Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பிலும், பக்தாத்திலும் அமைதி வேண்டும்: ஜேர்மன் தூதுவர்

Featured Replies

அமைதி தான் எமது பிரதான நோக்கம், அது பக்தாத்திலும், பெய்ரூட்டிலும், மட்டக்களப்பிலும் எட்டப்பட வேண்டும் என்று சிறிலங்காவிற்காக ஜேர்மன் தூதுவர் ஜூஜென் வீத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மட்டக்களப்பிலும் அமைதி இல்லை-ஜேர்மன் தூதுவர்

Written by Seran - Oct 03, 2007 at 08:25 PM

ஜேர்மனிய தேசிய நாளை முன்னிட்டு உரை நிகழ்த்திய போது அமைதி தான் எமது பிரதான நோக்கம், அது பக்தாத்திலும், பெய்ரூட்டிலும், மட்டக்களப்பிலும் எட்டப்பட வேண்டும் என்று சிறிலங்காவிற்கான ஜேர்மன் தூதுவர் ஜூஜென் வீத் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனின் தேசிய நாளை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விழா ஒன்றில் அவர் பேசியதாவது:

அமைதிக்கான ஊக்குவிப்புக்கள் தேவை. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நாம் ஒன்றை கற்றுள்ளோம். அன்றைய அரசியல் பலவீனம் தான் முதலாவது உலகப்போரை ஏற்படுத்தியிருந்தது.

உலகில் 248 ஆயுதப்போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த உலகில் 6 பில்லியன் உயிரினங்கள் வாழ்கின்றன. எமது பிரச்சினைகளின் பட்டியல் முடிவற்றது. நாம் உலகத்தின் வெப்பநிலை அதிகரிப்பையும் சந்தித்து வருகின்றோம். நோய்களும் எம்மை அச்சுறுத்தி வருகின்றன.

ஆனால் எமது பிரதான இலட்சியம் அமைதியாகும். நாம் அதனை பக்தாத்திலோ, பெய்ரூட்டிலோ, மட்டக்களப்பிலோ அடைய வேண்டும். உலகத்திற்கு அமைதி தேவை. அல்லது எமது பொதுவான வாழ்க்கை ஆபத்தானதாகும். ஓன்றை மட்டும் மனதில் கொள்ள வேண்டும். நாம் இந்த உலகத்தின் விருந்தினர்கள். எனவே அதற்கேற்ப நாம் நடவேண்டும் என்றார் அவர்.

http://www.sankathi.net/index.php?option=c...74&Itemid=1

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தம் புரிய மறுக்கும் தலைவர்களால் வந்த வினை

கொழும்பில் நடைபெறும் வெளிநாட்டுத் தூதரகங்கள் தொடர்பான நிகழ்வுகளுக்குச் செல்லும் நம்நாட்டுப் பிரமுகர்களுக்கு குறிப்பாக அரசியல்வாதிகள், ஊடக வியலாளர்கள் போன்றோருக்கு - அங்கு பொதுவான ஓர் உபதேசம் காத்திருப்பது இப்போதைய வழமை.

""போரை நிறுத்துங்கள். பரஸ்பரம் புரிந்துணர்வை வளருங்கள். நல்லுறவைப் பேணுங்கள். அமைதியை நிலை நாட்டுங்கள். சமாதானத்தை உருவாக்க உழையுங்கள்!'' என்றெல்லாம் போதனை நடக்கும். பல்வேறு உதாரணங் கள் காட்டப்படும்.

அவற்றுக்கெல்லாம் தலையாட்டிவிட்டு வந்து தமது பாணியில் தங்கள் வழமையான பணியைத் தொடர்வார்கள் நமது அரசியல்வாதிகள்.

நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற ஜேர்மன் நாட்டின் தேசிய தின நிகழ்விலும் இந்தப் போதனை இடம் பெறத் தவறவில்லை. ஆனால் ஜேர்மன் தூதுவர் ஜெர்கன் வீர்த்தின் உரை, அந்த நிகழ்வில் பங்குபற்றிய அனைவரது நெஞ்சங்களையும் தொடத் தவறவில்லை.

"போரை நிறுத்துங்கள்!' - என்ற அழுத்தமான செய்தியை தனது நாட்டின் பட்டறிவு உதாரணத்துடன் அவர் முன்வைத்த பாங்கு பலரது உள்ளத்தையும் தைத்தது. மிக மோசமான உலகப் போருக்குக் காரணமாக அமைந்த ஜேர்மனி, அதிலிருந்து தன்னை என்று விடுவித்துக் கொண்டு சமாதான வழியில், அமைதியை நோக்கிப் பயணிக்க முற்பட்டதோ அன்றுமுதல் அதற்குக் கிட்டிய செழிப்பையும் சிறப்பையும் அவர் சுட்டிக்காட்டத் தவற வில்லை.

