Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்களால் ரூ. 1 கோடி அபராதம் எவ்வாறு செலுத்த முடியும் என்பதை இலங்கை அரசு சிந்திக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

04 SEP, 2024 | 03:05 PM
image
 

தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதித்துள்ள இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்களக் கடற்படையினரால் கடந்த ஆகஸ்ட்  5-ம் தேதி கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரில் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறினால் மீனவர்கள் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மீதமுள்ள 10 மீனவர்கள் தொடர்பான வழக்கு வரும் 10-ம் தேதி விசாரணைக்கு வரும்போது அவர்களுக்கும் இதே தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மீனவர்களை ஒடுக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

வங்கக்கடலில் மீன்பிடித்ததாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை 6 மாதங்கள், ஓராண்டு என சிறையில் அடைப்பது, கோடிக்கணக்கில் தண்டம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அண்மைக்காலமாக இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே பலமுறை நான் குறிப்பிட்டதைப்போல இது தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒழிக்கும் நடவடிக்கை தான். இதற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதற்காக கடந்த காலங்களிலும் இத்தகைய உத்திகளை இலங்கை பயன்படுத்தியிருக்கிறது. இலங்கை கடல்எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பவர்களுக்கு ரூ.25 கோடி தண்டம் விதிக்கும் சட்டத்துக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அப்போது தமிழகத்தில் இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்த முடிவை இலங்கை அரசு திரும்பப் பெற்றது. பின்னர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்தது. அதன்படி இப்போது சிறை தண்டனை மற்றும் அபராதத்தை விதிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பன்னாட்டு விதிகளுக்கு எதிரானது. ஒரு மீனவர் தொடர்ந்து ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களின் குடும்பம் பொருளாதார அடிப்படையில் எப்படியெல்லாம் பாதிக்கப்படும்? மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்களால் ரூ. 1 கோடி அபராதம் எவ்வாறு செலுத்த முடியும் என்பதை இலங்கை அரசு சிந்திக்க வேண்டும்.

வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு எந்த வகையிலும் தண்டனை விதிக்க முடியாது என்பது தான் எதார்த்தம் ஆகும். 

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைதுசெய்வதையும், சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

மிகக்குறுகிய பரப்பளவைக் கொண்ட தமிழக – இலங்கை கடல் எல்லையை இரு தரப்பு மீனவர்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்துகொண்டு மீன் பிடிப்பது தான் இந்த சிக்கலுக்கு தீர்வாகும். கடந்த காலங்களில் பலமுறை இத்தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து கொண்டு தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், இவவாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

https://www.virakesari.lk/article/192833

முதலில் பேராசை கொண்டு கடல் வளத்தை சூறையாடுவதை அவர்கள் கைவிட வேண்டும் என்பதை தாழ்மையாக வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு ரூ.5.40 கோடி அபராதம்: பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க தலைவர்கள் வலியுறுத்தல்

05 SEP, 2024 | 09:45 AM
image

சென்னை: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கவும், அபராதத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாமக கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி, தருவைக்குளத்தில் இருந்து கடந்த ஜூலை 21-ம் தேதி ஒரு படகில் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். அதேபோல, 23-ம் தேதி 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 22 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்து விட்டு கடந்த 5-ம் தேதி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

 

6 மாத சிறை தண்டனை: அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி நுழைந்ததாக கூறி 22 மீனவர்களையும், 2 படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். 22 மீனவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் முதலில் 12 மீனவர்களுக்கு தலா ரூ.42 லட்சம் அபராதம் செலுத்தவும், அப்படி செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பின்படி 12 பேருக்கும் ரூ.5.40 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு படகில் இருந்த 10 மீனவர்கள் மீதான வழக்கு விசாரணையில் இருக்கிறது. அவர்களுக்கும் அபராதத் தொகை விதிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு ரூ.5.40 கோடி அபராதம் விதிக்கப்பட் டிருப்பது தமிழக மீனவர்களிடம் கடும் அதிர்ச்சி, மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதை மோடி அரசு வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. கடந்த 2016-ம் ஆண்டு 2 நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இதில் இரு நாட்டு வெளியுறவு துறை செயலர்கள், அதிகாரிகள், தமிழக பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். இந்த குழு கடந்த 2020 ஜனவரிக்கு பிறகு இதுவரை கூட்டப்படவே இல்லை. 6 மாதத்துக்கு ஒருமுறை இக்குழு கூடி மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நடுக்கடலில் மீனவர்கள் தாக்கப்படும்போது, இதுகுறித்து தகவல் தெரிவிக்க ஹாட்லைன் அமைக்கப்பட்டது. அதுவும் இப்போது செயல்படவில்லை. எனவே, பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர்களை வழக்கில் இருந்து விடுவிப்பதோடு, அபராதம் செலுத்துவதில் இருந்தும் மீனவர்களை பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்.

Fight-Between-Fishermen-One-Person-Arres

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்: இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களை தண்டனை விதித்து தாக்குதல் நடத்தும் நிலைக்கு சென்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது. மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும். இலங்கை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, தூதரகம் மூலமாக மத்திய அரசு சட்டரீதியான உதவி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதையும், சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது. இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும். மிகக்குறுகிய பரப்பளவை கொண்ட தமிழக - இலங்கை கடல் எல்லையை இரு தரப்பு மீனவர்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டு மீன் பிடிப்பதுதான் இந்த சிக்கலுக்கு தீர்வு ஆகும். கடந்த காலங்களில் பலமுறை இத்தீர்வு முன்வைக்கப் பட்டுள்ளது. இதை உணர்ந்துகொண்டு, தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளன.

https://www.virakesari.lk/article/192885

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்க முடியாதல்லவா,.? பிறகேன் உள்ளே வருகிறீர்கள்? 

உள்ளே வராதீர்கள். பிரச்சனை முடிந்தது. 

On 4/9/2024 at 06:21, ஏராளன் said:

 

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது

வங்கக்கடலில் மீன்பிடித்ததாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை 6 மாதங்கள், ஓராண்டு என சிறையில் அடைப்பது, கோடிக்கணக்கில் தண்டம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அண்மைக்காலமாக இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்தக் கடல் பரப்பை வங்கக் கடல் என்று அழைப்பது சரியா? வங்கக் கடல் பகுதி எங்கே அமைந்துள்ளது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்தக் கடல் பரப்பை வங்கக் கடல் என்று அழைப்பது சரியா? வங்கக் கடல் பகுதி எங்கே அமைந்துள்ளது?

bay-of-bengal.jpg

பாக்கு நீரிணை என்று தான் நான் அறிகிறேன்.

palk.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.