Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் நாங்கள் வெற்றியடைவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்குக்  கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

"இலங்கை தமிழரசுக் கட்சியால் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எமது கட்சியில் சிவஞானம் சிறீதரனை முதன்மை வேட்பாளராக உள்ளடக்கி இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வவுனியாவிலே வேட்புமனுவைத் தாக்கல் செய்கின்ற காரணத்தினாலே யாழ். மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் இந்த வேட்புமனுவைக் கையளித்துள்ளார்.

நாளை(இன்று) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் காலம் முடிவடைகின்றபோது அந்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்று அறிந்து எங்களுடைய மற்றைய கருத்துக்களை நாங்கள் சொல்வோம்.

ஆனாலும், இந்தத் தடவை எங்களுடைய வேட்புமனுவிலே இளையவர்களுக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல தடவைகள் நாங்கள் சொல்லி வந்த போதும் அது இந்தத் தடவை பெருமளவுக்குச் சாத்தியமாகி இருக்கின்றதென்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றோம்.

அதிலும் இம்முறை இரண்டு பெண் வேட்பாளர்களை நாங்கள் நிறுத்தியுள்ளோம். அதிலும் கடந்த தேர்தலை விடவும் ஒன்றிலிருந்து இரண்டாக உயர்ந்துள்ளமை நூறு சதவீத அதிகரிப்பாகும்.

எங்களுடைய வேட்பாளர்களின் சராசரி வயது 48 ஆகும். இந்த ஒன்பது பேரினதும் சராசரி வயது ஐம்பதுக்கும் குறைவாகத்தான் இருக்கின்றது. இது முற்போக்கான நல்ல விடயம் என்பதையும் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.” என்றார்.

https://thinakkural.lk/article/310569

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எங்களுடைய வேட்பாளர்களின் சராசரி வயது 48 ஆகும். இந்த ஒன்பது பேரினதும் சராசரி வயது ஐம்பதுக்கும் குறைவாகத்தான் இருக்கின்றது

உங்களுடைய குருவின் கச்சையில்😅 சராசரி வயசு 42 ஆம் ....யோவ் சராசரி வயசு பட்டியலே இப்ப முக்கியம் ... ஒருத்தன் சோனி டி.வி வாங்கினால் ஊரில இருக்கிறவ்ன் எல்லோரும் சோனி டி,வி வாங்கிறமாதிரி தான் உங்கன்ட அரசியலும் ...ஒரு கட்சி சராசரி வயசை சொன்னால் இனி எல்லாரும் அதேயே சொல்லி கொண்டு திரிய போறீயல்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

எங்களுடைய வேட்பாளர்களின் சராசரி வயது 48 ஆகும். இந்த ஒன்பது பேரினதும் சராசரி வயது ஐம்பதுக்கும் குறைவாகத்தான் இருக்கின்றது. இது முற்போக்கான நல்ல விடயம் என்பதையும் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.” என்றார்.

சுமந்திரனின் இன்னுமொரு பைத்தியக்காரத்தனமான  அலட்டல்.
தேர்தல் வேட்பாளர்களின் வயதை கூட்டி, பின் அதை பிரித்து... 
சராசரி வயதை சொல்லிக் கொண்டிருக்குது, இந்த முத்தின பைத்தியம். 
அது தேர்தலில் வெல்ல போதுமா...?
இதை நம்பி பின்னாலை கூட்டம் திரியுது. 

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ஒன்பது பேரினதும் சராசரி வயது ஐம்பதுக்கும் குறைவாகத்தான்

எப்படி ஏமாற்றுகிறார்.  பாருங்கள்    சராசரி வயது என்பது   

வயோதிபனை   இளைஞர் ஆக்குகிறது 

இளைஞனை   வயோதிபர். ஆக்குகிறது   🤣

ஆனால் யதார்த்தம் அது இல்லை  கிழவன் கிழவன் தான்  அதாவது சுமத்திரன் கிழவன் தான்   🤣.  இளைஞன் இளைஞன் தான்    முதன்மை வேட்பாளர்கள்   ஆக. ஏன் இளைஞர்கள் நியமிக்கப்படவில்லை  ?? 

தமிழரசு கடசிக்கு ஒரு இடமும். கிடைக்கவில்லை என்றால் 

கட்சி கலைக்கப்படுமா.??? 

தலைவர்கள் பதவி விலகுவார்களா ??? 🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

எமது கட்சியில் சிவஞானம் சிறீதரனை முதன்மை வேட்பாளராக உள்ளடக்கி இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறீதரனை போட்டியிடுவதிலிருந்து நீக்குவதற்காக மதுபான விற்பனை பெற்றவர்களின் பெயரை பகிரங்கப்படுத்துங்கள், அவ்வாறு செய்தால் குறித்த நபர்களை பதவியிறக்கம் செய்ய உதவியாக இருக்கும் என்று அனுராவிடம் கோரிக்கை வைத்தார், அதில் ஏமாந்த இவர், தோல்வியடைந்தவர்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லி மாற்றி, சிறீதரனையும் சாள்சையும் கைக்குள் போட்டு, அதிலும் ஒரு பொறி வைத்துள்ளார். நல்ல வேளையாக சார்ள்ஸ்  அந்தப்பொறியில் இருந்து நழுவி விட்டார். தேர்தலில் சிறீதரன் தோற்றால்; தமிழரசுக்கட்சி தோற்றால், பழி யார் தலையில் விழும்? போனதடவை, மாவை தோற்ற போது, தலைவர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் ஆகவே தலைவர் பதவி விலக வேண்டுமென கூறி, தலைவருக்கு தெரியாமலேயே பத்திரிகைகளில் அறிக்கை விட்டு, அவமானப்படுத்தி குழி பறித்தவர். இன்று அதை  நிறைவேற்றியும் விட்டார். அன்று, எல்லோரும் சம்மதித்தால், அந்த பதவியை ஏற்க நான் தயார் என்று அறிக்கை விட்ட சிறீதரன், இன்றுஅதே பொறியில்.  இவரையும் விலக்கி விட்டால், சுமந்திரனின் ரூட் கிளியர்! ஆனால் நாம் நினைப்பது ஒன்று, நடப்பது வேறொன்று, பாப்போம் சுமந்திரனின் சாமர்த்தியத்தை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.