Jump to content

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்!

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்!

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நேற்று சபையில் சாணக்கியன் பிள்ளையான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய வேண்டுமானால் பிள்ளையானை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என நேற்று நாடாளுமன்றத்தில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளதாகவும் ஆனால் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது உடலை எரித்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்று சபையில் சாணக்கியனின் கருத்தினை மறுத்துக் கருத்து வெளியிட்டிருந்ததுடன், தானும் ஏற்கனவே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பில் இருந்ததாகவும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜே.வி.பி உள்ளிட்ட அமைப்புக்களும் பல பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தான் யார் என்பதை தனது மக்கள் நன்கு அறிவார்கள் எனவும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பட்டார்.

https://athavannews.com/2024/1379985

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

முன்னுக்குப்பின் முரணாக உளறுகிறார். அது பயங்கர வாத அமைப்பென்றால் ஏன் காட்டிக்கொடுக்கும்வரை அந்த அமைப்பில் இருந்தார்? அதில் அங்கம் வகித்த இவரும் பயங்கரவாதியே. இவரது பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறதே, அப்படியெனில் புலிகள் இயக்கம் விடுதலைக்காக போராடியது, இது போன்றதுகள் பயங்கரவாதியாக அங்கு இயங்கியிருக்கின்றன அதனாலேயே தண்டனைக்கு பயந்து ஓடி இலங்கை பயங்கரவாதத்தோடு இணைந்து தமது பயங்கரவாதத்தை முன்னெடுக்கின்றன. ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்படி இவரால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியுமென்பதையும் இவர்தான் விளக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை, இலங்கை இராணுவ புலனாய்வு துறையால் வழிநடத்திப்படும் டிரிபோலி பிளாட்டூன்னாலே (Tripoli Platoon) நடத்தப்பட்டது என்பது தற்பொழுது உலகறிந்த பரமரகசியமாகும். சஹாரன் குழுவையும், புலனாய்வு துறையையும் ஒருங்கிணைப்பதில் பிள்ளையானும், அவரது சகாக்களும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்கள். எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் ஆட்சி  மாற்றத்தின் பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஈடுபடடவர்களுக்கு மிகப்பெரிய ஆப்பு காத்திருக்கின்றது. 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சருமத்தை வெளுப்பாக்கும் சில க்ரீம்களில் அதீதமான அளவில் பாதரசம் இருப்பதால், அவை சிறுநீகர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தற்போது வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது? சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சில க்ரீம்களில் பாதரசம் போன்ற நச்சு உலோகங்கள் இடம்பெற்றிருப்பது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிறுநீரகம் தொடர்பான ஆய்விதழான Kidney Internationalல் "NELL-1–associated membranous nephropathy linked to skin fairness cream use: insights from an Indian case series" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வுக் கட்டுரையை கேரளாவின் கோட்டக்கல்லில் உள்ள Aster MIMS மருத்துவமனையைச் சேர்ந்த ரஞ்சித் நாராயணன், சஜீஷ் சிவதாஸ் மற்றும் அனிலா ஆபிரகாம் குரியன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சில க்ரீம்களில் இருந்த நச்சு உலோகமான பாதரசம், சிறுநீரகத்தில் Membranous Nephropathy என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, சிறுநீரகங்களில் உள்ள வடிகட்டிகள், உங்கள் ரத்தத்தில் இருந்து கழிவுப்பொருட்களை சுத்தப்படுத்துகின்றன. Membranous Nephropathy, உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு இந்த சிறிய வடிகட்டிகளைத் தாக்குகிறது. இது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சில