Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

பாடல்: மலரே பேசு மௌன மொழி

படம் : கீதாஞ்சலி

பாடியவர்கள்: கே. எஸ். சித்ரா & இளையராஜா

  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான், இது வைரமுத்து இளையராஜா கூட்டணியின் அற்புதமான படைப்பு.

பாதை முழுதும் கோடி மலர்கள்

பாடி வருமே தேவ குயில்கள்

உன்னாடை ஹே மிதக்கின்ற பாலாடை

உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை

என்ற வரிகள் எப்போதுமே என்னைக் குளிப்பாட்டும் நீரோடை.

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சிங்கார பெண் ஒருத்தி

பாடியவர்: மனோ

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

நுணாவிலான், இது வைரமுத்து இளையராஜா கூட்டணியின் அற்புதமான படைப்பு.

பாதை முழுதும் கோடி மலர்கள்

பாடி வருமே தேவ குயில்கள்

உன்னாடை ஹே மிதக்கின்ற பாலாடை

உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை

என்ற வரிகள் எப்போதுமே என்னைக் குளிப்பாட்டும் நீரோடை.

ஆமாம் ராசராசன் எனக்கும் பிடித்த பாடல்களின் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பேச கூடாது

படியவர்: எஸ்.பி.பி

படம்:அடுத்த வாரிசு

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

தன் காதலியை கண்ணால் காணமுடியாத காதலன், அவளை வருணித்துப் பாடும் அருமையான பாடல் இது. வைரமுத்து இளையராஜா கூட்டணியில் உருவான பாடல். ஒரு காதலன் இதை விட எவ்வாறு வருணிக்க முடியும்?

அழகில்அழகு.. தேவதை…

ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

கூந்தல் வண்ணம் மேகம் போல

குளிர்ந்து நின்றது

கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்

கேள்வி ஆனது

பொன்முகம் தாமரை

பூக்களே கண்களோ

மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்

(அழகில்அழகு.. தேவதை…)

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்

மின்னுகின்றன

சேர்ந்த பல்லின் வரிசையாவும்

முல்லை போன்றன

மூங்கிலே தோள்களோ

தேன்குழல் விரல்களோ

ஒரு அங்கம் கைகள் அறியாதது

(அழகில் அழகு.. தேவதை…)

பூ உலாவும் கொடியை போல

இடையை காண்கிறேன்

போக போக வாழை போல

அழகை காண்கிறேன்

மாவிலை பாதமோ

மங்கை நீ வேதமோ

இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே

(அழகில்அழகு.. தேவதை…)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உறவுகள் தொடர்கதை

படம்: அவள் அப்படித்தான்

பாடியவர்: P. ஜெயச்சந்திரன்

உறவுகள் தொடர்கதை...

உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே...

உன் நெஞ்சிலே பாரம்..

உனக்காகவே நானும்

சுமைதாங்கியாய் தாங்குவேன்

உன் கண்களின் ஓரம்..

எதற்காகவோ ஈரம்

கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை...

உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே... (இசை)

வாழ்வென்பதோ கீதம்..

வளர்கின்றதோ நாணம்..

நாள் ஒன்றிலும் ஆனந்தம்

நீ கண்டதோ துன்பம்

இனி வாழ்வெல்லாம் இன்பம்

சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புதுப் புனல்..

கடலிலே கலந்தது

நம் சொந்தமோ இன்று இணைந்தது

இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே..

இனியெல்லாம் சுகமே..

பாடல்: உறவுகள் தொடர்கதை

படம்: அவள் அப்படித்தான்

பாடியவர்: P. ஜெயச்சந்திரன்

டங்குவார் அண்ணா,

இப் பாடலை பாடியவர் P. ஜெயச்சந்திரன் அல்ல K. J. ஜேசுதாஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:தளிர்களில் பூக்கள்

பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

இப்பாடலுக்கான இசை: இளையராஜா

படம்: அப்பா அம்மா விளையாட்டு (பின்னர் பெயர் மாற்றப்பட்டது)

பாலு மகேந்திராவின் இப்படத்துக்கு இரு பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். மிகுதி பாடல்கள் மெல்லிசை மன்னரால் இசை அமைக்கப்பட்டன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் அண்ணா,

இப் பாடலை பாடியவர் P. ஜெயச்சந்திரன் அல்ல K. J. ஜேசுதாஸ்

ராசராசன்.. இந்தப்பாடலை யேசுதாஸ் பாடியுள்ளார் என்பதுதான் பல இடங்களிலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஜெயச்சந்திரனின் குரல்தான் எனக்கு கேட்குது..! சிலர் ஜெயச்சந்திரன் பாடியிருப்பதாகவும் சொல்கிறார்கள்..!

