Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது

adminDecember 19, 2024
douglas.jpg

இந்திய பிரதமர் நரேந்திர மோடி – இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் வினவவுள்ளேன் என முன்னாள் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம்  வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது இலங்கை – இந்தியா இடையே கடற்றொழிலாளர்கள் விடயம் தவிர இணக்கம் காணப்பட்ட அல்லது கைச்சாத்திடப்பட்ட ஏனைய விடயங்கள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை வலுவூட்டியதாகவே அமைந்துள்ளது.  அதனடிப்படையில் குறித்த செயற்பாட்டை நான் வரவேற்கின்றேன்.

இதேவேளை கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகளில் எதுவிதமான தீர்வுகளையும் குறித்த பயணத்தின்போது எட்டப்பட்டதாக தெரியவில்லை.  இதேநேரம் மனிதாபிமான அடிப்படையில் குறித்த விடயத்தை அணுக வேண்டும் என்ற நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறாயின் மனிதாபிமான நிலைப்பாடு என்பது என்ன என்பதே இன்றுள்ள கேள்வியாக இருக்கின்றது.

அதாவது இலங்கையின் கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடியாளர்கள் வந்து மீன்களை பிடித்து செல்வதற்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யாதிருக்க வேண்டும் என்பதே இந்த மனிதாபிமான நிலைப்பாடாக இருக்க வேண்டும்.

ஆனால் எனது நிலைப்பாடு அன்றும் சரி இன்றும் சரி எமது கடற்பரப்பிற்குள்  சட்டவிரோதமாக இந்திய மீன்பிடியாளர்கள் உள்நுழைந்து மீன்களை பிடிக்கவோ எமது வளங்களை அபகரிக்கவோ ஒரு வினாடி கூட இடமளிக்க கூடாதென்பதாகவே இருக்கின்றது. இதை நான் பொது வெளியிலும் பல தடவைகள் கூறியிருக்கின்றேன்.

அதுமட்டுமல்லாது கடந்தகாலம் நான் ஆட்சியில் இருந்தபோது இலங்கை இந்திய வெளிவிவகார உயரதிகாரிகள் கலந்துகொண்ட கலந்துரையாடிலின்போது சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அப்போதும் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எந்தவகையிலும் இந்திய சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளுக்கு இடம் கொடுக்க முடியாதென நான் கூறியிருந்தேன்.

அந்தவகையில் தற்போது சிலர் ஊடகங்களில் கூறுவது போன்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது கடல் வளத்தையோ கடற்பரப்பையோ இந்திய மீன்பிடியாளர்களுக்கு இடங்கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை கொடுப்பதற்கு இடமளிக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

 

 

https://globaltamilnews.net/2024/209422/

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா .....பாணியில் .......முன்னாள் இடதுசாரி தோழர் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது

அப்ப உங்களின் கடற்தொழில் அமைச்சர் காலத்தில் இந்தியர்கள்  ஈழக்கடலில் மீன் பிடிக்கும் போது வீணை வாசித்துக்கொண்டிருந்தீர்களா 😁

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு லேட்டாகவா இதைச் சொல்வது............. கடல் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் எல்லாம் இப்பொழுது புதிய கடல் தொழில் அமைச்சரின் பின்னால் போய் விட்டார்கள்................ என்ன டக்ளஸ் அண்ணை, நீங்கள்...............🤣.

கடலுக்குள் பஸ்ஸை தாட்டது, வடமராட்சி கிழக்கு கடற்கரையில் மண்ணை அள்ளினது என்று ஏதாவது விசாரணையை ஆரம்பிக்கப் போகின்றார்கள்........ சும்மா சும்மா சவுண்டு விட்டால்............... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, ரசோதரன் said:

கடலுக்குள் பஸ்ஸை தாட்டது,

கடலுக்குள்ல நாங்கள் பஸ்ச தாட்டது டைட்டானிக் மாதிரி படம் எடுக்க. இது தெரியாமல் ரசோ தம்பி என்னென்னமோ எல்லாம் பேசிக்கிட்டு....:cool:

Kidney Vadivelu GIF - Kidney Vadivelu Drink - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

கடந்தகாலம் நான் ஆட்சியில் இருந்தபோது இலங்கை இந்திய வெளிவிவகார உயரதிகாரிகள் கலந்துகொண்ட கலந்துரையாடிலின்போது சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அப்போதும் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எந்தவகையிலும் இந்திய சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளுக்கு இடம் கொடுக்க முடியாதென நான் கூறியிருந்தேன்.

அதன் பின்னும் நடந்தது, இன்னும் தொடருது. இவர் ஏன் அதை நிறுத்தவில்லை? அப்போ, இவர் அந்த பிரச்சனையை சரியாக கையாளவில்லை தீர்க்கவில்லை.

6 hours ago, கிருபன் said:

மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் வினவவுள்ளேன்

எல்லோருக்கும் அனுரமேல் காதல். எப்போ கூப்பிடுவார், குசலம் விசாரிக்கலாமென தவியாய் தவிக்கிறார்கள். தாங்கள் கடந்த எஜமானருடன் கூடிகூத்தடித்துவிட்டு இப்போ எல்லாம் அனுரா தலையில். அவரொருத்தர் அனுரா  சொன்னதை செய்யேல்லை என்கிறார். நாட்டில் எங்கு திரும்பினாலும் பிரச்சினை, ஊழல், பொருளாதாரப்பிரச்சனை தலைதூக்க முடியவில்லை. முன்பிருந்தவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. அவர்கள் ஆட்சி முடிந்து போகும்போதோ அல்லது மீண்டும் ஆட்சியேறியபோதோ யாரும் கேள்வி கேட்க்காமல் நிபந்தனையில்லா ஒத்துழைப்பு கொடுத்து, நாட்டை அழித்தார்கள் சுருட்டினார்கள்.  அனுர வந்தது வரேல்லை சவால் விடுகிறார்கள், எச்சரிக்கிறார்கள், காலக்கெடு விதிக்கிறார்கள்,குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.  இதுக்கு அனுரா மசியாவிட்டால், பாராட்டிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்று, ஒன்று சேர அழைப்பெடுப்பார்கள். இதெல்லாம் இவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யாமல் தோற்றவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் தம்மை பெரியவர் என காட்டும் மாயை.    

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியில் கூட்டாச்சி- இல்லா விட்டாலும்- மாகணத்தில் சுயாட்சிதான். 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2024 at 10:29, குமாரசாமி said:

அப்ப உங்களின் கடற்தொழில் அமைச்சர் காலத்தில் இந்தியர்கள்  ஈழக்கடலில் மீன் பிடிக்கும் போது வீணை வாசித்துக்கொண்டிருந்தீர்களா 😁

அப்பொழுது அவர் மத்திய அமைச்சராக இருந்தவர்...தற்பொழுது மாகாண முதலமைச்சராக வர முயற்சி செய்கிறார் போல‌

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளசு அவர்களுக்கு ஞானம் பிறப்பதுபோல் தெரிகிறது, பிறக்குமா? புத்தபெருமான் ஞானம்பெற எல்லாவற்றையும் துறந்தார். இவரால் அதுவும் அடாத்தாக அபகரிக்கப்பட்ட ஒரு தியேட்டரைக்கூட துறக்கமுடியவில்யே!!🤔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.