Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்த, ஜனாதிபதியின் அழைப்பில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழிவுகள் தொடர்பிலான கலந்துரையாடலில் பங்கேற்ற, நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், நாணய நிதியத்தின் பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கை தனக்கு கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“எதிர்க்கட்சித் தரப்பில் நான் மட்டும்தான் பிரசன்னமாகியிருந்தேன். சரியான தரவுகள் எங்களுக்கு இல்லாத சூழ்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்க முடியுமா என எங்களால் சொல்ல முடியாது என குறிப்பிட்ட பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வு தரவு அறிக்கையை எங்களுக்குத் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள். முதலில் எனக்குத் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள்.”

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று (மார்ச் 11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன் | Sumanthiran Attend Imf Meeting

சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென எம். ஏ. சுமந்திரன் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட அழைப்பு

 

இந்தக் கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் மாத்திரமே எதிர்க்கட்சிகள் சார்பில் பங்கேற்றிருந்ததோடு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அனுமதியை தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் அவர் பெற்றிருக்கவில்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன் | Sumanthiran Attend Imf Meeting

 

இந்த விடயம் தொடர்பில் வினவியபோதிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். எவ்வாறெனினும் இந்த கூட்டத்தில் பங்கேற்றமை குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தனக்கு கிடைத்த தனிப்பட்ட அழைப்பிற்கு அமைய பங்கேற்றதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதேநேரத்தில், வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பில், யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் சிவஞானம் சிறீதரன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/sumanthiran-attend-imf-meeting-1710268541

  • கருத்துக்கள உறவுகள்

அழையா விருந்தாளி போல....

என்னையும் கூப்பிட்டவையள் என புலம்புவினம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பெருமாள் said:

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அனுமதியை தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் அவர் பெற்றிருக்கவில்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

தமிழரசு கட்சியின் யாப்பை வைத்து ஸ்ரீதரனை தூக்கியவர் அதே யாப்பின் பிரகாரம் நடக்க வில்லையே ?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தமிழரசு கட்சியின் யாப்பை வைத்து ஸ்ரீதரனை தூக்கியவர் அதே யாப்பின் பிரகாரம் நடக்க வில்லையே ?

 

 

1 hour ago, putthan said:

அழையா விருந்தாளி போல....

என்னையும் கூப்பிட்டவையள் என புலம்புவினம்..

பங்கேற்றதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தமிழரசு கட்சியின் யாப்பை வைத்து ஸ்ரீதரனை தூக்கியவர் அதே யாப்பின் பிரகாரம் நடக்க வில்லையே ?

 

 

17 minutes ago, Kapithan said:

 

பங்கேற்றதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா? 

...இதில் எந்த வித நன்மைகளும் தமிழ் மக்களுக்கோ,நாட்டுக்கோ கிடைக்க போவதில்லை ..
சுமத்திரன் என்ற தனிநபருக்கு ஏதாவது நன்மைகள் கிடைக்க வாப்புக்கள் உண்டு ...
முக்கிய எதிர்கட்சிகள் கலந்து கொள்ள வில்லை .....அந்த முக்கிய எதிர்கட்சிகள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் ,இருந்தும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை...இ
வர்(சும் )மூன்றாம் தரப்பு ....
கருத்து எழுதுவதற்கு ஆட்சேபனை தேவையில்லை ....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.