Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

“போதைப்பொருளை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக” பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இதனைத் தெரிவித்த அவர்,புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் 2014 ஆம்  ஆண்டு  352 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

தற்போது அங்குள்ள 92 கடைகளில் 80% கடைகள், சேதமடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக அங்குள்ள  மின் விளக்குகள் செயலிழந்து காணப்படுகின்றன.  குறித்த பகுதி அசுத்தமாகக் காணப்படுவதோடு,  துர்நாற்றமும்  வீசி வருகின்றது. அத்துடன் அப்பகுதியில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன” இவ்வாறு சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1413714

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

சுதந்திரம் கொடுத்த உடனேயே யாழில் தையல்கடைக்குள் புகுந்து தன்னோடு உறவுக்கு வருமாறு பொலிசார் ஒருவர் பிரச்சனை கொடுக்கிறார்.

அவரைப் பிடித்து கொண்டு போனவரை அடிக்கப் போகிறார்.

பொறுப்பதிகாரியோ அறைக்குள் அழைத்து சமரசம் செய்கிறார்.

https://tamilwin.com/article/police-called-inappropriate-relationship-jaffna-1735040554

யாழ்ப்பணம் - காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் தகாத உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று (24) காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்றுள்ளார்.

தகாத உறவு

 

இதன்போது தையலகத்தில் பணிபுரியும் பெண்களை தகாத உறவுக்கு வருமாறு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் வற்புறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யாழில் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைப்பு! | Police Called Inappropriate Relationship Jaffna

 

தொடர்ந்து கடைக்கு வந்த இரு யுவதிகளிடமும் தன்னுடன் தகாத உறவுக்கு வருமாறு அந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொச்சைத் தமிழில் கேட்டுள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த தையலக பெண் ஒருவர் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்த நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கபட்டு பொதுமக்களால் முச்சக்கர வண்டி மூலம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பெண்ணின் உறவு

இதேவேளை பெண்ணின் உறவினர் ஒருவர் சம்பவம் தொடர்பான காணொளியும் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாழில் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைப்பு! | Police Called Inappropriate Relationship Jaffna

இதனையடுத்து மதுபோதையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் பெண்ணின் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்தே  தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் உடனடியாக பொலிஸார் குறித்த உத்தியோகத்தரை தடுத்து நிறுத்திய நிலையில் பொறுப்பதிகாரி தனது அறையினுள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சமரசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சுதந்திரம் கொடுத்த உடனேயே யாழில் தையல்கடைக்குள் புகுந்து தன்னோடு உறவுக்கு வருமாறு பொலிசார் ஒருவர் பிரச்சனை கொடுக்கிறார்.

அவரைப் பிடித்து கொண்டு போனவரை அடிக்கப் போகிறார்.

பொறுப்பதிகாரியோ அறைக்குள் அழைத்து சமரசம் செய்கிறார்.

https://tamilwin.com/article/police-called-inappropriate-relationship-jaffna-1735040554

யாழ்ப்பணம் - காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் தகாத உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று (24) காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்றுள்ளார்.

தகாத உறவு

 

இதன்போது தையலகத்தில் பணிபுரியும் பெண்களை தகாத உறவுக்கு வருமாறு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் வற்புறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யாழில் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைப்பு! | Police Called Inappropriate Relationship Jaffna

 

தொடர்ந்து கடைக்கு வந்த இரு யுவதிகளிடமும் தன்னுடன் தகாத உறவுக்கு வருமாறு அந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொச்சைத் தமிழில் கேட்டுள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த தையலக பெண் ஒருவர் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்த நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கபட்டு பொதுமக்களால் முச்சக்கர வண்டி மூலம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பெண்ணின் உறவு

இதேவேளை பெண்ணின் உறவினர் ஒருவர் சம்பவம் தொடர்பான காணொளியும் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாழில் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைப்பு! | Police Called Inappropriate Relationship Jaffna

இதனையடுத்து மதுபோதையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் பெண்ணின் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்தே  தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் உடனடியாக பொலிஸார் குறித்த உத்தியோகத்தரை தடுத்து நிறுத்திய நிலையில் பொறுப்பதிகாரி தனது அறையினுள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சமரசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாய் வாலை நிமிர்த்த முடியாது..இது தொடர் கதைதான்..நேற்றய செய்தியில் ..எழுதுமட்டுவாழில் பாரிய மண்கொள்ளை நடபெற்ற வீடியோ பார்த்தேன்...அதில் என்பிபி எம்பி இளம்குமரன் அதிகாரிகளுடன் நிற்க...ஆடி ..அசைந்து ..வந்தபொலிசு பொறுப்பாளர் நடந்து கொண்ட முறையை பார்க்கும்போது....அவ்ருக்கு தெரியாமல் அந்த கொள்ளை நடைபெற்றிருக்க சாத்தியமே இல்லை...கொழும்பில் ஏற்பட்ட மாற்றம் ..தமிழ் பகுதியில் எந்த மாற்ற்த்தையும் ஏற்படுத்தாது..

 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, alvayan said:

நாய் வாலை நிமிர்த்த முடியாது..இது தொடர் கதைதான்..நேற்றய செய்தியில் ..எழுதுமட்டுவாழில் பாரிய மண்கொள்ளை நடபெற்ற வீடியோ பார்த்தேன்...அதில் என்பிபி எம்பி இளம்குமரன் அதிகாரிகளுடன் நிற்க...ஆடி ..அசைந்து ..வந்தபொலிசு பொறுப்பாளர் நடந்து கொண்ட முறையை பார்க்கும்போது....அவ்ருக்கு தெரியாமல் அந்த கொள்ளை நடைபெற்றிருக்க சாத்தியமே இல்லை...கொழும்பில் ஏற்பட்ட மாற்றம் ..தமிழ் பகுதியில் எந்த மாற்ற்த்தையும் ஏற்படுத்தாது..

 

பொலீசு பெரிய இடத்து ஆளாக இருப்பாரோ?

7-8 தசாப்தங்ளாக ஊழலில் ஊறியவர்களைத் திருத்துவது ரொம்ப கஸ்டம்.

நீங்க சொன்னது போல நாய்வால் தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.