Jump to content

தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

மிஸ்ரர் கந்தையரின் சங்காத்தமே வேண்டாமென்றுதான் நான் ஒதுங்கியிருக்கிறேன்

என் கட்சிக்காரர் அப்படி என்ன செய்யக்கூடாத கோதாரிகளை செய்து விட்டார்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுரா, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை சொல்லியிருந்தார், அதை சொல்லியிருந்தார் ஆகவே அவர் அதை நிறைவேற்றுவார், என்னை பிரதமமந்திரி பதவி ஏற்க அழைத்தார் அப்போது என்று இன்று அனுரா வென்றபின் கதை விடுகிறார், தன்னை பிரதமந்திரி பதவிக்கு அழைக்கக்கூடும் என்று எதிர் பார்த்திருக்கும் இவர்,  ஏன் சஜித் ஆதரவு எடுத்தார்? அன்று, சஜித்துக்கு வாக்களிக்கும்படி கூறிய இவர் இலங்கைத் தமிழர் ஒரு தேசிய இனம் என்கிறார். அப்போ ஏன் அந்த பொது வேட்பாளர் அழுத்தத்தை இவர் விமர்சித்தார்? இரண்டாயிரமாம் ஆண்டு சந்திரிகா கொண்டுவந்த திட்டத்தை இன்றுவரை நடைமுறைப்படுத்தாததன் காரணம் என்ன? பண்டாரநாயக்க செல்வா ஒப்பந்த காலம் முதல் இதுதான் வரலாறு. செய்வோம் என்பார்கள், செய்ய மாட்டார்கள். நாங்கள் யாரையும் நம்புவது கிடையாது என்கிறார். நல்லாட்சி தேர்தலுக்கு முன் சந்திரிக்கா எழுத்துமூலம் செய்வோம் உடன்படிக்கை என்று கேட்ட போது, நாங்கள் உங்களை நம்புகிறோம், எழுத்தெல்லாம் வேண்டாம் என்று கூறினேன் என்றார் இவர். சரி.... மத்திய செயற்குழு எடுக்கும் தீர்மானத்தை தான் அறிவிப்பதே தவிர, தான் முடிவும் எடுப்பதில்லை, நான் எங்கேயோ இருந்தேன் என்கிறார். சரி.... அவர்கள் எடுத்த முடிவை இவர் ஏன் அறிவிக்க வேண்டும்? தான் பேச்சாளராம்! அந்தப்பதவி எப்போவோ காலாவதியாகிவிட்டது, இன்னும் ஏன் அதை கட்டிப்பிடித்து உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்? மது பான அனுமதி பத்திரம் பெற்றவர்களின் பெயரை வெளியிடும்படி கேட்டோடினது சிறீதரனை தேர்தலில் போட்டியிடாமல் அகற்றுவதற்கே. அவரை அகற்றியிருந்தால்; சுமந்திரனின் அரசியல் கனவு அதோடு கலைந்திருக்கும். ஆனால் தப்பித்து விக்கினேஸ்வரன் மாட்டினார். ஆனால் அவர் தன் தவறை ஏற்றுக்கொண்டார், யாரையும் குற்றம் சாட்டவில்லை, கதையை திசை திருப்பவில்லை. அவர் தான் கொடுத்த வாக்கின்படி இளைஞருக்கு தேர்தலில் இடம் விட்டு விலகிக்கொண்டார். சுமந்திரன் சொல்வதுபோல் அவர் சாராய அனுமதி பெற்று பகிரங்கப்படுத்தப்பட்டதால் விலகினார் என்று வைத்தாலும், அவர் தனது தவறுக்கு பொறுப்பேற்று விலகியது நேர்மைத்தனமே ஒழிய கோழைத்தனமல்ல. இன்று ஒரு பத்திரிகைக்கு சுமந்திரன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதாவது இந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் கீழ் போட்டியிட சிறீதரனுக்கு ஆசன ஒதுக்கீடு வழங்க வேண்டாமென தான் கூறியதாகவும், அவர் கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து செயற்பட்டதாகவும், அதற்கு சி .வி .கே. சிவஞானம் தேர்தல் காலத்தில் அப்படி செய்தால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்று சொன்னதால் தான் கட்டுப்பட்டதாக. அப்போ; தேர்தலுக்காக முடிவை மாற்றிக்கொண்டார், தோற்றுவிடுவோம் என்கிற பயம். இவர் கட்சியின் தீர்மானத்தை மதித்து நடந்தவரா மற்றவர்களை அகற்ற? நேற்று இதே கேள்வியை  கேட்ட போது அதாவது தனக்கெதிராக பலபேர் செயற்படுவதாக சிறீதரன் கூறியிருக்கிறாரே, அவர் யாரை குறிப்பிடுகிறார்? உங்களையா எனக்கேட்டபோது, எனக்கு தெரியாது, அவரைத்தான் கேட்கவேண்டும், நான் தான் அவரை தலைவர் பதவியை ஏற்கும்படி வற்புறுத்தினேன் என்றார். இன்று இப்படி சொல்கிறார். நாக்கில் சுத்தமில்லை. எந்தப்பக்கமும் கதைப்பார். அனுரா, தான் செய்ய விரும்புவதை செய்வார். யாரும் சொல்லி அவர் செய்யப்போவதில்லை. ஆனால் அதற்கு தான் உரிமை கொண்டாட வலியப்போய் முட்டுக்கொடுக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