க்ரீம்களில் இருந்த நச்சு உலோகமான பாதரசம், சிறுநீரகத்தில் Membranous Nephropathy என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பு ஏற்படும்போது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, glomeruli எனப்படும் சிறுநீகரங்களில் உள்ள வடிகட்டிகளைச் சேதப்படுத்துகிறது. இதனால் அந்த வடிகட்டிகள் வீங்கத் துவங்கும். இதற்குப் பிறகு உடலின் ரத்தத்தை, இந்த வடிகட்டிகள் எந்த அளவுக்கு சுத்தம் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு சுத்தம் செய்யாது. இதனால், சிறுநீரில் புரதம் கசிய ஆரம்பிக்கும். இந்தப் பிரச்சனை தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழக்கும் நிலையும் ஏற்படும். Membranous nephropathy என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதில், Neural Epidermal Growth factor - like Protein (NELL - 1) என்பது ஒரு காரணி. நாட்டு மருந்துகளை(Traditional Medicine) உட்கொள்வது, ஹெபடிடிஸ் - பி, சி பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த NELL - 1 ஏற்பட்டு சிறுநீரகங்களை பாதிக்கிறது. Membranous nephropathy பாதிப்பு ஏற்பட்டவர்களில் 1 முதல் 8 சதவீதம் பேருக்கு இந்த NELL - 1 காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆங்கில நாளிதழ்  ஒன்றில் தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியதால், 20 வயது மாணவி ஒருவரும் அவரது குடும்பத்தில் சிலரும் இதே போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது. இந்த ஆய்வு கோட்டக்கல்லில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஜூலை 2021லிருந்து செப்டம்பர் 2023வரை Membranous nephropathy பிரச்சனையுடன் வரும் நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொள்ள ஒரு காரணம் இருந்தது. இந்த மருத்துவமனைக்கு Membranous nephropathy பாதிப்புடன் வந்தவர்களுக்கு சோதனை செய்தபோது, பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு NELL - 1ன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது. "அந்த மருத்துவமனையில் இருந்து ஒரு 14 வயதுப் பெண் Membranous nephropathy பாதிப்புடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய ரத்தம், சிறுநீரைச் சோதித்ததில் பாதரசம் இருப்பது தெரிய வந்தது. பாதரசம் இடம்பெற்றிருக்கக்கூடிய மருந்துகள் எதையாவது அவர் சாப்பிட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அது குறித்து விசாரித்தோம். ஆனால், அவர் அப்படி எந்த மருந்தையும் சாப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த சிறுநீரகப் பிரச்னை வரக்கூடிய வேறு எந்தக் காரணிகளும் அவரிடம் இல்லை. இந்தப் பிரச்னைக்கான காரணம் தெரியாமல் சிகிச்சையைப் பெரிய அளவில் துவங்க வேண்டாம் எனக் கருதினோம்," என்கிறார் பிபிசியிடம் பேசிய இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் அனிலா ஆபிரகாம் குரியன். இந்தத் தருணத்தில்தான், மும்பையில் இருந்து வெளிவந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியதால், 20 வயது மாணவி ஒருவரும் அவரது குடும்பத்தில் சிலரும் இதே போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது. இதையடுத்து அந்த நோயாளியிடம், தோலை வெளுப்பாக்கும் க்ரீமைப் பயன்படுத்தியது குறித்துக் கேட்கப்பட்டது. அவர் அதை ஒப்புக்கொண்டார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த ஆய்வில் இடம்பெற்ற முகப்பூச்சு க்ரீம்கள் அனைத்துமே உள்ளூர் பிராண்டுகளாக இருந்தன என்பதோடு, அந்த க்ரீம்களில் என்னென்ன வேதிப் பொருட்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல்களும் இல்லை. இதற்குப் பிறகு கோட்டக்கல் மருத்துவமனையில் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகளிடம் தோலை வெளுப்பாக்கும் க்ரீமைப் பயன்படுத்தினீர்களா எனக் கேட்கப்பட்டது. இந்த NELL 1 - MN நோயாளிகளில் 15 பேரில் 13 பேர் ஆண் - பெண் பேதமின்றி தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டனர். மீதமிருந்த இரண்டு பேரில் ஒருவருக்கு நாட்டு மருந்து (Traditional Medicine) சாப்பிடும் பழக்கம் இருந்தது. இதற்குப் பிறகு இவர்களிடம் ரத்தத்தில் உலோகம் இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டது. 