Jump to content

210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

44.jpg?resize=680,375&ssl=1

210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை!

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 15 தீவிரவாத அமைப்புக்களுக்கும் அவற்றடன் தொடர்புடைய 210 பேரினது நிதி, ஏனைய நிதிச் சொத்துக்களை முடக்கி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamils Rehabilitation Organisation – TRO), உலக தமிழர் இயக்கம் (WTM), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WTRF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) ஆகிய புலம்பெயர் அமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், HQ Group, தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) , ஜமாதே மிலாதே இப்ராஹீம் (JMI), விலயாத் அஸ் செய்லானி (WAS), கனேடியன் தமிழ் தேசிய பேரவை (NCCT), தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), டருள் அதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM), Save the Pearls போன்ற அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1385906

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் உட்பட 15 அமைப்புகளின் நிதிகள் சொத்துக்கள் முடக்கம் - வெளியானது வர்த்தமானி

04 JUN, 2024 | 04:50 PM
image

இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேடவர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல்குணரட்ண இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

15தீவிரவாத அமைப்புகள் அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 பேரின் சொத்துக்கள் நிதிகள் பொருளாதார வளங்களை செயல் இழக்கச்செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் புனர்வாழ்வு கழகம் தேசிய தவ்ஹீத்ஜாமத் உட்பட பல அமைப்புகளின் நிதிகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளிற்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட 113 பேரின் பணத்தையும் சொத்துக்களையும் முடக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/185298

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மோகன் said:

முழுமையான வர்த்தமானி அறிவித்தல்
தமிழில்
ஆங்கிலத்தில்

அண்ணை பிடிஎப் ஐ யாழில் இணைக்கலாமா?

இணைக்கலாமெனில் எவ்வாறு என்று சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

13 hours ago, ஏராளன் said:

அண்ணை பிடிஎப் ஐ யாழில் இணைக்கலாமா?

இணைக்கலாமெனில் எவ்வாறு என்று சொல்லுங்கோ.

ஆவணங்கள் தரவேற்றும் வழிமுறை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்டவில்லை. எதிர்காலத்தில் இதுபற்றி யோசிக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட கவிஞர் பயங்கரவாதப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார்

Published By: DIGITAL DESK 7   06 JUN, 2024 | 10:44 AM

image
 

தமிழ் வாசகர்கள் மத்தியில் மன்னாரமுது அஹ்னாஃப் என நன்கு அறியப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமின் பெயரை, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்தப் பட்டியலில் அவரது பெயரை அரசாங்கம் சேர்த்திருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் 2024 மே 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2387/02 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் 210 நபர்கள் மற்றும் 15 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

“காலத்துக்குக்காலம் திருத்தப்பட்டதும் 2023ஆம் ஆண்டு ஜுன் 8 ஆம் திகதி 2335/16 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பட்டியலுக்கான திருத்தத்தினால் இறுதியாகத் திருத்தப்பட்டதுமான 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி1854/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட ஆட்களின், குழுக்களின் மற்றும் உருவகங்களின் பட்டியலானது அதற்கான அட்டவணைகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக பின்வருவதனை இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது.” என குறித்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 8, 2023 அன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2335/16 மூலம் 301 தனிநபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் பெயரிடப்பட்டிருந்தன.

இதற்கமைய, கடந்த வருடம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அஹ்னாப் ஜசீம் உட்பட 91 பேரின் பெயர்களை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

ஓகஸ்ட் 1, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட இலக்கம் 2291/02 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலில் 316 தனிநபர்கள் மற்றும் 15 அமைப்புக்கள் பெயரிடப்பட்டு, அஹ்னாப் ஜசீமின் பெயர் முதன்முறையாக அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

எந்த காரணமும் கூறாமல் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அஹ்னாப் ஜசீமின் பெயரைச் சேர்த்தமையால், தொழில் ஒன்றைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையால் அவர் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பின் ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, 2020 மே 16 அன்று பண்டாரவேலியில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜசீம், சர்வதேச மனித உரிமைக் குழுக்களின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 579 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தால் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட பின்னரும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என இலங்கை அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/185417

