Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமல்ல அது பாதிப்பையே ஏற்படுத்தும் என ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (15) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிலர் பேசி வருகின்றனர். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் என்னைப் பொறுத்த வரையில் பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமல்ல அது பாதிப்பையே ஏற்படுத்தும்.

உண்மையில் தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரச்சனைகளை தீராத பிரச்சனைகளாக வைத்திருப்பதற்கான ஒரு முயற்சியாகவே இதனை நான் பார்க்கிறேன்.

இவர்கள் எல்லோரையும் உருளைக் கிழங்கு மூட்டையில் கட்டி வைத்திருந்தது போன்று ஒன்றாக கட்டி வைத்திருந்தாலும் இன்றைக்கு பிரபாகரன் இல்லாத சூழலில் கட்டு கழன்டு உள்ளதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உருண்டோடியது போன்று சிதறுப்பட்டு இருக்கின்றனர்.

இவ்வாறான நிலைமையில் இவர்களுக்குள் ஐக்கியம் ஒற்றுமை எங்கே இருக்கிறது. பர வருடமாக இப்படி கட்டி வைத்து என்ன கிடைத்தது. அழிவை கட்டுப்படுத்த முடிந்ததா அல்லலது முன்னேற்றம் ஏதும் வந்ததா? ஒன்றும் இல்லாத நிலையில் இப்ப தேர்தல் வருகிறபடியால் மீண்டும் அந்த என்றும் பற்றி பேசுகின்றர்.

எம்மைப் பொறுத்தவரையில் இவர்களைப் போன்று அல்லாமல் கடந்த காலங்களில் நாம் மக்களுக்கு எதை கூறினோமே அதனையே இப்போதும் கூறுகிறோம். ஆக சொல்வதை செய்வதும் செய்வதை சொல்வதும் தான் நான்.

எனவே எங்களை நம்பி மக்கள் எம்மோடு பயணிப்பதன் ஊடாக பல்வேறு விடயங்களை பெற்றுக் கொடுக்க முடியும் என தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/303892

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வேண்டாம் சொல்கிறார் என்றால் வேண்டும் என்று அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

இவர் வேண்டாம் சொல்கிறார் என்றால் வேண்டும் என்று அர்த்தம்.

அவரைப் பற்றி புரிந்த ஒராள்,  நீங்கள்தான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

அவரைப் பற்றி புரிந்த ஒராள்,  நீங்கள்தான். 😂

ஆனால் முடியாமல் போச்சே என்று வருந்தாத நாளில்லை. 😷

  • கருத்துக்கள உறவுகள்



தென்னிலங்கை அரசாங்கமாக இருக்கலாம் இந்திய அரசாங்கமாக இருக்கலாம் அல்லது சர்வதேச சமூகமாக இருக்கலாம் இவர்கள் அனைவரும் தங்களின் நலன்களிலேயே அக்கறையாக இருப்பார்கள் எங்கள் நலனில் அக்கறையாக இருக்க மாட்டார்கள் என ஈபிடிபி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (15) நடாத்திய ஊடக சந்திப்பின் போது 13 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து சென்றிருக்கின்றனர். அவர்கள் வந்து என்ன பேசியிருக்கின்றர் என்பதும் ஏனைய தமிழ்க் கட்சியினர் என்ன கேட்டிருக்கின்றனர் என்பதும் உங்களுக்கு தெரியும்.

குறிப்பாக இங்குள்ள தமிழ்க் கட்சியினர் அவர்களிடத்தே காவாசி தாறியா, அரைவாசி தாறியா, முக்கால்வாசி தாறியா, என்று கேட்டிருக்கின்றனர். ஆனால் நாங்கள் அப்படி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

உண்மையில் தமிழ் மக்களின் போராட்டங்கள் தியாகங்களாலே இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாகவே இந்த 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அத் திருத்தம் நமக்கு கிடைக்கின்ற போது அரைவாசி, காவாசி, முக்கால்வாசி என்றெல்லாம் இருக்கவில்லலை. அது முழுமையாகத் தான் இருந்தது.

