Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாயால் கெட்ட சிம்பு துரத்தும் ஆபரேஷன் சென்டிமென்ட்!

Featured Replies

தமிழ்சினிமாவின் எல்லா ஹீரோக்களிடமும் கதை சொல்லி, கடைசியில் சிம்புவிடம் சம்மதம் வாங்கியிருந்தார் கேமிராமேன் சரவணன். படத்தின் பெயரையும் சிம்புவுக்கு ஏற்றமாதிரியே சிலம்பாட்டம் என்று வைத்திருந்தார். காளையை முடித்துவிட்டு கெட்டவனை தொடருவார் சிம்பு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சிலம்பாட்டத்தின் அறிவிப்பு சின்ன குழப்பத்தை கொடுத்திருக்கிறது.

உண்மையில் கெட்டவன் படத்தை முடித்துவிட்டுதான் சிலம்பாட்டம் படத்தில் நடிக்க போவதாக இருந்தாராம் சிம்பு. ஆனால், கெட்டவன் ஏற்படுத்திய செலவு முதல் ஷெட்யூலிலேயே தயாரிப்பாளரின் கண்ணை கட்டியதால் முழு பட்ஜெட்டையும் சொல்லுங்க, பிறகு எடுக்கலாம் என்று சொல்லிவிட்டாராம். இப்படியெல்லாம் சொன்னால் சிம்புவுக்கு என்ன வரும்? ஆங்.. கோபம் வரும்! அப்படத்தின் இயக்குனர் இன்னும் பட்ஜெட் கொடுக்கவில்லையாம் தயாரிப்பாளரிடம். எப்படியும் தயாரிப்பாளர் சங்கம் தலையிட வேண்டி வரும் என்கிறார்கள் கெட்டவன் விஷயத்தில்.

இதற்கிடையில் சிலம்பாட்டத்தை ஆரம்பித்து விடலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம் சிம்பு. பஞ்சாயத்து முடிந்து வரும்போது பார்த்துக் கொள்வாராம் கெட்டவனை. இதற்கிடையில் விஜய் டி.வி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி வேறு ரூபத்தில் குடைச்சலை கொடுக்கும் போலிருக்கிறது சிம்புவுக்கு. நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களில் பலர் சிம்பு வீட்டுக்கு சென்று கண்டனக் குரல் கொடுக்க தயாராகி வருகிறார்களாம். காரணம், நிகழ்ச்சியில் வெற்றியடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் தன் அம்மா கமலா காமேஷக்கு செய்ய வேண்டிய ஆபரேஷன் ஒன்றை கடன் வாங்கி செய்து முடித்துவிட்டார் உமா ரியாஸ். அதற்குள்ளாக நிலைமை பல்டி அடித்துவிட்டது. சிம்புவின் வாய்பேச்சாலும், பிருத்திவிராஜின் கோபத்தாலும் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறது உமா-பிருத்வி ஜோடி. கமலா காமேஷின் ஆபரேஷன் சென்ட்டிமென்ட் பல தாய்மார்களை உசுப்பேற்றியிருக்கிறதாம்.

என்ன செய்யப்போகிறார் சிம்பு?

:unsure::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்... வெறி விறுவிறுப்பு... இதை வச்சு ஒரு மெகா தொடர் எடுக்கலாம்.

எனக்கு என்டைக்காவது பம்பர் பரிசு அடுக்கப்போகுது. எனக்கு யாராவது 10 லட்சம் தர முடியுமா?? என்ர அக்கவுன்ட் நம்பர் ப்ரைவேட் மெயில்ல அனுப்பி வைக்கிறன்.

நான் அந்த கிளிப் யுடியுபில் பார்த்தேன் அதில் சிம்பு மேல் எந்த பிழையும் அல்ல ஆபிரேசன் சென்டிமென்டினை கொன்டு போய் குப்பையில் போடுக தற்செயலாக போட்டியில் அவர் தோற்றிருந்தால் நிலமை என்ன ?சும்மா கதவிடாதயுங்கோ

simbu.jpg

சிம்பு உண்மையிலேயே கிரேட்!

ஒரு நிகழ்சியில்

நடுவர்களது தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டும்

அது விளையாட்டாக இருக்கட்டும்

திரைப்படமாக இருக்கட்டும்

கலையாக இருக்கட்டும்

இல்லை

வேறு எதுவாகவும் இருக்கட்டும்.

இதை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள்

போட்டிகளில் பங்கு பற்றுவதை தவிர்ப்பதே நல்லது!