9 பேரின் ரத்தத்திலும் சிறுநீரிலும் பாதரசத்தின் அளவு மிக அதிகமாக இருந்தது. அந்த நோயாளிகள் எவ்வளவு நாள், எந்த க்ரீமை பயன்படுத்தியிருந்தார்கள் என்பதை வைத்து பாதரசத்தின் அளவு வேறுபட்டிருந்தது. இதற்குப் பிறகு இவர்கள் பயன்படுத்திய தோலை வெளுப்பாக்கும் க்ரீம்கள் சென்னையில் உள்ள ஓர் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவை அனைத்திலுமே பாதரசம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகவும் அதிகமாக இருந்தது. 1 பிபிஎம் (Parts per million) மட்டுமே இருக்கலாம் என்ற நிலையில், 10,800 பிபிஎம் முதல் 21,900 பிபிஎம்வரை அந்த க்ரீம்களில் பாதரசம் இருந்தது. இந்த முகப்பூச்சு க்ரீம்கள் அனைத்துமே உள்ளூர் பிராண்டுகளாக இருந்தன என்பதோடு, அந்த க்ரீம்களில் என்னென்ன வேதிப் பொருட்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல்களும் இல்லை. இதற்குப் பிறகு, இந்த நோயாளிகளுக்கான சிகிச்சைகள் துவங்கப்பட்டன. சிறுநீரக நோயாளிகளுக்கு அளிக்கப்படும் முக்கிய சிகிச்சையான RAAS (renin-angiotensin-aldosterone system) சிகிச்சை துவங்கப்பட்டது. தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்துவதை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இவர்கள் இந்த க்ரீம்களை பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு, 6 மாதங்களில் இருந்து 12 மாதங்களில் இவர்களின் சிறுநீரகத்தின் நிலை முழுமையாக மேம்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகம் முழுவதுமே சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் மீது ஆர்வம் இருப்பதால் இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுக்கலாம் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு. எதற்காக தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது? "பாதரசத்திற்கு தோலிற்கு நிறத்தை அளிக்கும் நிறமியான மெலனினை நீக்கும் தன்மை உண்டு. அதனால், பாதரசத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த க்ரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், சிறுநீரகம் முழுமையாக சேதமடையக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும்" என்கிறார் டாக்டர் அனிலா. உலகம் முழுவதுமே சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் மீது ஆர்வம் இருப்பதால் இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுக்கலாம் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு. தவிர, “இதுபோன்ற சிறுநீரக பிரச்னையுடன் வருபவர்கள் சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியிருக்கிறார்களா என்பது குறித்தும் கேட்டறிய வேண்டும் என்பதை இப்போதுதான் மருத்துவர்கள் உணர ஆரம்பித்திருப்பதால், பாதரசத்தைக் கொண்ட சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியாவதில்லை” என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. "சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் அவசியமா என்பதை யோசிக்க வேண்டும். தவிர, கண்காணிப்பு அமைப்புகளும் இதுபோன்ற க்ரீம்களின் உள்ளடக்கம் குறித்து ஆய்வுசெய்து கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்" என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையின் இயக்குநர் டாக்டர் என். கோபாலகிருஷ்ணன். இதில் இன்னொரு கேள்வியும் இருக்கிறது. இதுபோன்ற க்ரீம்களை பலரும் பயன்படுத்துகிறார்கள். இருந்தபோதும் எல்லோருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை ஏன்? "ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தினாலும், நோய் ஏற்படுவதில் மரபணு, சூழல் போன்றவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பலருக்கு ஏற்படுவதில்லை என்பதால், இதனால் பாதிப்பு இல்லை என விட்டுவிட