Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை.

அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய பதிலடி

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.

iran-vs-israel-war-update-today

 

இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

iran-vs-israel-war-update-today

 

அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் சார்பு ஆயுதகுழுவின் ஈராக் தளத்தின் மீதுதாக்குதலை மேற்கொண்டது யார் ? மறுக்கின்றது அமெரிக்கா

Published By: Rajeeban

21 Apr, 2024 | 10:27 AM
image

ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் தங்கியிருந்த ஈராக்கிய தளமொன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ள அதேவேளை இந்த தாக்குதலை மேற்கொண்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈராக் இராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள முன்னாள் ஈரான் ஆதரவு குழுவான ஹசெட் அல் சபியின் தளத்தின் மீது வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் இடம்பெற்றதாக ஈராக்கின் உள்துறை அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8பேர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்களில் மூன்று ஈராக்கிய படையினரும் உள்ளனர் .

விமானதாக்குதலே இடம்பெற்றது என ஈராக் அதிகாரிகள் இருவர் குற்றம்சாட்டியதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிர் இழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹசெட் அல் செபி அமைப்பு தனது பகுதிகள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஈராக்கிய படையினர் யார் தாக்குதலை மேற்கொண்டனர் என்பதை தெரிவிக்கவில்லை ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றதா என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தவில்லை..

இதேவேளை அமெரிக்கா இந்த தாக்குதலை தான் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

ஈராக்கின் மீது குறித்த தினத்தில் தாக்குதலை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் அமெரிக்க படையினர் தாக்குதலை மேற்கொண்டனர் என சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் பொய்யானவை எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஐஎஸ் அமைப்பிற்கு  எதிராக போரிடுவதற்காக உருவாக்கப்பட்ட ஹசெட் அல் சாபி அமைப்பு தற்போது ஈராக்கிய இராணுவத்தின் ஒரு பிரிவாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/181559

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தளங்கள் மீது மீண்டும் தாக்குதல்களை ஆரம்பிக்கின்றோம் - ஈராக் அமைப்பு தெரிவித்துள்ளது

Published By: Rajeeban

22 Apr, 2024 | 10:18 AM
image

சிரியாவில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை ஈராக்கில் உள்ள தளங்கள் மீது தாக்குதலை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக ஈராக்கில் உள்ள ஆயுதகுழுவொன்று தெரிவித்துள்ளது.

சிரியாவின் வடகிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளமொன்றின் மீது ஈராக்கின் ஜூமார் நகரிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கார்டியன் தெரிவித்துள்ளது.

பெப்ரவரிக்கு பின்னர் முதல்தடவையாக தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.பெப்ரவரி மாதத்தில் ஈராக் குழுக்கள் அமெரிக்க தளங்களின் மீது தாக்குதல்களை நிறுத்தியிருந்தன.

ஈராக்கிய பிரதமர் அமெரிக்காவிற்கு மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலளாரை சந்தித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க படையினரை ஈராக்கிலிருந்து வெளியேற்றும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாததை தொடர்ந்து மீண்டும் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ஈராக்கின் ஹெட்டாய்க் ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

சில மணிநேரத்தின் முன்னர் இடம்பெற்றது ஆரம்பமே என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகள் சிரியாவின் மத்தியில் உள்ள சர்வதேச கூட்டமைப்பின் தளத்தை இலக்குவைத்துள்ளன என ஈராக்கிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
 

https://www.virakesari.lk/article/181624

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.