Jump to content

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை டெஸ்ட்: இந்திய அணி எப்படித் தயாராகிறது? வங்கதேசத்தின் 24 ஆண்டு தாகம் நிறைவேறுமா?

சென்னை டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் முதல் போட்டி வரும் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.

2வது டெஸ்ட் போட்டி வரும் 27-ஆம் தேதி உத்தரப்பிரசேதம் மாநிலம் கான்பூரில் நடக்கிறது.

2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க இரு அணிகளுக்கும் இந்தத் தொடரின் வெற்றி அவசியம் என்பதால் தீவிரமாக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

பாகிஸ்தான் பயணம் சென்ற வங்கதேச கிரிக்கெட் அணி அந்நாட்டு மண்ணில் வைத்தே பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

 

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ஒருமுறை கூட வங்கதேசம் வென்றதில்லை என்ற வரலாறு இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது.

இருப்பினும் சென்னை மைதானத்தில் சுழற்பந்துவீச்சில் மாயஜாலம் நிகழ்த்த இந்திய அணியில் இருப்பது போன்று வலுவான சுழற்பந்துவீச்சாளர்கள் வங்கதேச அணியிலும் உள்ளனர்.

ஆதலால் சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுழற்பந்துவீச்சில் எந்த அளவு நெருக்கடி அளிக்குமோ அதே அளவு அழுத்தத்தை வங்கதேசமும் அளிக்கும்.

கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இந்திய அணியுடன் 13 டெஸ்ட் போட்டிகளில் வங்கதேசம் அணி விளையாடியுள்ளது. ஆனால், இதுவரை ஒரு போட்டியிலும் கூட அது வெற்றி பெறவில்லை, இந்திய அணி 11 வெற்றிகளைப் பதிவு செய்து ஆதிக்கம் செய்கிறது.

கவனிக்கப்படும் வீரர்கள்

இந்திய அணியில் இரு வீரர்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்கிறார்கள். விராட் கோலி, ஏறக்குறைய 9 மாதங்களுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். அடுத்ததாக ரிஷப் பந்த், கார் விபத்துக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடாமல் இருந்தார். தற்போது அவர் 2 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருவரின் பேட்டிங் திறமையும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

ஏனென்றால், கோலி இடத்துக்கு ஷூப்மன் கில், சர்ஃபிராஸ் கான், கே எல் ராகுலும்; ரிஷப் பந்த் இடத்துக்கு துருவ் ஜூரெல், கே எல் ராகுலும் போட்டியிடுகிறார்கள். ஆதலால் இருவரும் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் ஜஸ்ப்ரீத் பும்ரா டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இடதுகை பந்துவீச்சாளர் யாஷ் தயால் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது தவிர இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோர்ன் மோர்கல் புதிதாக நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.

"இந்திய பந்துவீச்சாளர்கள் ஏற்கெனவே திறமையாகப் பந்துவீசுகிறார்கள். அவர்களின் திறமையை மெருகேற்றவே முடிந்தவரை உழைப்பேன் பெரிதாக மாற்றம் செய்யமாட்டேன்", என மோர்கல் தெரிவித்துள்ளார்.

 
இந்தியா- வங்கதேசம்  கிரிக்கெட்

பட மூலாதாரம்,BCCI

படக்குறிப்பு, சேப்பாக்கம் மைதானத்தில் இருவிதமான பிட்ச் இருக்கிறது. ஒன்று கருப்பு மண் கொண்ட பிட்ச், மற்றொன்று செம்மண் பிட்ச்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

வங்கதேசத்துடன் இந்த 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன், நியூசிலாந்து அணியுடன் அக்டோபர் மாதத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது.

இந்தத் தொடர் முடிந்தவுடன், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாட இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணிக்கு இந்த 10 போட்டிகளும் மிகுந்த முக்கியமானதாகும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 74 புள்ளிகளுடன், 68.5% புள்ளிகள் சதவீதமும் (PCT) பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்க குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது, அப்போதுதான் புள்ளிகள் சதவீதத்தை 69.3 ஆக உயர்த்தி இறுதிப்போட்டிக்குள் செல்ல முடியும்.