சிம்பு

மனம் திறந்து போட்டி தீர்வு குறித்து மட்டுமல்ல

தனது குணாதிசயம் குறித்து கூட பேசுவதற்கு

கிடைத்த சந்தர்ப்பம்

அவரை வெறுத்தவர்களை கூட

வியக்க வைக்கும்

விரும்ப வைக்கும்.

இது வரை எனக்கு சிம்புவை பிடிக்காது.

இனி பிடிக்கும்.

ஊடகங்களில் வருவதெல்லாம்

உண்மைகளல்ல.

நேரில் பார்ப்பதே உண்மை!

சிம்பு

உள்ளொன்று வைத்து புறமொன்று

பேசத் தெரியாதவர்.

இந்த ஒளி வடிவில் அந்த நேர்மையை பார்க்க முடிகிறது.

தனது மனதில் பட்டதை சொல்கிறார்.

உண்மைக் கலைஞர்கள்

உணர்ச்சி வசப்படுபவர்கள்.

முன்னதை சுப்பர் என்று பாராட்டிய போது

ஏற்றுக் கொண்டவர்

பிடிக்கல்ல என்று சொன்னதை

ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?

யோசிக்க வேண்டிய கேள்வி?

ஜீனியர்ஸ்

ஜுனியர்ஸ் என்பதை மனதில் வைத்து

பரவாயில்லை என்று டான்ஸ் மாஸ்டர் சொன்னதிலிருந்தே

அவர் மழுப்பியிருக்கிறார் என்பது புலனாகிறது!

பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க

சிம்பு வோக் அவுட்டானது தப்பு!

இருந்தாலும்

எழுந்து வோக் அவுட்டான சிம்பு

திரும்பி வந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது.

பங்கு கொண்ட பப்லு வெளியேறியது

வேதனையான உறுத்தல்!

தவறு

அந்த வகையில்

சிம்பு வீம்பு அல்ல கொம்பு

இனி

பலர் சிம்புவின் குணத்தை புரிந்து கொண்டு

அன்பு காட்டுவார்கள் என்றே நினைக்கிறேன்.

இதோ அந்த நிகழ்ச்சியின் பிரச்சனைக்குரிய பகுதி:-

http://tamiltvshows.aiyoo.org/list.php?cat_id=5284

நன்றி!

அஜீவன் அண்ணா உங்களின் கருத்தே எனதும்

007 நான் தர ரெடி பிறகு என்னை சோகமா கவிதை எழுதுற நிலைமைக்கு கொண்டு வரமாட்டீங்க தானே :) !! மெகா தொடரில யாழ்கள மெம்பர்சையும் நடிக்க வைக்கிறீங்களோ!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதில் உள்ளதை சொல்லுறது தவறில்லை. ஆனா ஒரு கருத்து சொன்னா ஏன் நான் அந்தக்கருத்துடன் உடன்பட்டுள்ளேன் என்று அதனை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் சிம்பு சொன்ன பதில்: எனக்கு பிடிக்கலை! இது ஒரு பதிலா???

ஒரு உதைபந்தாட்டப் போட்டியில நடுவர் 5 வீரர்களிற்கு சிவப்பு அட்டை காட்டுகிறார். ஏன் என்று கேட்டால் எனக்கு அவர்களை பிடிக்கலை என்டு சொல்லுறது சரியா?

பிழையாக ஆடினால் அதை சொல்ல வேண்டும். ஆனா "எனக்கு பிடிக்கலை" என்பது நடுவராக இருக்க தகுதி இல்லாத ஒருவரால் தான் சொல்ல முடியும்.

அதே நேரம் மனசில நினைக்கிறத சொல்லுறது தவறில்லை. ஆனா அதுக்கு இடம், நேரம் எல்லாம் இருக்கு. நான் தெருவில நடந்து போறன். மற்ற பக்கத்தில ஒரு சுப்பர் பிகர் அவளின்ர அப்பாவோட வாறாள். உடனே நான் போய் "ஏய் நீ ஒரு சுப்பர் பிகர்" என்டு மனசில உள்ளத சொல்லுறதே? மற்றவங்கட மனசு புண் படாத மாதிரி எங்கட மனதில உள்ளத சொன்னால் தப்பில்லையே. சிம்பு அதை பண்ணவில்லை என்றே நான் கருதுகின்றேன்.

வடிவேலு சரியான கருத்து...

