Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

 கனத்தைப் பேய்க்  கவிதை…..

 

 

இந்துவில் படித்த காலம்..

இருப்பதுவோ நாரகேன்பிட்டி..

இது பொரளை

மன்னிங்ரவுன்….

இது நம்ம அண்ணருடன்  வாசம்

சரித்திரம்..வேண்டா மே

 

ஆடிவேல் விழாக்காலம்..

அடிபட்டு பிடிபட்டு..

அனுமதி பெற்று..

சம்மாங் கோட்டாரிடம்

போயுமாச்சு..

இந்துக்கூட்டம்

ஒருவம்புக்கூட்டம்..

 

வெள்ளவத்தை

சந்து முந்து ரோட்டெல்லம் போய்

கூடப் படிக்கிற  பிகருகளின்

வீட்டு பூந்தொட்டிகளை 

ரோட்டில் போட்டுடைத்து

தூக்கிவைத்து….

உள்ள 

கடையெல்லாம்  சாப்பிட்டு

ஐஸ்கிறீம்    குடித்துமுடிய

மணி சாமம் ஒரு மணியாச்சு…

 

என்னதான் சுத்து சுத்தினாலும்

படுக்கைக்கு கட்டைக்கு  வந்திடவேணும்..

இல்லையோ

வீட்டிலை  நிற்கின்ற   மரத்து தடி பாவம்..

சரி

ஒரு கரும்பு வாங்கி

முழத்தில் .இரண்டாக்கியாச்சு

போகும்பாதை திருடர் காடையர்

உள்ள  பாதையாகையால்..ஆயுதம்

 

154 இலக்க பஸ்  எடுத்து

கனத்தை சந்தியில்  இறங்கி

ஒரு மைல் வடக்கை நடக்கணும்

கை இரண்டிலும் கரும்பு

நிமிர்ந்த நடை..

கனத்தை பெரும் பேயுலாவும்..சுடலை..

என்பது அறிந்த கதை..

இனி…

நடை தொடங்க

மெல்லிய சலங்கைச் சத்தம்..

நிற்க கேட்கவில்லை…

நடக்க சலங்கை ஒலி

நிற்க இல்லை

ஏம சாமம்…

பேய் என்னோடை வருகுது

கரும்பும் கையும் நடுங்குது..

ஓட ..சலங்கைச் சத்தம் துரத்துது

நிற்க ..இல்லை.

சலங்கைச் சத்தம்  கேட்க கேட்க

ஓடிவந்து

ஒருமாதிரி அறைக் கதவை  பூட்டியாச்சு..

 

சத்தம் இல்லை…

சாரம் எடுக்கப் போக

மீண்டும் சத்தம்..

கத்தியை கையிலை வைத்தபடி

உடுப்பை கழட்டினால்..

சிரிப்பை அடக்க முடியவில்லை

உள்ளங்கியில் (ஜட்டி)..தகடு 

கொழுவுப்படாமல்.. போட்ட   கிணு கிணுத்த 

சத்தம் தான்

கனத்தை பேய்…

       (மன்னிக்கவும்..பெண் பிரசைகள்   வாற இடத்தில்…இப்படி

ஒரு கிறுக்கல் போட்டதிற்கு…. எல்லாம் சிரிப்பதற்கு மட்டுமே)

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

சிரிப்பை அடக்க முடியவில்லை

எங்களுக்கும் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்களுக்கும் தான்.

நன்றீ சார் உங்களுக்கு..

 

  • கருத்துக்கள உறவுகள்

அட....... பேயைப் பொக்கட்டில் வைத்துக் கொண்டு ஓடியிருக்கிறீங்கள் ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, alvayan said:
  • கருத்துக்கள உறவுகள்

 கனத்தைப் பேய்க்  கவிதை…..

 

 

இந்துவில் படித்த காலம்..

இருப்பதுவோ நாரகேன்பிட்டி..

இது பொரளை

மன்னிங்ரவுன்….

இது நம்ம அண்ணருடன்  வாசம்

சரித்திரம்..வேண்டா மே

 

ஆடிவேல் விழாக்காலம்..

அடிபட்டு பிடிபட்டு..

அனுமதி பெற்று..

சம்மாங் கோட்டாரிடம்

போயுமாச்சு..

இந்துக்கூட்டம்

ஒருவம்புக்கூட்டம்..

 

வெள்ளவத்தை

சந்து முந்து ரோட்டெல்லம் போய்

கூடப் படிக்கிற  பிகருகளின்

வீட்டு பூந்தொட்டிகளை 

ரோட்டில் போட்டுடைத்து

தூக்கிவைத்து….

உள்ள 

கடையெல்லாம்  சாப்பிட்டு

ஐஸ்கிறீம்    குடித்துமுடிய

மணி சாமம் ஒரு மணியாச்சு…

 

என்னதான் சுத்து சுத்தினாலும்

படுக்கைக்கு கட்டைக்கு  வந்திடவேணும்..