http://mahendranmahesh.blogspot.com/2006/0...og-post_10.html

http://maravantu.blogspot.com/2005/09/blog-post_23.html

சரியாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஜெயசந்திரனின் குரல் போல் தானுள்ளது. ஜேசுதாசின் குரலாக தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மேகம் கறுக்குது

படம்: ஆனந்த ராகம்

பாடியவர்கள்: கே.ஜே யேசுதாஸ் மற்றும் ஜானகி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மனிதா மனிதா

படம்: கண்சிவந்தால் மண் சிவக்கும்

பாடியவர்கள்: கே.ஜே. யேசுதாஸ் மற்றும் குழுவினர்

Edited by Danguvaar

பாடல்: காத்தோடு பூ உரச

திரைப் படம்: அன்புக்கு நான் அடிமை

பாடியவர்கள்: பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வரிகள்: வாலி

நடிப்பு: ரஜினிகாந், ரதி

Edited by RasaRaasan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நான் தேடும் செவ்வந்தி பூவிது

இசை அமைத்து பாடியவர்: இசைஞானி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: எந்தன் கண்ணில்

படம்: குரு

இசை: இசைஞானி

பாடியவர்: எஸ்.ஜானகி

http://www.youtube.com/watch?v=x7et5JbqUso

ராசராசன்.. இந்தப்பாடலை யேசுதாஸ் பாடியுள்ளார் என்பதுதான் பல இடங்களிலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஜெயச்சந்திரனின் குரல்தான் எனக்கு கேட்குது..! சிலர் ஜெயச்சந்திரன் பாடியிருப்பதாகவும் சொல்கிறார்கள்..!

http://mahendranmahesh.blogspot.com/2006/0...og-post_10.html

http://maravantu.blogspot.com/2005/09/blog-post_23.html

சரியாகத் தெரியவில்லை.

எனக்கு யேசுதாசின் குரல் தான் கேட்கிறது.

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள இசை ரசிகர்களே.. இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த என்னைப்போன்ற உள்ளங்களுக்காக இந்த இணைப்பைத் தொடங்குகிறேன். அவரின் இசையில் வெளி வந்த பாடல்கள் பல நூறு. ஒவ்வொன்றும் தேனாறு. நேரடியாகப் பாடலை இணைக்கும் போது, பெரும்பாலும் படத்தில் கவனம் சிதறி விடுவதால் ஒரு மேடைப்பாடலை இணைக்கிறேன். பாடல்களை இணைப்பதோடு, அதிலுள்ள சிறப்பம்சங்களை அலசும் ஒரு வாய்ப்பாக இத்திரியைப் பயன்படுத்துவோம். முதலில்,

<object width="425" height="350"><param name="movie" value="

name="wmode" value="transparent"></param><embed src="
type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"></embed></object>

இந்தப்பாடலைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் அலசத் தேவையில்லை. பல தடவைகள் அலசப்பட்டு விட்டது. சில இசைக்குறிப்புகளை மட்டும் இங்கே தருகிறேன். இசைக்கருவிகளில் வாசிக்க வசதியாக இருக்கும்.

Scale: C# D# E F# G# A B (C யும் இடையே வரும்)

பாடலின் இறுதியில் வரும் சிறு கிட்டார் இசைக் குறிப்பு.

C# E G# F# F# => G# B G# E F# E D#

B D# F# E E F# E D# C# D# B

B C C# E G# B C C# C# C# C# C#

C# D# C# C# B B

B C# B B A A B A G#

C# E G# F# F# => G# B G# E F# E D# C# D#

B C# D# E F# E D# E D# C# C#

C# C# => B B B B B C C# C# E# G# F# E D# E D# C#

C# C# C#

பலருக்கும் தட்டச்சுப் பயிற்சி போலிருக்கும் :wub: தேவையுள்ளவர்களுக்கு உபயோகப்படட்டுமே! :lol:

இளையராஜா என்றாலே .....

"அன்னக்கிளி ஒன்னை தேடுதே .......... " என்னும் பாட‌ல் தான் ஞாப‌க‌த்திற்கு வ‌ரும் .

அந்த‌ப் பாட‌லை கொஞ்ச‌ம் ச‌வுண்டாய் போட்டு விடுங்கோவ‌ன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா என்றாலே .....

"அன்னக்கிளி ஒன்னை தேடுதே .......... " என்னும் பாட‌ல் தான் ஞாப‌க‌த்திற்கு வ‌ரும் .