சென்னையில் பயிற்சி

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வீரர்கள் விராத் கோலி, யஷஷ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, கே.எஸ்.ராகுல் உள்ளிட்ட பல வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டி என்பதால் உள்ளூர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதுதவிர கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்வால் பந்து வீசிப் பயிற்சி எடுத்து வருகிறார். இதனால் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படலாம்.

சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்துவீச்சு நன்கு எடுபடும் என்பதால், கடந்த சில நாட்களாக சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், ரோஹித், கோலி, கில் ஆகியோர் பயிற்சி எடுத்தனர். இவர்களுக்கு தமிழக கிரிக்கெட் வீரர்கள் அஜித் ராம், எம். சித்தார்த் ஆகியோர் வலைபயிற்சி பந்துவீச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர வருண் சக்ரவர்த்தி, அஸ்வினைப் போல பந்துவீசக்கூடிய மும்பை பந்துவீச்சாளர் ஹிமான்சு சிங்கும் பந்து வீசினர்.

 
சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானம் (2016 புகைப்படம்)

சேப்பாக்கமும் – இந்திய அணியும்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 1934-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டுவரை 36 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி மட்டும் 16 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. அதிலும் கடந்த 2001-ஆம் ஆண்டிலிருந்து சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் 6 போட்டிகளை இந்திய அணி வென்றுள்ளது.

முந்தைய செயல்பாடுகளை பொறுத்தவரை, உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அதிக வெற்றிகளை குவித்துள்ளது. அதனால் வங்கதேச அணிக்கு இந்திய அணியை சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கலாம்.

சேப்பாக்கத்தின் பிட்ச் எப்படி உள்ளது?

சேப்பாக்கம் மைதானத்தில் இருவிதமான பிட்ச் இருக்கிறது. ஒன்று கருப்பு மண் கொண்ட பிட்ச், மற்றொன்று செம்மண் பிட்ச். இந்த இரு ஆடுகளமும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை. மைதானத்தின் மையத்தில் புற்கள் கொண்ட ஒரு பிட்ச் இருக்கிறது. இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாக அமைந்தாலும், அதில் பெரும்பாலும் போட்டிகள் நடத்தப்படுவதில்லை

இரு அணிகளிலுமே சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் டாஸ் வெல்வது முக்கியமானதாக இருக்கும்.

கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்வால் பந்து வீசிப் பயிற்சி எடுத்து வருகிறார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்வால் பந்து வீசிப் பயிற்சி எடுத்து வருகிறார்.

ரோஹித் சாதிப்பாரா?

வங்கதேச அணிக்கு எதிராக கேப்டன் ரோஹித் சர்மா நீண்டகாலமாக அவப்பெயரை சுமந்து வருகிறார்.

பல அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அரைசதம், சதம் அடித்தாலும் வங்கதேசத்துக்கு எதிராக மட்டும் அவர் இன்னும் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை.

அதிலும் குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 33 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் அதிகபட்சம் 21 ரன்கள்தான். ஆதலால், வங்கதேச அணிக்கு எதிராக ரோஹித் சர்மாவின் ஆட்டம் உன்னிப்பாக கவனிக்கப்படும்.

 
கோப்புக்காட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புக்காட்சி

மைல்கல் எட்டுமா இந்திய அணி

வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு வெற்றி பெற்றால் டெஸ்ட் போட்டிகளில் 178 வெற்றிகளை இந்திய அணி எட்டும். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் தோல்விகளைவிட அதிகமான வெற்றிகளை பெற்ற அணி, என்ற வரிசையில் இடம்பெறும்.

24 ஆண்டுகள் தாகம் நிறைவேறுமா

வங்கதேச அணி 24 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை ஒரு டெஸ்ட் வெற்றிகூட பெறாதநிலையில் வெற்றி தாகத்துடன் அந்த அணி களமிறங்குகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக2-0 என டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனையுடன் இந்திய அணியை வங்கதேசம் எதிர்கொள்கிறது. இதனால், வங்கதேச அணியை எளிதாக எடைபோட முடியாது. இந்திய அணிக்கு இணையாக வலுவான சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது வங்கதேசம். நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியும் சென்னை வந்துவிட்டனர். பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஆடாத தொடக்க பேட்டர் மெகமதுல் ஹசன் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுகிறார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் காயத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் இவருக்குப் பதிலாக கலீல் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். ஜக்கர் அலி அனிக் எனும் இளம் வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு எதிராக முதல்முறையாக வங்கதேச அணிக்காக களமிறங்க உள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேசத்திற்கு எதிரான தனது 101-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சாதிப்பாரா?- அவருக்கு நிறைவேறாத ஒரே ஆசை என்ன?

