Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை

11 MAY, 2024 | 04:38 PM
image
 

(எம்.மனோசித்ரா)

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதத்தினை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில், தற்போதைய பொருளாதார நிலைமையையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னர் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் 15 வீதமாகக் காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர், மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அது ஓரிலக்கம் வரை குறைக்கப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது மீண்டும் தமது சேமிப்புக்கான வட்டி வீதத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் சிரேஷ்ட பிரஜைகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில் மேற்கண்டவாறு தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

சேமிப்புக் கணக்குகளைப் பேணும் சகல சிரேஷ்ட பிரஜைகளுக்கும் அவர்கள் கோரும் வட்டி வீதத்தை வழங்கினால் வருடத்துக்கு 80 பில்லியன் ரூபாய் தேவைப்படும். இதற்கு முன்னர் செலுத்திய வட்டி வீதத்துக்காக திறைசேரிக்கு 105 பில்லியன் கடன் காணப்படுகிறது.

எனவே இந்த கோரிக்கைகள் தொடர்பில் பொறுப்புடன் ஆழமாக மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எவ்வாறு இவ்விடயம் தொடர்பில் தீர்மானிப்பது என்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனவே பல்வேறு வயதினருக்கான வட்டி வீதங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது என்றார். 

https://www.virakesari.lk/article/183256

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஏராளன் said:

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதத்தினை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில், தற்போதைய பொருளாதார நிலைமையையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

தேர்தல் வருதில்ல கெதியா கெதியா.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி விகிதத்தை திருத்த தீர்வு அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு - சியம்பலாபிட்டிய

05 AUG, 2024 | 04:35 PM
image
 

 

சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை திருத்துவதற்கான தீர்வு யோசனை அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (05) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், பல சிரேஷ்ட பிரஜைகளின் முக்கிய வருமானம், அவர்களின் ஓய்வு காலத்தின்போது வழங்கப்படும் பணிக்கொடை அல்லது வங்கி வைப்புத்தொகை போன்றவற்றில் பெறப்படும் நிலையான வட்டியே என்று குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் நாட்டில் வங்கி வட்டி வீதத்தை குறைக்குமாறு கடன் பெற்றவர்கள் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அதற்கமைய வங்கி வட்டி வீதமும் பொதுவாக கடன் வட்டி வீதத்தை குறைக்கும்போது குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டபோது அரசாங்கம் குறிப்பிட்ட சதவீத வட்டியை சேர்த்து சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, ஒருபுறம், வங்கிகளுக்கு 88 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. மறுபுறம், கிட்டத்தட்ட 15 லட்சம் கணக்கு வைத்திருப்பவர்கள் வட்டி விகிதத்தைக் குறைப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி இப்பிரச்சினைக்கு திறைசேரி வழங்கக்கூடிய பதில் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் சாதகமான பதில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/190335

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கான 15 வீத வட்டி வீதத்தை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் - எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை

Published By: DIGITAL DESK 7   06 AUG, 2024 | 03:29 PM

image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கான விசேட 15வீத வட்டி வீதத்தை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் பல தடவைகள் தெரிவித்திருந்தபோதும் இதுவரை அதனை வழங்க தவறி இருக்கிறது. அதனால் அரசாங்கம் இவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கு வழங்கப்பட்டுவந்த விசேட 15வீத வட்டி வீதத்தை குறைத்து அதனை 7.15வீதம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது. 2016இல் இருந்து 2020வரை இதனை செயற்படுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இருந்தபோதும் இந்த வட்டி வீதத்தை மீண்டும் 15வீதமாக அதிகரி்த்துக்கொடுக்க அரசாங்கம் தவறி இருக்கிறது.

முதியோர்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வங்கிகளில் சேமிக்கும் பணத்துக்கு கிடைக்கப்பெறும் வட்டியை கொண்டே தங்களின் வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். அவர்களின் இந்த 15வீத வட்டி வீதத்தை வழங்குவதாக அரசாங்கம் இந்த சபையில் பல தடவைகள் தெரிவித்திருக்கிறது. ஆனால் செயற்படுத்துவதில்லை. அமைச்சர் ஒருவர் இந்த சபையில் பொறுப்புடன் ஒரு விடயத்தை தெரிவித்தால், அதனை செயற்படுத்த வேண்டும்.

அத்துடன் கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் முதலாவதாக எடுத்த தீர்மானம், ஒரு இலட்சத்தி 21ஆயிரம் ஓய்வூதியர்களின் வட்டி வீதத்தை 2016இல் இருந்து 2020வரை குறைப்பதாகும். இந்த ஓய்வூதியர்களில் சிலர் தற்போது உயிருடன் இல்லை.

அதேபோன்று கிராம சேவகர்களின் சேவை பிரமாணக்குறிப்பு மற்றும் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்த சபையில் தொடர்ந்து தெரிவித்து வந்தேன். கிராம சேவை அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்த சேவை பிரமாணக்குறிப்புக்கு பதிலாக அமைச்சருக்கு, அதிகாரிகளுக்கு தேவையான சேவை பிரமாணக்குறிப்பையே அனுமதித்துக்கொள்ள அனுப்பப்பட்டிருக்கிறது.

அமைச்சர்கள் இந்த சபையில் அனைத்துக்கும் இணக்கம் தெரிவிக்கின்றனர். ஆனால் அவற்றை செயற்படுத்துவதில்லை. அதனால் ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்களுக்கான விசேட 15வீத வட்டியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/190417

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.