Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16 DEC, 2024 | 07:22 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரத்தியேக குளிர் அறையில் இரண்டு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் சட்டமாணி பரீட்சை எழுதினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை இரத்துச் செய்து முறைகேடான செயற்பாட்டுக்கு ஒத்தாசையளித்த அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதாக இலஞ்ச, ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷாரா தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்கிழமை (16) முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 11 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டமாணி பரீட்சைக்கு தோற்றிய விவகாரம் இன்று வரை பேசப்படுகிறது. முறையற்ற வகையில் பரீட்சைக்கு தோற்றியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகின்ற நிலையில் வெளிநாட்டில் இருந்து இலங்கையர் ஒருவர் நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளார்.

11 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டமாணி பரீட்சையின் போது  பிரத்தியேக குளிர் அறையில் இருந்தவாறு நாமல் ராஜபக்ஷ தோற்றியதாக குறித்த நபர் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடளித்ததாகவும், அதனை அவர் கண்டு கொள்ளவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து  சட்டக்கல்லூரியின் அதிபரிடம் குறிப்பிடுவதற்கு சென்றபோது அவர் இருக்கவில்லை என்றும் கல்லூரியின் பதிவாளருக்கு குறிப்பிட்ட போதும் அவரும் அந்த முறைப்பாட்டை கவனத்திற் கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அப்போதைய நீதியமைச்சின் செயலாளர் சுஹத் கம்லத்திடம் குறிப்பிட்ட போதும் அவர் அந்த முறைப்பாட்டை எழுத்துமூலமாக பெற்றுக் கொள்ளவில்லை என்றும், அதன் பின்னர் இவ்விடயம் குறித்து கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்க சென்ற போது அங்கும் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

2010.12.03 ஆம் திகதியன்று  பொலிஸ்மா அதிபரை சந்தித்து முறைப்பாடளிக்க முயற்சித்ததாகவும், அதுவும் பயனலிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடளிப்பதற்கு சென்ற வேளை பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்குவது இயல்பானது என்று அதிகாரிகள் குறிப்பிட்டதாக அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.முறைப்பாடளிக்க முயற்சித்ததால் தனக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் அதனால் தான் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த அரசாங்கத்தை திருடர்கள் பிடித்துக் கொண்டார்களா அல்லது திருடர்களை அரசாங்கம் பிடித்துக் கொண்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. நாமல் ராஜபக்ஷ  பிரத்தியேக குளிர் அறையில் இரண்டு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் சட்டமாணி பரீட்சை எழுதினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை இரத்துச் செய்து முறைகேடான செயற்பாட்டுக்கு ஒத்தாசை அளித்த அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/201453

  • கருத்துக்கள உறவுகள்

சகல பாராளமன்ற உறுப்பினர்களின் பரீட்சை சான்றிதல்களும் சரிபார்க்கப் படவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, RishiK said:

சகல பாராளமன்ற உறுப்பினர்களின் பரீட்சை சான்றிதல்களும் சரிபார்க்கப் படவேண்டும். 

அப்ப பார் சிறீதரன் எடுத்துப் பாஸ்பண்ணின GAQவுக்கும் ஆப்புத்தானா?😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாலி said:

அப்ப பார் சிறீதரன் எடுத்துப் பாஸ்பண்ணின GAQவுக்கும் ஆப்புத்தானா?😂

இல்லையே அவர் பிஏ, எம்-எட் பட்டதாரி 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, RishiK said:

இல்லையே அவர் பிஏ, எம்-எட் பட்டதாரி 

எந்த யூனிவேர்சிட்டியில எத்தினையாம் ஆண்டுவாக்கில பட்டம் பெற்றவராம்?

தயவுசெய்து விக்கிபீடியா ஆதாரம் வேண்டாம்!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாலி said:

எந்த யூனிவேர்சிட்டியில எத்தினையாம் ஆண்டுவாக்கில பட்டம் பெற்றவராம்?

தயவுசெய்து விக்கிபீடியா ஆதாரம் வேண்டாம்!

யாழ் பல்கலைக்கழகம், வெளிவாரிப்பட்டதாரி என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் GAQ

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாலி said:

அதுதான் GAQ

அது முதல் வருடப் படிப்பு, மூன்று வருடம் முடித்தால் , பிறகு உள்வாரிக்கும் வெளிவாரிக்கும் வித்தியாசம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நாமல் ராஜபக்ஷ  பிரத்தியேக குளிர் அறையில் இரண்டு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் சட்டமாணி பரீட்சை எழுதினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

 

சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று நாமலை அறிக்கை விடச் சொன்ன பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களை நாமல் இப்பொழுது தேடிக் கொண்டிருப்பார் போல...................🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று நாமலை அறிக்கை விடச் சொன்ன பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களை நாமல் இப்பொழுது தேடிக் கொண்டிருப்பார் போல...................🤣

நாமல் அப்படி நடக்கவில்லை என்று சொல்லுறார்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, RishiK said:

நாமல் அப்படி நடக்கவில்லை என்று சொல்லுறார்.

