Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3    26 AUG, 2024 | 03:07 PM

image

இந்திய கடற்படையின் முன்னரங்க போர்க்கப்பலான ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயமாக இன்று 26 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு வழங்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டெல்லி ரகத்தைச் சேர்ந்த நாசகாரி கப்பல்களில் மூன்றாவது கப்பல் ஐஎன்எஸ் மும்பை ஆகும்.

மஸ்கன் டொக் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இக்கப்பலுக்கு மும்பை நகரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டது.  

இக்கப்பல் அதன் தரமுயர்த்தல் பணிகளின் பின்னர் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி விசாகபட்டினத்தில் உள்ள கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை பிரிவிடம் சேவையில் இணைக்கப்பட்டது.

கொழும்பில் ஐஎன்எஸ் மும்பை தரித்து நிற்கும் காலத்தில் இரு நாட்டு கடற்படையினரதும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளும் இலக்குடன் இலங்கை கடற்படை அதிகாரிகள் இக்கப்பலுக்கு விஜயம் செய்து அனுபவப் பகிர்வு செயற்பாடுகளில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் இக்கப்பலின் விஜயத்தின்போது மேற்கு கடற்படை பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் டபிள்யூ.டி.சி.யு.குமாரசிங்க இக்கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை பிராந்திய தலைமையகத்தில் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் விளையாட்டுகள், யோகா மற்றும் கரையோரம் சுத்தமாக்கும் பணிகள் போன்ற கூட்டு செயற்பாடுகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து குறித்த கப்பல் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட உள்ளது.

இக்கப்பல் மாலுமிகள் ஓய்வெடுப்பதற்கான சந்தர்ப்பமும் இவ்விஜயத்தின் போது கிடைக்கப்பெறுவதுடன், நகரில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களுக்கும் அதே போல கொழும்பு மற்றும் காலியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். ஐஎன்எஸ் மும்பை 2024 ஆகஸ்ட் 29ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/192032

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் நங்கூரமிட்டுள்ள இந்திய நாசகாரி போர் கப்பல்

இந்திய கடற்படையின் போர் நாசகாரி கப்பலான ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயமாக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில், குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு வழங்கியிருந்தனர். இந்த விஜயத்தின் மூலம் குறித்த கப்பலின் மாலுமிகள் ஓய்வெடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அத்துடன், கொழும்பு மற்றும் காலியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/308408

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இந்திய போர் கப்பல் நாட்டை விட்டுச் சென்றது

Published By: DIGITAL DESK 3   30 AUG, 2024 | 10:58 AM

image
 

இந்திய கடற்படையின் முன்னரங்க போர்க் கப்பலான ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு  வியாழக்கிழமை (29) நாட்டை விட்டு சென்றது.

மேற்கு கடற்படைக் கட்டளைக் கடற்கரையில் இலங்கை கடற்படைக் கப்பலுடனான பயிற்சிக்குப் (PASSEX) பின்னர், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் புறப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயமாக 26 ஆம் திகதி காலை கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு வழங்கப்பட்டது. 

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Destroyer வகையின் ஐ.என்.எஸ். மும்பை (INS Mumbai) என்ற கப்பல் 163 மீற்றர் நீளமும் 410 கடற்படையினரை கொண்டுள்ளது. 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டெல்லி ரகத்தைச் சேர்ந்த நாசகாரி கப்பல்களில் மூன்றாவது கப்பல் ஐஎன்எஸ் மும்பை ஆகும்.

மஸ்கன் டொக் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இக்கப்பலுக்கு மும்பை நகரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டது.  

இக்கப்பல் அதன் தரமுயர்த்தல் பணிகளின் பின்னர் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி விசாகபட்டினத்தில் உள்ள கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை பிரிவிடம் சேவையில் இணைக்கப்பட்டது.

கொழும்பில் ஐஎன்எஸ் மும்பை தரித்து நிற்கும் காலத்தில் இருகடற்படையினரதும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளும் இலக்குடன் இலங்கை கடற்படை அதிகாரிகள் இக்கப்பலுக்கு விஜயம் செய்து அனுபவப் பகிர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சந்தீப் குமார் (Captain Sandeep Kumar) மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கு இடையில் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றது.

அத்துடன் விளையாட்டுகள், யோகா மற்றும் கரையோரம் சுத்தமாக்கும் பணிகள் போன்ற கூட்டு செயற்பாடுகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து குறித்த கப்பல் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்டது.

https://www.virakesari.lk/article/192366

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெரிய கப்பலில் மாலுமிகள் ஓய்வெடுப்பதற்கு நாலு அறைகள் கட்டியிருக்கலாம் ....... ஒருவேளை அது அவர்கள் பிளானில் இல்லை போலுள்ளது . ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருடம் அன்பளிப்பா கொடுக்க போகினம்..👍

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கத்தை பார்த்தா எதோ சிறிலங்காவை பிடிக்க வந்த நாசகாரி,போர் கப்பல் என்று நான் நினைத்து விட்டேன்....ஆனால் உள்ளே போய் வாசித்து பார்த்த யோக செய்ய வந்திருக்கிறாங்கள் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.