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம். கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது. அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.
    • சிறியின் தந்தை வழி அறுமுகநாவலரின் மாணவர், தாவை கச்சேரி சாக்கடைத்தார் சண்முகம் பரம்பரை. எனது தந்தை வழி ஆறுமுகநாவலர்.
    • "என் அப்பாவுக்காக" ['கணபதிப்பிள்ளை கந்தையா' /11/06/1907 - 18/02/2000]  "பாராட்டுகள் எதிர்பாராத, பெருமை பேசாத  பாசாங்கு செய்யாத, அமைதியான அண்ணல் ! பாசம் கொண்டு, எம்மை உயிராய்நேசித்து   பார்த்து வளர்த்த, பெருந்தகை இவன் !"   "அன்னாரின் கனவுகளை, இன்று நிறைவேற்ற  அன்னாரின் விருப்பங்களை, இன்று முழுமையாக்க  அன்னாரின் கவலைகளை, இன்று நீக்கிட  அயராது நாம்என்றும், உறுதியாக இருக்கிறோம் !" "எம் வாழ்வின், அனைத்து புயல்களிலும் எம்மை கைபிடித்த, துணிவுமிக்க வீரன் ! எம் மனஅழுத்தம், சச்சரவு காலங்களில் எம்மை வழிநடத்தும், உண்மையான நண்பர் !" "நல்ல கெட்ட  நேரங்கள் எல்லாம்  நட்புடன் ஆசீர்வதித்து தேற்றிய ஆசான் !  நடுகல்லாய் நாம் இன்று மலர்தூவி   நறும்புகை ஏற்றி வழிபடும் தெய்வம் !"  "உலகம் அறியும் நாயகன் இவனல்ல  உண்மை பேசும் உத்தமன் இவன் !  உதாரணம் காட்டி தவறுகள் திருத்தி உரிமையுடன் அதட்டி மனிதனாக்கிய தலைவன் !" "நடந்தது நடந்ததே என்று கூறி  நடப்பதை எதிர்கொள்ள பலம் தந்து  நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம் என்று  நயமாக இயம்பிய தந்தை இவன் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 38     உண்மையில் உயரிய வரலாற்றுக் குறிப்பான மகாவம்சம் இலங்கையினதோ அல்லது சிங்களவர்களினதோ வரலாறாக எழுதியது என்பதை விட, அது மகாவிகாரையின் அல்லது தேரவாத பௌத்தத்தின் வரலாறு என்று கூறுவதே பொருத்தம் என்று எண்ணுகிறேன் [The Mahavamsa (Great Chronicle of historical poem) was written not as a history of Sri Lanka (or Sinhalese) but as a history of the Mahavihara (Theravada Buddhists)].   உதாரணமாக தீபவம்சம், மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை மட்டுமே சொல்லுகிறது, அப்பொழுது சிங்கள இனம் என்று ஒன்றும் இல்லை, எனவே சிங்கள பௌத்தம் [Sinhala Buddhists] என்ற சொல்லுக்கே இடமில்லை. எனவே உண்மையில் இலங்கையின் சரியான வரலாற்றையும், அதன் மக்களையும் [சிங்களவர், தமிழர்], அதன் பண்டைய மதங்கள் [இந்து [சைவம்], புத்த], அதன் பண்டைய மொழிகள் அல்லது எழுத்து வடிவங்கள் மற்றும் அதன் பண்பாடுகளையும் அறிய வேண்டுமாயின், [To study the history of Sri Lanka and its people (Sinhalese/Tamils), its ancient religions (Buddhism / Hinduism), its languages/scripts and its culture], நாம் வடக்கு தெற்கு இந்தியாவின் வரலாற்றையும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.   ஏனென்றால், இலங்கையின் வரலாற்றின் மூலம் (origin / roots) அங்குதான் ஆரம்பிக்கிறது. அதுமட்டும் அல்ல அந்நியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெரும் மட்டும் இவை இரண்டின் வரலாறும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, தொப்புள் கொடி உறவாகவே இருந்தன எனலாம் [interconnected / umbilical cord].   நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது, இந்த பாளி நூல்கள், இலங்கையின் புத்த அரசர்களின் இனப் பின்னணி [ethnic background] பற்றி குறிப்பிடவில்லை. எனவே அவர்களின் பெயர்களிலும் அதன் கருத்து அல்லது அதன் பின்னணியிலுமே நாம் அதைத் தேட வேண்டி உள்ளது.   