Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிற்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திரும்பிச் சென்ற அவலம்

கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாட்டிற்கு வந்த சுமார் 25 அல்லது 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

ஒருகொடவத்தை RCT முற்றத்தில் இன்று (15) கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து விவாதித்து உடனடி தீர்வுகளைக் காண, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து கலந்துரையாடினார்.

இதன்போது, சுங்க அதிகாரிகள் வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் வேலை செய்ய  ஒப்புக்கொண்டனர்.

அந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, அனுமதி வழங்கும் செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஒருகொடவத்தை சுங்க முற்றத்திற்கு அருகில் வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தீர்வு முகவர்கள் சங்கம், அனுமதி செயல்முறையை விரைவுபடுத்த, இந்த செயல்முறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் 24 மணி நேர சேவையை வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=198817

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 20க்கும் மேற்பட்ட கப்பல்கள்.

கொள்கலன் அனுமதி தாமதம் காரணமாக இலங்கைக்கு வந்த சுமார் 25 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இன்று (15) ஒருகுடவத்தை முற்றத்தில் கண்காணிப்புச் சுற்றுலாவில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து கலந்துரையாடினார்.

24 மணிநேர சேவை 

இதன்போது, வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் பணியாற்ற சுங்க அதிகாரிகள் ஜனாதிபதியிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். 

நாட்டிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 20க்கும் மேற்பட்ட கப்பல்கள் | Container Permit Issue Ships Are Resent Again

குறித்த கலந்துரையாடலுக்குப் பிறகு தற்போது அனுமதி வழங்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஒருகுடவத்தை சுங்கப் பிரிவிற்கு அருகில் கப்பல் வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

எனவே, அனுமதி செயல்முறையை விரைவுபடுத்த, இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள அனைத்து முகவர் நிறுவனங்களும் 24 மணி நேர சேவையை வழங்க வேண்டும் என்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தீர்வு முகவர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

https://tamilwin.com/article/container-permit-issue-ships-are-resent-again-1736954694?itm_source=parsely-top

இதுவும் அவர் செய்த ஊழல் இவர் செய்த ஊழல் இந்தாபார் ஆள் உள்ளுக்குள் என்ற செய்திகள் போல் முதலில் 3௦ கப்பல் என்கிறார்கள் தற்போது 2௦ என்கிறார்கள் இன்னும் கொஞ்ச காலம் போனால் அப்படி கப்பல் திரும்பி போனதே இல்லை என்பார்கள் இதுதான் அனுரா அரசியல் .

  • கருத்துக்கள உறவுகள்

2023 ஆண்டிற்கான அரச செலவு 5357 பில்லியன் ரூபா என கூறுகிறார்கள், கடந்த ஆண்டிற்கான் மொத பொதுச்செலவு அதனைவிட அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2023 பொதுச்செலவில் 43% (2456 Billion) கடனுக்கான வட்டி செலுத்துதலுக்காக செலவழிக்கப்படுவதாக தரவுகள் கூறுகின்றன, இலங்கை அரசு 2028 வரை கடன் மீளழிப்பு மற்றும் வட்டி செலுத்துவதனை இடைநிறுத்தியுள்ளமையால் இவை உள்நாட்டு கடனுக்கான வட்டியாக இருக்கலாம்.

அரச ஊழ்யர்களுக்கான சம்பள கொடுப்பனவு இரண்டாவது பெரிய செலவாக உள்ளது (1005 Billion) , இது கிட்டதட்ட கடனுக்கான வட்டிக்கொடுப்பனவின் அரைவாசி செலவாக உள்ளது.

