Jump to content

தலைக்கு ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்...!

Vhg அக்டோபர் 21, 2024
1000360310.jpg

மட்டக்களப்பில் ஓட்டோ சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் வீதம் இலஞ்சம் கொடுத்து, தமிழரசுக் கட்சியின் சர்ச்சைக்குரிய வேட்பாளர் ஒருவர் வாக்கு கோருவதாக அறியமுடிகிறது.

நேற்று முன்தினம் (18-10-2024) இரவு 635 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் ரூபா இலஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்தவகையில் 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா இவ்வாறு இலஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சில தொகுதிகளுக்கு இலஞ்சம் கொடுத்த நிலையில், நேற்றைய தினம் மட்டக்களப்பு தொகுதி மற்றும் கல்குடா தொகுதி என்பவற்றில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இவ்வாறு இலஞ்சம் வழங்கவுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த வேட்பாளர் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு மதுபானம் வழங்கிவிட்டு, தமக்கு சார்பாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கூறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

https://www.battinatham.com/2024/10/blog-post_718.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு…. சுமந்திரனின் நண்பர் சாணக்கியன் மேல்தான் சந்தேகமாக உள்ளது. 
இவர்கள் முன்னைய ஆட்சியில் ரணிலிடம் பல கோடிகளை பெற்ற பணம் மெல்ல வெளியே வருகின்றது போல…
ஜனாதிபதி தேர்தலில்… சஜித் பிரேமதாசவை ஆதரித்தமைக்கும்  சுளையாக பல கோடிகளை கறந்து இருப்பார்கள்.

லஞ்சம் கொடுத்து வாக்கு வாங்க வேண்டிய நிலையில்… தமிழரசு கட்சியை கொண்டு வந்து நிறுத்திய பெருமை… சுமந்திரன், சாணக்கியனையே சேரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

 

தலைக்கு ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்...!

Vhg அக்டோபர் 21, 2024
1000360310.jpg

மட்டக்களப்பில் ஓட்டோ சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் வீதம் இலஞ்சம் கொடுத்து, தமிழரசுக் கட்சியின் சர்ச்சைக்குரிய வேட்பாளர் ஒருவர் வாக்கு கோருவதாக அறியமுடிகிறது.

நேற்று முன்தினம் (18-10-2024) இரவு 635 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் ரூபா இலஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்தவகையில் 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா இவ்வாறு இலஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சில தொகுதிகளுக்கு இலஞ்சம் கொடுத்த நிலையில், நேற்றைய தினம் மட்டக்களப்பு தொகுதி மற்றும் கல்குடா தொகுதி என்பவற்றில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இவ்வாறு இலஞ்சம் வழங்கவுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த வேட்பாளர் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு மதுபானம் வழங்கிவிட்டு, தமக்கு சார்பாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கூறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

https://www.battinatham.com/2024/10/blog-post_718.html

 பார் பெர்மிட் பெற்ற தமிழ் அரசியல் வாதிகளின் லிஸ்ட் வருகிறது என்றார்கள் கடைசியில் விக்கியர் மட்டும் பழிவாங்கப்பட்டார் மற்ற தமிழ் அரசியல் வாதிகள் ஒரே இரவில் சுத்தமாகி கொண்டார்கள் .இப்ப என்னடா என்றால் யார் அந்த தமிழ் அரசு கட்சியின் அரசியல்வாதி என்று பெயரை கூட போட முடியவில்லை அவ்வளவுக்கு நம்ம தமிழ் அரசியல்வாதிகள் சண்டியர்களாகமாறி விட்டார்கள் .

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவருக்கு பதவி ஒண்டும் குடுக்கேல்லையாம் அதாலை choonஆகி வெளியில வந்திட்டாராம்.  இந்த அழுகிப்போன மாம்பழங்கள் 5% கூட தேறாதுகள்! என்ன ரப்பர் முள்ளுகளை கடிச்சுக்கொண்டு திரியுற பட்டாசு கோஷ்டிக்கு நவம்பர் 14 வரை மல்டிபிள் ட்ரீட்ஸ் தான்😂
    • ஒரு இளைஞனின் அறைக்கு ஒரு மாணவி வந்து போவதற்கும் பல மாணவிகள் வந்து போவதற்கும் உள்ள வித்தியாசம் நிறையவே உள்ளது. காதலுக்கும் காம வேட்டைக்கும் வித்தியாசம் தெரியாமல் எம்மிடம் இன்னும் அதிகமானோர் உள்ளனர். சில வேளைகளில் போதை மருந்துகளின் நடமாட்டங்களும் இருக்கலாம்.ஏனென்றால் நாட்டு நிலவரங்கள் அப்படி.
    • ஆனால் இப்பொழுது உலகத்திற்கே மனிதநேயம்பற்றிப் பாடமெடுப்பார்கள்.அவுஜ்திலேலியாவின் பூர்வகுடிகளை பாரியளவில் இனப்படுகொலைசெய்து அவர்களைச் சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக்கி வெள்ளையர்கள் இப்பொழுது பெரும்பான்மையினராகி  ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஹிட்லர் செய்ததுதான் இனப்படுகொலை அவர்கள் செய்தலெல்லாம் ஒன்றுமேயில்லை.அவர்களால் எத்தனை நாடுகள் இன்று வரை அடிமையாகி பொருளாதாரத்தில் நலிவடைந்து இருக்கிறார்கள்.தமிழர்களின் இன்றைய நிலமைக்கும் அவர்களே காரணம்.அமெரிக்கா>கனடாஈஅவுஜதிரேலியா ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் வெள்ளையர்களின் நாடல்ல. இன்று அகதிகள் இங்குவருவதைப்பற்றிக் கூச்சல் போடும் பத்திரிகைகளளும் ஊடகங்களும் அந்த அகதிகளின் நாடுகளைக் கொண்ளையடித்து சுடுகாடாக்கியதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
    • நான் எழுத நினைத்தேன்”   இடம் கந்தர்மடம்.   என்றபடியால். தவிர்த்து விட்டேன்        அங்கே ஒருவர் பசியில்.  வடியிருந்தால்.  திரும்பியும்.  பார்த்து இருக்கமாட்டார்கள்     
    • கனடாவில் துப்பாக்கிச்சூடு - யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! Vhg அக்டோபர் 21, 2024 கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோ, கனடாவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். அதிகாலைவேளை இடம்பெற்ற துப்பாக்கிசூடு கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்று (20-10-2024) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது, மேற்படி நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடியுள்ளார். இது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அவர் உயிரிழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். முன்பகை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது.  சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.   https://www.battinatham.com/2024/10/blog-post_966.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.