Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

றிப்தி அலி)
பலஸ்தீன் தனி நாட்டை உரு­வாக்க அரபு நாடு­களின் கூட்­ட­மைப்­பினால் மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­க­ளுக்கு இலங்கை ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என குவைத் அழைப்பு விடுத்­துள்­ளது.

சவூதி அரே­பி­யாவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள இந்த முயற்­சிக்கு குவைத் தொடர்ச்­சி­யாக ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றது என இலங்­கைக்­கான குவைத் தூதுவர் கலஃப் எம்.எம். புதைர் தெரி­வித்தார். இலங்­கையும் இந்த முயற்­சிக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என தூதுவர் தெரி­வித்தார்.

குவைத்தின் 63ஆவது தேசிய தினம் மற்றும் 33ஆவது விடு­தலை தினம் ஆகி­ய­வற்றின் நிகழ்­வுகள் கடந்த கடந்த திங்­கட்­கி­ழமை (26) கொழும்பில் இடம்­பெற்­றது.

இந்த நிகழ்வில் உரை­யாற்றும் போதே இலங்­கைக்­கான குவைத் தூதுவர் கலஃப் எம்.எம். புதைர் இந்த அழைப்­பினை விடுத்தார்.
இதே­வேளை, ஐந்து வரு­டங்­க­ளுக்குள் பலஸ்­தீன அர­சாங்­கத்தை அமைக்க வேண்­டி­யது அவ­சியம் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க வலி­யு­றுத்தி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த நிகழ்வில் தொழில் மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாண­யக்­கார பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டார். இங்கு அவர் நிகழ்த்­திய உரையின் போது இலங்­கைக்கும் குவைத்­திற்கும் இடையில் நீண்ட கால­மாக காணப்­படும் உற­வினை சுட்­டிக்­காட்­டி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த நிகழ்வில், சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­ய­வர்த்­தன, வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி உட்­பட அமைச்­சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/16566

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீன மக்களின் விடுதலையை ஆதரிக்கிறது யதார்த்தம். நாமும் ஆதரிக்கிறோம். அந்த மக்கள் பூரண சுதந்திர தேசத்தில் இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பில் இருந்தும் விடுதலை பெற்று சுதந்திர பலஸ்தீனத்தில் வாழனும். 

ஆனால்.. காசா படுகொலையை விட மோசமான படுகொலை தமிழீழம் கேட்டு போராடிய மக்கள் மீது முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய (ஒரே நாளில் 50,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும் கண்டிக்காத கண்ணீர் விடாத உள்ளூர் முஸ்லிம் சமூகம் உட்பட) போது பால்சோறு சாப்பிட்ட உள்ளூர் முஸ்லிம் தலைவர்களும்.. மகிந்தவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய உலக முஸ்லிம் தலைவர்களும் எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு இந்த கோரிக்கையை முன் வைப்பீங்க.

****

Edited by இணையவன்

  • nunavilan changed the title to பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: குவைத் அழைப்பு
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

பலஸ்தீன் தனி நாட்டை உரு­வாக்க அரபு நாடு­களின் கூட்­ட­மைப்­பினால் மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­க­ளுக்கு இலங்கை ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என குவைத் அழைப்பு விடுத்­துள்­ளது.

இவர்கள் அழைப்பு விடுக்காமலே வெளிநாட்டு இலங்கை தமிழர்கள்  ஹமாஸ் தலைமையிலான பலஸ்தீன தனி முஸ்லிம் நாட்டை உரு­வாக்க தங்கள் முழு ஆதரவை வழங்கி வருகின்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.