Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் இறப்புக்கு இப்போது வரை காரணம் தெரியவில்லை

தனது கருத்துள்ள நகைச்சுவைகளால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் சின்ன கலைவாணர் விவேக். அவர் இறந்துவிட்டாலும், அப்படி ஒரு நிகழ்வு நடந்தது போலவே தெரியவில்லை என்றே கூறலாம்.

இப்போது வரை அவரது நகைச்சுவை பல இடங்களில் பேசுவதுண்டு, நியாபகப்படுத்துவதுண்டு. இப்படி ஒரு சூழலில் அவர் உயிரிழந்தது சினிமாவுக்கு பேரிழப்பாக உள்ளது.

இந்த நிலையில் விவேக் மனைவி அளித்த பேட்டியில், விவேக் மரணம் இன்று வரை என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை.

அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். உடலுக்கு தேவையானதை பார்த்து செய்வார். கொரோனா சமயத்தில் அனைவரும் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.

விவேக்கும் தடுப்பூசி போடலாமா வேண்டாமா என பலரிடம் ஆலேசானை நடத்தினார். இதனிடையே வெளிநாட்டில் சூட்டிங் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது, ஊடகத்தினர் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

ஆனால் மறுநாள் அனைவருக்குமே பேரிடியாக அந்த செய்தி வந்தது. கொரோனா காலக்கட்டத்தில் கூட நடைபயிற்சியை மேற்கொண்டார். வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவர் ஏன் இறந்தார் என்பது இன்று வரை காரணம் எனக்கு தெரியவில்லை.

ஆனால் கொரோனா தடுப்பூசியை நான் குறை சொல்லவில்லை. அவர் எல்லோர் முன்பு, தடுப்பூசியை போட்டுக் கொண்டது அவர் போட்டால் எல்லாரும் போடுவார் என்ற விழிப்புணர்வுதான். தடுப்பூசி போட்டவர்கள் யாரும் இறக்கவில்லை, அதனால் விவேக் இறப்புக்கு தடுப்பூசி காரணம் என கூறமுடியாது என தெரிவித்தார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=197446

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

விவேக் மனைவி அளித்த பேட்டியில், விவேக் மரணம் இன்று வரை என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை.

நான் யாழ்களத்தில் படித்த இந்த செய்தியை இந்தியாவை பற்றி அறிவு கொண்ட  எம்மவர்களிடம் தெரிவித்த போது இல்லையே உயர் இரத்த அழுத்தம் வந்து மாரடைப்பினால் அவர் இறந்தது ஏற்கெனவே தெரிந்தது என்றார்கள்.
இப்படியான இறப்புக்கள் வெளிநாடுகளிலும் நிறைய நடக்கின்றன.
 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2024 at 15:45, ஏராளன் said:

அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். உடலுக்கு தேவையானதை பார்த்து செய்வார். கொரோனா சமயத்தில் அனைவரும் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.

விவேக்கும் தடுப்பூசி போடலாமா வேண்டாமா என பலரிடம் ஆலேசானை நடத்தினார். இதனிடையே வெளிநாட்டில் சூட்டிங் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது, ஊடகத்தினர் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

ஆனால் மறுநாள் அனைவருக்குமே பேரிடியாக அந்த செய்தி வந்தது. கொரோனா காலக்கட்டத்தில் கூட நடைபயிற்சியை மேற்கொண்டார். வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவர் ஏன் இறந்தார் என்பது இன்று வரை காரணம் எனக்கு தெரியவில்லை.

ஆனால் கொரோனா தடுப்பூசியை நான் குறை சொல்லவில்லை. அவர் எல்லோர் முன்பு, தடுப்பூசியை போட்டுக் கொண்டது அவர் போட்டால் எல்லாரும் போடுவார் என்ற விழிப்புணர்வுதான். தடுப்பூசி போட்டவர்கள் யாரும் இறக்கவில்லை, அதனால் விவேக் இறப்புக்கு தடுப்பூசி காரணம் என கூறமுடியாது என தெரிவித்தார்.

