ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இவ்வாரம் முக்கிய அறிவிப்பு : ரணில் - மஹிந்த புதன்கிழமை சந்திப்பு
By
ஏராளன்
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
Posts
-
வணக்கம் எங்கே ரஷ்யாவிலா நிற்க்கிறீர்கள் ?? 🙏
-
எனக்கு தெரியும் நான் என்ன செய்ய முடியும்?? எனது வாதம் இந்தியாவை திட்டிக்கொண்டு பகைத்துக்கொண்டு சுயாட்சி தமிழ் ஈழம் பெற முடியாது என்பது தான் இலங்கையும் இந்தியாவும் போர் புரியும் போது தான் இலங்கை தமிழருக்கு சுயாட்சி அல்லது தமிழ் ஈழம் கிடைக்கும் ஆனால் அவர்கள் போர் புரிய மாட்டார்கள் சிங்களவரகள் நிலைமைக்கு ஏற்ப வளைத்து கொடுப்பார்கள் இதனை நான் 1975 முதல் அவதானித்து வருகிறேன் குறிப்பு,..இலங்கையில் பெற்றோர் சகோதரங்கள். சக மனிதர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?? நன்றி வணக்கம்… இதுவரை நான் விளக்கமாக எழுதியதை. பிழை என்று எவருமே கருத்துகள் முன் வைக்கவில்லை
-
"உடுக்கடித்து சன்னதம் ஆடுதல்" எனும் மரியாதையான வாக்கியம் உந்த பிக்ளிகாப் பசங்களுக்கு கொஞ்சம் அதிகம்தான் ...😁
-
By kandiah Thillaivinayagalingam · பதியப்பட்டது
"வழிப்போக்கன்" “பூர்வீக நிலம், பூர்வீக கலாச்சாரம், பூர்வீக கிராமம் அல்லது நகரத்தின் மீது அன்பை வளர்ப்பது மிக முக்கியமான பணியாகும், அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த அன்பை எப்படி வளர்ப்பது? அது சிறியதாகத் தொடங்குகிறது - தன் குடும்பத்தின் மீதும், தன் வீடு மீதும், தன் பள்ளி மீதும் அன்புடன். படிப்படியாக விரிவடைந்து, பூர்வீக நிலத்தின் மீதான இந்த அன்பு உங்கள் நாட்டிற்கான அன்பாக மாறும் - அதன் வரலாறு, அதன் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்திற்காக ” / “Inculcating love for one's native land, native culture, native village or town is a very important task and there is no need to prove it. But how to cultivate this love? She starts small - with love for her family, her home, her school. Gradually expanding, this love for the native land will turn into love for your country - for its history, its past and present ” (டிஎஸ் லிகாச்சேவ் / DS Ligachev). உலகத்தில் எல்லோரும் வழிப்போக்கர்களே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். சிலர் எங்கே போகிறோம் என்கிற இலட்சியம் இல்லாமலே போய்க் கொண்டு இருக்கிறார்கள். சிலர் இருட்டிலே நடக்கிறார்கள்; சிலர் ஒளியிலே நடக்கிறார்கள்; சிலர் ஒளியைத்தேடி நடக்கிறார்கள்; சிலர் கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதையில் நடக்கிறார்கள்; சிலர் பட்டு விரித்த பாதையில் செல்கிறார்கள். இரண்டுங்கெட்ட இடர்ப்பட்ட நிலையில் இடை வழியிலேயே பயணத்தை முடித்துக் கொள்பவர்களும் பலர். இதை யாரும் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக இன்று 19 செப்டம்பர் 2024. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பரப்புரை நேற்றுடன் முடிந்து விட்டது. அந்த பரப்புரை காலத்தில் இவை எல்லாவற்றையும் நீங்கள் நேரடியாக பார்த்திருப்பீர்கள். அனுபவித்து இருப்பீர்கள். அவர்களும் அரசியலில், அரசியல் அரங்கில் ஒரு வழிப்போக்கன் தான்! ஆனால் வேறு வழியில் அல்லது நோக்கில் !! என்றாலும் அவ்வப்போது வறுமையின் கொடும் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, இடையிடையே குறுக்கிடும் இடையூறுகளையும், தோல்விகளையும் எதிர்த்துப் போராடிய வண்ணம் வாழ்க்கையைப் பஞ்சினும் இலேசாக மதித்துப் புன்னகை பூத்தபடியே நாடு நாடாய் பயணம் செய்து உலகின் ஒவ்வொரு மூலை முடக்கையும் ஆராயும் ஒரு “வழிப்போக்கன்.” னின் கதைதான் இது! ஒரு