Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனாவில் மகப்பேற்று விடுதித் தொகுதி நிறுவ சுவிட்சர்லாந்திடம் நிதி உதவி கோரிக்கை!

adminDecember 1, 2024
01.jpg

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜாவுடன் சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவராலய குடிபெயர்வுக்கான முதனிலை செயலாளர் டொரிஸ் மொனொர் தலைமையிலான பிரமுகர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை (30.11.24) சந்தித்து கலந்துரையாடினர்.

அக் கலந்துரையாடலில் தூதுவராலய பிரமுகர்கள் இலங்கையில் அனைத்து சமூகங்களினையும் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றமொன்றினைக் கொண்டுவந்தமையையிட்டு தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியதுடன் ஜனாதிபதியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களினை நடைமுறைப்படுத்துவதற்கான தங்களின் முழுமையான ஆதரவினையும் வெளிப்படுத்தினர்.

அத்துடன் யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பிலும் அதற்கு தாங்கள் எந்த வகையில் உதவமுடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினருடன் விரிவாகக் கலந்துரையாடினர்.

மேலும் வைத்தியகலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா , யாழ் போதனா வைத்தியசாலையில் சகல வசதிகளுடன் கூடிய மகப்பேற்று விடுதித் தொகுதியொன்றினை நிறுவுவதற்கான சுவிட்சர்லாந்து நாட்டின் நிதி அனுசரணையையும் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரமுகர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

அத்துடன் சமகால அரசியல் நிலைமை தொடர்பிலும் தூதுவராலய பிரமுகர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டனர்.

 

https://globaltamilnews.net/2024/208881/

 

  • கருத்துக்கள உறவுகள்

சுவிற்ஸர்லாந்தின் குடிப்பெயர்வு செயலக அதிகாரிகள் வட, கிழக்கில் கள ஆய்வு; சிறிதரன், பவானந்தராஜா உட்பட பலருடன் சந்திப்பு

01 DEC, 2024 | 02:32 PM
image

ஆர்.ராம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிட்சர்லாந்தின் நீதி மற்றும் பொலிஸ் பெடரல் திணைக்களத்தின் கீழ் செயற்படும் குடிப்பெயர்வுக்கான இராஜங்கச் செயலகத்தின் அதிகாரிகளான மெய்ன்ரட் லிண்ட், ஆண்ட்ரியாஸ் ஷ்மிட் மற்றும் ஜீனைன் மைர் உட்பட சுவிட்சர்லாந்து தூதரகத்தின் டோரிஸ் மேனர் மற்றும் சுஷாந்தி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வடக்கு, கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டு கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்திருந்ததோடு அங்குள்ள சிவில் தரப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடியுள்ளனர். அத்துடன்,  மாவீரர்கள் நாளன்று நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னுள்ள சூழல்களையும் கவனத்தில் கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாணத்துக்குச் சென்றவர்கள் அங்கும் சிவில் தரப்பினர்,   வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் உள்ளிட்டோரைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன்போது சுவிட்சர்லாந்துக்கு கிடைக்கும் குடியேற்றக்கோரிக்கைகளில் 40சதவீதமானவை இலங்கையிலிருந்து கிடைக்கின்றன என்றும் அவற்றில் 20 முதல் 30சதவீதமானவை வடக்கு இளையோரிடமிருந்தே வருவதாகவும் குறித்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அச்சமயத்தில்ரூபவ் அரசியல் ரீதியாக காணப்படுகின்ற நிச்சயமற்ற நிலையும் ,  தொழில்வாய்ப்பு,  உயர்கல்வி உள்ளிட்ட விடயங்கள் காரணமாகவும் அவ்விதமான நிலைமைகள் ஏற்படுவதாக சிவில் சமூகத் தரப்பினர் குறிப்பிட்டதோடுரூபவ் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதும் இளையோருக்கான அச்சமான வாழ்க்கைக்கு காரணமாக அமைக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து,  தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவாந்தராஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரையும் அவர்கள் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/200115

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.