தனிப்பட்ட ஒவொருவரும் கண்காணிப்பில் உள்ளோம் ஆகவே இரண்டு மாதங்களுக்கு ஒரு புது ஐடியை பார்வையில் இடுவது நல்லது .

உதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மெயில் ஐடியை மாற்றுவது .

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2025 at 20:16, பெருமாள் said:

தனிப்பட்ட ஒவொருவரும் கண்காணிப்பில் உள்ளோம் ஆகவே இரண்டு மாதங்களுக்கு ஒரு புது ஐடியை பார்வையில் இடுவது நல்லது .

உதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மெயில் ஐடியை மாற்றுவது .

 

கொஞ்சம் விளக்கமாய் கூறுங்கள் @பெருமாள் உங்களை யார் கண்காணிப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்? நடிகர் விவேக் எவரது கண்காணிப்புக்கு உள்ளாகினார்?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நியாயம் said:

 

கொஞ்சம் விளக்கமாய் கூறுங்கள் @பெருமாள் உங்களை யார் கண்காணிப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்? நடிகர் விவேக் எவரது கண்காணிப்புக்கு உள்ளாகினார்?

பல விடயங்கள் சொல்லலாம் . விவேக் மீடியாவில் உச்சகட்ட வெளிசத்தில் இருந்தவர் .

 

1. சுசிர் பாலாஜியின் கொலையா தற்கொலையா தெரியாது  அவர் என்ன சொன்னார் a1 வாடிக்கையாளர்கள் இருந்தே தரவு திருட்டு நடை பெறுகிறது என்று .

அதே போல் சில கேள்விகளுக்கு விடை தெரியவில்லை யாழ் உறவுகளுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் .

2.குறைந்த விலையில் மொபைல் டீல் பிராட் பாண்ட் டீல் கிடைக்கும் சில வருடங்களில் சராசரி விலையையும் விட அதிக பணம் நமது பாங்கில் எடுத்து கொள்கிறார்கள் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் குறைந்தது ஒரு மணி நேரம் காக்க வைப்பார்கள் இணைப்பு வாங்க போகையில் உள்ள வேகம் இந்த பிரச்னையை சொல்லி வெளியேற போகையில் உள்ள வேகத்தையும் கவனியுங்கள் .

3. ஒரு பொருளை வோசிங் மிசினை வாங்க முடிவு செய்து குடும்பத்தாருடன் கதைத்து போனில் உள்ள முக நூலை திறந்தால் வோசிங் மிசின் விளம்பரம் வருவது தற்செயல் ஆனதா ?

4.நமது வீட்டின் பின்புறம் ஆப்பிள் மரங்கள் உள்ளன நவம்பரில் குளிர் தொடங்கி யவுடன் பழம்கள் கொட்டி மரமும் மொட்டையாகி நிக்கும் அந்த கீழே விழுந்த பழங்களை அள்ளி வைப்பது ஒவ்வொரு விண்டரிலும் பெரிய வேலை ஆனால் சுப்பர் மார்கெட்களில் விண்டர் பொழுதுகளிலும் ஆப்பிள் பழம் விற்கிறார்களே எப்படி ?

5. gmail,ஹாட் மெயில்  போன்றவை எமக்கு இலவசமாக தருகிறார்கள் அதனால் அவர்களுக்கு என்ன லாபம் ?

இப்படி நிறைய இருக்கின்றன கேள்விகளின் விடையில் உங்களுக்குரிய பதில் இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

பல விடயங்கள் சொல்லலாம் . விவேக் மீடியாவில் உச்சகட்ட வெளிசத்தில் இருந்தவர் .

 

1. சுசிர் பாலாஜியின் கொலையா தற்கொலையா தெரியாது  அவர் என்ன சொன்னார் a1 வாடிக்கையாளர்கள் இருந்தே தரவு திருட்டு நடை பெறுகிறது என்று .

