Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2   08 OCT, 2024 | 10:07 AM

image

யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த 69 வயதுடைய திருச்செல்வம் ஞானப்பிரகாசம்  என்பவரே உயிரிழந்துள்ளார். 

தனது கட்டுமரத்தில் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற வேளை கட்டுமரம் கடலில் கவிழ்ந்ததில், அவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

சடலம் சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/195731

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

கட்டுமரம் கவிழாது என்பார்களே?

கவிழ்ந்தால்க கூட தாழாது ஆனபடியால் அதை பிடித்திடலாம் என்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த 69 வயதுடைய திருச்செல்வம் ஞானப்பிரகாசம்  என்பவரே உயிரிழந்துள்ளார். 

குடும்பத்தை காப்பாற்றுவதற்காக 69 வயதில் கடலுக்கு சென்று 
கடின உழைப்பின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டிய நிலை.

சில வேலைகளை ஒரு வயதிற்கு மேல் செய்ய உடல் இடம் கொடுக்காது என்பதால்தான் ஓய்வு கொடுக்கின்றார்கள். கடின உழைப்பாளிகளுக்கும் அரசு ஓய்வூதியம் கொடுக்கக் கூடிய திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

குடும்பத்தை காப்பாற்றுவதற்காக 69 வயதில் கடலுக்கு சென்று 
கடின உழைப்பின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டிய நிலை.

சில வேலைகளை ஒரு வயதிற்கு மேல் செய்ய உடல் இடம் கொடுக்காது என்பதால்தான் ஓய்வு கொடுக்கின்றார்கள். கடின உழைப்பாளிகளுக்கும் அரசு ஓய்வூதியம் கொடுக்கக் கூடிய திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும். 

முதியோர் கொடுப்பனவு 3000ரூபா, 70 வயதிற்கு மேற்பட்டவ்களுக்கு அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

முதியோர் கொடுப்பனவு 3000ரூபா, 70 வயதிற்கு மேற்பட்டவ்களுக்கு அண்ணை.

முதியோர் கொடுப்பனவு… சகலருக்கும் கிடைக்கும் என்றால் மிக நல்ல விடயம். தகவலுக்கு நன்றி ஏராளன். 👍🏽
 

2 minutes ago, ஏராளன் said:

முதியோர் கொடுப்பனவு 3000ரூபா, 70 வயதிற்கு மேற்பட்டவ்களுக்கு அண்ணை.

இலங்கையில் முன்னர் பிச்சை சம்பளம் என்று ஒன்று மிகவும் ஏழ்மையானவர்களுக்கு கொடுப்பார்கள், இப்பவும் கொடுக்கின்றார்களா? 

 

  • கருத்துக்கள உறவுகள்

"சமூர்த்தி"  கொடுப்பனவு   எனும் பெயரில் மாத மதம் கொடுக்கிறார்கள் என எண்ணுகிறேன். விபரம் ஏராளனிடம் அறியலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

இலங்கையில் முன்னர் பிச்சை சம்பளம் என்று ஒன்று மிகவும் ஏழ்மையானவர்களுக்கு கொடுப்பார்கள், இப்பவும் கொடுக்கின்றார்களா? 

 

அது 250ரூபா அல்லது 350ரூபா கொடுக்கிறார்கள் அண்ணை.

 

6 minutes ago, நிலாமதி said:

"சமூர்த்தி"  கொடுப்பனவு   எனும் பெயரில் மாத மதம் கொடுக்கிறார்கள் என எண்ணுகிறேன். விபரம் ஏராளனிடம் அறியலாம். 

சமுர்த்தியும் அரச ஊழியர் தவிர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது. தொகை சரியாத் தெரியவில்லை அக்கா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.