Jump to content

'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ - இசையுலகில் எதிர்ப்பு ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதியா?’ - இசையுலகில் எதிர்ப்பு

பட மூலாதாரம்,TM KRISHNA/FACEBOOK

படக்குறிப்பு,

டி.எம். கிருஷ்ணா

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியின் பெருமைக்குரிய சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு சில இசைக் கலைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மியூசிக் அகாடமியை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

சென்னையில் கர்நாடக சங்கீதத்தின் மரியாதைக்குரிய அமைப்பாகத் திகழும் தி மியூசிக் அகாடமி, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசையில் சிறந்த இசைக் கலைஞர்களைத் தேர்வுசெய்து பல்வேறு விருதுகளை வழங்கிவருகிறது.

சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, மியூசிகாலஜிஸ்ட் விருது, நிருத்ய கலாநிதி ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கும் சங்கீத கலா ஆச்சார்யா விருது பேராசிரியர் பரசால ரவி, கீதா ஆச்சார்யா ஆகியோருக்கும் டிடிகே விருது திருவையாறு சகோதரர்கள், ஹெச்.கே. நரசிம்மமூர்த்திக்கும் மியூசிகாலஜிஸ்ட் விருது டாக்டர் மார்க்ரெட் பாஸினுக்கும் நிருத்ய கலாநிதி விருது டாக்டர் நீனா பிரசாதுக்கும் வழங்கப்படுவதாக மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால், சங்கீத கலாநிதி விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கியதை பல கர்நாடக இசைக் கலைஞர்கள் ரசிக்கவில்லை. வயலின் மற்றும் வாய்ப்பாட்டு கலைஞர்களான ரஞ்சனியும் காயத்ரியும் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதைக் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக, தி மியூசிக் அகாடமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அந்தக் கடிதத்தை புதன்கிழமையன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர்.

 
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதியா?’ - இசையுலகில் எதிர்ப்பு

பட மூலாதாரம்,RANJANI-GAYATRI/FACEBOOK

படக்குறிப்பு,

ரஞ்சனி-காயத்ரி

எதிர்ப்புக்கான காரணம்

அந்தக் கடிதத்தில், 2024ஆம் ஆண்டின் மியூசிக் அகாடமியின் மாநாட்டில் இருந்து விலகிக் கொள்வதாகவும் டிசம்பர் 25ஆம் தேதி நடத்த வேண்டிய தங்களுடைய இசை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர். மேலும், "இந்த மாநாட்டிற்கு டி.எம். கிருஷ்ணா தலைமை தாங்குவார் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். கர்நாடக இசை உலகிற்கு அவர் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த சமூகத்தின் உணர்வுகளை அவர் வேண்டுமென்றேயும் மகிழ்ச்சியுடனும் புண்படுத்தியிருக்கிறார். தியாகராஜர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மதிப்பிற்குரிய அடையாளங்களை அவமதித்திருக்கிறார். கர்நாடக இசைக் கலைஞராக இருப்பது அவமானத்திற்குரிய விஷயம் என்பதைப் போன்ற உணர்வை இவரது நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது தவிர, டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் புகழ்ந்துவருவதை கண்டுகொள்ளாமல் விட முடியாது என்றும் கூறியிருந்தனர். "பிராமணர்களை இனப் படுகொலை செய்ய வேண்டுமென வெளிப்படையாக பேசிய, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்திய, சமூகத்தில் மோசமான மொழியைப் பயன்படுத்துவதை சாதாரண விஷயமாக்கிய ஈ.வெ.ரா என்ற பெரியாரை டி.எம். கிருஷ்ணா புகழ்ந்துவருவதை கண்டுகொள்ளாமல் இருப்பது அபாயகரமானது. கலை, கலைஞர்கள், வாக்கேயகாரர்கள், ரசிகர்கள், அமைப்புகள், நம்முடைய வேர், கலாச்சாரம் ஆகியவற்றை மதிக்கும் ஒரு அமைப்பை நாங்கள் நம்புகிறோம். இவற்றையெல்லாம் புதைத்துவிட்டு, இந்த ஆண்டு மாநாட்டில் இணைவது, ஒரு தார்மீக மீறலாக அமைந்துவிடும்" எனக் குறிப்பிட்டனர்.

 
சித்ரவீணா ரவிகிரண்

பட மூலாதாரம்,CHITRAVINA RAVIKIRAN/TWITTER

படக்குறிப்பு,

சித்ரவீணா ரவிகிரண்

மியூசிக் அகாடமியை புறக்கணிக்கும் கர்நாடக இசை உலகம்

இது கர்நாடக இசை உலகிலும் இசை உலகைக் கவனிப்பவர்களிடமும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து பல கலைஞர்கள் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

2017ஆம் ஆண்டில் சங்கீத கலாநிதி விருதைப் பெற்ற சித்ரவீணா ரவிகிரண் அந்த விருதையும் விருதுத் தொகையும் திருப்பி அளிக்கப்போவதாகத் தெரிவித்தார். தவறான தகவல்களின் அடிப்படையில் இசை உலகை பிளவுபடுத்தியதாக டி.எம். கிருஷ்ணா மீது அவர் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

 
சித்ரவீணா ரவிகிரண்

பட மூலாதாரம்,CHITRAVINA RAVIKIRAN/TWITTER

படக்குறிப்பு,

சித்ரவீணா ரவிகிரணின் பதிவு

வாய்ப்பாட்டுக் கலைஞர்களான திருச்சூர் சகோதரர்களும் இந்த ஆண்டு தி மியூசிக் அகாடமியின் விழாவில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தனர்.

 
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதியா?’ - இசையுலகில் எதிர்ப்பு

பட மூலாதாரம்,TRICHUR BROTHERS/TWITTER

படக்குறிப்பு,

திருச்சூர் சகோதரர்களின் கடிதம்

ஹரிகதா சொல்பவரான துஷ்யந்த் ஸ்ரீதரும் மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டு நிகழ்விலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

மியூசிக் அகாடமி விளக்கம்

இந்த நிலையில், ரஞ்சனி - காயத்ரியின் கடிதத்திற்கு தி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி பதிலளித்தார். அந்தக் கடிதத்தில், அவர்களது கடிதம் கிட்டத்தட்ட அவதூறு என்று சொல்லத்தக்க வகையில் இருந்ததாகவும் மூத்த, சக இசைக் கலைஞர் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

"தி மியூசிக் அகாடமியால் 1942ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டுவரும் சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசையின் மிக உயரிய விருது. ஒவ்வொரு ஆண்டும் யாருக்கு விருதை வழங்க வேண்டும் என முடிவுசெய்வது மியூசிக் அகாடமியின் முற்றுரிமை. இசைத் துறையில் குறிப்பிட்ட காலத்திற்கு, தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்ட கலைஞர்களே மிகக் கவனத்துடன் இந்த விருதுக்கு தேர்வுசெய்யப்படுகிறார்கள். மியூசிக் அகாடமியின் நிர்வாகக் குழு இந்த ஆண்டு இந்த விருதுக்கு டி.எம். கிருஷ்ணாவைத் தேர்வுசெய்தது. நீண்ட காலமாக இசையுலகில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டதே தவிர, வேறு புறக் காரணிகள் எங்கள் தேர்வின் மீது தாக்கம் செலுத்தவில்லை.

உங்களுக்குப் பிடிக்காத இசைக் கலைஞர் ஒருவருக்கு விருது அளிக்கப்படுகிறது என்பதால், இந்த ஆண்டு விழாவிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்திருப்பதும் மோசமாக விமர்சிப்பதும் கலைஞர்களுக்கு உரிய பண்பல்ல. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட கடிதத்தை நீங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள். இது மரியாதைக் குறைவானது என்பதோடு உங்கள் கடிதத்தின் நோக்கம் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட இதுபோன்ற கடிதத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பிறகு, அதற்கு பதில் அளிப்பது தேவையில்லைதான். ஆனால், கர்நாடக இசை உலகிற்கு உங்களுடைய பங்களிப்பை மனதில்கொண்டு, இந்த மரியாதையை மறுக்க நான் விரும்பவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதியா?’ - இசையுலகில் எதிர்ப்பு

பட மூலாதாரம்,MADRASMUSICACADEMY/INSTAGRAM

படக்குறிப்பு,

தி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளியின் கடிதம்

யார் இந்த டி.எம். கிருஷ்ணா?

டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்பட்டதற்கு இசைக் கலைஞர்களின் எதிர்ப்பு, அதற்கு தி மியூசிக் அகாடமியின் பதில் என சலசலப்பு எழுந்திருக்கும் நிலையில், புயலின் மையப் புள்ளியான டி.எம். கிருஷ்ணா, விருதுக்கு நன்றி தெரிவித்ததோடு வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவிரும்பவில்லை.

சென்னையில் இசை பாரம்பரியமுடைய ஒரு குடும்பத்தில் பிறந்த டி.எம்.கிருஷ்ணா, சீதாராம ஷர்மா, செங்கல்பட்டு ரங்கநாதன், செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ஆகியோரிடம் சாஸ்த்ரீய சங்கீதத்தைப் பயின்றவர். மிகப் பெரிய கலைஞர்களிடம் பயின்றிருந்தாலும், தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர்.

"கர்நாடக இசை உலகில் உயர்சாதியினரின் ஆதிக்கத்தை உடைத்து, அந்த இசையை எல்லாத் தரப்பினருக்கும் கொண்டுசெல்ல வெண்டும்" என்பது குறித்துத் தொடர்ந்து பேசிவந்தார் டி.எம். கிருஷ்ணா. இதற்காக செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனுடன் சேர்ந்து சென்னை ஊரூர் ஆல்காட் குப்பத்தில் சாஸ்த்ரீய இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். அதேபோல சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவின் பாடல்களை கர்நாடக இசையில் பாடியிருக்கிறார்.

மேலும், எழுத்தாளர் பெருமாள் முருகனின் பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடினார் டி.எம். கிருஷ்ணா. வைக்கம் நிகழ்வின் நூற்றாண்டை ஒட்டி, பெரியார் குறித்து பெருமாள் முருகன் எழுதிய "சிந்திக்கச் சொன்னவர் பெரியார்" என்ற ஒரு பாடலையும் டி.எம். கிருஷ்ணா பாடியிருந்தார்.

பெரியார் குறித்த டி.எம். கிருஷ்ணாவின் இந்த பார்வையே பல கலைஞர்களை ஆத்திரப்படுத்தியிருப்பது அவர்களது குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

மியூசிக் அகாடமி மீதான சர்ச்சை

"டி.எம். கிருஷ்ணாவுக்கு கர்நாடக சங்கீத கலைஞர் என்ற அடிப்படையில் சங்கீத கலாநிதி விருது அளிக்கப்பட்டது. இது இசை சார்ந்த விருது. இதில் அவரது அரசியல் கருத்து தொடர்பான விஷயத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியமே கிடையாது. அவர் எந்த அரசியல் தலைவரை விரும்புகிறார் என்பதை பார்க்க வேண்டியதே இல்லை. இது அவர்களது அறியாமையைத்தான் காட்டுகிறது. டி.எம். கிருஷ்ணா பெரியார் மட்டுமல்ல, அம்பேத்கரையும் பாடியிருக்கிறார். தேவையில்லாத ஒரு சர்ச்சையை ஏற்படுத்த நினைத்து இப்படிச் செய்கிறார்கள்" என்கிறார் பெருமாள் முருகன்.

தி மியூசிக் அகாடமி இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. கர்நாடக இசையுலகின் மிக உயரிய அமைப்பாக விளங்கும் தி மியூசிக் அகாடமியின் துவக்கம் 1927வாக்கில் அமைந்தது. அந்த ஆண்டு சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி வரிசையாக சில இசைக் கச்சேரிகள் நடத்தப்பட்டன. அதற்கு நல்ல வரவேற்பும் கவனிப்பும் இருந்த நிலையில், அதேபோல ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி 1929ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இசை தொடர்பான ஆய்வரங்குகளும் கச்சேரிகளும் நடந்து வருகின்றன. ஆனால், துவக்கப்பட்டதில் இருந்தே, கர்நாடக இசை உலகில் உயர்சாதியினரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருவதாக விமர்சனமும் இந்த அமைப்பின் மீது இருந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தி மியூசிக் அகாடமி எடுத்துள்ள நிலைப்பாடு இசை உலகில் சிலரது எதிர்ப்பைச் சந்தித்தாலும் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

 
நித்யானந்த் ஜெயராமன்

பட மூலாதாரம்,NITYLISTS/INSTAGRAM

படக்குறிப்பு,

நித்யானந்த் ஜெயராமன்

"தனி மனிதர்களின் நிலைப்பாடே முக்கியம்"

"இந்த விவகாரத்தில் நான் மிக முக்கியமானதாகப் பார்ப்பது தனி மனிதர்கள் இதில் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதல்ல. மாறாக, மேட்டுக்குடி அடையாளத்தைப் பெற்ற ஒரு அமைப்பு மிகத் துணிச்சலான முடிவை எடுத்திருப்பதுதான் கவனிக்க வைக்கிறது. இந்த முடிவினால் வரக்கூடிய விளைவை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். டி.எம். கிருஷ்ணாவின் சாதனைகள் ஒரு புறம் இருந்தாலும், தி மியூசிக் அகாடமி இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது மிக முக்கியமானது" என்கிறார் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

2014ஆம் ஆண்டு முதல் டி.எம். கிருஷ்ணாவும் நித்யானந்த் ஜெயராமனும் வேறு சிலருடன் இணைந்து ஊரூர் ஆல்காட் குப்பம் இசை விழாவை நடத்திவருகின்னர். இதுவரை ஐந்து முறை இந்த விழா நடைபெற்றிருக்கிறது.

"கர்நாடக இசை ஒரு தரப்பினரிடம் மட்டும் கேட்கப்படுவதைத் தாண்டி, வேறு காதுகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விழா துவங்கப்பட்டது. அவர்களுடைய குரல்கள், இந்த கலையை, இசையை வலுப்படுத்தும் என நம்பினார் டி.எம். கிருஷ்ணா. அப்போதுதான் சாதாரண மக்களுக்கும் என்னைப் போன்ற கர்நாடக இசையே தெரியாதவர்களுக்கும் அதனை ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது" என்கிறார் அவர்.

டி.எம். கிருஷ்ணா கர்நாடக இசை உலகின் புகழைச் சிதைத்துவிட்டதாகச் சொல்வதை ஏற்க முடியாது என்கிறார் அவர். "ஊரூர் ஆல்காட் குப்பம் மேடையில் அவர் பாடும்போது கிடைக்கும் வரவேற்பை அங்கே வந்து பார்க்க வேண்டும். கிருஷ்ணாவின் முயற்சியால், கர்நாடக இசையை ரசிப்பவர்களின் எண்ணிக்கை மிகப் பெரியதாகியிருக்கிறது" என்கிறார் நித்யானந்த்.

 
பெருமாள் முருகன்
படக்குறிப்பு,

எழுத்தாளர் பெருமாள் முருகன்

”மீடூ-வின் போது ஏன் எதிர்ப்பு இல்லை?”

பெரியார் பிராமணர்களை மோசமாகச் சித்தரித்தார் என்றும் அதனால் அவரை ஏற்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என்று சொல்வது சரியல்ல என்கிறார் பெருமாள் முருகன். "இந்த இசை பிராமணர்களுக்கு மட்டும் சொந்தமான இசையல்ல. எம்.எம். தண்டபாணி தேசிகரைப் போல, மதுரை சோமுவைப் போல பிராமணரல்லாத இசைக் கலைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். கர்நாடக இசை ஏதோ தங்களுடைய சொத்து என கருதி இப்படிச் சொல்வது மிகத் தவறானது" என்கிறார் பெருமாள் முருகன்.

2024ஆம் ஆண்டு கர்நாடக இசை விழாவில் இருந்து பல இசைக் கலைஞர்கள் பின்வாங்குவது, விருதுகளைத் திருப்பி அளிப்பது அந்த அமைப்பிற்கு பின்னடைவாக இருக்குமா?

"நிச்சயமாக இருக்காது. தங்கள் மீது 'Metoo' குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது விருதைத் திரும்பத் தராதவர்கள், இப்போது அந்த முடிவை எடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் இப்போதாவது அந்த முடிவை எடுக்கிறார்களே என சந்தோஷப்பட வேண்டியதுதான். மியூசிக் அகாடமியின் நிலைப்பாட்டால் அதற்கான வரவேற்பு அதிகரிக்கும். ரசிகர்களின் பன்முகத் தன்மையும் மேம்படும்" என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.