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“எனக்காக நான் எந்த இலக்கும் நிர்ணயிப்பதில்லை. கும்ப்ளே அவருடைய சாதனையை நான் முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் பொருத்தவரை இலக்குகளை நிர்ணயித்து, அதை அடைந்தபின் கிரிக்கெட் மீதான காதலை நான் இழக்க விரும்பவில்லை.

கடினமான காலங்களுக்குப் பின் என் வாழ்க்கை மாறிவிட்டது என்பதை நான் அறிவேன். கிரிக்கெட் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை இறுகப்பிடித்துள்ளேன். எப்போது அந்த பிடி தளர்கிறதோ அப்போது விலகுவேன்”, என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். தன்னுடைய ஓய்வு குறித்தும், கிரிக்கெட் மீதான காதல் குறித்தும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார்.

சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின் இன்று (செப்டம்பர் 17) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு 38 வயதாகிறது.

செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி வீரர்களோடு சேர்ந்து கடந்த சில நாட்களாக அஸ்வின் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

 

ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை

அஸ்வின் 1986-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று சென்னையில் பிறந்தார். அவரது தந்தை ரவிச்சந்திரன் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த அஸ்வின், பிடெக் தகவல்தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

அஸ்வின் தனது 9 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அஸ்வினுக்கு சந்திரசேகர் ராவ், சி.கே.விஜயகுமார் ஆகியோர் கிரிக்கெட் பயிற்சி அளித்துள்ளனர். சுழற்பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கும் முன், மித வேகப்பந்து வீச்சாளராகவே அஸ்வின் பயிற்சி எடுத்து வந்தார்.

சிஎஸ்கே முதல் சர்வதேச போட்டிகள் வரை

2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சைப் பார்த்த பிசிசிஐ (BCCI) தேர்வுக்குழுவினர் இந்திய அணிக்காக விளையாட அஸ்வினை தேர்ந்தெடுத்தனர்.

2010-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கினார். அதன்பின் 2010 ஆசியக் கோப்பையிலும் இந்திய அணிக்காக விளையாடிய அஸ்வின், உள்நாட்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் தேர்வானார். நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலும் அஸ்வின் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இரு போட்டிகளில் மட்டுமே விளையாட அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

 
அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அஸ்வின் விளையாடினார்.

டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம்

2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில்தான் அஸ்வின் முதன்முதலாக இந்த வகை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகினார்.

முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை அஸ்வின் வென்றார். மும்பையில் நடந்த இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதம் அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார். 1962-ஆம் ஆண்டிற்கு பின், ஒரே போட்டியில் சதம் அடித்து 5 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.

அனில் கும்ப்ளே இடத்தை நிரப்பிய அஸ்வின்

இந்திய அணிக்குள் அஸ்வின் அறிமுகமாகும்போது சற்று நெருக்கடியான சூழல் இருந்தது. அனில் கும்ப்ளேயின் கிரிக்கெட் பயணம் முடிந்து அடுத்ததாக ஒரு வலுவான பந்துவீச்சாளரை இந்திய அணி தேடியபோது அஸ்வினை கண்டுபிடித்தது.

ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் தவிர சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லாத காலகட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் வந்த அஸ்வின், கும்ப்ளே இடத்தை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளார்.

அஸ்வின் தனது முதல் 16 டெஸ்ட் போட்டிகளில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.

 
அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணிக்குள் அஸ்வின் அறிமுகமாகும்போது சற்று நெருக்கடியான சூழல் இருந்தது.

