Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

29 MAY, 2024 | 04:14 PM
image
 

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாதாட் கிராமத்தில் தனது மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தடியால் தாக்கியதாக குறித்த பெண்ணின் கணவரால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் முதல் கணவரால் கைவிடப்பட்ட நிலையில் புத்தளம் பகுதியில் உள்ள மேலும் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் குறித்த இரண்டாவது கணவருக்கும் ஒரு பிள்ளை உள்ளதாகவும் குறித்த கணவரும் குறித்த பெண்ணை விட்டு சென்றுள்ளார். இந்நிலையில்  குறித்த இரண்டாவது கணவரின் பிள்ளை குறித்த பெண்ணினால் தாக்கப்படுவதாக அயலவர்களினால் குறித்த நபருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் ஊரான ஏறாவூர் சாதாட்ற்கு வந்த இரண்டாவது கணவர் தனது பிள்ளையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு குறித்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பெண்ணின் கையடக்கத் தொலைபேசியை எடுத்து பார்த்த போது தனது பிள்ளையை குறித்த பெண் தாக்கியது காணொளியாக எடுக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார். 

உடனடியாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து பொலிஸாரிடம் காணொளியை காண்பித்துள்ளார். இதன்போது பொலிஸார் அதிர்ச்சியடைந்த நிலையில் குறித்த காணொளிக்கு அமைய குறித்த பெண்ணை நேற்று கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/184798

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7 வயது சிறுவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கிய தாய் கைது

Published By: VISHNU

29 MAY, 2024 | 07:29 PM
image
 

28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஏறாவூர் சாதாட் கிராமத்தில் 7 வயது சிறுவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய குறித்த சிறுவனின் தாய் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். 

பின்னர் குறித்த பெண்ணின் 24 வயதுடைய சகேதரரும் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 29 ஆம் திகதி புதன்கிழமை இருவரையும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 6ஆம் மாதம் 12ஆம் திகதி வரை இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களையும் ஏறாவூர் ஆயிஷா லு அபூபக்கர் சித்திக் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/184816

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.