Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?

shathivel.jpg

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் தமிழர்களின் மிக நீண்ட கால அரசியல் கோரிக்கையாகும்.

தமிழர் தாயக மண்ணான வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடையில் நின்று தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாம் பதவிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் இதற்கு தெற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என உறுதியளித்து சென்றதன் ஈரம் காயும் முன்னே அவர் அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவரும் இல்லை குறிப்பிட்டுள்ளமை, அவர்களின் அரசியல் அநாகரித்தை அம்பலப்படுத்தி உள்ளதோடு வாக்களித்த தமிழர்களையும் ஏமாற்றி தமிழர்களின் அரசியலை அவமானப்படுத்தி உள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை விடுதலை செய்வோம் என்று கூறி பதவிக்கு வந்ததும் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார் ?

இதற்கு முன்னரும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றே குறிப்பிட்டிருந்தார்.

அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்படவில்லை.

இது அரசாங்கத்திற்குள் பிளவையே வெளிபடுத்துகின்றது? தமிழர்களின் அரசியல் சார்ந்த விடயங்களில் எந்த ஒரு துளி நகர்வையேனும் தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளப் போவதில்லை என்பதும் இதன்மூலம் தெளிவாகின்றது.

கடந்த கால ஆட்சியாளர்களைப் போல் பேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழர்களின் அரசியலை பயங்கரவாதத்திற்குள் முடக்கி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுக் கொடுத்து சிங்கள பௌத்த பேரினவாதத்தை மகிழ்விக்கவே முன் நிற்கின்றது என்பது தெளிவாகின்றது.

தற்போது சிறைகளில் 10 பேரும் குறைவான அரசியல் கைதிகளை உள்ளனர். இவர்களில் மரண தண்டனை கைதிகளும் உள்ளனர். இவர்களை பயங்கரவா தடை சட்டத்திற்கு வெளியே எடுத்து விடுதலை செய்யக்கூடாது என்பதில் பேரினவாத ஆட்சியாளர்கள் உறுதியாக உள்ளதோடு; தண்டனை காலத்தையும் கடந்து சிறையில் வாடும் அவர்களின் வாழ்வை சிறைக்குள்ளேயே கொலை செய்வதற்கும் முயற்சிப்பதாகவே தோன்றுகின்றது.

கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையை வலியுறுத்தி சிறைக்குள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தையும் தொடர்ந்தனர். இவர்களின் விடுதலைக்காக தமிழர் தாயகத்திலும் கொழும்பிலும் சிங்கள மக்களின் ஆதரவோடு பல்வேறு வடிவங்களில் விடுதலைக்கான முயற்சிகள் மேற்கண்ட போதும் அது என்னால் வரை பலன் அளிக்கவில்லை.

நல்லாட்சி எனக்கூறப்படும் மைத்திரி-ரணில் ஆட்சிக்காலத்தில் அமைச்சி பதவிகள் இருந்த தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களும், எதிர்க்கட்சியில் அமர்ந்து அரச சுகபோகங்களை அனுபவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள் எதிலும் ஈடுபடவில்லை என்பதை வேதனையோடு மீண்டும் வெளிப்படுத்துவதோடு, அரசியல் கைதிகள் விடயத்தில் இவர்களும் ஆட்சியாளர்களின் சிந்தனையிலேயே இருந்தனர் என்பதே உண்மை.

விடுதலைக்கான நீலி கண்ணீரையே வடித்தனர். தற்போது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என ஊடகங்களுக்கு கூறுவது அரசியல் ஏமாற்று நாடகமே.

தமிழர் அரசியல் விடுதலைக்கான செயற்பாட்டினை போராளிகளும், மாவீரர்களும், அரசியல் கைதிகளும் உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.இன்றும் வைத்திருக்கின்றனர்(சோரம் போனவர்களைப் தவிர ஏனையோர்) என்பதை மறக்க முடியாது. இவர்களைத் தவிர்த்து அல்லது மறந்து விடுதலை அரசியல் செய்வது என்பது அரசியல் கொலைக்கு ஒப்பாகும்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடகிழக்கு எங்கும் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் மேலும் வலுப்பெறல் வேண்டும். இது குறுகிய அரசியல் நோக்கத்திற்கு அப்பால் நிகழ் வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.