500 விக்கெட்டுகள் சாதனை

அஸ்வின் தனது 98வது டெஸ்ட் போட்டியில் 500வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய அளவில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலிய ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்ன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயான் ஆகியோர் இவருக்கு முன் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த அஸ்வின்

அனில் கும்ப்ளே உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த சாதனையை அஸ்வின் முறியடித்து, தற்போது 363 விக்கெட்டுகளுடன் அடுத்த போட்டியில் களம் காண உள்ளார்.

இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.

 
சென்னை டெஸ்ட் கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இடக்கை பேட்டர்களின் எதிரி

அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளில் அதிகபட்ச விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் தனது 516 விக்கெட்டுகளில் 256 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் எடுக்கும் சதவீதம் 46.6% ஆக இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் தன்னை காலத்துக்கு ஏற்றார்போல் வளர்த்துக் கொண்டு, தகவமைத்துக் கொண்டு நுட்பமான பந்துவீச்சையும், கூக்ளி, கேரம் பால், பந்தை டாஸ் செய்வது, நக்குல் பால் என வெவ்வேறு முறைகளில் அஸ்வின் பந்து வீசக்கூடியவர்.

இந்திய அணியில் அஸ்வின் கடந்த 2012-ஆம் ஆண்டு அறிமுகமாகி ஏறக்குறைய 12 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.

காத்திருக்கும் சாதனைகள்

உள்நாட்டு மண்ணில் கும்ப்ளே 476 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்து வருகிறார். அதை முறியடிக்க அஸ்வினுக்கு தற்போது 22 விக்கெட்டுகள்தான் தேவைப்படுகிறது.

இதுவரை வங்கதேசத்குக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அஸ்வின் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா அணி பந்துவீச்சாளராக ஜாகீர்கான் உள்ளார். அவர் எடுத்த 31 விக்கெட்டுகளை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.

அஸ்வின் ஒரே ஆசை என்ன

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஸ்வின் தனக்கு ஒரே ஒரு சாதனையை மட்டும் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அது குறித்து அவர் கூறுகையில் “ டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் எடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. இனிமேல் அது நடக்கப்போவதும் இல்லை” என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம் : 6 மாதங்களின் பின் டெஸ்ட் அரங்கில் இந்தியா

Published By: DIGITAL DESK 7  19 SEP, 2024 | 10:11 AM

image

(நெவில் அன்தனி)

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 68.52 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கும் இந்தியா, அதனைத் தக்கவைக்கும் முனைப்புடன் பங்களாதேஷுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று ஆரம்பிக்கவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஆறு மாதங்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்துவரும் இந்தியா, இந்த டெஸ்ட் தொடருடன் அடுத்த மூன்றரை மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடவுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 13 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில்தானும் வெற்றிபெறாமல் இருந்த பங்களாதேஷ், அண்மையில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் தடவையாக வெற்றிபெற்ற சூட்டோடு இந்தியாவை வீழ்த்தும் குறிக்கோளுடன் இந்தத் தொடரை எதிர்கொள்கிறது.

அதேவேளை, சில கால இடைவெளிக்குப் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ள இந்தியா, தனது வெற்றிக் கணக்கை மீண்டும் ஆரம்பிக்க முயற்சிக்கவுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான 14ஆவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது வெற்றியை ஈட்டிய  பங்களாதேஷ், இந்தியாவுக்கு எதிராகவும் 14ஆவது போட்டியில் முதலாவது வெற்றியை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுவரை இந்தியாவுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பங்களாதேஷ் அவற்றில் 11 டெஸ்ட்களில் தோல்விகளைத் தழுவியுள்ளது. மற்றைய 2 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இந்தியாவில் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷ் தோல்விகளையே தழுவியுள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்தியாவுக்கு சாதகமான முடிவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் இந்தியா கடந்த 10 வருடங்களில் சொந்த மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இந்த காலப்பகுதியில் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரிலும்  இந்தியா  தோல்வி அடையவில்லை.

இந்தத் தொடரிலும் தனது வெற்றி அலையைத் தொடர்வதற்கு இந்தியா முயற்சிக்கும் அதேவேளை, பங்களாதேஷ் பலத்த சவாலாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி முழு பலத்துடன் இந்தத் தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரை முன்னிட்டு விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ரிஷாப் பான்ட் ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விராத் கோஹ்லி கடைசியாக டெஸ்ட் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் ராகுல் விளையாடியிருந்தார்.

