Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
09 AUG, 2024 | 04:20 PM
image

(இராஜதுரை ஹஷான்) 

பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆகவே  மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது. ரமேஷ் பத்திரன, காஞ்சன, செஹான், தென்னகோன் ஆகியோர் ராஜபக்ஷர்களை விட்டு விலகியது சிறந்தது மகிழ்ச்சியடைகிறேன் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள  ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் இன்று  வெள்ளிக்கிழமை (09)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக்கு கூற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆகவே மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்ஷர்களுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர்களின் அரசியலுக்காகவே பொதுஜன பெரமுன என்ற கட்சி உருவாக்கப்பட்டது.

அங்கு திறமையானவர்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை கிடையாது. இளம் பாராளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர, செஹான் சேமசிங்க, பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோர் உட்பட சிறந்தவர்கள் ராஜபக்ஷர்களை விட்டு விலகியுள்ளமை வரவேற்கத்தக்கது. 

2022 ஆம் ஆண்டு எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையின் போது ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் என்னை சந்தித்து எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினார். அப்போது வலையில் சிக்கிய புலியை பரிதாபப்பட்டு காப்பாற்றிய குரங்கை அடித்து கொன்று  இரையாக்கிய புலியின் கதையை குறிப்பிட்டேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இன்று இதே கதிதான் நேர்ந்துள்ளது. தம்மை பாதுகாத்த ஜனாதிபதி மீதே ராஜபக்ஷர்கள் பாய்ந்துள்ளார்கள். 

தமது தேவை நிறைவடைந்தவுடன் எவராக இருந்தாலும் ராஜபக்ஷர்கள் அவர்களை தூக்கி எறிவார்கள். 2014 ஆம் ஆண்டு நான் அதை ஒரு படிப்பினையாக கற்றுக்கொண்டேன்.

பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா பல பில்லியன் ரூபாவை செலவு செய்து இந்த படிப்பினையை 2024 ஆம் ஆண்டு கற்றுக் கொண்டுள்ளார். ராஜபக்ஷர்கள் தமது குடும்ப நலனை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்படுவார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/190675

  • கருத்துக்கள உறவுகள்

இதுஎல்லாம் ராசபக்குகளுடன் அநியாயம்..செய்யும்போது எங்கு போனது..

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

இதுஎல்லாம் ராசபக்குகளுடன் அநியாயம்..செய்யும்போது எங்கு போனது..

தானும் பங்காளியாக  மற்றவருக்கு செய்யும்போது  ரசிப்பு, இப்போது தனக்கு வந்ததால் படிப்பினை. "செயின் பிற்பகல் விளையும்." 

 "முற்பகல் செயின் பிற்பகல் விளையும்."   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.