முடியாது. புகைப் பிடிக்கும் எல்லோருக்கும் புற்றுநோய் வருவதில்லை. ஆனால், புகைப் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம். அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்" என்கிறார் டாக்டர் என். கோபாலகிருஷ்ணன்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோலை வெண்மையாக்கும் அல்லது வெளுப்பாக்கும் கிரீம் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திய உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். NELL - 1 எப்படி சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது? NELL - 1 என்பது ஒரு antigen. அதாவது நோயெதிர்ப்புத் தன்மையைத் தூண்டக்கூடிய ஒரு மூலக்கூறு. இந்த மூலக்கூறு, anti-bodyஐ ஏற்படுத்தும். அவை, சிறுநீரகத்தின் வடிகட்டிகளில் சேர ஆரம்பிக்கும்போது, அந்த வடிகட்டிகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். பொதுவாக புற்றுநோய் இருப்பவர்களுக்கு இந்த antigen ஏற்படும். ஆனால், புற்றுநோய் இல்லாமல் இந்த antigen உருவாகி சிறுநீரகத்தைப் பாதிக்கிறதென்றால், அது ஏன் ஏற்படுகிறது என்பதை ஆராய வேண்டும். அப்போதுதான் அதைக் குணப்படுத்த முடியும் என்கிறார் கோபாலகிருஷ்ணன். இந்தியாவில், தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களின் தயாரிப்பு மதிப்பு சுமார் 0.45–0.53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தோல் வெண்மையாக்கும் அல்லது வெளுப்பாக்கும் கிரீம் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திய உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் 1945ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகளின் அடிப்படையில், இது தடை செய்யப்பட்டுள்ளது. 2017இல் இதில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு, அழகு சாதன பொருட்களின் பயன்படுத்தப்படும் பாதரச வரம்பு 1 ppm ஆக மாற்றப்பட்டது. மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 இன் கீழ் உள்ள ஒப்பனை விதிகள், 2020 இன் படி, பரிந்துரைக்கப்பட்ட பாதரச வரம்பு 1 பிபிஎம் ஆக இருக்க வேண்டும் என்றும், இது இறக்குமதி செய்யப்படும் அழகுசாதன பொருட்களுக்கும் பொருந்தும். https://www.bbc.com/tamil/articles/c4n1n9z9ypmo
    • பேசுங்கள் இனி மேலாவது பேசுங்கள்  எப்பொழுதும் பேசுங்கள்  எங்களையும் பேசுங்கள்  இல்லை அண்ணா இதைவிட அவலத்தை நாங்கள் சந்தித்தபோது .....??? ஒரு சில நாட்களில் எத்தனை எத்தனை ஆயிரம்......??? இந்த இரு பகுதியும் எம்மை அழித்தவனுடன் ஆரத்தழுவி ஆனந்தத்துடன் வரவேற்று உபசரித்து வீதிக்கு அவன் பெயர் சூட்டி கௌரவப் படுத்தி மகிழ்ந்தனர்.😡
    • ஜூனில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பம் - கல்வி அமைச்சினால் சுற்று நிரூபம் வெளியீடு 16 MAY, 2024 | 05:38 PM   (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 2023 (2024)  தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, உயர்தர வகுப்புகளை ஜூன் 4ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (15) நிறைவடைந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஏற்கனவே அறிவித்திருந்தார். பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வெசாக் விடுமுறையின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன. எவ்வாறிருப்பினும் பரீட்சைகளை நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகள் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் கிடைக்கப் பெறாத அதிபர்கள் மாகாண மற்றும் வலய கல்வி திணைக்களங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/183718