அதனை நடைமுறைப்படுத்துகின்ற காலத்தில் இந்தியா தனது படைகளையும் அனுப்பியிருந்தது. இவ்வாறு ஒருபக்கம் தன்னுடைய படைகளை அனுப்பிய அதேநேரத்தில் இராஜதந்திர ரீதியாகவும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

ஆனால் துரதிஸ்டவசமாக பிரச்சனைகள் தீர்க்க விரும்பாதவர்கள் அதிலே ஒன்றுமில்லை என்று அன்றைக்கு கூறிவிட்டார்கள். அது மாத்திரமல்லலாமல் தும்புதடியால் கூட தொடமாட்டோம் என்றும் கூறியிருந்தனர். அன்று இவ்வாறு கூறியவர்கள் இன்று என்ன கேட்கின்றனர் என்று பாருங்கள்.

இங்கு ஒரு விடயத்தை நான் கூறி வைக்க வேண்டும். அதாவது நீண்ட காலத்திற்கு பின்னர் என்னுடைய நண்பர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் நானும் ஒரு நிகழ்வில் அருகருகே அமர்ந்திருந்து உரையாடும் சந்தர்ப்பமொன்று ஏற்பட்டிருந்தது.

அப்பொழுது அன்றைக்கே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் ஏற்று இருக்கலாம் என்றும் நாங்கள் எங்கேயோ சென்று இருக்கலாம் எனவும் கூறியிருந்தேன். அதற்கு அவருடைய பதில் என்னுடைய கருத்தை அவர் ஏற்றுக் கொள்வதாகவே இருந்தது.

உண்மையில் இதனையே அவர் மனசுக்குள்ளே அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அதனை செய்ய வேண்டிய நேரத்தில் அனைவருமாக செய்யாமல் நாங்கள் எல்லாம் கோட்டை விட்டுவிட்டது என்பது எங்களுக்கு அசிங்கம் அல்லது அவமானம் என்று தான் நினைக்கிறேன்.

இன்றைக்கு அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது உண்மையாகவே இதில் தவறிழைத்தது இலங்கையோ இந்திய அரசு அல்லது சர்வதேசமோ அல்ல. அதில தமிழர் தரப்பு தான் முழுமையாக தவறிழைத்து கோட்டை விட்டிருக்கிறோம்.

இலங்கை இந்தியா ஒப்பந்தத்தோடு தென் இலங்கை ஆட்சியாளர்களின் குணாதிசய ரீதியான மாற்றங்கள் அன்று ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்த தவறிவிட்டோம். எங்களுக்கு வினை விதைத்தது நாமே தானே உரிய வேறு யாரும் அல்ல என்றார்.

ஆக தென்னிலங்கை அரசாங்கமாக இருக்கலாம் இந்திய அரசாங்கமாக இருக்கலாம் அல்லது சர்வதேச சமூகமாக இருக்கலாம் இவர்கள் அனைவரும் தங்களின் நலன்களிலேயே அக்கறையாக இருப்பார்கள் எங்கள் நலனில் அக்கறையாக இருக்க மாட்டார்கள்.

இன்று பாலஸ்தீனத்திலும் காசாவிலும் சர்வேச சமூகம் என்ன செய்து கொண்டிருக்கிறது. அந்த போரில் அழிவு முற்றுப்பெறும் வரை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுதான் நமக்கும் நடந்து முடிந்திருக்கிறது. எனவே இவர்களை நம்பிக் கொண்டிப்பதை விடுத்து நம் எமது பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என சிந்தித்து அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.


 

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=188846

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, விசுகு said:

ஆனால் முடியாமல் போச்சே என்று வருந்தாத நாளில்லை. 😷

ஹ்ம்ம்....  எனக்கும் அந்தக் கவலை இருக்கு. 🤕

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஏராளன் said:

இவர்கள் எல்லோரையும் உருளைக் கிழங்கு மூட்டையில் கட்டி வைத்திருந்தது போன்று ஒன்றாக கட்டி வைத்திருந்தாலும் இன்றைக்கு பிரபாகரன் இல்லாத சூழலில் கட்டு கழன்டு உள்ளதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உருண்டோடியது போன்று சிதறுப்பட்டு இருக்கின்றனர்.

இப்ப ஐயா என்ன சொல்லவாறார்??
பிரபாகரன் இருந்திருக்கலாம் என்கிறாரா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.