Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா கடற்படையின் படகு புலிகளால் மூழ்கடிப்பு: 5 கடற்படையினர் பலி

Featured Replies

யாழ். குருநகர் பாசையூர் கடற்பரப்பில் முன்னகர்ந்த சிறிலங்கா கடற்படைப் படகுகள் அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா கடற்படைப் படகு மூழ்கடிக்கப்பட்டதில் 5 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

புலிகளைத் தோற்கடிப்பதற்கு 4 வருடங்கள் போதுமா ஐயா?

படங்களுக்கு நன்றிகள் தமிழினி

வெகுவிரைவில் தமிழீழ கடற்படையின் முழு பலத்தையும் எதிரி மீது பிரயோகிக்கும் போது தெரியும் கடற்படைக்கு

  • தொடங்கியவர்

சிறிலங்கா கடற்படையினரின் மூன்று சடலங்கள் ஒப்படைப்பு

யாழ். குருநகர் கடற்பரப்பில் கடற்புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டு, கைப்பற்றப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் மூன்று சடலங்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டன.

தொடர்ந்து வாசிக்க

Edited by yarlpriya

மோட்டுச் சிங்களவங்கள் எண்டா உவங்கள் தான். கெடுகுடி சொல் கேளாது கேடுவரும் முன்னே மதி கெட்டுவரும்... அப்புறம் கனக்க இருக்கு எங்கடை ஆக்களிட்டை எடுத்துவிட....

4 வருடங்கள் என்ன இன்னும் கொஞ்சக் காலத்தில 40 வருடமா உப்பிடித்தானே மோட்டுச் சிங்களவங்கள் கனவு காண்கிறாங்கள் எண்டு முழங்கி ஏப்பம் விடலாம் நாங்கள்.

40 இல்லை 400 வருடமானாலும் கரந்தடி அணுகுமுறைகளை தோற்கடிக்க முடியாது. அது தான் கரந்தடி முறையையின் தனித்துவமான தன்மை அதைப் பற்றி நாங்கள் அளவுக்கு அதிகமாக திருப்த்திப்பட்டோ பெருமைப்பட்டோ ஒன்றையும் காண முடியாது.

முதலில் சிறீலங்கா தமிழீழத்தை ஆக்கிரமித்துள்ள நிலையை பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப்படைகள் வியட்நாமில் கண்ட அனுபவத்தோடோ அல்லது ஆப்கானிஸ்தானில் சோவியத் முதல் நேற்றே படைகள் சந்தித்த சந்திக்கிற அனுபவத்தோடோ அல்லது அமெரிக்க மற்றும் கூட்டணிப்படைகள் ஈராக்கில் சந்திக்கும் அனுபவங்களோடு ஒப்பிட முடியாது. அவர்களைப் பொறுத்தவரை ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட நாடுகளை நில நீர் அல்லது கலாச்சார பண்பாட்டுரீதியான பிணைப்புகள் அற்ற பல ஆயிரம் கிலோமீற்றர்களிற்கு அப்பால் உள்ள பிரதேசங்களை ஆக்கிரமித்தார்கள். இந்த ஆக்கிரமிப்புகளிற்;கான நியாயப்பாடு என்பது உள்நாட்டிலோ அல்லது சர்வதேச மட்டத்திலோ மிகவும் பலவீனமானதும் தற்காலிகமான சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் தான்; (9-11 போன்ற குறித்த நிகழ்வு முதல் கமியூனிசம் மற்றும் அதற்கு எதிரான உணர்வலை) நியாயப்படுத்த முடிந்தது.

இந்த பலவீனமான நியாயப்பாடுகள் கரந்தடிப் போராட்ட அணுகுமுறை தரும் நிரந்தர நிம்மதியைப் பெற முடியா கலா இழுத்தடிப்பை தாங்க முடியாதது. எனவே ஆக்கிரமிப்பை கைவிட வேண்டிய நிலையை நோக்கி இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களை கரந்தடிப்போராட்ட முறையில் தள்ளுவது இலகு.