இந்த விவகாரத்தில் தி மியூசிக் அகாடமியின் உறுப்பினர்கள் பலர், அகாடமியின் அதிகாரபூர்வ கருத்தைத் தாண்டி எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c2v98z8xgx1o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2024 at 03:44, ஏராளன் said:
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதியா?’ - இசையுலகில் எதிர்ப்பு

பட மூலாதாரம்,TM KRISHNA/FACEBOOK

படக்குறிப்பு,

டி.எம். கிருஷ்ணா

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியின் பெருமைக்குரிய சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு சில இசைக் கலைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மியூசிக் அகாடமியை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

சென்னையில் கர்நாடக சங்கீதத்தின் மரியாதைக்குரிய அமைப்பாகத் திகழும் தி மியூசிக் அகாடமி, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசையில் சிறந்த இசைக் கலைஞர்களைத் தேர்வுசெய்து பல்வேறு விருதுகளை வழங்கிவருகிறது.

சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, மியூசிகாலஜிஸ்ட் விருது, நிருத்ய கலாநிதி ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கும் சங்கீத கலா ஆச்சார்யா விருது பேராசிரியர் பரசால ரவி, கீதா ஆச்சார்யா ஆகியோருக்கும் டிடிகே விருது திருவையாறு சகோதரர்கள், ஹெச்.கே. நரசிம்மமூர்த்திக்கும் மியூசிகாலஜிஸ்ட் விருது டாக்டர் மார்க்ரெட் பாஸினுக்கும் நிருத்ய கலாநிதி விருது டாக்டர் நீனா பிரசாதுக்கும் வழங்கப்படுவதாக மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால், சங்கீத கலாநிதி விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கியதை பல கர்நாடக இசைக் கலைஞர்கள் ரசிக்கவில்லை. வயலின் மற்றும் வாய்ப்பாட்டு கலைஞர்களான ரஞ்சனியும் காயத்ரியும் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதைக் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக, தி மியூசிக் அகாடமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அந்தக் கடிதத்தை புதன்கிழமையன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர்.

 

'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதியா?’ - இசையுலகில் எதிர்ப்பு

பட மூலாதாரம்,RANJANI-GAYATRI/FACEBOOK

படக்குறிப்பு,

ரஞ்சனி-காயத்ரி

எதிர்ப்புக்கான காரணம்

அந்தக் கடிதத்தில், 2024ஆம் ஆண்டின் மியூசிக் அகாடமியின் மாநாட்டில் இருந்து விலகிக் கொள்வதாகவும் டிசம்பர் 25ஆம் தேதி நடத்த வேண்டிய தங்களுடைய இசை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர். மேலும், "இந்த மாநாட்டிற்கு டி.எம். கிருஷ்ணா தலைமை தாங்குவார் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். கர்நாடக இசை உலகிற்கு அவர் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த சமூகத்தின் உணர்வுகளை அவர் வேண்டுமென்றேயும் மகிழ்ச்சியுடனும் புண்படுத்தியிருக்கிறார். தியாகராஜர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மதிப்பிற்குரிய அடையாளங்களை அவமதித்திருக்கிறார். கர்நாடக இசைக் கலைஞராக இருப்பது அவமானத்திற்குரிய விஷயம் என்பதைப் போன்ற உணர்வை இவரது நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது தவிர, டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் புகழ்ந்துவருவதை கண்டுகொள்ளாமல் விட முடியாது என்றும் கூறியிருந்தனர். "பிராமணர்களை இனப் படுகொலை செய்ய வேண்டுமென வெளிப்படையாக பேசிய, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்திய, சமூகத்தில் மோசமான மொழியைப் பயன்படுத்துவதை சாதாரண விஷயமாக்கிய ஈ.வெ.ரா என்ற பெரியாரை டி.எம். கிருஷ்ணா புகழ்ந்துவருவதை கண்டுகொள்ளாமல் இருப்பது அபாயகரமானது. கலை, கலைஞர்கள், வாக்கேயகாரர்கள், ரசிகர்கள், அமைப்புகள், நம்முடைய வேர், கலாச்சாரம் ஆகியவற்றை மதிக்கும் ஒரு அமைப்பை நாங்கள் நம்புகிறோம். இவற்றையெல்லாம் புதைத்துவிட்டு, இந்த ஆண்டு மாநாட்டில் இணைவது, ஒரு தார்மீக மீறலாக அமைந்துவிடும்" எனக் குறிப்பிட்டனர்.

 

சித்ரவீணா ரவிகிரண்

பட மூலாதாரம்,CHITRAVINA RAVIKIRAN/TWITTER

படக்குறிப்பு,

சித்ரவீணா ரவிகிரண்

மியூசிக் அகாடமியை புறக்கணிக்கும் கர்நாடக இசை உலகம்

இது கர்நாடக இசை உலகிலும் இசை உலகைக் கவனிப்பவர்களிடமும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து பல கலைஞர்கள் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

2017ஆம் ஆண்டில் சங்கீத கலாநிதி விருதைப் பெற்ற சித்ரவீணா ரவிகிரண் அந்த விருதையும் விருதுத் தொகையும் திருப்பி அளிக்கப்போவதாகத் தெரிவித்தார். தவறான தகவல்களின் அடிப்படையில் இசை உலகை பிளவுபடுத்தியதாக டி.எம். கிருஷ்ணா மீது அவர் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

 

சித்ரவீணா ரவிகிரண்

பட மூலாதாரம்,CHITRAVINA RAVIKIRAN/TWITTER

படக்குறிப்பு,

சித்ரவீணா ரவிகிரணின் பதிவு

வாய்ப்பாட்டுக் கலைஞர்களான திருச்சூர் சகோதரர்களும் இந்த ஆண்டு தி மியூசிக் அகாடமியின் விழாவில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தனர்.

 

'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதியா?’ - இசையுலகில் எதிர்ப்பு

பட மூலாதாரம்,TRICHUR BROTHERS/TWITTER

படக்குறிப்பு,

திருச்சூர் சகோதரர்களின் கடிதம்

ஹரிகதா சொல்பவரான துஷ்யந்த் ஸ்ரீதரும் மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டு நிகழ்விலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

மியூசிக் அகாடமி விளக்கம்

இந்த நிலையில், ரஞ்சனி - காயத்ரியின் கடிதத்திற்கு தி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி பதிலளித்தார். அந்தக் கடிதத்தில், அவர்களது கடிதம் கிட்டத்தட்ட அவதூறு என்று சொல்லத்தக்க வகையில் இருந்ததாகவும் மூத்த, சக இசைக் கலைஞர் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

"தி மியூசிக் அகாடமியால் 1942ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டுவரும் சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசையின் மிக உயரிய விருது. ஒவ்வொரு ஆண்டும் யாருக்கு விருதை வழங்க வேண்டும் என முடிவுசெய்வது மியூசிக் அகாடமியின் முற்றுரிமை. இசைத் துறையில் குறிப்பிட்ட காலத்திற்கு, தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்ட கலைஞர்களே மிகக் கவனத்துடன் இந்த விருதுக்கு தேர்வுசெய்யப்படுகிறார்கள். மியூசிக் அகாடமியின் நிர்வாகக் குழு இந்த ஆண்டு இந்த விருதுக்கு டி.எம். கிருஷ்ணாவைத் தேர்வுசெய்தது. நீண்ட காலமாக இசையுலகில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டதே தவிர, வேறு புறக் காரணிகள் எங்கள் தேர்வின் மீது தாக்கம் செலுத்தவில்லை.

உங்களுக்குப் பிடிக்காத இசைக் கலைஞர் ஒருவருக்கு விருது அளிக்கப்படுகிறது என்பதால், இந்த ஆண்டு விழாவிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்திருப்பதும் மோசமாக விமர்சிப்பதும் கலைஞர்களுக்கு உரிய பண்பல்ல. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட கடிதத்தை நீங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள். இது மரியாதைக் குறைவானது என்பதோடு உங்கள் கடிதத்தின் நோக்கம் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட இதுபோன்ற கடிதத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பிறகு, அதற்கு பதில் அளிப்பது தேவையில்லைதான். ஆனால், கர்நாடக இசை உலகிற்கு உங்களுடைய பங்களிப்பை மனதில்கொண்டு, இந்த மரியாதையை மறுக்க நான் விரும்பவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதியா?’ - இசையுலகில் எதிர்ப்பு

பட மூலாதாரம்,MADRASMUSICACADEMY/INSTAGRAM

படக்குறிப்பு,

தி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளியின் கடிதம்

யார் இந்த டி.எம். கிருஷ்ணா?

டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்பட்டதற்கு இசைக் கலைஞர்களின் எதிர்ப்பு, அதற்கு தி மியூசிக் அகாடமியின் பதில் என சலசலப்பு எழுந்திருக்கும் நிலையில், புயலின் மையப் புள்ளியான டி.எம். கிருஷ்ணா, விருதுக்கு நன்றி தெரிவித்ததோடு வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவிரும்பவில்லை.

சென்னையில் இசை பாரம்பரியமுடைய ஒரு குடும்பத்தில் பிறந்த டி.எம்.கிருஷ்ணா, சீதாராம ஷர்மா, செங்கல்பட்டு ரங்கநாதன், செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ஆகியோரிடம் சாஸ்த்ரீய சங்கீதத்தைப் பயின்றவர். மிகப் பெரிய கலைஞர்களிடம் பயின்றிருந்தாலும், தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர்.

"கர்நாடக இசை உலகில் உயர்சாதியினரின் ஆதிக்கத்தை உடைத்து, அந்த இசையை எல்லாத் தரப்பினருக்கும் கொண்டுசெல்ல வெண்டும்" என்பது குறித்துத் தொடர்ந்து பேசிவந்தார் டி.எம். கிருஷ்ணா. இதற்காக செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனுடன் சேர்ந்து சென்னை ஊரூர் ஆல்காட் குப்பத்தில் சாஸ்த்ரீய இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். அதேபோல சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவின் பாடல்களை கர்நாடக இசையில் பாடியிருக்கிறார்.

மேலும், எழுத்தாளர் பெருமாள் முருகனின் பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடினார் டி.எம். கிருஷ்ணா. வைக்கம் நிகழ்வின் நூற்றாண்டை ஒட்டி, பெரியார் குறித்து பெருமாள் முருகன் எழுதிய "சிந்திக்கச் சொன்னவர் பெரியார்" என்ற ஒரு பாடலையும் டி.எம். கிருஷ்ணா பாடியிருந்தார்.

பெரியார் குறித்த டி.எம். கிருஷ்ணாவின் இந்த பார்வையே பல கலைஞர்களை ஆத்திரப்படுத்தியிருப்பது அவர்களது குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

மியூசிக் அகாடமி மீதான சர்ச்சை

"டி.எம். கிருஷ்ணாவுக்கு கர்நாடக சங்கீத கலைஞர் என்ற அடிப்படையில் சங்கீத கலாநிதி விருது அளிக்கப்பட்டது. இது இசை சார்ந்த விருது. இதில் அவரது அரசியல் கருத்து தொடர்பான விஷயத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியமே கிடையாது. அவர் எந்த அரசியல் தலைவரை விரும்புகிறார் என்பதை பார்க்க வேண்டியதே இல்லை. இது அவர்களது அறியாமையைத்தான் காட்டுகிறது. டி.எம். கிருஷ்ணா பெரியார் மட்டுமல்ல, அம்பேத்கரையும் பாடியிருக்கிறார். தேவையில்லாத ஒரு சர்ச்சையை ஏற்படுத்த நினைத்து இப்படிச் செய்கிறார்கள்" என்கிறார் பெருமாள் முருகன்.

தி மியூசிக் அகாடமி இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. கர்நாடக இசையுலகின் மிக உயரிய அமைப்பாக விளங்கும் தி மியூசிக் அகாடமியின் துவக்கம் 1927வாக்கில் அமைந்தது. அந்த ஆண்டு சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி வரிசையாக சில இசைக் கச்சேரிகள் நடத்தப்பட்டன. அதற்கு நல்ல வரவேற்பும் கவனிப்பும் இருந்த நிலையில், அதேபோல ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி 1929ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இசை தொடர்பான ஆய்வரங்குகளும் கச்சேரிகளும் நடந்து வருகின்றன. ஆனால், துவக்கப்பட்டதில் இருந்தே, கர்நாடக இசை உலகில் உயர்சாதியினரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருவதாக விமர்சனமும் இந்த அமைப்பின் மீது இருந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தி மியூசிக் அகாடமி எடுத்துள்ள நிலைப்பாடு இசை உலகில் சிலரது எதிர்ப்பைச் சந்தித்தாலும் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

 

நித்யானந்த் ஜெயராமன்

பட மூலாதாரம்,NITYLISTS/INSTAGRAM

படக்குறிப்பு,

நித்யானந்த் ஜெயராமன்

"தனி மனிதர்களின் நிலைப்பாடே முக்கியம்"

"இந்த விவகாரத்தில் நான் மிக முக்கியமானதாகப் பார்ப்பது தனி மனிதர்கள் இதில் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதல்ல. மாறாக, மேட்டுக்குடி அடையாளத்தைப் பெற்ற ஒரு அமைப்பு மிகத் துணிச்சலான முடிவை எடுத்திருப்பதுதான் கவனிக்க வைக்கிறது. இந்த முடிவினால் வரக்கூடிய விளைவை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். டி.எம். கிருஷ்ணாவின் சாதனைகள் ஒரு புறம் இருந்தாலும், தி மியூசிக் அகாடமி இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது மிக முக்கியமானது" என்கிறார் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

2014ஆம் ஆண்டு முதல் டி.எம். கிருஷ்ணாவும் நித்யானந்த் ஜெயராமனும் வேறு சிலருடன் இணைந்து ஊரூர் ஆல்காட் குப்பம் இசை விழாவை நடத்திவருகின்னர். இதுவரை ஐந்து முறை இந்த விழா நடைபெற்றிருக்கிறது.

"கர்நாடக இசை ஒரு தரப்பினரிடம் மட்டும் கேட்கப்படுவதைத் தாண்டி, வேறு காதுகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விழா துவங்கப்பட்டது. அவர்களுடைய குரல்கள், இந்த கலையை, இசையை வலுப்படுத்தும் என நம்பினார் டி.எம். கிருஷ்ணா. அப்போதுதான் சாதாரண மக்களுக்கும் என்னைப் போன்ற கர்நாடக இசையே தெரியாதவர்களுக்கும் அதனை ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது" என்கிறார் அவர்.

டி.எம். கிருஷ்ணா கர்நாடக இசை உலகின் புகழைச் சிதைத்துவிட்டதாகச் சொல்வதை ஏற்க முடியாது என்கிறார் அவர். "ஊரூர் ஆல்காட் குப்பம் மேடையில் அவர் பாடும்போது கிடைக்கும் வரவேற்பை அங்கே வந்து பார்க்க வேண்டும். கிருஷ்ணாவின் முயற்சியால், கர்நாடக இசையை ரசிப்பவர்களின் எண்ணிக்கை மிகப் பெரியதாகியிருக்கிறது" என்கிறார் நித்யானந்த்.

 

பெருமாள் முருகன்

படக்குறிப்பு,

எழுத்தாளர் பெருமாள் முருகன்

”மீடூ-வின் போது ஏன் எதிர்ப்பு இல்லை?”

பெரியார் பிராமணர்களை மோசமாகச் சித்தரித்தார் என்றும் அதனால் அவரை ஏற்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என்று சொல்வது சரியல்ல என்கிறார் பெருமாள் முருகன். "இந்த இசை பிராமணர்களுக்கு மட்டும் சொந்தமான இசையல்ல. எம்.எம். தண்டபாணி தேசிகரைப் போல, மதுரை சோமுவைப் போல பிராமணரல்லாத இசைக் கலைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். கர்நாடக இசை ஏதோ தங்களுடைய சொத்து என கருதி இப்படிச் சொல்வது மிகத் தவறானது" என்கிறார் பெருமாள் முருகன்.

2024ஆம் ஆண்டு கர்நாடக இசை விழாவில் இருந்து பல இசைக் கலைஞர்கள் பின்வாங்குவது, விருதுகளைத் திருப்பி அளிப்பது அந்த அமைப்பிற்கு பின்னடைவாக இருக்குமா?

"நிச்சயமாக இருக்காது. தங்கள் மீது 'Metoo' குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது விருதைத் திரும்பத் தராதவர்கள், இப்போது அந்த முடிவை எடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் இப்போதாவது அந்த முடிவை எடுக்கிறார்களே என சந்தோஷப்பட வேண்டியதுதான். மியூசிக் அகாடமியின் நிலைப்பாட்டால் அதற்கான வரவேற்பு அதிகரிக்கும். ரசிகர்களின் பன்முகத் தன்மையும் மேம்படும்" என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.