    • "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 09     1] பாலியல் நோக்குநிலை [sexual orientation]     பாலியல் நோக்குநிலை என்பது நீங்கள் யார் மீது ஈர்க்கப்படுகிறீர்கள் மற்றும் உறவு வைத்திருக்க விரும்புகிறீர்கள் பற்றிய உங்கள் பாலியல் நடத்தை ஆகும் எனலாம் [Sexual orientation is about who you’re attracted to and want to have relationships with]. அந்த பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் ஆகிறது.   எனவே தனிப் பட்டவர்களுக்கு குடும்பங்கள் ஒரு முக்கிய ஆதரவு அமைப்பை - குழந்தை பருவத்தில் தாய், தந்தை, சகோதரன், சகோதரிகள், மாமா, மாமி .... என தொடங்கி வாழ்க்கை முழுவதும் பல்வேறு நிலையில் வழங்குகிறது. இப்படியான வெவேறு பல தனிப்பட்டவர்கள் பரஸ்பர நன்மைக்காக ஒன்றாக வேலை செய்யும் பொழுது அங்கு ஒரு சமூகம் உதயமாகிறது.   அது சிறிதோ பெரிதோ, அவர்களிற்கு இடையான தொடர்பு அல்லது இணைப்பு அந்த சமூகத்தை ஒன்றாக பிணைக்கிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. இப்படியான குடும்பத்தின் பாத்திரங்கள் [roles] கலாச்சாரத்தை தொடர்ந்து நூற்றாண்டுகளாக வாழ, நிலைநாட்ட முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் இதை உறுதிப்படுத்துவதற்கு உயிரியல் மூலம் இனப்பெருக்கத்தையும், மற்றும் சமூகம் மூலம் சமூகமயமாக்களையும் குடும்பங்கள் செய்கின்றன [biologically through procreation, and socially through socialization].   குடும்பம் சமூகத்தின் அடிப்படை சமூக அலகு என்பதால், ஒரு சமூகம், சமுதாயம் நிலைத்து, வலுவாக நிற்க, சில குறிப்பிட்ட இயல்புகளை கொண்ட தனிநபர்களினால் அமைக்கப்பட்ட வலுவான குடும்பங்கள் எமக்கு தேவைப்படுகிறது. இந்த நோக்கில் நாம் பார்க்கும் பொழுது கட்டாயம் ஒரு தனிப்பட்ட ஆணாலும் ஒரு தனிப்பட்ட பெண்ணாலும் அமைக்கப்பட்ட குடும்பம் ஒரு சிறந்த அமைப்பாக தென்படுகிறது, ஏனென்றால்,     1] குழந்தை தனது இயல்பான, உயிரியல் [natural, Biological] தந்தை மற்றும் தாயின் செல்வாக்கின் கீழ் வளர்க்கப் படுகிறது,   2] குடும்பங்கள் குழந்தைகளை உருவாக்கவில்லை என்றால் அல்லது ஒரு இனம், இனப்பெருக்கம் செய்யவில்லை என்றால், அந்த குடும்பங்கள் அல்லது அந்த உயிர் இனங்கள் அழிந்து போகும் அல்லது இறந்து போகும், அதனுடன் அவர்களின் அல்லது அவைகளின் சமூகமும் அழிந்து போகும்.     கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால் சேர்க்கை உள்ள ஆண்களே வீரம்நிறைந்தவர்களாக இருப்பர் என்று சொல்லுகிறார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும், அது போலவே இந்து பூரணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார்.   "தண்டு ழாய்முடி யான்தனி நாயகற் கண்டு வெ·கக் கறைமிடற் றெம்பிரான் உண்டெ மக்கு முனைப்புணர் காதல்நீ கொண்ட வேடம் இனிதென்று கூறினான்." [1458]   அதற்கு பாடல் 33 இல், திருமால்,சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று,   "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் முன்பு கேட்டது மன்று முதல்வநீ வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [1463]   என வினவினார். மேலும் கடவுள் சிலைகளை தாண்டி, பல வகையான கவர்ச்சிமிகு எதிர்பால், இருபால், ஓரினச்சேர்க்கை நிர்வாண சிலைகள், இந்தியாவின் பெரும்பாலான பழைய இந்து கோவில்களின் கோபுரங்களில் மற்றும் சுவர்களில் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கஜுராஹோ - மத்தியப் பிரதேசம், மார்க்கண்டேஸ்வரர் கோவில் - மகாராஸ்டிரா, படவலி கோவில் - மத்தியப் பிரதேசம், ரணக்பூர் ஜெயின் கோவில் - ராஜஸ்தான், சூரிய கோவில் - ஓடிஸா, சூரிய கோவில் - குஜராத், ஓசியான் - ராஜஸ்தான், விருபாக்ஷா கோயில் - கர்நாடகா போன்றவை ஆகும். இது ஓரினச்சேர்க்கை அன்று புராண கதைகளில், கடவுள் துதிகளில் காணப்பட்டதற்கு சாட்சி பகிர்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.   சுமார் 400 மிருக இனங்கள் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன, இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [ bonobos] ஆண் மற்றும் பெண் அடங்கும். சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன. உதாரணமாக, ஆண் கூடைட் மீன் [Goodeid fish] போட்டியாளர்களை ஏமாற்றுவதற்க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி ,உண்மையில் அப்படியல்ல. என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள்.     கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,  அத்தியடி, யாழ்ப்பாணம்   பகுதி: 05 தொடரும்             
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.