காலத்தில், மலைகள் மற்றும் பசுமையான வயல் வெளிக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில், சிவா என்ற ஒரு வழிப்போக்கன் வாழ்ந்து வந்தான். சிவா தனது சிந்தனையில் முயற்சியில், ஒரு நிலையாக நின்று விடாமல், எல்லைகள் தாண்டி அலைந்து திரிபவனாக இருந்தான், எனவே அவனது கிராமத்தின் எல்லைக்கு அப்பால் உலகை ஆராய வேண்டும் என்ற தீவிர ஆசை அவனுக்கு இருந்தது. சிறு வயதிலிருந்தே, சிவா தொலைதூர நிலங்கள், கம்பீரமான உயர்ந்த மலைகள் மற்றும் அலைபாயும் கடல்களின் கதைகளால் ஈர்க்கப்பட்டான். அவனது அமைதியற்ற இதயம் எதாவது சாகசத்திற்காக ஏங்கியது, மேலும் அவன் தனது கற்பனையின் துண்டுகளாக இருக்கும் தொலைதூர இடங்களில் கால் வைக்க கனவு கண்டான். "ஆகாத காலம் அரைக்கணங்களாய் அகல போகாத ஒரு ஊர் பொழுதோடு போகிச்சேர வேகாது கொஞ்சம் வெயிலும்தான் தணிய சாகாது காத்திருந்தேன் சாலைவழி செல்ல ஏழாறு திக்கும் ஒரு ஈ காகமன்றி" ஒரு நல்ல காலை வேளையில், தோளில் கனமான பையுடனும், கையில் ஒரு வரைபடத்துடனும், சிவா தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விடை பெற்று, ஏழாறு திக்கும் ஒரு ஈ காகம் கூட அற்ற, மக்கள் பொதுவாக குறைவாகப் பயணித்த பாதையில் செல்லத் தீர்மானித்த அவன், தனது வாழ்க்கையை மாற்றும் ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கினான். பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். ஆனால், சிரமம் வரும் என்று நினைத்து எவரும் வாழ்க்கையை நடத்துவது இல்லை. பயணம் போகிறோம், எல்லாமும் நன்மையாகவே அமையும் என்று நம்பிக் கொண்டு தான் செல்கிறோம். காரில் பயணம் செய்ய ஆரம்பித்தவுடன் வழியில் எந்த விபத்து வரப் போகிறதோ என்று எண்ணிக் கொண்டு யாரும் பயணம் மேற்கொள்வ தில்லை. பயணம் செய்கிறோம், பல நேரங்களில் தெரிந்த பாதைகளில் போகிறோம்., சில நேரங்களில் பாதை தெரியாமல் தெரிந்தவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டு பயணம் தொடர்கிறோம். சில நேரங்களில் பாதை காட்டுவதற்கு எவரும் கண்ணில் படாத போது, நமது அறிவுக்கேற்ற முறையில் அனுமானித்துக் கொண்டும் பயணிக்கிறோம். அப்படித்தான் சிவா உறுதியாக தன் பயணத்தை தொடர்ந்தான். ஒரு வழிப்போக்கனாக, சிவா பரந்த நிலப்பரப்புகளை கடந்து, பல்வேறு கலாச்சாரங்களை சந்தித்தான், மேலும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தான். அடர்ந்த காடுகளின் வழியாக நடைபயணம் மேற்கொண்டான், உயரமான சிகரங்களில் ஏறி, சீறி பாயும் ஆறுகளைக் கடந்தான். அவன் கால் பாதிக்கும் ஒவ்வொரு அடியும் அவனை உலகின் மர்மங்களை அவிழ்ப்பதற்கும் அவனது சொந்த குணாதிசயத்தின் ஆழத்தைக் கண்டுபிடிப்பதற்கும் உதவியது. ஆமாம், சிவாவுக்கு, சங்க காலப் புறநானூற்றில் கணியன் பூங்குன்றன் என்னும் புலவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்க்கைப் பயணம் பற்றிய உயரிய தத்துவத்தை கூறிச் சென்றது ஞாபகம் வந்தது. அதை இன்று அனுபவரீதியாக கண்டும் கேட்டும் பழகியும் அவன் உணர்ந்தான். "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றேர்; வாழ்தல ; இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆறாது கல்பொழுது இரங்கும் மல்லற் பேர்யாறு நீர்வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே." (புறநானூறு - பாடல் 192) அவனது பயணத்தில், சிவா இன்பம் மற்றும் துன்பம் இரண்டையும் சந்தித்தான். அவன் இயற்கையின் அழகினை அடிவானத்தில் சூரிய அஸ்தமனத்தின் பொழுது கண்டான், அந்நியர்கள் பாடி மயக்கும் மெல்லிசைகளைக் கேட்டான், மேலும் பலவிதமான உணவு வகைகளை, மகிழ்விக்கும் சுவைகளை ருசித்தான். அவன் கணக்கில் அடங்கா சவால்களை எதிர்கொண்டான், இயற்கையில் சீற்றங்களான கொடிய புயல்களை எதிர்கொண்டான், பலதடவை