படி நினைக்கவில்லை ஈழப்பிரியன்

நடைமுறையில் அப்படித் தானே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

நடைமுறையில் அப்படித் தானே இருக்கிறது.

காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை  ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? அதுபோல்தான். 

Edited by Kavi arunasalam

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.