Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   17 JUL, 2024 | 03:54 PM

image
 

தாய்லாந்தின் தலைநகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ள அதேவேளை அவர்கள் உட்கொண்ட தேநீர், காப்பியில் சயனைட்  கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஆறு பேரினது தேநீர் கோப்பைகளில் சயனைட் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோசமான முதலீடு தொடர்பான தகராறு காரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tea_cup.jpg

ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்கு சென்றவேளை பொலிஸார் மூன்று ஆண்களினதும் மூன்று பெண்களினதும் சடலங்களை கண்டுள்ளனர்.

மேசையில் இன்னமும் பயன்படுத்தப்படாத உணவுகள் பிளாஸ்டிக் துண்டொன்றினால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டன. பயன்படுத்தப்பட்ட தேநீர் கோப்பைகளில் வெள்ளை நிற பவுடர் போன்ற பொருள் காணப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தங்கியிருந்த பகுதியின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பின்கதவு திறந்த நிலையில் காணப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் ஒருவரை தேடுவதாக தெரிவித்திருந்த பொலிஸார் தற்போது அந்த கோணத்தில் விசாரணையை கைவிட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் ஒருவரே தேநீர் கோப்பையில் விசத்தை கலந்திருக்கலாம் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் அமெரிக்க பிரஜைகள் ஏனைய நால்வரும் வியாட்நாமை சேர்ந்தவர்கள்.

ஹோட்டல் அறையில் மீட்கப்பட்ட தேநீர் கோப்பைகளிலும் உயிரிழந்த ஒருவரின் உடலிலும் இரசாயன பதார்த்தங்கள் காணப்படுகின்றன.  ஆறு பேரினதும் தேநீர் கோப்பைக்குள் சயனைட்  காணப்பட்டது என காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/188684

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா தாய்லாந்துக்கு இலங்கை திறந்து விட்டது என்றது இதுக்கு தானா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ஏராளன் said:

தாய்லாந்தின் தலைநகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ள அதேவேளை அவர்கள் உட்கொண்ட தேநீர், காப்பியில் சயனைட்  கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இனியும் மலிஞ்ச சாப்பாடு/மசாஜ்  எண்டு ரிக்கெட் எடுத்து  தாய்லாந்துக்கு போவ..?

9d1c21d5ce4f7957509ed96a64e02d0f-5851eb82.webp

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இனியும் மலிஞ்ச சாப்பாடு/மசாஜ்  எண்டு ரிக்கெட் எடுத்து  தாய்லாந்துக்கு போவ..?

9d1c21d5ce4f7957509ed96a64e02d0f-5851eb82.webp

சயனற் இலவசம்...🤣

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சயனற் இலவசம்...🤣

இலங்கை அரசாங்கம் புலிக்கும் கொலைக்கும் தொடர்பு என்று அறிக்கை விடப்போகுது...என்ன செய்யப் போறியள்

 

 

 

 

 

15 hours ago, குமாரசாமி said:

இனியும் மலிஞ்ச சாப்பாடு/மசாஜ்  எண்டு ரிக்கெட் எடுத்து  தாய்லாந்துக்கு போவ..?

 

பெருமளவு கடன் கொடுத்த பிரச்சனையில் கடன் கொடுத்த தம்பதியரில் உள்ள பெண்ணால் (Ms Chong), தேனீரில் சயனைட் கலக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என பிபிசி உட்பட செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் அந்த பெண்மணியும், அவரது கணவரும் சேர்ந்தே இறந்துள்ளனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.