என் கட்சிக்காரர் அப்படி என்ன செய்யக்கூடாத கோதாரிகளை செய்து விட்டார்? 😎

மை லோட், 

 கூண்டில் நிற்கும் எதிர்த் தரப்பு கந்தையர், வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு என்கிறார். மாரீசன்கூடலுக்கு  வழி கேட்டால்,  இளவாலை, பண்டைத்தரிப்பு, சில்லாலை ஏறு என்கிறார்.

லொள்ளு தாங்க முடியவில்லை மை லோட். அவருக்கு அன்னியன் பட அம்பி என்கிற நினைப்பு,...

அவரால் எனக்கு யாழ்.கொம் பக்கமே வரப் பிடிக்கவில்லை யுவர் கொணர்,......

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1969 .பொ.. சாதாரணப் பரீட்சை. அன்று ஆங்கிலப்பாட சோதனை. நடுத்தர வயது மனிதர் ஒருவரும்  பரீட்சை  எழுத மண்டபத்திற்கு வந்திருந்தார். ஒரு நண்பன் சொன்னான், “ அவர்தான் தமிழரசுக்கட்சி எம்.பி. கே.துரைரத்தினம். சட்டம் படிக்க ஆங்கிலத்திலே கிறெடிற் தேவை. அதுக்குத்தான் சோதனைக்கு வந்திருக்கிறார்என்றான். கே.துரைரத்தினம் முதலில் வாத்தியார். எம்பி ஆனதன் பின்னால் சட்டம் படித்தார்.

அரசியல் என்பது சட்டத்தோடு பின்னிப் பிணைந்தது. சட்டத்தரணிகள் எம்பிகளாக வருவது அனுகூலமே.

எங்களுடைய பிள்ளையான் மாதிரி எம்ஜிஆர், காமராஜர் எல்லாம் மாநில முதல்வர்கள்.  ரீகன் ஒரு பட்டதாரி மட்டுமல்ல அவருக்கு வேறு தகமைகளும் இருக்கின்றன.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது, “தமிழக அரசு சார்பாக, இலங்கைப் போராளிகளுக்கு ஆயுதம் வாங்க 4 கோடி தரப்படும்என்று அறிவித்தார். அவரது அறிவித்தலைக் கேட்ட இந்திரா காந்தி மிரண்டு போனார். “யோவ் இதெல்லாம் மத்திய அரசு செய்யும் வேலை. உனது மாநிலத்தை மட்டும் பார் போதும்என இந்திரா காந்தி அதட்டி வைக்க, கருணாநிதியிடம் மாட்டிக் கொண்டார். உடனடியாக பல்டி அடித்து, தமிழர்களது புனர்வாழ்வுக்காக தனது சொந்தப் பணம் (?) நாலு கோடியை புலிகளுக்குக் கொடுத்து தப்பித்துக் கொண்டார். அரசியல் அறிவு மட்டுமல்ல, சட்டமும் தெரிந்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.