இல்லையோ

வீட்டிலை  நிற்கின்ற   மரத்து தடி பாவம்..

சரி

ஒரு கரும்பு வாங்கி

முழத்தில் .இரண்டாக்கியாச்சு

போகும்பாதை திருடர் காடையர்

உள்ள  பாதையாகையால்..ஆயுதம்

 

154 இலக்க பஸ்  எடுத்து

கனத்தை சந்தியில்  இறங்கி

ஒரு மைல் வடக்கை நடக்கணும்

கை இரண்டிலும் கரும்பு

நிமிர்ந்த நடை..

கனத்தை பெரும் பேயுலாவும்..சுடலை..

என்பது அறிந்த கதை..

இனி…

நடை தொடங்க

மெல்லிய சலங்கைச் சத்தம்..

நிற்க கேட்கவில்லை…

நடக்க சலங்கை ஒலி

நிற்க இல்லை

ஏம சாமம்…

பேய் என்னோடை வருகுது

கரும்பும் கையும் நடுங்குது..

ஓட ..சலங்கைச் சத்தம் துரத்துது

நிற்க ..இல்லை.

சலங்கைச் சத்தம்  கேட்க கேட்க

ஓடிவந்து

ஒருமாதிரி அறைக் கதவை  பூட்டியாச்சு..

 

சத்தம் இல்லை…

சாரம் எடுக்கப் போக

மீண்டும் சத்தம்..

கத்தியை கையிலை வைத்தபடி

உடுப்பை கழட்டினால்..

சிரிப்பை அடக்க முடியவில்லை

உள்ளங்கியில் (ஜட்டி)..தகடு 

கொழுவுப்படாமல்.. போட்ட   கிணு கிணுத்த 

சத்தம் தான்

கனத்தை பேய்…

       (மன்னிக்கவும்..பெண் பிரசைகள்   வாற இடத்தில்…இப்படி

ஒரு கிறுக்கல் போட்டதிற்கு…. எல்லாம் சிரிப்பதற்கு மட்டுமே)

 

 

 

 

 

 

 

 

 

 

🤣🤣.....நல்ல சிரிப்பு, அல்வாயன்.

அந்த நாட்களில் டாக்டர் கோவூர் என்று ஒருவர் இருந்தவர். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பேய் என்பதெல்லாம் சுத்தப் பொய் என்று, பேய்கள் நடமாடும் இடங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களிற்கு எல்லாம் போய், அவை பொய்கள் என்று நிரூபித்தவர். 

நீங்கள் தப்பி விட்டீர்கள்.....😀

அவருடைய கதைகள்/சம்பவங்கள் வீரகேசரிப் பிரசுரமாக ஒரு நாவலாகவும் வந்தது என்று ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அந்த நாட்களில் டாக்டர் கோவூர் என்று ஒருவர் இருந்தவர். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பேய் என்பதெல்லாம் சுத்தப் பொய் என்று, பேய்கள் நடமாடும் இடங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களிற்கு எல்லாம் போய், அவை பொய்கள் என்று நிரூபித்தவர். 

கோவூர் திருமணம் செய்யவில்லை.☺️

எனது காலத்தில் அவரைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

அந்த நாட்களில் டாக்டர் கோவூர் என்று ஒருவர் இருந்தவர்

ஆனைப்பந்தியில் ஒருமுறை கூட்டத்தில் சாயிபாபாவை துவைத்தெடுத்தார்.

முன்னால் நின்று பேசியவர் கையை மூடி திறந்தால் கைக்குள் திருநீறு.

காருக்குள் இருக்கும் திருநீறை கைக்குள் எடுத்துள்ளேன்.

இது ஒரு வித்தை.

இதையே சாயிபாபா பக்தி என்று உலகை ஏமாற்றுவதாக கூறினார்.

அவருடைய உறவினர் இங்கு உறுப்பினராக இருந்தார்.ஏனோ விலகிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

கோவூர் திருமணம் செய்யவில்லை.☺️

எனது காலத்தில் அவரைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன்.

சிலர் திருமணத்தின் பின் தான் தாங்கள் பேயை பார்த்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார்கள்....டாக்டர் கோவூர் அந்தப் பக்கமே போக விரும்பவில்லை போல....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரசோதரன் said:

🤣🤣.....நல்ல சிரிப்பு, அல்வாயன்.

அந்த நாட்களில் டாக்டர் கோவூர் என்று ஒருவர் இருந்தவர். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பேய் என்பதெல்லாம் சுத்தப் பொய் என்று, பேய்கள் நடமாடும் இடங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களிற்கு எல்லாம் போய், அவை பொய்கள் என்று நிரூபித்தவர். 

நீங்கள் தப்பி விட்டீர்கள்.....😀

அவருடைய கதைகள்/சம்பவங்கள் வீரகேசரிப் பிரசுரமாக ஒரு நாவலாகவும் வந்தது என்று ஞாபகம்.

