Jump to content

"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே"
 
 
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே
செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது
சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது
பித்தம் ஏறி என்காலும் தொடருது!"
 
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே
ஒளிரும் அவள் பல் அழகில்
ஒடிந்து நானும் காதல் கொள்ள
ஒப்புதல் கேட்டு மனம் கெஞ்சிநிற்குது!"
 
"வித்தை பல உடலால் காட்டி
கத்தை கத்தையாக காதல் எறிந்து
முத்தம் பல இதழால் தந்து
ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!"
 
"ஒழிந்து ஓடி ஆடிப் பாடி
ஒற்றை காலில் சலங்கை கட்டி
ஒய்யாரமாய் வரம்பில் விழாமல் நடந்து
ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!"
 
"மெத்தை மேல் அவள் உறங்க
சத்தம் இன்றி முத்தம் இட
கொத்து கொத்தாய் மலர் கொடுக்க
ஒத்தையடிப் பாதையில் தவம் கிடக்கிறேன்!"
 
"ஒப்பனை செய்து பிரமனும் மயங்க
ஒல்லிய இடைக்கு பட்டை சுற்றி
ஒற்றைக் கொம்பன் அருள் வேண்டி
ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகிறாள்!"
 
"ஒத்தையடிப் பாதையில் ஒதுங்கிய என்னை
நத்தை வேகத்தில் மெல்ல வந்து
சித்தம் கலங்க கண்ஜாடை காட்டி
சத்தம் வராமல் முட்டி போகிறாள்!"
 
"ஒத்தையடிப் பாதையில் ஓரமாய் நிற்கையில்
ஒளிரும் தளிர்மேனி அருகில் வந்து
ஒதுங்கிய என்னை ஆரத் தழுவ
ஒன்றாய் இருவரும் மகிழ்ந்து நின்றோம்! "
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available.
 
 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, kandiah Thillaivinayagalingam said:
ஒத்தையடிப் பாதையில் ஒதுங்கிய என்னை
நத்தை வேகத்தில் மெல்ல வந்து
சித்தம் கலங்க கண்ஜாடை காட்டி
சத்தம் வராமல் முட்டி போகிறாள்!"
 
"ஒத்தையடிப் பாதையில் ஓரமாய் நிற்கையில்
ஒளிரும் தளிர்மேனி அருகில் வந்து
ஒதுங்கிய என்னை ஆரத் தழுவ
ஒன்றாய் இருவரும் மகிழ்ந்து நின்றோம்

என்ன தில்லை கிளுகிளுப்பாக இருக்கிறீர்கள் போல.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன தில்லை கிளுகிளுப்பாக இருக்கிறீர்கள் போல.

ஆள் வர வர ஒரு மார்க்கமாய்த்தான் போறார். கதை,கட்டுரை,கவிதை,வரலாறு, கிளுகிளுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் எழுதுறார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கோடு போட்டுத் தனித்திருந்தேன் - அருகே 

பெருங்கோடு இழுத்து காப்பாத்தினீர் ஐயா ..........!

கவிதை அருமை ஐயா .........!  👍

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.