Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர் ஒருவர் மதுரையில் சுட்டுக் கொலை

Featured Replies

இலங்கையின் நீர்கொழும்பைச் சேர்ந்த சில மீனவர்கள் கைது செய்யப்பட்டு

இந்தியாவின் மதுரைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்களை பார்க்க அனுமதி பெற்று மதுரைச் சிறைக்கு வந்த நீர்கொழும்பைச் சேர்ந்த கனீசியஸ் பெர்ணான்டோ என்பவரைதீவிரவாதி எனக் கருதி மதுரை சிறைக் காவலர்கள் சுட்டதால்அவர் கொல்லப்படதாக தகவல்.

ஏனைய விபரங்கள் தெரியவில்லை.

இறுதியாக கிடைத்த தகவல்கள்:http://www.hindu.com/2007/10/06/stories/2007100653220600.htm

Edited by AJeevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுரை சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இலங்கை மீனவர் சுட்டுக் கொலை

சனிக்கிழமை, அக்டோபர் 6, 2007

மதுரை:

மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களைப் பார்க்க வந்த மீனவர் அமைப்பின் தலைவர், சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதால், சிறைக் காவலர் அவரை சுட்டுக் கொன்றார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் மதுரை விரைந்துள்ளனர்.

மதுரை மத்திய சிறைக்கு நேற்று மாலை 3 மணியளவில் ஒருவர் வந்தார். கைதிகளைப் பார்ப்பதற்காக அனுமதிக் கடிதத்தை அவர் வைத்திருந்தார். ஆனால் பார்வையாளர்களுக்கான பகுதி வழியாக செல்லாமல், மெயின் நுழைவாசல் வழியாக செல்ல முயன்றார்.

ஆனால் அவரைத் தடுத்த காவலர் தேவராஜன், இது தடை செய்யப்பட்ட பகுதி, இந்த வழியாகப் போகக் கூடாது, பார்வையாளர் பகுதி வழியாகச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அதைக் கேட்காமல் அந்த நபர் தொடர்ந்து செல்ல முயன்றார். மேலும் கோபத்துடன் தேவராஜன் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிக்க முயன்றார்.

இதனால் அந்த நபர் வேறு ஏதோ உள்நோக்கத்துடன் வந்திருக்கலாம் என சந்தேகித்த தேவராஜன், மின்னல் வேகத்தில் அந்த நபரை கீழே தள்ளி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்தபோது இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள நெகம்போ பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவரது பெயர் வர்ணகுல சூர்ய பெர்னாண்டோ என்பதும் தெரிய வந்தது.

கடந்த ஜூன் மாதம் பெர்னாண்டோவின் படகில், நெகம்போ பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கக் கிளம்பினர். இலங்கை கடல் எல்லையைத் தாண்டி தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நான்கு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெர்னாண்டோ அப்பகுதியில் மீனவர் தலைவராகவும் இருக்கிறார். இதையடுத்து நான்கு மீனவர்களையும் பார்த்து ஜாமீனில் எடுக்கவும், தனது படகை மீட்கவும் சென்னைக்குக் கிளம்பி வந்தார்.

அங்குள்ள இலங்கை துணை தூதரகத்தில் இதற்கான உரிய அனுமதியைப் பெற்றார். பின்னர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்திக்கும் அனுமதியையும் பெற்றார்.

இதையடுத்து அவர் மதுரை சிறைக்கு நேற்று வந்துள்ளார். மாலை 3 மணிக்கு அவர் கைதிகளைச் சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. வந்த இடத்தில்தான் இதுபோன்ற சம்பவம் நடந்து விட்டது.

பெர்னாண்டோவின் உடலை மாநகர காவல்துறை ஆணையர் நந்தபாலன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியதால் அங்கு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

இலங்கைக்குத் திருப்பிச் செல்வதற்கான ரிட்டர்ன் டிக்கெட்டையும் பெர்னாண்டோ ஏற்கனவே எடுத்திருந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/10...il-premise.html

  • தொடங்கியவர்

தகவலுக்கு நன்றி சங்கர்

  • கருத்துக்கள உறவுகள்

இலஞ்சம் வழங்க மறுத்தமையினாலேயே இலங்கை மீனவர் சுட்டுக்கொலை விசாரணையில் திடுக்கிடும் தகவல்

வீரகேசரி நாளேடு

, மதுரை சிறைச்சாலைக்கு முன்பாக இலங்கை மீனவர் கனீசியஸ் பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறைத்தண்டனை கூடுதல் பிரதி பொலிஸ் அத்தியட்சர் சேகர் மற்றும் இலங்கை துணைத்தூதரக அதிகாரி தாசிக் ஆகியோர் நேற்று முன்தினம் மதுரை சிறைச்சாலைக்கு விஜயம் செய்து விசாரணைகளை நடத்தினர். மதுரைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் நால்வரை பார்வையிட வந்த நீர்கொழும்பு மீனவர் சங்கத்தின் பொருளாளர் கனீசியஸ் பெர்னாண்டோ (வயது ??) சிறைக்காவலரினால் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் சிறைக்கு முன்னால் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

27915563199.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீனவர் கொலை - காவலர் சஸ்பெண்ட்

திங்கள்கிழமை, அக்டோபர் 8, 2007

மதுரை:

மதுரை சிறை வாசலில் இலங்கை மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், சிறைக் காவலர் தேவராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த மீனவர் சங்கத் தலைவர் வர்ணகுல சூரிய கனிசியஸ் பெர்னாண்டோ மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு இலங்கை மீனவர்களைப் பார்க்க வந்தார்.

வழக்கமாக பார்வையாளர்கள் செல்லும் வழியில் செல்லாமல், முக்கிய கேட் வழியாக அவர் செல்ல முயன்றதால் அவருக்கும், சிறைக் காவல் பணியில் அப்போது இருந்த காவலர் தேவராஜுக்கும் இடையே பிரச்சினை உருவானது. ஒரு கட்டத்தில் தேவராஜை மீறி பெர்னாண்டோ உள்ளே நுழைய முயன்றதால் தற்காப்புக்காக பெர்னாண்டோவை சுட்டு விட்டார் தேவராஜ். இதில் பெர்னாண்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது. நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேவராஜ் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவை சிறைத்துறை டிஐஜி மூர்த்தி நேற்று மாலை பிறப்பித்தார். தேவராஜ் சர்ச்சைக்குரிய மரணம் என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கரிமேடு காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, ஆர்.டி.ஓ. நாராயணமூர்த்தி தனது விசாரணையை முடித்து விட்டார். இன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனது விசாரணை அறிக்கையை அவர் தாக்கல் செய்யக் கூடும் எனத் தெரிகிறது.

சகோதரரிடம் உடல் ஒப்படைப்பு:

இந்த நிலையில் பெர்னாண்டோவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் நேற்று மாலை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி கொண்டு செல்லப்பட்டது.

உடலை பெர்னாண்டோவின் சகோதரர் ஜூடு நார்மன் பெர்னாண்டோ பெற்றுக் கொண்டார். அவருடன் இலங்கையைச் சேர்ந்த பாதிரியார் பயஸ், அகில இலங்கை புலம் பெயர்ந்த மீனவ மக்கள் தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் மாக்ஸ்மன், இலங்கை துணைத் தூதரக அதிகாரி தசீம் ஆகியோர் வந்திருந்தனர்.

பின்னர் பெர்னாண்டோவின் உடலுடன் அவர்கள் திருச்சிக்கு ஆம்புலன்ஸில் பயணமானார்கள். அங்கிருந்து உடல் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2007/10...ing-lankan.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.