Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்

1166940727.jpg

தேர்தல் பரப்புரை நடவடிக்கைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வடமாகாணத்துக்கு பயணித்துள்ளார்.

பொதுத்தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பிரதான தேசியக் கட்சிகள் தீவிரமான பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றன. 

இவ்வாறாக தமிழர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தேசிய மக்கள் சக்தி பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.

பிரதமர் ஹரிணி, ஜனாதிபதியின் ஆலோசகர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் இதற்கு முன்னர் வடக்குக்குச் விஜயமாகி பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே, ஜனாதிபதி அநுர வடக்கில் இன்று தீவிர பரப்புரைகளை முன்னெடுத்துள்ளார்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தின் பாசையூர் பகுதியில் இன்று  மாலை 3 மணியளவில் ஜனாதிபதியின் பிரச்சார கூட்டம் இடம்பெற்றது.

ஜனாதிபதியாக அநுர பொறுப்பேற்ற பின்னர் அவர் வடக்குக்கு மேற்கொண்ட முதலாவது பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

 

 

https://newuthayan.com/article/தேர்தல்_பரப்புரைக்காக_ஜனாதிபதி_வடக்குக்கு_பயணம்

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர

அரசாங்கத்திடம் இருக்கும் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.

அத்துடன் சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கமைய அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்வோம் எனவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.

வவுனியாவில் (Vavuniya) இன்று (10) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரச்சாரத்திற்காக வந்த ரணில்  

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கடந்த தேர்தலில் பிரச்சாரத்திற்காக இந்த மாவட்டத்துக்கு வந்தார். வன்னி மக்கள் ஓரளவு வாக்கை அவருக்கு வழங்கியிருந்தனர்.

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர | Lands Of The Northern People Will Be Freed Anura

இந்த தேர்தலில் அவர் வருவாரா? அதேபோல எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) வந்தார். இந்த தேர்தலுக்கு அவர் இங்கு வருவாரா? வரவில்லை. ஏன்? அவர்கள் அவர்களது வெற்றிக்காக மாத்திரமே தேர்தலில் நின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் வன்னியில் எமக்கு வீழ்ந்த 21 ஆயிரம் வாக்குகளும் எமது வெற்றிக்கு பாரிய ஒரு பங்களிப்பையும் சக்தியையும் வழங்கியிருந்தது.

வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருக்கிறது. அந்தக்காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு நாங்கள் வழங்குவோம். எங்களுக்குத் தெரியும் இங்கு யுத்தம் ஒன்று நடந்தது பல்வேறு அநீதிகளுக்கு முகம்கொடுத்தோம்.

வடக்கின் மீன்வளம்

இன்று அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய விரைவில் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதியளிக்கிறேன். இது சமத்துவமான ஒற்றுமையான ஆட்சி. இதனை தென்பகுதி எதிர்க்காது.

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர | Lands Of The Northern People Will Be Freed Anura

ஆனால் அன்று அப்படி அல்ல வடக்கில் இவ்வாறு ஒன்று நடந்தால் தென்பகுதி அதற்கு எதிராக இருந்தது. எங்களை பிரித்து அரசியல் செய்தார்கள். நாங்கள் இன்று அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.

வடக்கின் மீன்வளத்தை பெரிய அளவில் வேறு நாடுகள் வந்து சூறையாடுகின்றன. எமது மீன்வளம் அழியும்வாறாக அதனை செய்கின்றனர். நாங்கள் அரசு என்ற வகையில் எமது கடற்றொழிலாளர்களின் உரிமைக்காக வடக்கில் வாழும் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

அரச ஊழியர்களின் சம்பளம்

சூரியஒளி இன்று மதிப்பு வாய்ந்துள்ளது. அது எமது சக்தி. அதனை துண்டு துண்டாக விற்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நாங்கள் மீளாய்வு செய்யவேண்டும். இந்த வளங்களை நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும்.

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர | Lands Of The Northern People Will Be Freed Anura

கேரள கஞ்சா, உட்பட போதைப்பொருள் பிரச்சினை இங்கு இருக்கிறது. அவற்றை தடுக்க வேண்டும். எனவே புதிய ஒரு நிலைக்கு இந்த நாட்டை அழைத்துச் செல்லவேண்டும்.

அத்துடன் எமது முதலாவது வரவுசெலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நிச்சயம் இருக்கும்“ என தெரிவித்தார்.

https://ibctamil.com/article/lands-of-the-northern-people-will-be-freed-anura-1731238756

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே ஒரு படத்தையும் காணவில்லை?

யாரங்கே யு ரியூப்பர்களை அழைத்து வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

ஒரு திறமையான  மொழிபெயர்ப்பாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? ☹️

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

ஒரு திறமையான  மொழிபெயர்ப்பாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? ☹️

நீங்கள் மொழிபெயர்ப்பாளரைப் பார்க்கிறீர்கள்.

நான் வந்த ஜன கூட்டத்தைப்  பார்க்கிறேன்.
 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் யாழ் விஜயம் | AKD Jaffna 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் மொழிபெயர்ப்பாளரைப் பார்க்கிறீர்கள்.

நான் வந்த ஜன கூட்டத்தைப்  பார்க்கிறேன்.
 

நியாயமான கேள்வி. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் மொழிபெயர்ப்பாளரைப் பார்க்கிறீர்கள்.

நான் வந்த ஜன கூட்டத்தைப்  பார்க்கிறேன்.
 

நியாயமான கேள்வி. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

நியாயமான கேள்வி. 

நிஞானமான கூட்டம்.

மைதானத்துக்குள் இடமே இல்லையாமே?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

நிஞானமான கூட்டம்.

மைதானத்துக்குள் இடமே இல்லையாமே?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

 

யாழில் அனுரவை பார்க்க குவிந்த மக்கள்.... அப்ப வோட்டுப்போட வரவில்லைத்தானே..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் யாழ்ப்பாண கூட்டத்திற்காக பல மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர் - சுமந்திரன்

image

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக பல மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் பொதுமக்களை ஜனாதிபதி கொண்டுவந்தார் என இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளா  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

GcD_LMgXoAA7CrU.jpg

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பேருந்து மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து அவர்களுடன் பேசினார் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள சுமந்திரன், அந்த மக்கள் வசிக்கும் பகுதிகளிற்கு ஜனாதிபதி சென்று அவர்களுடன் உரையாடியிருக்கலாம் அதனால் செலவும் குறைவு என தெரிவித்துள்ளார்.

GcD_MH3XIAA98_J.jpg

அனுரகுமார திசநாயக்கவின் யாழ்ப்பாண தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட சிங்கள மக்களிற்கு தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198409

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.