அதே போல் சில கேள்விகளுக்கு விடை தெரியவில்லை யாழ் உறவுகளுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் .

2.குறைந்த விலையில் மொபைல் டீல் பிராட் பாண்ட் டீல் கிடைக்கும் சில வருடங்களில் சராசரி விலையையும் விட அதிக பணம் நமது பாங்கில் எடுத்து கொள்கிறார்கள் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் குறைந்தது ஒரு மணி நேரம் காக்க வைப்பார்கள் இணைப்பு வாங்க போகையில் உள்ள வேகம் இந்த பிரச்னையை சொல்லி வெளியேற போகையில் உள்ள வேகத்தையும் கவனியுங்கள் .

3. ஒரு பொருளை வோசிங் மிசினை வாங்க முடிவு செய்து குடும்பத்தாருடன் கதைத்து போனில் உள்ள முக நூலை திறந்தால் வோசிங் மிசின் விளம்பரம் வருவது தற்செயல் ஆனதா ?

4.நமது வீட்டின் பின்புறம் ஆப்பிள் மரங்கள் உள்ளன நவம்பரில் குளிர் தொடங்கி யவுடன் பழம்கள் கொட்டி மரமும் மொட்டையாகி நிக்கும் அந்த கீழே விழுந்த பழங்களை அள்ளி வைப்பது ஒவ்வொரு விண்டரிலும் பெரிய வேலை ஆனால் சுப்பர் மார்கெட்களில் விண்டர் பொழுதுகளிலும் ஆப்பிள் பழம் விற்கிறார்களே எப்படி ?

5. gmail,ஹாட் மெயில்  போன்றவை எமக்கு இலவசமாக தருகிறார்கள் அதனால் அவர்களுக்கு என்ன லாபம் ?

இப்படி நிறைய இருக்கின்றன கேள்விகளின் விடையில் உங்களுக்குரிய பதில் இருக்கும் .

 

கலைஞர் விவேக் விடயத்தில் நீங்கள் கூறவருவது என்ன? அவரது மறைவு இயற்கையானது அல்ல, கொலை என கருதுகின்றீர்களா? கொலை என்றால் கொலையாளிகள் யார்?

சமூக ஊடகத்தில் நீங்கள் அங்கத்துவம் பெற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறே மின்னஞ்சல் பாவனையை இயலுமான அளவு தவிர்க்கலாம்.

வர்த்தக மயப்படுத்தப்பட்டுள்ள இன்றைய உலகில் நான், நீங்கள் எல்லோருமே கண்காணிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களே. எமக்கு புலப்படாமல் ஆயிரம் விடயங்கள் நடக்கலாம். எமது கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்கள் பற்றி நாம் என்னதான் செய்யமுடியும்? கைத்தொலைபேசி, சமூக ஊடக பாவனை இவற்றை எமது தேவை, வசதி, நன்மைகள் கருதி தொடர்கின்றோம். எமது பாவனை மூலம் மற்றவர்களும் பயன்பெறலாம். 

ஆனானப்பட்ட அமெரிக்க அரசின் உள்ளக நிர்வாக விடயங்கள், தகவல்கள் பற்றிய கோப்புக்களையே சைனாக்காரன் உட்பட பலர் நோண்டிப்பார்க்க முயற்சி செய்கின்றார்கள். எமது இலவச ஈமெயில் கணக்குகள் எல்லாம் எந்த மூலைக்கு? 

ஈமெயில் முகவரிகளை அடிக்கடி மாற்றுவது உங்கள் மீதான சந்தேகத்தையே நிறுவனங்களுக்கு அதிகரிக்கும். இவ்வாறான செயற்பாடு மூலம் நீங்கள் தேவை இல்லாமல் உங்களை நோக்கிய ஒரு புலனாய்வுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கின்றீர்கள் என எண்ணுகின்றேன். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.