இந்த விவகாரத்தில் தி மியூசிக் அகாடமியின் உறுப்பினர்கள் பலர், அகாடமியின் அதிகாரபூர்வ கருத்தைத் தாண்டி எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c2v98z8xgx1o

டி. எம் . கிருஷ்ணா பற்றி எழுத்தாளர் சாரு (சாருநிவேதிதா) அவரது பக்கத்தில் எழுதியிருக்கும் கட்டுரை இது:

**************

பாப் பாடகர் பாப் டிலனுக்கு 2016இல் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தது. அதேபோல் டி.எம். கிருஷ்ணாவுக்கும் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால், மேற்கத்திய நாடுகளில் இந்தியாவையும், ஹிந்து மதத்தையும் திட்டுபவர்களுக்கும் அவதூறு செய்பவர்களுக்கும் பெரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. இதை என் விஷயத்திலேயே கவனித்து விட்டுத்தான் சொல்கிறேன். வெளிப்படையாக எழுத முடியாது. நீங்களேதான் புரிந்து கொள்ள வேண்டும். இதை எழுதுங்கள், இப்படி எழுதுங்கள் என்றே சொல்கிறார்கள். நான் அதை ஏற்காவிட்டால் பிரசுரம் மறுக்கப்படுகிறது. கோவில்களில் க்ரூப் செக்ஸ் நடக்கிறது என்பது போல் எழுதினால் கொண்டாடுகிறார்கள். ஹிந்து மதத்தை எதிர்த்தால் எதிர்ப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று நான் எழுதினால் என் பெயர் நியூயார்க்கர் பத்திரிகையில் வரும். ”ஹிந்து மதத்தில் நாத்திகம் பேசினால் அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள், அத்தகைய நாத்திக வாதத்தையும் ஹிந்து மதம் ஏற்றுக் கொள்கிறது” என்று நான் எழுதினால் என்னை மேற்கத்தியர்கள் ஹிந்துத்துவா என்று சொல்கிறார்கள்.

இவ்வாறாகத்தான் பெருமாள் முருகன், அருந்ததி ராய், டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை மேற்கத்தியர்கள் கொண்டாடுகிறார்கள்.

விருதுக்காகவும் புகழுக்காகவும் அம்மாதிரியான இழிசெயலை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.

பெருமாள் முருகனுக்கு நடந்ததேதான் இப்போது டி.எம். கிருஷ்ணாவுக்கும் நடக்கிறது. ஒரே வித்தியாசம், கிருஷ்ணாவை எதிர்ப்பவர்கள் பிராமணர்கள் என்பதால் எதிர்ப்பு வெறும் மென்மையான சொற்களால் மட்டுமே நடக்கிறது. பெருமாள் முருகனுக்கு நடந்தது போல் கொலை மிரட்டல் எல்லாம் இல்லை. ஆனாலும் மேற்கத்தியரைப் பொருத்தவரை எதிர்ப்பு எதிர்ப்புதான். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது கிடைத்ததைக் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் யாருக்கும் இந்த விஷயம் தெரியாமல் போயிருக்கும். ஆனால் இந்த எதிர்ப்பின் காரணமாக, இது நியூயார்க்கருக்கும் நோபலுக்கும் போகும். இன்னும் சில தினங்களில் இந்த விஷயம் நியூயார்க்கரில் வருகிறதா இல்லையா என்று பாருங்கள். கிருஷ்ணாவுக்கு ஹிந்துத்துவா ஆட்கள் எதிர்ப்பு என்ற தலைப்புச் செய்தி நியூயார்க்கரில் வரும். இது நோபலின் கவனத்துக்குப் போகும்.

ஆனால் இந்த அளவுக்கு கிருஷ்ணாவுக்கு இசை தவிர வேறு எந்தத் தகுதியும் இல்லை. அவர் ஒரு அபூர்வமான இசைக் கலைஞர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த அபூர்வமான திறமையை அவருடைய நாத்திகவாதம் கொன்று விட்டது. யோசித்துப் பாருங்கள். தியாகராஜர் ராமா ராமா என்று உருகுகிறார். அந்த உருக்கத்தை ஒரு நாத்திகரால் எப்படி தன் குரலிலும் ஆன்மாவிலும் கொண்டு வந்து பாட முடியும்? அவர் பெருமாள் முருகனையும் பாரதிதாசனையும்தான் பாட முடியும். இவர்கள் ரெண்டு பேரும் வாக்கேயக்காரர்களா, சொல்லுங்கள்?

மேற்கத்தியர்கள் ஒரு agenda வைத்திருக்கிறார்கள். அந்த அஜண்டாவுக்குப் பொருந்தி வருபவர்களை அவர்கள் கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணாவுக்குக் கிடைக்கப் போகும் சர்வதேச விருதுகளையும் மரியாதையையும் பொருத்திருந்து பாருங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். கிருஷ்ணா சேரிகளுக்குப் போய் கர்னாடக இசை கற்றுக் கொடுப்பதில் ஒரு சாதியத் திமிர் இருக்கிறது. பொருளாதார ரீதியாகத்தான் சேரிவாழ் மக்கள் கீழ் நிலையில் இருக்கிறார்களே தவிர கலாச்சார ரீதியாக அல்ல. உயர்குடியிடம் என்னென்ன கலாச்சார விழுமியங்கள் இருக்கின்றனவோ அவை அனைத்தும் சேரியிலும் இருக்கின்றன. ஆனால் கிருஷ்ணா அவர்களைத் தன்னை விடத் தாழ்ந்தவர்களாக நினைக்கிறார். அதனால்தான் தன்னை கலாச்சார ரீதியாக உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டு சேரி மக்களிடம் கர்னாடக சங்கீதத்தை எடுத்துக்கொண்டு போகிறார். இது ஒரு கலாச்சார வன்முறை.

கைலி கட்டிக்கொண்டு கர்னாடக சங்கீதம் பாடுவது போல் கிருஷ்ணாவுக்கு ‘தில்’ இருந்தால் கானா பாடல்களைக் கற்றுக் கொண்டு கானா பாட வேண்டும். கடவுளை நம்பும் “மூடர்கள்” இயற்றிய கீர்த்தனைகளை அவர் இனிமேல் பாடக் கூடாது. கர்னாடக சங்கீதம் கையில் இருப்பதால் அவர் சேரி மக்களை விட கலாச்சார ரீதியாக உயர்ந்தவர் என்று அர்த்தம் இல்லை. தன்னுடைய ‘கலாச்சாரத்தை’ அவர் சேரி மக்களிடம் திணிப்பது பச்சையான வன்முறை. உண்மையிலேயே அவருக்கு சேரி மக்கள் மீது அக்கறை இருந்தால் அவர் கானா பாடல்களைப் பாட வேண்டும்.

முதலில் உங்களுடைய சாதிய ஐவரி டவரிலிருந்து கீழே இறங்கி வாருங்கள், கிருஷ்ணா. தலித்துகளுக்குப் பூணூல் மாட்டி விடுவதல்ல, உங்களுடைய சாதித் திமிரை முதலில் கழற்றி வைப்பதுதான் நீங்கள் நம்பும் முற்போக்கு வாழ்க்கையின் முதல் படி.

https://charuonline.com/blog/?p=14482
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா…ஆமா… கர்நாடக சங்கீதம், தமிழ் நாடு கிரிகெட் எல்லாம் அவாளின் பரம்பரை சொத்து.

அதில் நான் பிராமின், அல்லது பெரியாரை புகழும் பிராமினை மரியாதை செய்தால் கோவம் வருமா இல்லையா?

பிகு

இத்தனை வருடத்துக்கு பிறகே இத்தனை கொழும்புன்னா, இராஜாஜி முதல்வர், பண்டிட் ஜி பிரதமர் என அவாள் கோலோச்சிய அந்த காலத்தில், பெரியார் போராடிய போது எவ்வளவு கொழுப்பு இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

1921 ம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு வயதுக்கு  உட்பட்ட விதவைப் பெண் குழந்தைகள்  ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்தார்கள் என்ற செய்தி வாசித்தேன். 25 வயதுக்கு குறைந்த விதவைகள் தொகை பல லட்சமாம்.  இது தொடர்பாக அறிந்தீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, goshan_che said:

ஆமா…ஆமா… கர்நாடக சங்கீதம், தமிழ் நாடு கிரிகெட் எல்லாம் அவாளின் பரம்பரை சொத்து.

அதில் நான் பிராமின், அல்லது பெரியாரை புகழும் பிராமினை மரியாதை செய்தால் கோவம் வருமா இல்லையா?