ஆனால் எமது நிலையைப் பொறுத்தவரை

-1- பூகோளரீதியில் சிங்களவர்கள் கிட்டத்தட்ட அவர்களது கொல்லையில் போராடுகிறார்கள்

-2- அதை மேலும் பலப்படுத்தம் வகையில் மகாவம்சம் போன்ற புனைக்கதைகள் மூலம் சிங்கள மக்களின் உரிமைகோரலிற்கான அதன் மூலம் கனதியான விலையைக் கொடுப்பதற்கான கருத்தியல் கட்டி வழர்க்கப்படுகிறது சிறுவயதில் பாடசாலைக் காலங்களில் இருந்து. இதை மேலும் அபிவிருத்தி செய்ய ஜாதிக கொல உறுமைய போன்ற இனவாத கட்சிகளம் தேரவாத பொளத்த கட்டமைப்புகளும் இயங்குகின்றன.

-3- சர்வதேச ரீதியில் சட்டரீதியில் சிறீலங்காவின் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளிற்கு தான் அவர்களது தமிழீம் மீதான ஆக்கிரமிப்பு இருக்கிறது.

எனவே சிங்களவர்களை ஆக்கிரமிப்பை விட்டுவிட வைப்பதற்கான முயற்சி என்பது வெறும் தோற்கடிக்கப்பட முடியாத கரந்தடிப் போராட்டம் என்ற வியட்னாம் ஆப்கானிஸ்தான் ஈராக் சமன்பாடுகளிற்குள் அடக்கி விட முடியாதது. சிங்களம் அதை விட அதிக விலை கொடுத்து தீவின் முழுவதையும் தனதாக உரிமை கோர பின்னிக்கப் போவதில்லை. அதன் அர்த்தம் ஆக்கிரமிக்கப்பட்ட எமது இறுதி வெற்றியை நிர்ணயிக்கும் சவால் என்பது வியட்னாம் ஆப்கானிஸ்தான் ஈராக் போன்ற களங்களில் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் சவால்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களின் பொருளாதார தொழிநுட்ப இராணுவ பலங்களோடு ஒப்பிடும் போது சிறீலங்காவின் நிலை வேறாக இருக்கலாம். ஆனால் சிறீலங்காவின் தமிழீழம் மீதான ஆக்கிரமிப்பு என்பது வேறு தளங்களில் பலமானது அதை வெற்றி கொள்வதற்குரிய அதிகரித்த பலம் எமக்குத் தேவை. கால இழுத்தடிப்போ கரந்தடி முறையிலான இழுத்தடிப்போ சிறீலங்காவை 400 வருடங்கள் சென்றாலும் தோற்கடிக்காது மாறாக எம்மைத்தான் தோற்கடிக்கும்.

இங்கு கால ஈழுத்தடிப்பு என்று குறிப்பிடுவது புலிகள் தற்பொழுது கடைப்பிடிக்கும் மொளனம் - அமைதி, வலிந்த தாக்குதல் அற்ற தற்காப்பு நிலை பற்றி அல்ல. அது முற்று முழுக்க தந்திரோபாயமானது. மாறாக தோற்கடிக்கப்பட முடியாத ஒரு கரந்தடி படையாக பேணப்பட்டாலோ அல்லது அதிகபட்சம் வலுநிலைச் சமன்பாட்டை (அது சமச்சீரற்ற முறையில் நிறுவப்பட்டது பற்றி நம்மவர்கள் மத்தியில் உள்ள விளக்கக் குறைவுகள் இன்னொரு விவகாரம்) போணிக் கொண்டாலோ இறுதியில் தீர்விற்கு சிங்களம் இறங்கி வரும் என்ற ஒரு தவறான எதிர்பார்ப்பு தமிழர்கள் மத்தியில் இருக்கிறது. இதைப்பற்றியது தான் இந்த விமர்சனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.