இதற்கு வடக்கு கிழக்கை பிரதிதித்துவப்படுத்துபடுத்தி தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து விடுதலையை துரதப்படுத்தல் வேண்டும் எனவும் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பிற்கு எதிராக செயற்பட வேண்டாம் எனவும் கோட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்கவென பல்வேறு நாடுகளிடம் மண்டியிட்டு நாட்டின் இறைமையை, அரசியலை, வளங்களை தாரை வார்த்து சமரசம் பேசி பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யும் ஆட்சியாளர்கள் (மிக அன்மையில் இந்தியாவோடும் தற்போது சீனாவுடன் செய்து கொண்டிருக்கின்ற பந்தங்கள் உட்பட) இந்நாட்டில் மிக நீண்ட கால வரலாற்று பாரம்பரியங்களை கொண்ட தேசிய இனமான தமிழர்களோடு அரசியல் ஒப்பந்தம் செய்ய தயங்குவது ஏன்? நாட்டின் எதிர்காலம் நலன் கருதி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளோடு முன் செல்ல அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்து ஆட்சியாளர்கள் தம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்கின்றோம்.
 

https://akkinikkunchu.com/?p=308316

 

  • கருத்துக்கள உறவுகள்

அநுர அரசில் இருந்து  ஒரு நேர்மையானவராவது மேற்படி கூற்றுகளுக்கு விடையளிப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nunavilan said:

அநுர அரசில் இருந்து  ஒரு நேர்மையானவராவது மேற்படி கூற்றுகளுக்கு விடையளிப்பார்களா?

தமிழினத்தின் இருத்தலை இல்லாமற் செய்தலே தலையாய கடமையாகக் கொண்ட சிங்களத்தின் முகங்கள்மாறினாலும், அதனது நிகழ்சிநிரல் மாறாது. 80ஆண்டுகளில் நில ஆக்கிரமிப்பு முதல் தமிழின அழிப்புவரை ஒரு தொடர் செயற்பாடாக அடாவடியாகச் செய்துவரும் சிங்களத்திடம் மாற்றங்கள் நிகழாதென்பது பட்டறிவாகும். இதில் இலங்கைத்தீவுக்கு அனுர என்ன, ஆண்டவரே அரசுத்தலைவரானாலும் நிலைமாறாது. இலங்கை ஒரு கூட்டரசாக மாறாதவரை மாற்றங்கள் சாத்தியமற்றவை. இனஅழிப்பும் ஓயாத தொடர்கதையே. 

தமிழினம் தற்துணிவோடு உலக அரசியல் போக்குகளோடு உறவை வளர்த்துத் தனக்கான அரசியல் இலக்கை அடையாதவரை இலவுகாத்தகிளியாகப் பறந்து போய்க்கொண்டிருக்க வேண்டியதே.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

இலங்கை ஒரு கூட்டரசாக மாறாதவரை மாற்றங்கள்

சந்தர்ப்பம் இல்லை   .....50 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் சாத்தியம் உண்டு”  ....இன்றைய நிலையில். தமிழர்களின் ஆதரவு இல்லாமல் இலங்கையை சிங்களவன். ஆள முடியும் ....காலம் போகப் போக  சிங்களவரின். பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடும் தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும்        225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 

200 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்கள்   25 பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்களவர்கள் என்றால்   தமிழன் சிங்களவனுடன்.கூட்டாட்சி செய்வார்களா ??   1970. ஆண்டு கதைத்ததை நாங்கள் 2025 இலும். எந்த மாற்றங்களும் இன்றி கதைக்கிறோம்.  ஆனால் எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது    

பாதிரியார் அறிக்கை சிறந்தது மிக சிறந்தது   சிறைச்சாலை ஊழியர்  தனித்தனியாக விசாரிக்கபட வேண்டும்   இதற்கு சர்வதேச விசாரணை தான் சிறந்தது 🙏

அப்ப தான் சிறைகைதிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியும்   

  • கருத்துக்கள உறவுகள்

சரி அரசியல் கைதி வேண்டாம், பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்யுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி தற்போது நாட்டில் உள்ள அரசியல் கைதிகள் எத்தனைபேர் என்பதை  அரசாங்கத்தின் தரப்பில் இருந்து பெற்றுகொள்வது சாத்தியமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நிதியமைச்சரின் கருத்துக்கு சி.அ.யோதிலிங்கம் கண்டனம்!

928758413.jpg

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று இலங்கை நீதி அமைச்சர் தெரிவித்த கருத்திற்கு  அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.அ. ஜோதலிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இன்று அவர் யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே  அவர்  கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மையில் இலங்கை நீதி அமைச்சர் இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும்  இல்லை என்றும்  பயங்கரவாத  தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். 

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் தமது சுயநலத்துக்காக போராடவில்லையென்றும் அவர்கள் தமது  இனத்துக்காக போராடியவர்கள் என்றும் அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்றும்,  அவர்கள்  அரசியல் கைதிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை தமிழரசு கட்சி என்பது தமிழ் மக்களுடைய ஒரு அரசியல் இயக்கமாகும். அதன் மத்திய குழுவில் இருப்பவர்கள் ஒரு நம்பிக்கை பொறுப்பாளர்கள் என்றும்,  அவர்கள் தவறு அழைக்கின்ற போது மக்கள்,  சிவில் சமூகங்கள் தலையிட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://newuthayan.com/article/இலங்கை_நிதியமைச்சரின்_கருத்துக்கு_சி.அ.யோதிலிங்கம்_கண்டனம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.