மேலும் வரலாற்று அறிஞர்களின் படி, ஒன்பதாம் நூற்றாண்டில் தான் நாகர் என்ற பதம் அல்லது பெயர், இலங்கை வரலாற்றில் இருந்து, அதாவது கல்வெட்டுகளில் [stone inscriptions] இருந்து வழக்கொழிந்து போயின என்கின்றனர். அதன் பின் தான் மிகவும் தெளிவாக இரண்டு முதன்மை இனக்குழுக்களாக [ethnic groups], அதாவது, ஹெல / சிகல மற்றும் தமிழர் [Hela / Sihala and Demela] என அடையாளம் காணக்கூடியதாக இருந்தது எனலாம்.   ஆகவே வரலாற்று ஆசிரியர்கள், நாகர்கள் இந்த இரண்டு முதன்மை இனக்குழுக்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் என்று நம்புகிறார்கள். பேராசிரியர் க இந்திரபாலாவின் [Prof. K. Indrapala] கூற்றின்படி, வரலாற்றுக்கு முந்தைய காலம் [prehistoric times] மற்றும் எழுத்துகள் கண்டுபிடிக்காத, வரலாற்றின் மிகப்பெரிய நாகரிகங்கள் உருவாகாத, மக்கள் ஒருங்கிணைந்த சமூகமாகச் சேர்ந்து வாழ்ந்த புரோட்டோ [மூல அல்லது முதனிலை] வரலாற்று காலத்திலும் [proto-historic times], வாழ்ந்த பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் [As per Prof. K. Indrapala, ‘The Sinhalese and Tamils of Sri Lanka are descended from the common ancestors who lived in the country in prehistoric and proto-historic times] இவர்கள் இருவரும் என்றும் இவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக வரலாற்றை இலங்கையில் பகிர்ந்துள்ளார்கள் என்றும் கூறுகிறார்.   இதை நாம் ஏற்றுக்கொள்வோமாயின், இன்று நாம் சிங்களவர், நாம் தமிழர் என இலங்கையில் கூறுபவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே ஆவார்கள் என்பது கண்கூடு.   நாம் மகாவம்சத்தில் விஜயனின் வருகையை பார்க்கும் பொழுது ஒரு உண்மை புலனாகிறது. அதாவது, இலங்கைக்கு புத்த மதம் வரும் முன்பே, மற்றும் சிங்களவர் என்ற ஒரு இனம் பரிணமிக்கும் முன்பே, இலங்கை, சங்க இலக்கியத்தில் கண்ட தென் இந்தியா மாதிரி, நாகரிகம் அடைந்த நாடாகவே காண்கிறோம்.   உதாரணமாக ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி நூல் நூற்பதை காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது.   இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இலங்கையில் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது என்றே நம்புகிறேன். குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இராமாயண காப்பியத்தில் இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்" என்பது கவனிக்கத் தக்கது.   கி மு 205 க்கும் கி மு 161 க்கும் இடைப்பட்ட துட்ட காமினி, எல்லாளன் [Dutugemunu and Ellalan] பெரும் போரைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. இதில் இன்னும் ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது. துட்ட காமினியின் பத்து மாபெரும் வீரர்கள் என வர்ணிக்கப்படுபவர்களில், நந்திமித்ரா [Nandhimitta], வேலுசுமணா என்ற இருவர் தமிழர் ஆகும். உதாரணமாக நந்திமித்ரா, எல்லாளனின் தமிழ் சேனாதிபதியான மித்ராவின் [Mitta] சகோதரி மகனாகும் [nephew]. அதே போன்று, எல்லாளனின் படையில் பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்த்தவர்களின் மூதாதைய வீரர்கள் மட்டுமல்ல, சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். உதாரணமாக தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா …. ஆவார்கள். இந்த சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.   