அந்த‌ப் பாட‌லை கொஞ்ச‌ம் ச‌வுண்டாய் போட்டு விடுங்கோவ‌ன்.

தமிழ்சிறி.. நீங்கள் கேட்ட அன்னக்கிளையைக் காணேல்ல.. அதுக்குப் பதிலா இதைக் கேளுங்கோ.. :)

பாடல்: இனிமேல் நாளும்

படம்: இரவுப் பூக்கள்

பாடியவர்கள்: எஸ். ஜானகி

http://www.youtube.com/watch?v=M5orGDPDoX0

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: வண்ண நிலவே

படம்: பாடாத தேனிக்கள்

பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

இசை: ராஜா சார்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நான் பேச வந்தேன்

படம்:பாலூட்டி வளர்த்த கிளி

இசை: இசைஞானி

http://www.youtube.com/watch?v=pUgCsZ0WFUw&feature=related

நான் பேச வந்தேன்

சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

திருவாய்மொழி திருவாசகம்

நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்

நான் பேச வந்தேன்

சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

உன் வாய்மொழி மணிவாசகம்

நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை

நான் பேச வந்தேன்

சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்

படபட படபட படவென வரும் பாவங்கள்

ஆலிலை மீது தழுவிடும் காற்று

சலசல சலசல சலவென வரும் கீதங்கள்

குலமகள் நாணம் உடன் வரும் போது

மௌனமே இடைதான் தூது

ஒரு கிளி ஊமை...ஒரு கிளி பேதை

இடையில் தீராத போதை...ஹா

நான் பேச வந்தேன்

சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில்

கலகல கல கலவென வரும் எண்ணங்கள்

ஓவியம் தீட்டி காட்டிடும் கன்னம்

பளபள பளபள பளவென வரும் கிண்ணங்கள்

சொல் என கண்ணும்...நில் என நெஞ்சும்

சொல் என கண்ணும்...நில் என நெஞ்சும்

சொல்வதே பெண்ணின் தொல்லை

சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால்

அதுதான் ஆனந்த எல்லை

நான் பேச வந்தேன்...ஹா

சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை...ஆ

உன் வாய்மொழி மணிவாசகம்

நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை

நான் பேச வந்தேன்

சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மனிதா மனிதா

படம்: கண் சிவந்த்தால் மண் சிவக்கும்

இசை: இசைஞானி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பொன்வானம்

பாடியவர்: எஸ்.ஜானகி

இசை: இசைஞானி

படம்:இன்று நீ நாளை நான்

http://www.youtube.com/watch?v=42bQRoUR3wQ

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்..

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..

மழைப்பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே

மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே

மழை செய்யும் கோளாறு... கொதிக்குதே பாலாறு...

இது காதல் ஆசைக்கும் காமன் பூசைக்கும் நேரமா?

இந்த ஜோடிவண்டுகள் கூடு தாண்டிடுமா?

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

இந்த தாமரை மலர்ந்தபின்பு மூடுமோ?

பட்டு பூங்கொடி படர இடம் தேடுமோ?

மலர்க்கணை பாயாதோ... மதுக்குடம் சாயாதோ?

இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா...

மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா...

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்...

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தேவன் திருச்சபை

படம்: அவர் எனக்கே சொந்தம் (1977)

பாடியவர்: கே.ஜே யேசுதாஸ்

தேவன் திருச்சபை மலர்களே என்கிற பூரணியும் இன்னொருவரும் பாடிய பாடல்தான் எனக்கு இதுநாள்வரை தெரிந்திருந்தது. இப்படி யேசுதாஸ் பாடிய ஒரு பாடல் இருப்பது இன்றுதான் தெரியவந்தது. :lol:

http://www.youtube.com/watch?v=ZnlA95_1Tt0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உனக்கெனத்தானே

படம்: பொண்ணு ஊருக்குப் புதுசு (1979)

பாடியவர்கள்: இளையராஜா, ஜென்சி

பாடல் சூழ்நிலைக்கு ஏற்ப பின்னணி இசையையும் மெட்டையும் உருவாக்குவதில் இவருக்கு நிகர் இவரேதான். பிரிந்திருக்கும் காதலன் காதலி இடையே இருக்கும் ஏக்கம் கலந்த மனநிலையை மிக அழகாக பாடல் வெளிக்கொண்டுவருகிறது. நீங்களும் கேளுங்களேன். :lol:

http://www.youtube.com/watch?v=ThvZpS_tOrE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.