நீங்க ஆடினது நல்லா இல்லை எண்டு சொல்லியிருக்கலாம்.. நீங்க ஆடவேயில்லை எண்டது தப்பு..

சரியான ஆடலை எண்டா மதிப்பெண்கறைவு..

ஆடவேயில்லை எண்டா மதிப்பெண்ணே இல்லை..

சிம்முவின் அதிகப்பிரசங்கித்தனம் எல்லை மீறிப்போகிறத..

தனக்கு நடிக்கத்தெரியததெனக்சூறி ஒரு ஆண் கண்ணீர்விடுவது அசிங்கள்..அதை சிம்பு சொன்னது பெரிய அசிங்கம்..

இவரை யார் தண்டிப்பது.....!

ஒரு பிரபல தமிழ் நடிகர், இன்னொரு மிகப்பிரபல நடிகரின் மகளுக்கிடையேயான அலைபேசி உரையாடலை இன்று கேட்க நேர்ந்தது....இந்த ஒலித்துணுக்கு கடந்த சில நாட்களாய் இனையத்தில் உலவிவருவதை எத்தனை பேர் அறிவீர்கள் என தெரியவில்லை....

மிகவும் கீழ்தரமான நோக்கத்துடன், திருமணம் நிச்சயமான அந்த பெண்ணை தொலைபேசியில் பாலியில் ரீதியாய் துன்புறுத்தும் இந்த பேச்சுவார்த்தையின் போது அந்த பெண்ணின் தாயாரும் உடனிருக்கிறார்.அவர் அறியா வண்ணம் தாயிடம் நல்ல பிள்ளை மாதிரி பேசி அவர் அனுமதியுடன் பெண்ணிடம் அபாச அர்ச்சனை செய்வதை தொலைபேசியில் பதிவும் செய்திருக்கிறார்.

அந்த பெண்ணுடன் தான் பாலியல் உறவு கொண்டதாய் கூறி அதை அவர் வாயால் ஒப்புக்கொள்ளச்செய்து பின்னர் அவரை ப்ளாக்மெயில் செய்ய திட்டமிட்ட ஒரு சதிகாரனின் பேச்சாகவே அவரது பேச்சின் தொனி காணப்படுகிறது.கையறு நிலையில் அந்த பெண் கெஞ்சுவது பரிதாபமாய் இருக்கிறது.

இந்த நடிகர் சமீபத்தில் இன்னொரு நடிகையுடனான தனது தொடர்பினையும் அம்பலத்துக்கு கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.

இப்போது அந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயாகி தன் போக்கில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் இந்த பேச்சுவார்த்தையை இனையத்தில் கசியவிடுவது யார் செயலாய் இருக்குமென்பதை உங்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்....

இம்மாதிரியான மனவிகாரம் படைத்தவர்களை சட்டத்தின் வழி தண்டிக்க இயலுமா தெரியவில்லை...அதே நேரத்தில் இன்றைய நவநாகரீக மங்கையர் சுதந்திரம் என்கிற பேரில் வரம்பு மீறிவிட்டு பின்னர் இப்படி அல்லாடுவது தேவைதானா என்கிற கேள்வியும் எழாமலில்லை.

வயதின் வேகத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டு பின்னர் இவ்வாறு அவமானப்படுவது தேவைதானா....தனக்கு எல்லாம் கொடுத்து தன்னை சீராட்டி பாராட்டிய பெற்றோருக்கு இவர்கள் தரும் வெகுமதி தாங்கவெனா அவமானமும் மனவேதனையும்தான்....

வெளிவேஷம் போடும் அந்த நடிகர் மிகக்கடுமையாய் தண்டிக்கப்பட வேண்டியவரே...

இவரை யார் தண்டிப்பது...

சம்பந்தப்பட்ட ஒலித்துணுக்கை இங்கே இனைக்கலாம்தான்...ஆனால் மிகுந்த வேதனை தரும் அந்த உரையாடலை எனது சக பதிவர்கள் என் வழியாய் கேட்க வேண்டாமென தோன்றுவதால் தரவில்லை.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Posted by இரண்டாம் சொக்கன்...! at

இவரை யார் தண்டிப்பது.....!

ஒரு பிரபல தமிழ் நடிகர், இன்னொரு மிகப்பிரபல நடிகரின் மகளுக்கிடையேயான அலைபேசி உரையாடலை இன்று கேட்க நேர்ந்தது....இந்த ஒலித்துணுக்கு கடந்த சில நாட்களாய் இனையத்தில் உலவிவருவதை எத்தனை பேர் அறிவீர்கள் என தெரியவில்லை....