2022இல் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷாப் பான்ட், கிட்டத்தட்ட 2 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாட தயாராகிறார். இதனிடையே இந்த வருடம் ஐபிஎல், சர்வதேச ரி20, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர்கள் மூவரும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் இடம்பெறுவதன் மூலம் அணி மேலும் பலமடையும் என நம்பப்படுகிறது.

1909_india.png

அணிகள்

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், மொஹமத் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா.

பங்களாதேஷ்: ஷத்மான் இஸ்லாம், ஸக்கிர் ஹசன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), மொமினுள் இஸ்லாம், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ், ஷக்கிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அஹ்மத், ஹசன் மஹ்முத், நாஹித் ரானா அல்லது தய்ஜுல் இஸ்லாம்.

1909_bangladesh.png

https://www.virakesari.lk/article/194065

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணியை அபார சதத்தால் அஸ்வின் காப்பாற்றியது எப்படி? - சதம் அடித்த பிறகு அவர் கூறியது என்ன?

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரவிச்சந்திரன் அஸ்வினின் சதம், ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங், வலுவான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி பெரிய சரிவிலிருந்து தப்பித்தது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று ஆட்டநேர முடிவில் இந்திய 80 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை எட்டியுள்ளது.

இந்திய அணியின் டாப்-ஆர்டர் பேட்டர்கள் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்து அணியை நெருக்கடியில் தள்ளினர். நண்பகல் உணவு இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளையும், பிற்பகல் தேநீர் இடைவேளைக்குள் அடுத்த 3 விக்கெட்டுகள் என 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணி.

ஆட்டத்தின் போக்கைப் பார்த்தபோது, இந்திய அணி 200 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் சுருண்டுவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், 7-வது விக்கெட்டுக்கு ஆபத்பாந்தனாக வந்த அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணி இந்திய அணியை பாதாளத்திலிருந்து மீட்டது.

தவறவிட்ட வங்கதேசம்

இந்திய அணியைக் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹசன் முகமது

வங்கதேசத்தின் பந்துவீச்சாளர் ஹசன் முகமது சிறப்பாகப் பந்துவீசி துவக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு மற்ற பந்துவீச்சாளர்களும் ஒத்துழைத்திருந்தால் ஆட்டம் வேறுவிதமாக திரும்பியிருக்கும். ஆனால், கிடைத்த வாய்ப்பை வங்கதேச அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் தவறவிட்டனர்.

உணவு இடைவேளைக்கு பிறகு வங்கதேச பந்துவீச்சாளர்கள் கூட்டுமுயற்சியுடன் பந்துவீசி இந்திய பேட்டிங் வரிசைக்கு கடும் சவால் அளித்தனர். வங்கதேச பந்துவீச்சாளர்கள் முயற்சிக்கு பலன் கிடைத்து 3 விக்கெட்டுகளை அள்ளினர்.

முழுநேர பேட்டர்களான ரோஹித், கோலி, கில் போன்றோர் களத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில், ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவும், அஸ்வினும் அணியை மாபெரும் சரிவிலிருந்து மீட்டனர்.

'சென்னை எப்போதுமே ஸ்பெஷல்தான்'

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டு, சதம் அடித்த அஸ்வின் பெவிலியன் வந்தபின் அளித்த பேட்டியில் “சென்னையில் விளையாடுவது எப்போதுமே ஸ்பெஷலான தருணம். இதே மைதானத்தில்தான் கடந்தமுறை சதம் அடித்தேன். டி20 போட்டி விளையாடிவிட்டு அதிலிருந்து வந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகினேன். பழைய சென்னை விக்கெட்டில் பந்து பவுன்ஸ் ஆகும், எளிதாக விளையாடலாம், ஆனால், இந்த விக்கெட்டில் பேட் செய்வது கடினமாக இருந்தது.

