Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karunanithi.webp?resize=640,375

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா: எடப்பாடி,அண்ணாமலைக்கு அழைப்பு.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகினறது.

இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரும் பங்கேற்க முதலமைச்சர் விரும்புகிறார்.

அதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1395451

  • கருத்துக்கள உறவுகள்

கோழி எச்சம் அளைந்த குரங்கு அதன் துர்நாற்றம் தாங்காது கையை தேய்த்துத் தேய்த்து இரத்தம் ஒழுகி இறுதியில் இறந்துவிடுமாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். கள உறவுகள் யாராவது இதுபற்றி அறிந்துள்ளீர்களா.?????? அவதானம் அவசியம்.🤔🥴

  • கருத்துக்கள உறவுகள்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு

Published By: DIGITAL DESK 7   19 AUG, 2024 | 05:55 PM

image

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.‌ இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவின் மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் என பலரும் பங்கு பற்றினர்.

poli_19824_2.jpg

இந் நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது,

''1960களில் பெரும் அரசியல் தலைவராக உருவெடுத்தவர் கலைஞர் கருணாநிதி. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுகவை வளர்த்தெடுத்தவர் கருணாநிதி. அவரின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை. துணிச்சலானவை. அதே தருணத்தில் பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவையும் பேணி காத்தவர்.

ஏழை எளிய நிலையில் வாழும் மக்கள் தரமான கல்வியை பெறுவதற்காக நல திட்டங்களை வகுத்தவர் கருணாநிதி. மக்களின் குறைகளை கேட்டு அறிவதற்காகவே மனுநீதி எனும் திட்டத்தை செயல்படுத்தியவர். 1989 ஆம் ஆண்டிலேயே மகளிர்களுக்கான சுய உதவிக் குழுக்களை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி.

நாட்டின் தலைசிறந்த நிர்வாகிகளில் ஒருவராக விளங்கினார். மத்தியில் வெற்றிகரமான கூட்டணி அரசு அமையவும் காரணமாக இருந்தார். தமது ஆட்சி காலத்தில் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராடியவர் கலைஞர் கருணாநிதி. கூட்டாட்சி தத்துவத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் கருணாநிதி. நாட்டின் நலன்களுக்காக மாநில எல்லைகளைக் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டியவர் கருணாநிதி. தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் சினிமா துறையிலும் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் கருணாநிதி'' என கருணாநிதியின் பெருமையை பேசினார்.

poli_19824_3.jpg

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசியதாவது,

'சொல்ல முடியாத மகிழ்ச்சியில் உள்ளேன். 'நா' நயம் மிக்க தலைவருக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நாம் கொண்டாடினோம். இன்று இந்தியாவே கருணாநிதி கொண்டாடுகிறது. கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கிண்டி பன்னோக்கு மருத்துவமனை, மதுரை நூலகம் ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்தோம்.‌

கருணாநிதியின் நினைவு நாணயத்தை வெளியிட, எம்முடைய முதல் தெரிவாக இருந்தது பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் தான். பல அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமாக உள்ள உள்ளவர் ராஜ்நாத் சிங் தான்.  இந்த விழாவிற்கு இவரை அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார்.

poli_19824_A_1.jpg

https://www.virakesari.lk/article/191468

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

456382214_1196677391528225_3130235549178

செய்தி: ரூ 10000 செலுத்தி... 100 ரூபாய் பெறுமதியான  கலைஞர் நாணயத்தை பெற்றுக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

456382214_1196677391528225_3130235549178

செய்தி: ரூ 10000 செலுத்தி... 100 ரூபாய் பெறுமதியான  கலைஞர் நாணயத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இவ‌ரின் இந்த‌ நாண‌ய‌த்தை வேண்டுற‌ காசுக்கு

 

ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌லாம்.................1000ரூபாய்க்கு ஒரு கிழ‌மைக்கு த‌மிழ் நாட்டில் வ‌டிவாய் சாப்பிட‌லாம்😉.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ரின் இந்த‌ நாண‌ய‌த்தை வேண்டுற‌ காசுக்கு

 

ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌லாம்.................1000ரூபாய்க்கு ஒரு கிழ‌மைக்கு த‌மிழ் நாட்டில் வ‌டிவாய் சாப்பிட‌லாம்😉.......................

பையா... 200 ரூபாய் உடன் பிறப்புகள் இந்த 100 ரூபாய் காசை, 
எப்படி 10,000 ரூபாய்க்கு வாங்குவார்கள் என்று தெரியவில்லையே. 😂 animiertes-gefuehl-smilies-bild-0127.gif

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

பையா... 200 ரூபாய் உடன் பிறப்புகள் இந்த 100 ரூபாய் காசை, 
எப்படி 10,000 ரூபாய்க்கு வாங்குவார்கள் என்று தெரியவில்லையே. 😂 animiertes-gefuehl-smilies-bild-0127.gif

போர போக்கை பார்த்தால்

த‌மிழ் நாட்டின் பெய‌ரையே மாத்தி க‌லைஞ‌ர் நாடு என்று வைச்சாலும் வைப்பாங்க‌ள் போல் இருக்கு

 

ஏதோ ஒரு நாள் ஆட்சி மாறும் அப்பேக்க‌ பாட‌ புத்த‌க‌த்தில் இருந்து ப‌ல‌தில் இருந்து க‌ருணாநிதி பெய‌ர் நீக்க‌ப் ப‌டும்😁😛................................

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழ் வெல்லும்' என்று இந்த நாணயத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. தமிழில் எழுதப்பட்ட ஒரே நாணயம் என்றும் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்..................🫣.

இலங்கையில், சிங்கப்பூரில் என்று தமிழ் நாணயங்களில் வந்து பல காலமாகிவிட்டது.

கலைஞருக்காக கடலுக்குள் ஒரு பேனாவை வைக்க திட்டமிட்டிருந்தார்கள். பெரிய பேனா வடிவ கட்டிடம் அல்லது உருவம். இதை அந்தப் பகுதி மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்த்தனர். பேனா திட்டம் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

என்ன ஆனாலும், எவ்வளவு காலம் போனாலும், தமிழ்நாடும், பெரும்பாலான தமிழர்களும் தனிமனித துதிபாடுதலில் இருந்து வெளியே வரப் போவதில்லை. நடிகர் விஜய் இன்று வெளியிட்டிருக்கும் பாடலை கேட்டுப் பாருங்கள்............... இன்னொரு சூரியன்............

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.