பிகு

இத்தனை வருடத்துக்கு பிறகே இத்தனை கொழும்புன்னா, இராஜாஜி முதல்வர், பண்டிட் ஜி பிரதமர் என அவாள் கோலோச்சிய அந்த காலத்தில், பெரியார் போராடிய போது எவ்வளவு கொழுப்பு இருந்திருக்கும்.

😀...............

நீங்கள் லீவில் நின்ற போது இது நடந்துவிட்டது.....😀..... இதே விடயத்தை 'சங்கீத கலாநிதி' என்று இன்னொரு திரியிலும் விவாதித்திருந்தோம். அதில் நான் பகிர்ந்த பெருமாள் முருகனின் கட்டுரை ஒன்றை இங்கேயும் இணைக்கிறேன். இது 'அருஞ்சொல்' இதழில் அவர் எழுதியது:

சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணா
பெருமாள்முருகன்
25 Mar 2024

மியூசிக் அகாடமி 1929ஆம் ஆண்டு முதல் கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்கு வழங்கிவரும், மிகுந்த மதிப்பிற்குரியதாகக் கருதப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதை இவ்வாண்டு (2024) டி.எம்.கிருஷ்ணா பெறுகிறார். மிகச் சிறுவயதிலேயே மேடைக் கச்சேரிகளில் பாடத் தொடங்கிய அவர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாகப் பாடிவருகிறார். ‘நெடுங்காலமாக மிகத் திறமையான இசைக் கலைஞராக விளங்கும் அவர் இந்த விருதுக்குத் தகுதியானவர்’ என்று விருது அறிக்கை கூறுகிறது.

பல்லாண்டுகளாகப் பாடிவரும் அவர் ஒன்றையே தேய்ந்துபோகும் அளவு திரும்பச் செய்யும் இயல்புடையவர் அல்ல. அகத்திலும் புறத்திலும் பல பரிசோதனைகளை முன்னெடுக்கும் தேடல் நிரம்பியவர். எல்லாத் தரப்பினருடனும் இசைக் கலைஞராகத் தம் உரையாடலை நிகழ்த்துவதும் அனைவரின் குரலுக்கும் உரிய மதிப்பு கொடுத்துக் கேட்பதும் அவரது பரிசோதனைகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. 

தமிழ்நாட்டுக்கு அப்பால்…
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தமிழர்கள் வசிக்கும் பகுதியில் என்றில்லாமல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அவரது இசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேரளத்தின் எந்தக் கலை விழாவும் டி.எம்.கிருஷ்ணா இல்லாமல் நிறைவுறாது என்று சொல்லும் வகையில் அவருக்கு ரசிகர்கள் உண்டு. கேரள மக்களின் பெருவிருப்பத்தை ஏற்று நாராயண குருவின் பாடல்களுக்கு மெட்டமைத்துக் கச்சேரிகளில் பாடுகிறார். நாராயண குருவின் பாடல்களை மட்டுமே பாடும் தனிக் கச்சேரிகளையும் கேரளத்தில் நடத்துகின்றனர். 

கடம் இசைக் கலைஞரான விக்கு விநாயக்ராம் குழுவுடன் இணைந்து அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகள் தனித்துவம் வாய்ந்தவை. ‘ஜோகப்பாஸ்’ என்னும் திருநர் இசைக்குழுவுடன் சேர்ந்து அவர் பாடியுள்ள கச்சேரிகள் பல. காஞ்சிபுரத்தில் இயங்கும் ‘கட்டைக் கூத்துச் சங்கம்’ குழுவுடன் அவர் நிகழ்த்தியுள்ள இசை நிகழ்ச்சிகளும் முக்கியமானவை. நாதஸ்வர இசைக் கலைஞர்களான செய்க் மகபூப் சுபானி – திருமதி கலீசபி மகபூப் குழுவினருடன் இணைந்தும் அவர் பல நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இத்தகைய இசை நிகழ்வுகளில் தம்மை முடிந்தவரை பின்னிறுத்திக்கொண்டு சககலைஞர்களான அவர்களது திறன் வெளிப்பாட்டுக்கு மிகுதியான வாய்ப்புகளை வழங்குவதைக் காண்போர் உணர முடியும். 

கர்நாடக இசைக் கச்சேரிகளின் மரபை உடைத்து வெவ்வேறு துறை சார்ந்த கலைஞர்களுடன் இணைந்து அவர் மேற்கொண்ட இத்தகைய நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களுக்கு இதுவரை கிட்டாத புதிய அனுபவங்களைக் கொடுத்தன. கர்நாடக சங்கீதத்திற்கான இடம் சபாக்களும் கோயில் திருவிழாக்களும்தான் என்றிருந்த நிலையை இவை மாற்றின. இலக்கியத் திருவிழாக்களிலும் பலவகைச் சமூக நிகழ்வுகளிலும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி இத்தகைய நிகழ்ச்சிகளை ரசிப்பதைப் பார்க்க முடிந்தது. மிகச் சிலருக்கு மட்டுமே புரிபடும் ரகசியம் கர்நாடக சங்கீதம் என்று பொதுவெளியில் இருக்கும் எண்ணத்தை இவை மாற்றின. 

புதுமையான முன்னெடுப்புகள்
டி.எம்.கிருஷ்ணா ஓர் இசைக் கலைஞர் மட்டுமல்ல; களச் செயல்பாட்டாளரும் ஆவார். தம் களச் செயல்பாட்டையும் இசை சார்ந்தே புரிபவர் அவர். எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய்க் கழிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பை மாற்றச் செயல்படும் சுற்றுச்சூழல் அமைப்புகளோடு இணைந்த அவர் தம் பங்களிப்பாகப் ‘பொறம்போக்குப் பாடல்’ பாடி அப்பிரச்சினையைக் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

புறம்போக்கு நிலங்கள் எவர் ஒருவருக்கும் சொந்தமல்ல, அனைவருக்குமான பொதுவெளிகள் அவை என்பதை அப்பாடல் விரிவாக எடுத்துச் சென்றது. ஒருவரைத் திட்டுவதற்குப் ‘பொறம்போக்கு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது உண்டு. வசைச்சொல்லாக மாறிவிட்ட அதைத் தம் இசையால் மீட்டெடுத்தார் என்றே சொல்லலாம். அப்பாடலை வெளியிட்ட சுற்றுச்சூழல் குழுவினர் ‘டி.எம்.கிருஷ்ணா ஒரு பொறம்போக்கு’ என்று அழைத்து மகிழ்ந்தனர். அவர் அனைவருக்கும் சொந்தமானவர் என்னும் பொருளில் அந்த அழைப்பு அமைந்தது.

துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காகச் செயல்பட்டுவரும் பெஜவாடா வில்சனுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்’ பற்றி ஒரு பாடல் உருவாக்கலாம் என்னும் எண்ணம் டி.எம்.கிருஷ்ணாவுக்குத் தோன்றியது. அதை என்னிடம் பகிர்ந்துகொண்டார். ‘மலம் அள்ளலாமா – கைகள் மலம் அள்ளலாமா’ என்னும் பல்லவியைக் கொண்ட கீர்த்தனை ஒன்றை எழுதிக் கொடுத்தேன். அதைப் பல கச்சேரிகளில் அவர் பாடினார். தமிழ்நாட்டில் பெரியார் சிலையை அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபோது ‘எந்தச் சிலையாக இருந்தாலும் அது ஒரு கலைஞனின் கைவண்ணம். அதைச் சிதைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது’ என்று சொன்னார்.

அதைப் பொருளாகக் கொண்டு நான் எழுதிய ‘சிலைகள் எல்லாம் கலையின் வடிவம்’ என்னும் பாடலையும் பாடினார். அதைத் தொடர்ந்து பெரியாரைப் பற்றி நான் எழுதிய ‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என்னும் பாடலையும் பாடி கடந்த 2023 மார்ச் மாதம் வைக்கம் போராட்ட நூற்றாண்டுத் தொடக்கத்தின்போது வெளியிட்டார். அது பல்லாயிரம் பேரிடம் சென்று சேர்ந்தது. கிறித்தவ, இஸ்லாம் மதப் பக்திப் பாடல்களையும் கச்சேரிகளில் தொடர்ந்து பாடிவருகிறார். 

