Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   09 JUL, 2024 | 03:39 PM

image

ரொய்ட்டர்ஸ்

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச பிணைமுறிபத்திர உரிமையாளர்களுடன்  முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகளை அடுத்த சில வாரங்களில் இலங்கை பூர்த்தி செய்யும் என  இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அயல்நாடுகளான இந்தியா, சீனாவை கையாளும் விதத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக இலங்கை தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் தங்களுக்குள் போட்டியிடும் இரு பெரும் நாடுகளும் இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கியுள்ளதுடன் முக்கிய முதலீட்டாளர்களாக காணப்படுகின்றநிலையில், இலங்கையில்  புவிசார் அரசியல் ஆதிக்கம் செலுத்துவதற்காக போட்டியிடுகின்ற  சூழ்நிலையிலேயே, இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் இடம்பெறும் ரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் மாநாட்டில் இலங்கைக்கு கடன்வழங்கியவர்களுடனான மறுசீரமைப்பு முயற்சிகள் எப்போதும் முடிவடையும் என்ற கேள்விக்கு அடுத்த சில வாரங்களில் என எதிர்பார்க்கின்றோம் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் நாங்கள் உத்தியோகபூர்வமாக கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்துவிடுவோம் என தெரிவித்துள்ள அவர் அதன் பின்னர் அதனடிப்படையில் நாங்கள் பணம் செலுத்த ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது பிணைமுறிகளை  மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் முன்னோக்கி செல்வதற்கு அதன் பிணைமுறி உரிமையாளர்கள் சிலருடன்   தற்காலிக உடன்படிக்கையை செய்து கொண்டுள்ளது.

தற்போது ஏனைய தனியார் கடன்வழங்குநர்களும் சர்வதேச நாணயநிதியமும் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இலங்கை 37பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடனை செலுத்தவேண்டிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாத இறுதியில் 10 மில்லியன் டொலர் கடன்மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை இந்தியா சீனா ஜப்பான் போன்ற நாடுகளுடன் இலங்கை எட்டியது.

 

இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையில் சமநிலை காணுதல்

alisabry_reuters_confrece.jpg

22 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கையின் பொருளாதாரம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் முதலீட்டை பெருமளவில் நம்பியுள்ள அதேவேளை இந்தியாவின் தென்பகுதிக்கு அருகே  பிரதான கிழக்கு மேற்கு கடற்பாதையில் இலங்கை அமைந்துள்ளமை அதனை முக்கிய அரசியல் செயற்பாட்டாளராக மாற்றியுள்ளது.

இலங்கையுடன் வலுவான கலாச்சார உறவுகளை கொண்டுள்ள இலங்கையும் சீனாவும் பலவருடங்களாக கொழும்பின் செல்வாக்கை பெறுவதற்காக போட்டிபோட்டுள்ளன. இதன் காரணமாக அந்த நாடுகளின்; மோதல்களின் நடுவில் இலங்கை சிக்குண்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறை, துறைமுக அபிவிருத்தி மீள்சக்திதுறை அபிவிருத்தி போன்றவற்றிற்கு இந்தியா மிக முக்கியமானதாக காணப்படுகின்றது, இரு நாடுகளும் தங்கள் மின் கட்டங்களை இணைக்க திட்டமிட்டுள்ளதாக அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் இலங்கையின் துறைமுகங்களில் தரித்து நிற்பது குறித்து கடந்த சில வருடங்களில் கரிசனை வெளியிட்டுள்ள புதுடில்லி தனது கடற்பகுதிக்கு அருகில் சீன கப்பல்கள் தரித்து நிற்பதன் நோக்கம் மற்றும் அதன் திறமைகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தனது துறைமுகங்களில் வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள் தரித்து நிற்பதற்கு அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளது.

இலங்கை, சீனா, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுடன் ஈடுபாட்டை பேணுவதற்கு எண்ணியுள்ளது என தெரிவித்துள்ள அலிசப்ரி அதேவேளை அண்டை நாடுகளிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எதனையும் அனுமதிக்கமாட்டோம் என்பதை அதன் சகாக்களிற்கு தெளிவுபடுத்தும் எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஏனைய அனைவருக்கும் பொருந்தும் சீனாவிற்கு பொருந்தாத அமைப்புமுறையை நாங்கள் கொண்டிருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள அலிசப்ரி இந்த அமைப்புகள் அனைத்து உலகளாவியதாக காணப்படும், நடுநிலை நாடு என்ற அடிப்படையில் நாங்கள் அதனை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/188045

  • கருத்துக்கள உறவுகள்

தான் போக வழியில்லாத மூஞ்சூறு விளக்குமாறக் காவின கதைதான்,. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Johnny Sins இற்கு பிறகு இந்த ஆளாலை மட்டும்தான் நிதியிலிருந்து, வெளிவிவகாரம் வரை எல்லா அமைச்சர் பதவியையும் வகிக்கமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

இந்த மாத இறுதியில் நாங்கள் உத்தியோகபூர்வமாக கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்துவிடுவோம்

இண்டையோடு விட்டன் கொண்டலடி.

மூக்குள்ளவரை சளி இருக்கும், இலங்கையில் சிங்களர் நிர்வாகம் இருக்கும்வரை கடன் இருக்கும்.🤧

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.