மிகவும் கீழ்தரமான நோக்கத்துடன், திருமணம் நிச்சயமான அந்த பெண்ணை தொலைபேசியில் பாலியில் ரீதியாய் துன்புறுத்தும் இந்த பேச்சுவார்த்தையின் போது அந்த பெண்ணின் தாயாரும் உடனிருக்கிறார்.அவர் அறியா வண்ணம் தாயிடம் நல்ல பிள்ளை மாதிரி பேசி அவர் அனுமதியுடன் பெண்ணிடம் அபாச அர்ச்சனை செய்வதை தொலைபேசியில் பதிவும் செய்திருக்கிறார்.

அந்த பெண்ணுடன் தான் பாலியல் உறவு கொண்டதாய் கூறி அதை அவர் வாயால் ஒப்புக்கொள்ளச்செய்து பின்னர் அவரை ப்ளாக்மெயில் செய்ய திட்டமிட்ட ஒரு சதிகாரனின் பேச்சாகவே அவரது பேச்சின் தொனி காணப்படுகிறது.கையறு நிலையில் அந்த பெண் கெஞ்சுவது பரிதாபமாய் இருக்கிறது.

இந்த நடிகர் சமீபத்தில் இன்னொரு நடிகையுடனான தனது தொடர்பினையும் அம்பலத்துக்கு கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.

இப்போது அந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயாகி தன் போக்கில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் இந்த பேச்சுவார்த்தையை இனையத்தில் கசியவிடுவது யார் செயலாய் இருக்குமென்பதை உங்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்....

இம்மாதிரியான மனவிகாரம் படைத்தவர்களை சட்டத்தின் வழி தண்டிக்க இயலுமா தெரியவில்லை...அதே நேரத்தில் இன்றைய நவநாகரீக மங்கையர் சுதந்திரம் என்கிற பேரில் வரம்பு மீறிவிட்டு பின்னர் இப்படி அல்லாடுவது தேவைதானா என்கிற கேள்வியும் எழாமலில்லை.

வயதின் வேகத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டு பின்னர் இவ்வாறு அவமானப்படுவது தேவைதானா....தனக்கு எல்லாம் கொடுத்து தன்னை சீராட்டி பாராட்டிய பெற்றோருக்கு இவர்கள் தரும் வெகுமதி தாங்கவெனா அவமானமும் மனவேதனையும்தான்....

வெளிவேஷம் போடும் அந்த நடிகர் மிகக்கடுமையாய் தண்டிக்கப்பட வேண்டியவரே...

இவரை யார் தண்டிப்பது...

சம்பந்தப்பட்ட ஒலித்துணுக்கை இங்கே இனைக்கலாம்தான்...ஆனால் மிகுந்த வேதனை தரும் அந்த உரையாடலை எனது சக பதிவர்கள் என் வழியாய் கேட்க வேண்டாமென தோன்றுவதால் தரவில்லை.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Posted by இரண்டாம் சொக்கன்...! at

இந்த ஒலித்துணுக்கை நானும் சில காலம் முந்தி கேட்டு எனது பதிவில் இணைத்து இருந்தேன் , இதை யூரூயிப் இல் இணைத்தவர் நான் போட்டு இரண்டு மணித்தியாலங்களில் அந்த இணைப்பை எடுத்து விட்டார்.

முதலில் சந்தேகம் இருந்தது , மிமிக்கிரி ஆக இருக்குமோ என்று ,,அவதானித்து கேட்டதில் உண்மையான ஒலித் தொகுப்பே.. அது சரியான படு கேவலமான மிரட்டலாக இருந்தது

-------------------------------------

---------------------------------

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொலைபேசி கலந்துரையாடல் கேட்டேன். இதில சிம்பு பண்ணினது எனக்கு சரி என்றே படுகிறது. எல்லாம் பண்ணீட்டு நீங்க வேற ஒருத்தனை தேடி போய்டுவீங்க. பசங்க நாங்க என்ன தான் பண்ணுற? சிம்புவின் வேதனை உணர முடிகிறது. அவர் பாவித்த சில சொற்கள் தவறாக இருக்கலாம். ஆனால் கருத்துக்கள் அனைத்தும் முத்துக்கள். நானா இருந்தா இதைவிட கேவலமா பேசி இருப்பன். என்ன நான் சொல்லுறது எனது புண் பட்ட இளைஞர்களே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.