வாழ்த்துகள்...
சென்னையில் உள்ள ஊரூர் ஆல்காட் குப்பத்தில் அவர் தொடர்ந்து பல்வேறு கலை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இவ்வாண்டு பிப்ரவரி இறுதியில் அங்கு நடைபெற்ற அவரது இசைக் கச்சேரியில் ஆறு பாடல்களைப் பாடினார். அவ்வூரைச் சேர்ந்த மீனவர் குடும்பங்கள் பெருந்திரளாக வந்திருந்து அக்கச்சேரியைக் பெருங்கொண்டாட்டம் ஆக்கினர். பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய காவடிச் சிந்தை அவர் பாடி முடித்தபோது மக்களின் சீழ்க்கைச் சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று. கர்நாடக சங்கீதக் கச்சேரியில் இப்படிச் சீழ்க்கைச் சத்தம் ஒலிப்பதை டி.எம்.கிருஷ்ணாவின் நிகழ்ச்சிகளில் மட்டுமே காண முடியும். சமீபத்தில் ‘சங்க இலக்கியக் கீர்த்தனைகள்’ என்னும் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். சங்க இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் தம்மாலான முயற்சியாக இதை அவர் காண்கிறார். 

இசை போன்ற கலைத் துறையில் ஈடுபட்டுச் சாதனை புரியும் கலைஞர்கள் பெரும்பாலும் அத்துறை சார்ந்த அனுபவ அறிவை மட்டுமே கொண்டிருப்பார்கள். அதன் நுட்பங்கள் பற்றி அவர்களால் பேசவோ எழுதவோ இயலாது. டி.எம்.கிருஷ்ணா பேசவும் எழுதவும் செய்கிறார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூல்கள் மிகுந்த கவனம் பெற்றவை. ’கர்னாடக சங்கீதத்தின் கதை’ என்னும் நூலை எழுதியுள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றி மிகுந்த மரியாதையுடன் விமர்சனப்பூர்வமாக அவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. அது தமிழில் சிறுநூலாக வெளியாகியுள்ளது. மிருதங்கம் வாசிப்போர் பற்றி மட்டுமே இசை ரசிகர் அறிந்திருப்பர். மிருதங்கம் செய்வோர் பற்றி விரிவாக ஆராய்ந்து ‘செபாஸ்டியன் குடும்பக் கலை’ என்னும் விரிவான நூலை எழுதினார். அது இசையுலகில் இருக்கும் சாதிரீதியான பாகுபாட்டை விரிவாகப் பேசி நல்லதொரு உரையாடலை உருவாக்கியது. 

இவ்வாறு இசைக் கலைஞர் என்னும் அடையாளத்தை ஒருபோதும் மறவாமல் சமூகத்தின் பல தளங்களில் தம் எதிர்வினைகளை நிகழ்த்திவரும் டி.எம்.கிருஷ்ணாவுக்குச் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கி மியூசிக் அகாடமி பெருமை பெற்றுள்ளது. விருது அறிவிப்பில் ‘சமூக மாற்றத்திற்கு இசையை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்துகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளது வெறும் புகழ்ச்சியல்ல; பேருண்மை. டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள்.

https://www.arunchol.com/perumal-murugan-article-on-tm-krishna

 

Edited by ரசோதரன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

@goshan_che

1921 ம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு வயதுக்கு  உட்பட்ட விதவைப் பெண் குழந்தைகள்  ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்தார்கள் என்ற செய்தி வாசித்தேன். 25 வயதுக்கு குறைந்த விதவைகள் தொகை பல லட்சமாம்.  இது தொடர்பாக அறிந்தீர்களா? 

அறியவில்லை.  தேடிப்பார்க்கிறேன்.

 

51 minutes ago, ரசோதரன் said:

😀...............

நீங்கள் லீவில் நின்ற போது இது நடந்துவிட்டது.....😀..... இதே விடயத்தை 'சங்கீத கலாநிதி' என்று இன்னொரு திரியிலும் விவாதித்திருந்தோம். அதில் நான் பகிர்ந்த பெருமாள் முருகனின் கட்டுரை ஒன்றை இங்கேயும் இணைக்கிறேன். இது 'அருஞ்சொல்' இதழில் அவர் எழுதியது:

சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணா
பெருமாள்முருகன்
25 Mar 2024

மியூசிக் அகாடமி 1929ஆம் ஆண்டு முதல் கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்கு வழங்கிவரும், மிகுந்த மதிப்பிற்குரியதாகக் கருதப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதை இவ்வாண்டு (2024) டி.எம்.கிருஷ்ணா பெறுகிறார். மிகச் சிறுவயதிலேயே மேடைக் கச்சேரிகளில் பாடத் தொடங்கிய அவர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாகப் பாடிவருகிறார். ‘நெடுங்காலமாக மிகத் திறமையான இசைக் கலைஞராக விளங்கும் அவர் இந்த விருதுக்குத் தகுதியானவர்’ என்று விருது அறிக்கை கூறுகிறது.

பல்லாண்டுகளாகப் பாடிவரும் அவர் ஒன்றையே தேய்ந்துபோகும் அளவு திரும்பச் செய்யும் இயல்புடையவர் அல்ல. அகத்திலும் புறத்திலும் பல பரிசோதனைகளை முன்னெடுக்கும் தேடல் நிரம்பியவர். எல்லாத் தரப்பினருடனும் இசைக் கலைஞராகத் தம் உரையாடலை நிகழ்த்துவதும் அனைவரின் குரலுக்கும் உரிய மதிப்பு கொடுத்துக் கேட்பதும் அவரது பரிசோதனைகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. 

தமிழ்நாட்டுக்கு அப்பால்…
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தமிழர்கள் வசிக்கும் பகுதியில் என்றில்லாமல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அவரது இசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேரளத்தின் எந்தக் கலை விழாவும் டி.எம்.கிருஷ்ணா இல்லாமல் நிறைவுறாது என்று சொல்லும் வகையில் அவருக்கு ரசிகர்கள் உண்டு. கேரள மக்களின் பெருவிருப்பத்தை ஏற்று நாராயண குருவின் பாடல்களுக்கு மெட்டமைத்துக் கச்சேரிகளில் பாடுகிறார். நாராயண குருவின் பாடல்களை மட்டுமே பாடும் தனிக் கச்சேரிகளையும் கேரளத்தில் நடத்துகின்றனர். 

கடம் இசைக் கலைஞரான விக்கு விநாயக்ராம் குழுவுடன் இணைந்து அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகள் தனித்துவம் வாய்ந்தவை. ‘ஜோகப்பாஸ்’ என்னும் திருநர் இசைக்குழுவுடன் சேர்ந்து அவர் பாடியுள்ள கச்சேரிகள் பல. காஞ்சிபுரத்தில் இயங்கும் ‘கட்டைக் கூத்துச் சங்கம்’ குழுவுடன் அவர் நிகழ்த்தியுள்ள இசை நிகழ்ச்சிகளும் முக்கியமானவை. நாதஸ்வர இசைக் கலைஞர்களான செய்க் மகபூப் சுபானி – திருமதி கலீசபி மகபூப் குழுவினருடன் இணைந்தும் அவர் பல நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இத்தகைய இசை நிகழ்வுகளில் தம்மை முடிந்தவரை பின்னிறுத்திக்கொண்டு சககலைஞர்களான அவர்களது திறன் வெளிப்பாட்டுக்கு மிகுதியான வாய்ப்புகளை வழங்குவதைக் காண்போர் உணர முடியும். 

கர்நாடக இசைக் கச்சேரிகளின் மரபை உடைத்து வெவ்வேறு துறை சார்ந்த கலைஞர்களுடன் இணைந்து அவர் மேற்கொண்ட இத்தகைய நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களுக்கு இதுவரை கிட்டாத புதிய அனுபவங்களைக் கொடுத்தன. கர்நாடக சங்கீதத்திற்கான இடம் சபாக்களும் கோயில் திருவிழாக்களும்தான் என்றிருந்த நிலையை இவை மாற்றின. இலக்கியத் திருவிழாக்களிலும் பலவகைச் சமூக நிகழ்வுகளிலும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி இத்தகைய நிகழ்ச்சிகளை ரசிப்பதைப் பார்க்க முடிந்தது. மிகச் சிலருக்கு மட்டுமே புரிபடும் ரகசியம் கர்நாடக சங்கீதம் என்று பொதுவெளியில் இருக்கும் எண்ணத்தை இவை மாற்றின. 