என்றாலும் அந்த கால பகுதியில் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை, ஆனால் இவர்களின் பவுத்த பரம்பரை பின்னாளில் சிங்களவர்களாக பரிணமித்தார்கள் என்பது தான் உண்மை. இது இந்த பெரும் யுத்தம், மொழி, இனம் அடிப்படையில் அல்ல, மத அடிப்படை மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகிறது.   எனவே, எல்லாளன் – துட்ட கைமுனு போர் தமிழர் – சிங்களவர் போராகப் பார்ப்பது தவறானது. அன்று சிங்கள இனமோ மொழியோ தோன்றாத காலம். அந்தப் போர் சைவ மதத்தினருக்கும் – பவுத்தர்களுக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போர் என்பதே உண்மையாகும்.   துட்ட கைமுனு நாக வம்சத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன் [Kavantissa]. காகவண்ண தீசனின் பூட்டன் பெயர் மகாநாகன் ஆகும் [Kavantissa - a great-grandson of King Devanampiyatissa's youngest brother Mahanaga]. மகானாகனது தந்தை பெயர் முத்துசிவன் [Mutasiva / மூத்தசிவா]! இது ஒன்றே துட்ட கைமுனு யார் என்று எடுத்து காட்டுகிறது.   அது மட்டும் அல்ல, துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய ஒரு இனம் வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன். அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள் [Dutugemunu's mother was Viharamahadevi, daughter of Tissa, king of Kalyani.].   எல்லாளன் மீது போர் தொடுக்கு முன்னர் கதிர்காமத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்து விட்டே புறப்படுகிறான். அவனது போர் முழக்கம் “இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்’ [Chapter XXV of Mahāvaṃsa depicts the story of the “The Victory of Duṭṭhagāmaṇi.” After having a relic placed on his spear, Duṭṭhagāmaṇi takes five hundred bhikkhus with his army to march in conquest across the Tamil occupied territories. He victoriously conquers many kings, but states, “Not for the joy of sovereignty is this toil of mine, my striving (has been) ever to establish the doctrine of the Saṃbuddha. And even as this is truth may the armour on the body of my soldiers take the colour of fire.”] என சூளுரைத்ததாக மகாவம்சம் (அதிகாரம் 25) தெரிவிக்கிறது.   “பவுத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரில் துட்ட கைமுனு என்ற சிங்கள பவுத்த மன்னன், எல்லாளன் என்ற தமிழ் சைவ மன்னனை வென்றான்” என்ற கதை பின்னாளில் புனையப்பட்டு சிங்கள பள்ளி மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பாட நூலில் சேர்க்கப்பட்டது என்பது வெள்ளிடை மலையாகும்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 39 தொடரும்       
    • ஒரு அரசுக்கு இருக்கும் பொறுப்பு, தன் ஆட்சிக்குட்பட்ட நிலத்தில், குற்றங்களை குறைப்பது. தமிழக அரசு இந்த விடயத்தில் பொதுவாகவே மெத்தனமாகவே நடந்து கொள்கின்றது. கள்ளச்சாராய விடயத்தில் மட்டுமல்ல, ரவுடிகளால் பெருகும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தை விட மெத்தனமாகவே உள்ளது. கள்ளச்சாராயம் விடயத்தில், மக்களுக்கும் அறிவும் வேண்டும். கண்ணுக்கு முன் எத்தனை பேர் இவ்வாறு அ நியாயமாக கொத்து கொத்தாக இறந்தாலும் சிலர் திருந்துவதில்லை. இந்த விடயத்தில் பிரேமலதா சொல்வது மிகவும் நியாயமானது. இப்படி இறப்பவர்களுக்கு இழப்பீடு என்று காசைக் கொடுத்தால், அது ஊக்குவிப்பாகவே அமையும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.