Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த சிறிலங்கா அனுமதி: "டெய்லி நியூஸ்"

Featured Replies

திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த சிறிலங்கா அனுமதி: "டெய்லி நியூஸ்"

திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த சிறிலங்கா அனுமதித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தின் ஆங்கில நாளேடான "டெய்லி நியூஸ்" செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி:விபரங்களுக்கு

  • தொடங்கியவர்

திருகோணமலையில் அனல் மின் நிலம் அமைக்க மாற்று இடம் தேர்வு

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கைசாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி திருகோணமலையில் 500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காகன இரண்டு மாற்று இடங்களை தேர்வு செய்துள்ளதாக, இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ள இந்திய பொதுத் துறை நிறுவனமான, தேசிய அனல் மின் நிறுவனம் கூறியுள்ளது.

திருகோணமலை. சம்பூர் பகுதியில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவிருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக இந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு திட்டத்தை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

அனல் மின் நிலையத்தை அமைக்க தற்போது இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் எந்த இடத்தில் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது என்பது மூன்று வாரங்களில் முடிவு செய்யப்படும் என்றும் தேசிய அனல் மின் நிறுவனத்தின் தலைவர் சங்கரலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

பீ. பீ. சி தமிழோசை

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையின் வட பகுதியில் இந்திய அனல்மின் உலை தென்பகுதியில் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவின் பாரிய சக்தி உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின்சக்தி நிலையம் இலங்கையில் 500 மெகா வாட் நிலக்கரி அனல் மின் உலையை புதிய இடத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்படுமென்ற யோசனையால் முன்னர் அமைக்கத் திட்டமிட்டிருந்த இடத்திலிருந்து வேறு இடத்தில் அனல் மின் உலையை அமைப்பதற்கு யோசனை செய்து வருகிறது.

"திருகோணமலையின் வடக்குப் பகுதியில் இந்தப் புதிய அனல்மின் உலை அமைக்கப்படவுள்ளது. முன்னர் திருமலைக்கு தென்பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இடத்தை நாம் தேர்ந்தெடுத்துவிட்டோம். ஆரம்பகட்ட ஏற்பாடுகள் முடிவடைந்துவிட்டன. இப்போது சக்தி கொள்வனவு உடன்படிக்கையில் நாங்கள் கைச்சாத்திடவேண்டியுள்ளது" என்று இந்திய தேசிய அனல்மின் சக்தி நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்றதிகாரி ஒருவர் தெரிவித்ததாக இணையச் செய்தியொன்று நேற்றுத் தெரிவித்தது. அவர் தன்னை இனங்காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

இந்த சக்தி உற்பத்தித் திட்டத்தில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றமை அயல்நாடுகளுடன் அரசியல், பொருளாதார ரீதியில் தன்னை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையாக கருதப்படுகிறது. இரு நாடுகளும் மேற்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் திருகோணமலைக் குடாவில் இந்திய கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும். அத்துடன் இந்திய தேசிய அனல் மின் உலை மூலம் இலங்கையின் சக்தி விநியோகத்தை அதிகரிக்க முடியும் என்று கருதப்படுகிறது.

இலங்கையின் மொத்த சக்தி பிறப்பாக்கியின் அளவு 2,500 மெகா வாட்டாகும். இந்தியாவின் மொத்த சக்தி உற்பத்தி 1 இலட்சத்து 30 ஆயிரம் மெகா வாட்டாகும்.

இந்திய தேசிய அனல் மின் நிறுவனம் 1965 கோடி ரூபாவில் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளது. இது இலங்கை மின்சார சபையுடன் இணைந்து கூட்டாக மேற்கொள்ளப்படும் செயற்றிட்டமாகும். 2011 இல் இது ஆரம்பிக்கப்படும். 70: 30 என்ற விகிதத்தின் அடிப்படையில் இந்திய அனல்மின் சக்தி உற்பத்தி நிறுவனமும் இலங்கை மின்சார சபையும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன.

வருடாந்தம் 2.5 மில்லியன் தொன் நிலக்கரியை இறக்குமதி செய்து இந்தத் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவிலிருந்தே இந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்படும்.

- தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.