Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்காக உணவு சேகரிக்கும் பாஜக.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் உணவுப் பொருள் பற்றாக்குறையால் பரிதவித்து வரும் தமிழர்களுக்கு வழங்குவதற்காக தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிக்கப்படும் என மாநில பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

கோவை வந்த இல.கணேசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் வாழும் தமிழர்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

அவர்களுக்காக 5ம் தேதி முதல் பாஜகவினர் வீடு வீடாக சென்று உணவு, உடைகள் உள்ளிட்டவற்றை சேகரிப்பார்கள். பின்னர் வருகிற 11ம் தேதி இவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.

சேது சமுத்திரத் திட்டத்திற்காக மொத்தம் 6 பாதைகள் பரிந்துரைக்கப்பட்டன. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, சேது கால்வாய் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது அறிவிக்கப்பட்ட 3வது பாதையில் திட்டத்தை நிறைவேற்றினால் கோதண்டராமசாமி கோவில் பாதிக்கப்படும் என்பதால், 4வது மாற்றுப் பாதை தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் தற்போது 6வது பாதையில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

தமிழக முதல்வர் குறித்து பாஜகவுக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் பேசியதற்காக பாஜக அலுவலகத்தை தாக்கியது தவறான முன்னுதாரணமாகும். ஆட்சியில் இருப்பவர்களே வன்முறையில் ஈடுபட்டால் அதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் பாஜக அதைத் தாங்கிக் கொண்டுள்ளது.

மாநில முதல்வரே போராட்டம் நடத்துகிறார். இது ஏற்புடையதல்ல. திமுக பந்த்துக்கு கோர்ட் தடை விதித்தது. அதையும் மீறி பந்த் நடத்தியுள்ளனர். அதேபோல, பொறுப்பான அமைச்சர் பதவியில் உள்ள டி.ஆர்.பாலு, நீதிமன்றத்தை விமர்சித்துப் பேசியுள்ளார். அவர் பதவி விலக வேண்டும்.

ராமர் பாலம் பாதுகாப்பு தேசிய அமைப்பு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் பாஜக முழு ஒத்துழைப்பு கொடுக்கும். தேர்தலுக்காக நாங்கள் இந்தப் பிரச்சினையை எடுக்கவில்லை.

பாஜக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடரவுள்ளோம் என்றார் கணேசன்.

Scorce

  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவினருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண சேகரிப்பில் பாரதீய ஜனதா கட்சி

[04 - October - 2007] [Font Size - A - A - A]

* நாளை முதல் தமிழ் நாட்டில் வீடு வீடாக பணி ஆரம்பம்

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமெங்கும் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருட்களை சேகரிக்கவுள்ளதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதல்களால் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் உண்ண உணவின்றியும் உடுக்க உடையின்றியும் மருந்துப் பொருட்களின்றியும் வாடுகின்றனர். பட்டினியாலும் நோயாலும் அவதியுறும் அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாளை 5 ஆம் திகதி முதல் பாரதீய ஜனதாக் கட்சித் தொண்டர்கள் தமிழ் நாட்டின் இல்லங்கள் தோறும் சென்று உணவு, உடை முதலிய அத்தியாவசியப் பொருட்களை சேகரிக்கவுள்ளனர் என்று பாரதீய ஜனதாவின் தமிழ் நாடு மாநிலக் கிளையின் தலைவர் இல.கணேசன் அறிவித்திருக்கிறார்.

7 நாட்கள் நிவாரணப் பொருட்களை சேகரித்து எதிர்வரும் 11 ஆம் திகதியளவில் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் பேரணிக்கு புதிய தமிழகம் ஏற்பாடு

இதேவேளை, இலங்கையில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்காக புதிய தமிழகம் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வரும் இலங்கைத் தமிழர் விடுதலைப் போர் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போரை அங்கீகரித்து பேசுவதும் பின்னர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் என தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள்.

சமீப காலமாக இலங்கைத் தமிழர் போராட்டத்தில் மிகவும் மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. தினமும் 10 முதல் 15 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இங்குள்ள மத்திய, மாநில அரசுகள் அமைதியாக இருப்பது சரியல்ல என்று தெரிவித்த கிருஷ்ணசாமி, இலங்கையில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்புவதற்கு தடை விதிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற அக்டோபர் 6 ஆம் திகதி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பாக பேரணி நடத்தப்படுமென அறிவித்தார்.

இந்தப் பேரணியை பழ.நெடுமாறன் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கடந்த செப்டெம்பரில் இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் யாழ்ப்பாணத்திற்கு படகுப் பயணம் மேற்கொள்ள முயற்சித்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நெடுமாறன் ஆரம்பித்தார். பின்னர் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோர் வழங்கிய உறுதிமொழிகளையடுத்து செப்டெம்பர் 15 இல் (4 நாட்களின்பின்) உண்ணாவிரதத்தை கைவிட்டார் நெடுமாறன்.

குடாநாட்டு மக்களுக்காக சேகரித்த உணவுப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்தபோதும் 7 மாத காலமாக இந்திய அரசு அனுமதி வழங்கவில்லையென அச்சமயம் நெடுமாறன் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்திய மத்திய அரசுடன் இது தொடர்பாக பேசி நடவடிக்கை எடுப்பதாக கருணாநிதி அச்சமயம் உறுதியளித்திருந்தார்.

இதுவரை நிவாரணப் பொருட்கள் அனுப்புவது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் தமிழக மாநில அரசும் மத்திய அரசும் எடுக்காத நிலையில், பிரதான எதிர்க் கட்சியான பாரதீய ஜனதாவும் இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

http://www.thinakkural.com/news/2007/10/4/...s_page37726.htm

இந்த நிகழ்வுக்காக பாடுபடும் நெடுமாறன் அண்ணாவுக்கு முக்கியமான நண்றி தெரிவிக்க தமிழர்கள் கடமை பட்டு இருக்கிறார்கள்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.