2028 இல் அரசு கடன் மீளழிக்க தொடங்கும் போது இன்னும் இந்த சுமை அதிகரிக்கும், இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் (2025 -2028)நிலமையின் தீவிரத்தினை உணர்ந்து அரச ஊழியர்கள் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துறைமுகத்தில் 2,724 கொள்கலன்கள் தேக்கம் இதுவரை 24 கப்பல்கள் திரும்பிச் சென்றன - சுங்கத் திணைக்களப் பேச்சாளர் தகவல்

Published By: DIGITAL DESK 2

25 JAN, 2025 | 05:16 PM
image
 

(எம்.மனோசித்ரா)

பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் துறைமுகத்தில் 2724 கொள்கலன்கள் தேங்கியிருக்கின்றன. அவற்றை துரிதமாக விடுவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த 24 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சீவலி அருங்கொட  தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுங்கத்திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெள்ளிக்கிழமை காலை 10 மணிவரை 2,724 கொள்கலன்கள் பரிசோதனைக்காக (Clearance) துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கொள்கலன்களை விடுவிப்பதிதல் நெறிசல் காணப்படுகின்றமை இந்த எண்ணிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எவ்வாறிருப்பினும் இவற்றை துரிதமாக விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய உத்தியோகத்தர்கள் மேலதிக நேர கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏனைய நிறுவனங்களுடனும் இணைந்து வெகுவிரைவில் இவற்றை விடுவிப்பதற்கு முயற்சிக்கின்றோம். அதேவேளை குறுகிய கால திட்டமாக கடந்த வாரம் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட இரு இடங்களைப் பெற்றுக் கொண்டு அவற்றை அபிவிருத்தி செய்து, கொள்கலன்களை அங்கு வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் கொள்கலன்களுடன் துறைமுகத்தை வந்தடையும் கப்பல்கள் தொடர்பில் சுங்கத்திணைக்களத்தால் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்த பின்னர் அவற்றிலிருந்து கொள்கலன்களை தரையிறக்குவதற்கான அனுமதியை வழங்கும் நடவடிக்கை சுங்கப்பிரிவால் முன்னெடுக்கப்படும்.

எனவே கொள்கலன் நெறிசலால் கப்பல்கள் திருப்பியனுப்பப்பட்டதாகக் குறிப்பிடுவது குறித்து எமக்கு எதுவும் தெரியாது. எவ்வாறிருப்பினும் கப்பல் முகவர்களின் சங்கம், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றின் பிரதி சுங்கத்திணைக்களத்துக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த கடிதத்தில் 24 கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தொடர்பில் எவ்வித தகவலும் விபரங்களும் எம்மிடம் இல்லை என்றார்.

https://www.virakesari.lk/article/204875

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

துறைமுகத்தில் 2,724 கொள்கலன்கள் தேக்கம் இதுவரை 24 கப்பல்கள் திரும்பிச் சென்றன - சுங்கத் திணைக்களப் பேச்சாளர் தகவல்

லன்களுடன் துறைமுகத்தை வந்தடையும் கப்பல்கள் தொடர்பில் சுங்கத்திணைக்களத்தால் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்த பின்னர் அவற்றிலிருந்து கொள்கலன்களை தரையிறக்குவதற்கான அனுமதியை வழங்கும் நடவடிக்கை சுங்கப்பிரிவால் முன்னெடுக்கப்படும்.

எனவே கொள்கலன் நெறிசலால் கப்பல்கள் திருப்பியனுப்பப்பட்டதாகக் குறிப்பிடுவது குறித்து எமக்கு எதுவும் தெரியாது. எவ்வாறிருப்பினும் கப்பல் முகவர்களின் சங்கம், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றின் பிரதி சுங்கத்திணைக்களத்துக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த கடிதத்தில் 24 கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தொடர்பில் எவ்வித தகவலும் விபரங்களும் எம்மிடம் இல்லை என்றார்.

https://www.virakesari.lk/article/204875

லஞ்சம் வாங்காமல் சுங்க அதிகாரிகள் எப்படி கொள்கலன்களை பரிசோதிப்பதாம்?...லஞ்சம் வாங்கலாம் என அறிக்கை வந்தால் சகல கொள்கலன்களும் 24 மணி நேரத்தில் கிலியர் பண்ணலாம்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.