ஆபிரகாம் கோவூரின் புத்தகங்கள் படிக்க சுவாரசியமாக இருக்கும்.ஆனால் அவராலும் சமுதாயத்தை மாற்ற முடியவில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஆபிரகாம் கோவூரின் புத்தகங்கள் படிக்க சுவாரசியமாக இருக்கும்.ஆனால் அவராலும் சமுதாயத்தை மாற்ற முடியவில்லை. 😂

😀....

மெது மெதுவாகத்தான் நாங்கள் மாறுவோம் போல.

நான் இங்கு இருக்கும் இடத்திற்கு அருகில் தான் நித்தியின் ஆச்சிரமம் ஒன்று இருந்தது. இப்பவும் இருக்கும் என்றே நினைக்கின்றேன். பலரும் போய்க் கொண்டிருந்தனர்.

முன்னர் ஒரு தடவை, அவரிடம் போனால் அவர் தமிழீழம் கிடைக்க உதவுவார் என்று யாரோ ஒருவர் எங்களில் பலரை ஒரு கூட்டமாக கூட்டிச் சென்றனர். நான் போகவில்லை. அன்று அங்கு நடந்ததை ஒரு கதையாகத்தான் எழுதவேண்டும். அங்கு போன சிலர் இன்றும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். 

இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இத்தனைக்கும் போனவர்கள் பலர் பெரும் படிப்புகள் படித்தவர்கள்.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, alvayan said:

இந்துவில் படித்த காலம்..

இருப்பதுவோ நாரகேன்பிட்டி..

இது பொரளை

மன்னிங்ரவுன்….

இது நம்ம அண்ணருடன்  வாசம்

சரித்திரம்..வேண்டா மே

சிலவேளை என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும். :cool:

இருந்தாலும் நீங்கள் பேய்க்காய் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, ரசோதரன் said:

இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இத்தனைக்கும் போனவர்கள் பலர் பெரும் படிப்புகள் படித்தவர்கள்.   

நோட் திஸ் பொயின்ட்... யுவர் ஆனர்  🤣

படித்தவர்கள் எல்லோரும் மேட்டுக்குடிகளுமல்லர். படிக்காதவர்  எல்லோரும் பட்டிக்காடுகளுமல்லர்.

நிற்க....

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் கேடுகெட்ட போலி சாமிகள் வளர்வதற்கும் சொத்துக்கள் சேகரிப்பதற்கும் அறப்படித்தவர்களே காரணம்.அதிகம் படித்தவர்களே காரணம். எல்லாம் தெரியும் என பினாத்துபவர்களே காரணம்.

சத்திய சாய்பாபா அவலங்களை சொல்ல வெளிக்கிட்டால் பூமி தாங்காது 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

அட....... பேயைப் பொக்கட்டில் வைத்துக் கொண்டு ஓடியிருக்கிறீங்கள் ........! 😂

நன்றி...அந்தப் பேய் பொக்கட்டில் இல்லை...உள்ளாடையில்..அப்ப அதன்வடிவுக்கு கோல்ட் கலரடித்து..கொழுவி விடும் அலங்கார சாமான்..  அவ்வளவும் தெரியவில்லை கனத்தை சந்தியிலதான் வேலையைக்காட்ட வெளிக்கிட்டுது..

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2024 at 02:43, alvayan said:

154 இலக்க பஸ்  எடுத்து

134 இலே எப்போதாவது ஏறியிருக்கிறீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kavi arunasalam said:

134 இலே எப்போதாவது ஏறியிருக்கிறீர்களா?

நீங்கள் எங்கையோ போறியள்....🙃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2024 at 13:35, ரசோதரன் said:

🤣🤣.....நல்ல சிரிப்பு, அல்வாயன்.

அந்த நாட்களில் டாக்டர் கோவூர் என்று ஒருவர் இருந்தவர். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பேய் என்பதெல்லாம் சுத்தப் பொய் என்று, பேய்கள் நடமாடும் இடங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களிற்கு எல்லாம் போய், அவை பொய்கள் என்று நிரூபித்தவர். 

நீங்கள் தப்பி விட்டீர்கள்.....😀

அவருடைய கதைகள்/சம்பவங்கள் வீரகேசரிப் பிரசுரமாக ஒரு நாவலாகவும் வந்தது என்று ஞாபகம்.

பலதடவை வாசித்திருப்பேன்...கனத்தை சந்தியில் உதெல்லாம் எடுவடாதப்பா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2024 at 18:41, குமாரசாமி said:

சிலவேளை என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும். :cool:

இருந்தாலும் நீங்கள் பேய்க்காய் 🤣

அப்படியே ஆகட்டும் ..விடிடுவம்...என் ஜாய்..பண்ணுவமே..

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.