ஜடேஜா எனக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்து பேட் செய்து உதவினார். ஒரு கட்டத்தில் என்னால் ஓட முடியாத அசதி ஏற்பட்டபோது, ஜடேஜா ஸ்ட்ரைக்கை எடுத்து எனக்கு உதவினார். இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த பேட்டர்களில் ஒருவர் ஜடேஜா. நாங்கள் எந்த 2 ரன்களையும் 3 ரன்களாக மாற்றவில்லை, இருவருக்கும் ஓய்வு தேவைப்பட்டது. பிட்ச், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் ஒத்துழைக்கும். புதியபந்து நாளை சற்று அதன் வேலையை காண்பிக்கும், சமாளித்து ஆட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

ரோஹித் ஏமாற்றம்

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். .

இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா நிதானமாக பேட் செய்ய, ஜெய்ஸ்வால் கிடைத்த வாய்ப்புகளில் பவுண்டரிகளுக்கு பந்தை விரட்டி ரன் சேர்த்தார்.

ரோஹித் சர்மாவை தவறு செய்ய வைக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயன்றனர். பின்னர் ரோஹித் சர்மா 19 பந்துகளைச் சந்தித்தநிலையில் 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார். வங்கதேசத்துக்கு எதிராக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்ற பெயருடன் ரோஹித் வெளியேறினார்.

2வது விக்கெட்டுக்கு வந்த கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். பெரும்பாலும் 3வது பேட்டராக விராட் கோலிதான் கடந்த காலங்களில் களமிறங்கி செயல்பட்டிருந்தார். ஆனால் இந்த முறை சுப்மான் கில் களமிறங்கினார். 8 பந்துகளைச் சந்தித்த சுப்மான் கில், ஒரு பந்தில் கூட தனது வலிமையான ஷாட்களை வெளிப்படுத்த முடியாமல் திணறினார்.

இந்திய அணியைக் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுப்மான் கில் டக்அவுட்

ஹசன் மெஹ்மது லெக்திசையில் லேசாக விலக்கி வீசிய பந்தை கில் பவுண்டரிக்கு அடிக்க முயன்று தட்டிவிட்டார். ஆனால், அது விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் கேட்சாகவே, கில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 8-வது ஓவரில் 2 விக்கெட்டை இழந்தது.

 

9 நிமிடங்களில் வெளியேறிய கோலி

அடுத்ததாக விராட் கோலி களமிறங்கினார். 8 மாதங்களுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்பதால், பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. சென்னையில் சில நாட்களாக தீவிரமான பயிற்சியில் கோலி ஈடுபட்டதால், அவரின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் இன்று அதிகளவில் வந்திருந்தனர்.

ஆனால், களத்தில் 9 நிமிடங்கள் மட்டுமே இருந்த கோலி 6 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

ரிஷப்பந்த், ஜெய்ஸ்வால் நம்பிக்கை

4வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால்-ரிஷப் பந்த் கூட்டணி சேர்ந்தனர். 600 நாட்களுக்குப்பின் ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதால் அவர் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் இருவரும் சேர்ந்து ஓரளவு ரன்களைச் சேர்த்ததால் ரன்ரேட் சற்று உயர்ந்தது.

இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை சற்று மேலே கொண்டு வந்தனர். இருவரையும் பிரிக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் சிறிது சிரமப்பட்டு, பந்துவீச்சை மாற்றி, மாற்றி வீசினர்.

விக்கெட் சரிவு

உணவு இடைவேளைக்குப்பின் ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் இருவரையும் பிரிக்கும் விதத்தில் வங்கதேச பந்துவீச்சாளர்கள் நெருக்கடியாக வீசினர். குறிப்பாக உணவு இடைவேளைக்குப் பின் தஸ்கின், ராணா இருவரும் இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசினர்.

ரிஷப் பந்த் 52 பந்துகளில் 39 ரன்கள்(8பவுண்டரி) சேர்த்து வெளியேறினார். மறுபுறம் நிதானமாக பேட் செய்துவந்த ஜெய்ஸ்வால் 95 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

5வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்தனர். ராணா வீசிய பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் 56 ரன்களில் பெவிலியின் திரும்பினார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார்.

தொடக்கத்திலிருந்தே கே.எல்.ராகுல் சற்று தடுமாற்றத்துடனே பேட் செய்தார். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டவிதமும் தடுமாற்றமாக இருந்தது, ரன்களைச் சேர்க்கும் விதமும் விறுவிறுப்பாக இல்லை.