புதுமையான முன்னெடுப்புகள்
டி.எம்.கிருஷ்ணா ஓர் இசைக் கலைஞர் மட்டுமல்ல; களச் செயல்பாட்டாளரும் ஆவார். தம் களச் செயல்பாட்டையும் இசை சார்ந்தே புரிபவர் அவர். எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய்க் கழிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பை மாற்றச் செயல்படும் சுற்றுச்சூழல் அமைப்புகளோடு இணைந்த அவர் தம் பங்களிப்பாகப் ‘பொறம்போக்குப் பாடல்’ பாடி அப்பிரச்சினையைக் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

புறம்போக்கு நிலங்கள் எவர் ஒருவருக்கும் சொந்தமல்ல, அனைவருக்குமான பொதுவெளிகள் அவை என்பதை அப்பாடல் விரிவாக எடுத்துச் சென்றது. ஒருவரைத் திட்டுவதற்குப் ‘பொறம்போக்கு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது உண்டு. வசைச்சொல்லாக மாறிவிட்ட அதைத் தம் இசையால் மீட்டெடுத்தார் என்றே சொல்லலாம். அப்பாடலை வெளியிட்ட சுற்றுச்சூழல் குழுவினர் ‘டி.எம்.கிருஷ்ணா ஒரு பொறம்போக்கு’ என்று அழைத்து மகிழ்ந்தனர். அவர் அனைவருக்கும் சொந்தமானவர் என்னும் பொருளில் அந்த அழைப்பு அமைந்தது.

துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காகச் செயல்பட்டுவரும் பெஜவாடா வில்சனுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்’ பற்றி ஒரு பாடல் உருவாக்கலாம் என்னும் எண்ணம் டி.எம்.கிருஷ்ணாவுக்குத் தோன்றியது. அதை என்னிடம் பகிர்ந்துகொண்டார். ‘மலம் அள்ளலாமா – கைகள் மலம் அள்ளலாமா’ என்னும் பல்லவியைக் கொண்ட கீர்த்தனை ஒன்றை எழுதிக் கொடுத்தேன். அதைப் பல கச்சேரிகளில் அவர் பாடினார். தமிழ்நாட்டில் பெரியார் சிலையை அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபோது ‘எந்தச் சிலையாக இருந்தாலும் அது ஒரு கலைஞனின் கைவண்ணம். அதைச் சிதைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது’ என்று சொன்னார்.

அதைப் பொருளாகக் கொண்டு நான் எழுதிய ‘சிலைகள் எல்லாம் கலையின் வடிவம்’ என்னும் பாடலையும் பாடினார். அதைத் தொடர்ந்து பெரியாரைப் பற்றி நான் எழுதிய ‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என்னும் பாடலையும் பாடி கடந்த 2023 மார்ச் மாதம் வைக்கம் போராட்ட நூற்றாண்டுத் தொடக்கத்தின்போது வெளியிட்டார். அது பல்லாயிரம் பேரிடம் சென்று சேர்ந்தது. கிறித்தவ, இஸ்லாம் மதப் பக்திப் பாடல்களையும் கச்சேரிகளில் தொடர்ந்து பாடிவருகிறார். 

வாழ்த்துகள்...
சென்னையில் உள்ள ஊரூர் ஆல்காட் குப்பத்தில் அவர் தொடர்ந்து பல்வேறு கலை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இவ்வாண்டு பிப்ரவரி இறுதியில் அங்கு நடைபெற்ற அவரது இசைக் கச்சேரியில் ஆறு பாடல்களைப் பாடினார். அவ்வூரைச் சேர்ந்த மீனவர் குடும்பங்கள் பெருந்திரளாக வந்திருந்து அக்கச்சேரியைக் பெருங்கொண்டாட்டம் ஆக்கினர். பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய காவடிச் சிந்தை அவர் பாடி முடித்தபோது மக்களின் சீழ்க்கைச் சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று. கர்நாடக சங்கீதக் கச்சேரியில் இப்படிச் சீழ்க்கைச் சத்தம் ஒலிப்பதை டி.எம்.கிருஷ்ணாவின் நிகழ்ச்சிகளில் மட்டுமே காண முடியும். சமீபத்தில் ‘சங்க இலக்கியக் கீர்த்தனைகள்’ என்னும் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். சங்க இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் தம்மாலான முயற்சியாக இதை அவர் காண்கிறார். 

இசை போன்ற கலைத் துறையில் ஈடுபட்டுச் சாதனை புரியும் கலைஞர்கள் பெரும்பாலும் அத்துறை சார்ந்த அனுபவ அறிவை மட்டுமே கொண்டிருப்பார்கள். அதன் நுட்பங்கள் பற்றி அவர்களால் பேசவோ எழுதவோ இயலாது. டி.எம்.கிருஷ்ணா பேசவும் எழுதவும் செய்கிறார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூல்கள் மிகுந்த கவனம் பெற்றவை. ’கர்னாடக சங்கீதத்தின் கதை’ என்னும் நூலை எழுதியுள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றி மிகுந்த மரியாதையுடன் விமர்சனப்பூர்வமாக அவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. அது தமிழில் சிறுநூலாக வெளியாகியுள்ளது. மிருதங்கம் வாசிப்போர் பற்றி மட்டுமே இசை ரசிகர் அறிந்திருப்பர். மிருதங்கம் செய்வோர் பற்றி விரிவாக ஆராய்ந்து ‘செபாஸ்டியன் குடும்பக் கலை’ என்னும் விரிவான நூலை எழுதினார். அது இசையுலகில் இருக்கும் சாதிரீதியான பாகுபாட்டை விரிவாகப் பேசி நல்லதொரு உரையாடலை உருவாக்கியது. 

இவ்வாறு இசைக் கலைஞர் என்னும் அடையாளத்தை ஒருபோதும் மறவாமல் சமூகத்தின் பல தளங்களில் தம் எதிர்வினைகளை நிகழ்த்திவரும் டி.எம்.கிருஷ்ணாவுக்குச் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கி மியூசிக் அகாடமி பெருமை பெற்றுள்ளது. விருது அறிவிப்பில் ‘சமூக மாற்றத்திற்கு இசையை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்துகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளது வெறும் புகழ்ச்சியல்ல; பேருண்மை. டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள்.

https://www.arunchol.com/perumal-murugan-article-on-tm-krishna

 

நன்றி, ர. சோதரா🙏

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் நேர்மையான பதில் இது: புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை. ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும்  இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள். உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது. பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.
    • வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த இல்லங்களை மூடும் உத்தரவு தெளிவாக தெரிவிக்கப்டட நிலையில் இதை பொய்செய்தி என்று  கூற ஏன்  இப்படி கஷ்டப்பட வேண்டும்.  வட்சப் தகவல்களும் முகநூல் தகவல்களும் நம்பக தன்மை அற்றவை.  https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/
    • ஈழத் தமிழர் அரசியலின் சீர்கேட்டுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் அறம் பிறழ்ந்த ஊடகவியலாளர்கள். 1961 சத்தியாகிரகத்தின் போது ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது,  யோகர் சுவாமிகள் ஆசி வழங்கி பேசும் போது சொன்னாராம், ஏசுவார்கள் எரிப்பார்கள் “ உண்மையை “ எழுதுங்கள், “உண்மையாய் “ எழுதுங்கள் என …. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் “உண்மையாய் “ எழுதுவதில்லை என்பதற்கு இது ஓர் மிகசிறந்த உதாரணம்.   Yoga Valavan Thiya 
    • கட்சிக் காரருக்கு "ஜூலை 4 ஆம் திகதிக்கு முன்பாக மூடும் உத்தரவு கிடைக்கவில்லை" என்கிறார். வடமாகாண சபை தளத்தில் ஜூலை 4 ஆம் திகதிக்குரிய செய்தியில் மூடும் உத்தரவு பற்றிய செய்தி இருக்கிறது. அதையே ஒரு பத்திரிகை பிரசுரிக்கலாம். ஆணை புறாவின் காலில் கட்டி கட்சிக் காரருக்கு கிடைக்கும் வரை பொறுத்திருக்க வேண்டிய சட்டத் தேவை இல்லை. அனேகமாக இது நீதிமன்றம் போய் இழுபடும் கேஸாக தெரிகிறது. இனி கொடுக்கும் நன்கொடையில் ஒரு பகுதி சட்டத்தரணிகளிடம் போய்ச் சேருமென நினைக்கிறேன். 
    • நானும் வாட்ஸப்பில் இப்போது பார்த்தேன்..  கட்டடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் சரவணபவான், அதைத் கேட்ட ஆறு திருமுகன் மேல் சேறு பூச உதயனில் செய்தி போட்டிருக்கின்றார் என்கின்றார்கள். ஊடக அடியாட்களின் வேலையா என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.