Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ். செல்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

anura-4.jpg

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது யாழ். மாவட்டச் செயலகத்தில் விசேட மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அங்கத்தவர்களுடனான சந்திப்பொன்றிலும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் உள்ளன.

இதனை விடவும், தென்மராட்சியில் ஆலய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனினும் இதற்கான உறுதிப்படுத்தல்கள் இன்னமும் செய்யப்படவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்ததன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமாரவின் முதல் யாழ் விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 

 

https://akkinikkunchu.com/?p=309587

  • கருத்துக்கள உறவுகள்

தெற்குக்கு போக பயப்படுகிறார்...வடக்கு இப்ப முள்ளில்லா காடுதானே...என் ஜாய் பண்ணுங்க பாஸ்...

அங்கை இப்ப யூடியூப் கார ஆம்பளங்களை  கண்டாலே சனம்  மொய்த்து விழுகுது...உங்களுக்கு எப்படியும் டபிளாக கிடைக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

31ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் பட்ஜெட்டில் வடக்கிற்கு பல விசேட திட்டங்கள்

anura-jaffna.jpg

ஜனாதிபதியினால் எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கென விசேட வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பில் யாழில்  நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் விஜயத்தில் முதல் அம்சமாக 31ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு நடக்கவுள்ள யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்த குழுவின் தலைவரான அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சகல பிரதேச அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளதுடன், பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்காக குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டங்கள் இரண்டு நடத்தப்படவுள்ளது. யாழ். வல்வெட்டித்துறை மற்றும் மிருசுவிலில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் வெற்றி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் வெற்றியில் வடக்கு மக்கள் விசேட வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளனர். ஒரே இலங்கைக்குள் எமது பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்ற எதிர்பார்ப்புகளை இந்த வெற்றியின் ஊடாக ஏற்படுத்தியுள்ளனர். இதன்படி ஜனாதிபதி இந்த மக்களை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை பெப்ரவரி 17ஆம் திகதி ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அனைவருக்குமானதை போன்று வடக்கிற்கென விசேடமான வேலைத்திட்டங்கள் பலவற்றுக்கான யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக வடக்கு மக்கள் தமது அரசியல் பயணத்திற்காக தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்துள்ளனர். இதனால் இவர்களுக்கு தனது கௌவரத்தை வழங்குவதற்காகவே ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்துடன் நீண்ட காலமாக தீர்க்கப்படாது இருக்கும் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம் என்றார்.

 

https://akkinikkunchu.com/?p=309925

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.செல்லும் ஜனாதிபதி அநுர

யாழ்.செல்லும் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என பல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதியின் வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில், போராட்டம் நடத்துவதை தடை செய்யக் கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (29) மனுத்தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளைய தினம் வியாழக்கிழமை (30) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

https://oruvan.com/president-anuradhapura-to-visit-jaffna/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.