மெஹதி ஹசனின் சுழற்பந்துவீச்சில் ஷார்ட்லெக் திசையில் ஜாகிர் ஹூசேனிடம் கேட்ச் கொடுத்து ராகுல் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

7-வது விக்கெட்டுக்கு அஸ்வின் களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். அஸ்வின் களமிறங்கியபோது, ரசிகர்கள் விசிலடித்தும், கரகோஷம் எழுப்பியும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

அஸ்வினும் ரசிகர்களின் நம்பிக்கையை ஏமாற்றாத வகையில் தொடக்கத்திலிருந்தே பேட் செய்து ரசிகர்களின் சபாஷ் பெற்றார்.

மாலை தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 176 என்று வலுவான நிலையில் இருந்தது. அஸ்வின் 21, ஜடேஜா 15 ரன்கள் என இருவரும் நிதானமாக பேட் செய்தனர். 53வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.

அஸ்வின், ஜடேஜா அமர்க்களம்

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முழுநேர பேட்டர்கள் சென்னை விக்கெட்டில் சொதப்பிய நிலையில் அஸ்வின் வங்கதேச பந்துவீச்சை எதிர்கொண்டு ஷாட்களை ஆடினார். அஸ்வினுக்கு துணையாக ஆடிய ஜடேஜாவும் தன்னை ஆல்ரவுண்டர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஷாட்களை ஆடி ஸ்கோரை உயர்த்தினார்.

விரைவாக ரன்களைச் சேர்த்த அஸ்வின் 58 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 6பவுண்டரி, ஒரு சிக்ஸரும் அடங்கியது. ஜடேஜா, அஸ்வின் இருவரும் வேகமாக ரன்களைச் சேர்க்கவே ஸ்கோர் உயரத் தொடங்கியது. 53ஓவர்களில் 200 ரன்களை தொட்ட இந்திய அணி, அடுத்த 8 ஓவர்களில் 50 ரன்களை விரைவாக எட்டியது.

7-வது விக்கெட்டுக்கு இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, வங்கதேச பந்துவீச்சாளர்களை திணறிவிட்டனர்.

அஸ்வினைத் தொடர்ந்து ஜடேஜா 73 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் வங்கதேச பந்துவீச்சாளர்கள் திணறினர். ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன், மிராஸ் என மாறி மாறி பந்துவீசியும் இருவரையும் பிரிக்க முடியவில்லை.

 

அஸ்வின் சாதனை சதம்

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அஸ்வின் 108 பந்துகளில் தனது 6-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இதில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.

அஸ்வின் சதம் அடித்தவுடன் ஒரு கையில் ஹெல்மெட்டையும், மற்றொரு கையில் பேட்டையும் பிடித்து துள்ளிக் குதித்தார். அஸ்வினின் சதத்தை கண்டு ரசித்த சென்னை ரசிகர்கள் விசில் அடித்தும், கரகோஷம் எழுப்பியும், தங்களின் பாராட்டுகளையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர்.

8-வது விக்கெட்டுக்கு களமிறங்கி 5 சதங்களை டேனியல் வெட்டோரி மட்டுமே அடித்திருந்தார். அவரின் சாதனையை அஸ்வின் முறியடித்து 6-வது சர்வதேச டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து புதிய வரலாறு படைத்தார்.

அஸ்வின் களமிறங்கியபோது இந்திய 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், ஜடேஜாவுடன் பார்டனர்ஷிப் அமைத்து, அணியை 400 ரன்களை நோக்கி அஸ்வின் நகர்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 7-வது மற்றும் அதன்கீழான பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களாக அஸ்வின், ஜடேஜா சாதனை படைத்தனர். இதற்கு முன் 2009ல் ஹேமில்டனில் ஜெஸி ரைடர், வெட்டோரி கூட்டணி 7-வது விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது,அதை அஸ்வின், ஜடேஜா முறியடித்தனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 80 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். உணவு இடைவேளை வரை சீராக விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, கடைசி செஷனில் மட்டும் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 163 ரன்களைச் சேர்த்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.