Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

தமது சொந்த மக்களுக்கே எந்த  பிரயோசனமும் அற்ற தேர்தல் பகிஷகரிப்பு போன்ற உதவாக்கரை   அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் அரசியல் செய்யும் தரப்பின்

தமிழர்களை மேலும் கீழே  கீழே கொண்டு சென்று தங்களளின்  கீழ் வைத்திருக்கும் திட்டம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

 தமது சொந்த மக்களுக்கே எந்த  பிரயோசனமும் அற்ற தேர்தல் பகிஷகரிப்பு போன்ற உதவாக்கரை   அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் அரசியல் செய்யும் தரப்பின் கடந்த கால வாடிக்கை. அதன் தொடர்சசியே இந்த பொது வேட்பாளர் என்ற பிரயோசனமற்ற தமிழரின் வாக்குகளை செல்லாக்காசாக்கும்  வழமையான விளையாட்டும்.

நீங்கள் சொல்வதில் அதிகம் பிழை காண முடியாது.

ஆனால் தமிழர்கள் ஒரே அணியாக திரண்டு மைத்திரியை வெல்ல வைத்த பின்னும் - அவர்கள் எதிர் பார்த்த எதுவும் நடக்கவில்லை, வாக்குகள் செல்லாகாசாகவே ஆனதும் உண்மைதானே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வாக்குகள் செல்லாகாசாகவே ஆனதும் உண்மைதானே?

உரிமைகள் இல்லை.  வாக்குகள் செல்லாகாசு ஆனது என்று சொல்ல முடியாது. அடைக்கபட்ட அறைக்குள் யன்னல் திறந்து விட்ட மாதிரி ஒரு ஆறுதல் அவர்களுக்கு கிடைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உரிமைகள் இல்லை.  வாக்குகள் செல்லாகாசு ஆனது என்று சொல்ல முடியாது. அடைக்கபட்ட அறைக்குள் யன்னல் திறந்து விட்ட மாதிரி ஒரு ஆறுதல் அவர்களுக்கு கிடைத்தது.

நீங்கள் சொல்வது சரியே👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்வதில் அதிகம் பிழை காண முடியாது.

ஆனால் தமிழர்கள் ஒரே அணியாக திரண்டு மைத்திரியை வெல்ல வைத்த பின்னும் - அவர்கள் எதிர் பார்த்த எதுவும் நடக்கவில்லை, வாக்குகள் செல்லாகாசாகவே ஆனதும் உண்மைதானே?

அன்று தமிழ்மக்கள் பொது வேட்பாளரை நிறுத்தி மகிந்த தேர்தலில்வென்றிருந்தால் அதன் பாதிப்பை தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனுபவித்திருப்பார்கள். 

@விளங்க நினைப்பவன் கூறியது போல் அன்று தமிழ் மக்களின் வாக்குகள் செல்லா காசாக்கப்படவில்லை என்பதை 2015 க் கு முன்பும் 2015 க் கு பின்பும் தாயகம் சென்ற புலம் பெயர் மக்களாலேயே  வெளிப்படையாக உணரக்கூடியமாக இருந்தது. 

 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

அன்று தமிழ்மக்கள் பொது வேட்பாளரை நிறுத்தி மகிந்த தேர்தலில்வென்றிருந்தால் அதன் பாதிப்பை தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனுபவித்திருப்பார்கள். 

@விளங்க நினைப்பவன் கூறியது போல் அன்று தமிழ் மக்களின் வாக்குகள் செல்லா காசாக்கப்படவில்லை என்பதை 2015 க் கு முன்பும் 2015 க் கு பின்பும் தாயகம் சென்ற புலம் பெயர் மக்களாலேயே  வெளிப்படையாக உணரக்கூடியமாக இருந்தது. 

 

தமிழ் மக்களிற்கு மைத்திரி வெற்றிக்கு பின்னான 5 ஆண்டுகால கொஞ்சம் ஆசுவாசமாக இருக்க முடிந்தது என்பது என்னமோ உண்மைதான்.

ஆனால் எமது அரசியல் அபிலாசைகள் ஒரு அடிதன்னும் முன் நகர்ந்தனவா?

அந்த வகையில் இலங்கையில் என்ன செய்தாலும் தமிழ் வாக்குகள் செல்லாகாசுகளாயா இருந்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp_Image_2024_04_30_at_17_02_33-75

தமிழ்த் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த சிவில் சமூகம் தீர்மானம்!

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில்  இன்று வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்றுகூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர்.

1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.

2. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.

3.அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது.

4.அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்போது ,வணக்கத்துக்குரிய ஆயர், திருகோணமலை மறைமாவட்டம்
தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கைலை ஆதீனம்
தவத்திரு வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதீனம்
பேராசிரியர் கே ரி கணேசலிங்கம் தலைவர் அரசறிவியல்துறை யாழ் பல்கலைக்கழகம்
கலாநிதி. க. சிதம்பரநாதன், அரங்க செயற்பாட்டு குழு
அருட்பணி த ஜீவராஜ் ஏசு சபை சமூக செயற்பாட்டாளர் மட்டக்களப்பு
திரு நிலாந்தன் அரசியல் ஆய்வாளர்
அருட்பணி பி ஞானராஜ் (நேரு) மனித உரிமை செயற்பாட்டாளர் மன்னார்
நீதி சமாதான ஆணைக்குழு யாழ் மறை மாவட்டம்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரழுச்சி இயக்கம்
தமிழ் சிவில் சமூக அமையம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம்
அறிவார் சமூகம் திருகோணமலை
அகில இலங்கை மீனவர் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கூட்டமைப்பு
கரைச்சி வடக்கு சமாசம்
சமூக விஞ்ஞான ஆய்வு மையம்
சிவில் அமைப்பு மட்டக்களப்பு
தமிழ் ஊடகத் திரட்டு
கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
மாவட்ட கமக்காரர் அமைப்பு வவுனியா
தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்
தமிழர் கலை பண்பாட்டு மையம்
எம்பவர் நிறுவனம்
மக்கள் மனு வடக்கு கிழக்கு சிவில் சமூக குழு
குரலற்றவர்களின் குரல்
மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் அமைப்பு
சமூக மாற்றத்துக்கான அமைப்பு வவுனியா
தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம் திருகோணமலை
புழுதி சமூக உரிமைகளுக்கான அமைப்பு திருகோணமலை
நலிவுற்ற சமூகங்களின் அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு திருகோணமலை ஆகிய அமைப்புக்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1380460

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.