தங்குமிடம் இல்லாமல் நீண்ட இரவுகளை சமாளிக்க வேண்டியும் அவனுக்கு இருந்தது , மற்றும் அறிமுகமில்லாத பிரதேசங்களுக்கு செல்லவும், விந்தையான மனிதர்களை சந்திக்கவும் வழிவகுத்தது. இவைகள் எல்லாவற்றையும் விபரமாக குறிப்பு எடுக்க அவன் தவறவில்லை. அவன் மேலும் பயணங்கள் தொடரும் பொழுது, ஒரு வழிப்போக்கனாக இருப்பதன் உண்மையான சாராம்சம் உலகத்தின் பௌதீக ஆய்வில் அல்லது வெளி உலக ஆய்வில் மட்டுமல்ல, சுயத்தை ஆராய்வதிலும் உள்ளது என்பதை சிவா உணரத் தவறவில்லை. அது மட்டும் அல்ல, அவன் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் பகிர்ந்து கொள்ள எதோ ஒரு கதை மற்றும் மற்றவர்களுக்கு கற்பிக்க எதோ ஒரு பாடம் இருப்பதை அவன் உணர்ந்தான். எல்லா வற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல, தாழ்மையான எளிய கிராமவாசிகள் முதல் உயர்ந்த ஞான முனிவர்கள் வரை, ஒவ்வொரு தொடர்பும் அவனது இதயத்தில் ஒரு அழியாத அடையாளத்தை பதித்து, வாழ்க்கையைப் பற்றிய அவனது கண்ணோட்டத்தை ஆழமாகவும் பரந்தளவும் வடிவமைத்தது. ஆண்டுகள் கடக்க கடக்க , சிவாவின் பயணங்கள் அவனை பூமியின் மூளை முடுக்கெல்லாம் கொண்டு சென்று அவனை ஒரு அனுபவமிக்க பயணியாகவும், புத்திசாலியாகவும், அடக்கமாகவும், நினைவுகளின் பொக்கிஷமாகவும் மாற்றியது. அவனது பயணங்களின் சாகசங்களின் இறுதியில், சிவா தனது கிராமத்திற்குத் திரும்பினான், அவனது இதயம் நன்றியுணர்வு மற்றும் புதிய ஞானத்தால், அறிவால் நிரம்பி வழிந்தது. அவன் தனது உறவினர்களுடனும் நண்பர்களுடனும் மற்றும் எல்லோருடனும் தனது கதைகளைப் பகிர்ந்து கொண்டான், இது மேலும் பலரை, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயவும், அது வழங்கும் அதிசயங்களைத் கண்டு அறியவும் அவர்களுக்குள் ஒரு தீப்பொறியைப் பற்றவைத்தது ! அவன், இன்று இந்த உலகில் இல்லை, ஆனால் அவனது உருவச்சிலை பலரை அவன் வழியில் உலகத்தை அறிய, ஆராய உருவாக்கிக் கொண்டே இருக்கிறது! "சிவா வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி" என்று அவனின் உருவச் சிலையின் கீழ் பொறிக்கப்பட்டு இருந்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார். அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி முதலாவது மகள் மற்றும் மருமகனுடன் ஒரு ஏரியில் படகு சவாரி செய்தார். தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார். இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது. இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார். அவரும் முதல் மருமகனைப் போலவே செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார். முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை. திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை. மாமியார் கெஞ்சினார். ம் ஹும். பார்க்காதது போல் இருந்தார். மாப்பிள்ளை காப்பாற்றுங்கள்.. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார். காரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.. பொண்ண வளக்க சொன்னா பேயை வளர்த்திருக்கிற... சாகுன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார். மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்.... ஒரு புத்தம் புதிய BMW கார் வாசலில் நின்றது. அருகில் சென்று பார்த்தால்.. ............. மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது. 😂 Mohan Muthuram
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
- 1 reply
Picked By
மோகன், -
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.- 1 reply
Picked By
மோகன், -
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.- 7 replies
Picked By
மோகன்,
-
Recommended Posts