Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (19) காலமானார்.

அவருக்கு வயது 76 ஆகும்.

1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவராவார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=198988

  • கருத்துக்கள உறவுகள்

'சரத் என் சில்வா பிரதமநீதியரசராக பதவியேற்கும் படத்தை தலைகீழாக பிரசுரித்து நீதித்துறையின் சுதந்திரத்தின் மரணம் என தலைப்பிட்டவர் விக்டர் ஐவன் "- அவரது துணிச்சல் குறித்து சாலிய பீரிஸ் புகழஞ்சலி

Published By: RAJEEBAN   20 JAN, 2025 | 11:21 AM

image

சரத் என் சில்வா பிரதம நீதியரசராக பதவியேற்கும் படத்தை ராவயவில் விக்டர் ஐவன் தலைகீழாக பிரசுரித்து இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தின் மரணம் என  குறிப்பிட்டிருந்ததை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்  முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

sarath_n_silva.jpg

பத்திரிகையாளர் விக்டர் ஐவன் அச்சமற்ற துணிச்சலான ஒருமனிதர். அவர் பல செல்வாக்குமிகுந்த நபர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டார். அவர்களில் ஒருவர் இலங்கையின் சட்டமா அதிபராக பிரதம நீதியரசராக பதவி வகித்த சரத் என். சில்வா.

சரத் என்சில்வா பிரதம நீதியரசராக பதவியேற்றதை  ராவயவின் தலைப்புச் செய்தியாக வெளியிட்டடிருந்தது - இலங்கையின்  நீதித்துறையின் சுதந்திரத்தின் மரணம் என  குறிப்பிட்டிருந்தது.

சரத் என்சில்வா பதவியேற்கும் படத்தை தலைகீழாக வெளியிட்டு இலங்கையின். நீதித்துறையின் மரணம் என ராவய தலைப்பிட்டிருந்தது.

அடுத்த பத்து வருடங்களில் விக்டர் ஐவன் சரத் சில்வாவுடன் பல சந்தர்ப்பங்களில் மோதினார். 

தனது பதவிக்காலத்தில் சரத் என்சில்வா பலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை சுமத்திய போதிலும் விக்டர் ஐவனிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு எதனையும் சுமத்தவில்லை.

இவ்வாறான நபர்களையே மியன்மாரின் ஆங் சாங் சூ கி தனது வாழ்க்கை வரலாற்று நூலில் அச்சமற்றவர்கள் என குறிப்பிடுகின்றார்.

"தனிநபர் அல்லது தேசத்தின் பெரும்கொடை என்னவென்றால் அச்சமற்றவராக விளங்குதல், அது உடல் ரீதியில் துணிச்சல் கொண்டவராக விளங்குவது மாத்திரமில்லை, மனதிலும் அச்சமற்றவராகயிருத்தல்."

https://www.virakesari.lk/article/204323

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.