Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சிறப்பதிகாரி கொழும்பில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 01-10-2007 22:40 மணி தமிழீழம் [தாயகன்]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சிறப்பதிகாரி கொழும்பில்

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள், மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சிறப்பதிகாரி மன்பிறட் நோவாக் நேற்று கொழும்பை சென்றடைந்துள்ளார்.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கான கண்டனங்கள் அனைத்துலக ரீதியில் வலுப்பெற்று வரும் நிலையில் இவரது கொழும்பிற்கான பயணம் அமைந்திருக்கின்றது.

கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் சிறீலங்காவில் இடம்பெறும் சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் பற்றி மன்பிறட் ஆராய இருப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களையும் நேரடியாகச் சந்தித்து அது பற்றி அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றார்.

எதிர்வரும் எட்டாம் திகதிவரை தங்கியிருக்கும் இவர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களிற்கும் பயணம் செய்ய இருப்பதாகவும், சிறீலங்கா அதிபர், மனித உரிமைகள் அமைச்சர் ஆகியோரையும் சந்திக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகளில் மனிதநேயப் பணிகளை மேற்கொள்ள முடியாதவாறு மனிதநேயப் பணியாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களிற்கு மன்பிறெட் நோவாக் நேரில் சென்று உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என, தொண்டர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான துணைச் செயலாளரும், அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி ஜோன் ஹோல்ம்ஸ் கடந்த மாத முற்பகுதியிலும், சிறுவர்நலன் தொடர்பான அதிகாரி அலன் றொக் அதற்கு முன்னரும் சிறீலங்கா சென்றிருந்தனர்.

அரச படைகள், மற்றும் ஒட்டுக் குழுக்கள் தொடர்பாக தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்த இவர்கள் மனிதநேயப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு பாதுகாப்பற்ற நாடு சிறீலங்கா எனவும் தெரிவித்திருந்தனர்.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரும் இந்த மாதம் சிறீலங்கா செல்லுவார் என கடந்த மாத முற்பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வின் விசேட ஆணையாளர் அமைச்சர் சமரசிங்கவுடன் பேச்சு

வீரகேசரி நாளேடு

ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான விசேட ஆணையாளர் மான்பிறெட் நெவெக் நேற்று அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இதன்போது இலங்கையின் மனித உரிமைகளின் நிலைவரம் குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க விரிவாக எடுத்துக்கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐ.நா. வின் சித்திரவதைகளுக்கு எதிரான விசேட ஆணையாளர் மான்பிறெட் நெவெக் நேற்று முன்தினம் கொழும்பு வந்தடைந்தார்.

நேற்றுக்காலை 10 மணியளவில் அவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது நாட்டின் மனித உரிமைகள் தொடர்பான நிலைவரங்கள் மனித உரிமைகளை பாதுகாக்க தனது அமைச்சும் அரசாங்கமும் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறியுள்ளார்.

கடந்த 2 வருட காலத்தில் சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் அரிதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் இதுவே மிகக்குறைவானது என எடுத்துக்கூறியுள்ளார்.

மேலும் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களால் இலங்கை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்தோடு ஒருவார கால விஜயத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைச்சர் சமரசிங்க மான்பிறெட் நெவெக்கிடம் உறுதியளித்துள்ளார்.

இதுவேளை இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான தனது சந்தேகங்கள் தொடர்பாக நெவக் அமைச்சிடம் கலந்துரையாடியுள்ளார்.

பின்னர் விசேட ஆணையாளர் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மான்பிறெட் நெவெக்கின் விஜயத்தை மனித உரிமைகள் அமைச்சே ஒருங்கிணைத்துள்ளது. எனினும் அவரது பல நிகழ்ச்சிகள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இதுவும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு போன்றே மனித உரிமைக் கண்காணிப்புக் குழு.

அறிக்கை விடுவதோடு தமது பணிகளை மட்டுப்படுத்திக் கொள்ளும்.

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி மன்பிரட் நொவாக்கின் சிறிலங்கா வருகைக்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

இலங்கையில் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களை ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான சிறப்புப் பிரதிநிதி மான்பிரெட் நொவாக் சந்திப்பதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முட்டுக்கட்டைகளை போட்டு வருவதாக தெரிகிறது.

மேலும் வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.