Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 FEB, 2024 | 10:00 AM
image

மாணவர்கள் குப்பிவிளக்கில் கல்விகற்க பழகவேண்டும் என இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மாணவர்கள் அவசியம் ஏற்பட்டால் குப்பிவிளக்கில் கல்விபயில முயலவேண்டும் இந்த விடயத்தில் முன்னோர்களை அவர்கள் பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் மின்கட்டணங்கள் குறித்த கரிசனைகள் குறித்து; கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மின்கட்டணங்களை செலுத்தாததால் மின்துண்டிக்கப்படுவதால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள மின்சாரசபையின் பேச்சாளர்  இலவச மின்சாரம் என்ற கலாச்சாரத்திலிருந்து நுகர்வோர்கள் மாறுவதால் இந்த நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தை மின்கட்டண அதிகரிப்பு ஒரு தசாப்தகாலத்திற்கு பின்னரே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள மின்சாரசபையின் பேச்சாளர் 

இலங்கை மின்சார சபை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிகள் குறித்தும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்திற்கு பெரும்தொகையை செலுத்தவேண்டிய நிலையில் மின்சார சபை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மின்சாரசபை பேச்சாளரின் கருத்தினை சவாலுக்கு உட்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நவீன தொழில்நுட்பம் இலத்திரனியல் சாதனங்கள் காரணமாக தற்போதைய சிறுவர்களை முன்னைய தலைமுறையுடன் ஒப்பிடமுடியாது என தெரிவித்தார்.

இதேவேளை மின்கட்டண அதிகரிப்பை நியாயப்படுத்திய மின்சாரசபை பேச்சாளர் கல்வி கற்பதற்கு ஏன் மின்சாரம் அவசியம் என கேள்வி எழுப்பியதுடன் குப்பிவிளக்குகள் போன்ற பாரம்பரிய முறைகள் போதுமானவை என தெரிவித்துள்ளார்.

நான் குப்பிவிளக்கிலேயே படித்தேன் என தெரிவித்த அவர் தொழில்நுட்ப வசதிகளை நம்பியிருப்பதற்கு பதில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிற்கு அவசியமான தேவைகளை மாத்திரம் வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177012

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மின்சார சபை பேச்சாளரின் கருத்து தொடர்பில் மின்சக்தி அமைச்சர் கண்டனம்

பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கு மின்சாரம் அவசியமில்லை, எண்ணெய் விளக்கு போதும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்த கருத்துக்கு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் உள்ளூர் ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, தீர்வின்மையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டமையினால் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த சிறுவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே நோயல் பிரியந்த இதனைத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், தனது கருத்துக்காக பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக இலங்கை மின்சார சபை நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் தனது எக்ஸ்’ பதிவின் ஊடாக தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையானது அரசாங்கத்தின் அல்லது இலங்கை மின்சார சபையின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை என தெரிவித்த அமைச்சர், அமைச்சு மற்றும் மின்சார சபையின் சார்பாக மன்னிப்பு கோரினார்.

“இலங்கை மின்சார சபை பேச்சாளரின் அறிக்கை தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பலரின் உணர்வுகளுடன் நான் உடன்படுகிறேன்,” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ‘X’ இல் பகிரப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அறிக்கையில், இலங்கை மின்சார சபை பேச்சாளரின் ‘முழு’ அறிக்கையும் அனுதாபம் இல்லாதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என சுட்டிக்காட்டியுள்ளார்.

“ இதைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மின்சக்தி அமைச்சர் எடுப்பார் என நான் நம்புகிறேன், ஏனெனில் கௌரவ. அதிகாரியின் அதே கருத்தை அமைச்சரும் பகிர்ந்து கொள்கிறார், ”என அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/292817

  • கருத்துக்கள உறவுகள்

இவர்  பதவி விலகி உள்ளதாக அல்லது விலக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை காப்பாற்றி விட்டேன் என்று ரணில் சொன்னது இதைத் தானா??

  • கருத்துக்கள உறவுகள்

1990 களில் jam போத்தல் விளக்குகளில் படித்தது நினைவிற்கு வருகிறது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.