அவர் அப்படி நடக்கவில்லை என்று முன்னரும் சொல்லியிருக்கின்றார். குற்றம் சொல்பவர்களும் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். அவருடன் பாடசாலையில், கல்லூரிகளில் படித்தவர்கள் என்று பலர் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்............. நாமலிடம் பரீட்சைகளில் சித்தி எய்தும் திறமை அவ்வளவாகக் கிடையாது என்பது ஒரு அபிப்பிராயமாகவே இருந்து வருகின்றது.

அவருடைய சாதாரணதர, உயர்தர மற்றும் வேறும் சில பரீட்சை முடிவுகள் பொதுவெளியில் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

நாமலிடம் பரீட்சைகளில் சித்தி எய்தும் திறமை அவ்வளவாகக் கிடையாது என்பது ஒரு அபிப்பிராயமாகவே இருந்து வருகின்றது

கல்வித்தகமை அரசியலுக்கு தேவையில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தெரிந்தாலே போதும். ஏன் கல்வி கற்றவர்கள் செய்யும் வேலையை, சேவையை அங்கு யாரும் செய்வதில்லை. அடாவடி பேசுவபவர், ஏமாற்றுபவர், கதையை, கொள்கையை திரிப்பவர்  வக்கீலுக்கு படிக்கத்தேவையில்லை. ஆனால் நாமலின், அவரின் சகோதரர்களின் மற்ற திறமைகளை கேட்டுப்பாருங்கள்; அவர்களின் கல்வித்தகமையை தாண்டியதாக இருக்கும். இவர்கள் செய்யும் கொலை கொள்ளைகளுக்கு அரசியல் பெயர், துணை.        

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, satan said:

கல்வித்தகமை அரசியலுக்கு தேவையில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தெரிந்தாலே போதும். ஏன் கல்வி கற்றவர்கள் செய்யும் வேலையை, சேவையை அங்கு யாரும் செய்வதில்லை. அடாவடி பேசுவபவர், ஏமாற்றுபவர், கதையை, கொள்கையை திரிப்பவர்  வக்கீலுக்கு படிக்கத்தேவையில்லை. ஆனால் நாமலின், அவரின் சகோதரர்களின் மற்ற திறமைகளை கேட்டுப்பாருங்கள்; அவர்களின் கல்வித்தகமையை தாண்டியதாக இருக்கும். இவர்கள் செய்யும் கொலை கொள்ளைகளுக்கு அரசியல் பெயர், துணை.        

நீங்கள் சொல்வது சரியே..... 

ஆனாலும், சிலர் தலைக்கு  ஒரு விக் வைத்திருப்பார்கள், உதாரணம்: ஸ்டாலின். அந்த விக்கால் அவருக்கு என்ன பயன், அதன் தேவை தான் என்ன..... அது போலவே பட்டங்களும் சிலருக்கு தேவைப்படுகின்றன போல...

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் சொல்வது சரியே..... 

ஆனாலும், சிலர் தலைக்கு  ஒரு விக் வைத்திருப்பார்கள், உதாரணம்: ஸ்டாலின். அந்த விக்கால் அவருக்கு என்ன பயன், அதன் தேவை தான் என்ன..... அது போலவே பட்டங்களும் சிலருக்கு தேவைப்படுகின்றன போல...

உண்மையை மறைக்க அது உதவுமென சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கிறார்கள். தங்கள் நிஜத்தை அவர்களே விரும்பவில்லை, அதை மறைக்க ஏதோ ஒன்று அவர்களுக்கு தேவைப்படுகிறது. உண்மையாக கற்றவர்கள் தம்பட்டம் செய்ய மாட்டார்கள்.  இவைகளை காட்டியா இவர்கள் மக்களிடம் வாக்கு கேட்டார்கள்? அல்லது இவைகளை பார்த்தா மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்? இவர்களின் வாக்குறுதிகளை நம்பித்தானே. அதைத்தானே அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடுள்ளவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகின்ற நிலையில் வெளிநாட்டில் இருந்து இலங்கையர் ஒருவர் நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளார்.

large.IMG_7899.jpeg.44da5aa2d57c22199400

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.