தைரியமான முடிவுகளை எடுத்தமை மூலம் உலகில் போரைத் தவிர்த்து, அமைதியை நிலைநிறுத்த உதவியவர்கள் என்று நெல்ஸன் மண்டேலாவையும், மிகைல் கோர்பச்சேவையும் அவர் உதாரணம் காட்டியமையும் கவ னிக்கத்தக்கது.

அவர், முன்னுதாரணம் காட்டிய அந்த இரண்டு பெரிய தலைவர்களும் உலகின் போக்கை உணர்ந்து கொண்ட யதார்த்தவாதிகள். நிதர்சன உலகின் செல்நெறியைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப விட்டுக்கொடுத்துத் தாராளமாக நடந்துகொண்டதன் மூலம் மோசமான உலகப் போர்கள் வெடிக்காமல் தவிர்க்கச் செய்தவர் மிகைல் கோர்பச்சேவ்.

சோவியத் ஒன்றியம் சிதறுவது உலகப் போக்கின் நியதி என்ற யதார்த்தத்தை ஏற்காமல் அதற்கு எதிராகக் கடும் நிலைப்பாட்டை அவர் எடுத்திருப்பாரேயானால், அப்போது உலகம் இரண்டாகப் பிரிந்து, பிளவுபட்டு நிற்கக் காரணமாக இருந்த பனிப்போர் முற்றி, உலகப் பேரழிவு தவிர்க்க முடியாத நிகழ்வாகியிருக்கும்.

தீர்க்கதரிசனத்தோடும், தெளிவான - உருப்படியான - மனோதைரியம் மிக்க நடவடிக்கைகளை எடுக்கும் துணிச் சலோடும், விட்டுக்கொடுப்புடனும் செயற்பட்ட மிகைல் கோர்பச்சேவின் அன்றைய உயர்ந்த போக்கே உலகின் அமைதி நிலை நீடிக்க வழிகோலியது என்றால் மிகையாகாது.

ஆனால் நம் நாட்டிலோ யதார்த்தவாதி என்று கருதப் பட்டோர் யதார்த்தத்துக்குப் புறம்பாகச் செயற்பட்டு அழிவு, நாசத்துக்கு வழிகோலும் மோச நிலையைக் காண்கிறோம்.

பொதுவாகவே "யதார்த்தவாதி வெகுசன விரோதி' என்று கூறுவார்கள். ஆனால் நமது நாட்டிலோ "யதார்த்தவாதி' என்று எதிர்த்தரப்பால் மதிக்கப்பட்டோர் கூட, பின்னாளில் வெகுசன ஆதரவைத் திரட்டுவதற்காக யதார்த்தத்தைப் புரிய மறுத்துக் கைவிட்ட கேவல நிலையைச் சந்திக்கி றோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் - 2005 நவம்பரில் - இந்நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.

அந்த வெற்றிக்கு 10 நாட்கள் கடந்து தமது புகழ்பெற்ற - வருடாந்த - மாவீரர் தின உரையை நிகழ்த்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், தென்னிலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, யதார்த்தவாதி என்று கருதப் படுபவராதலால், அவர், ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச் சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் குறுகிய காலத் துக்குள் விரைந்து - முன்வைக்க வேண்டும் எனக் கோரினார்.

ஆனால் யதார்த்தவாதியாக நடந்து, சிங்கள மக்கள் மத்தியில் வெகுஜன விரோதியாக விரும்பாத மஹிந்த ராஜபக்ஷ, யதார்த்தத்தைப் புறக்கணித்து, பௌத்த - சிங்களப் பேரினவாதத்துக்கு அடிபணிந்து, பெரும்பான் மையினரான அந்த மேலாண்மைத் தரப்பினரின் வெகு ஜன நண்பராகத் தம்மை மாற்றிக் கொண்டார்.

யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள மறுத்த அவரின் போக்கு முழு இலங்கைத் தீவையுமே யுத்தப் பேரபாயத்தின் வாசலில் இன்று கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது.

ஜேர்மன் தூதுவர் போன்ற இராஜதந்திரிகள் நம்மைப் பார்த்து இலங்கைத் தீவின் மக்களை நோக்கி யுத்தத்தைத் தவிர்த்து, அமைதியாகவும், சமாதானத்துடனும் வாழக் கற்றுக்கொள்ளுங்கள் என்ற உபதேசம் செய்யும் நிலையை, யதார்த்தம் புரிய மறுத்த நமது தேசத்தின் தலைவர்களே ஏற்படுத்தி உருவாக்கி நிற்கின்றார்கள்.

இதுதான் இன்றைய பேரவலத்துக்குப் பிரதான காரணம்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் மட்டுமா அநீதி நடக்கின்றது ஜேர்மன் தூதரே? அம்பாறை, திருமலை போன்ற இடங்களில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, காணிகள் அபகரிக்கப்படுவது தெரியவில்லையா?

மிழ் மக்களுக்கு அமைதி வேண்டும் என்று சொல்வதை விடத் தீர்வு கிடைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் அது குறித்து சந்தோசப்படலாம். அடிமையாக இருந்தாலும் அமைதி கிடைக்குத் தூதரே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.