Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 Jan, 2025 | 10:48 AM
image
 

இந்தியா மீனவர்கள் தமது கடற்பரப்பை  தாண்டி இலங்கை மீனவர்களின் கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவது அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் நீர்வளத் துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்  நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட  சம்பவம் தொடர்பில் கருத்துத் தொரிவித்தபோதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை இறைமையுள்ள நாடு அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.  இந்திய  மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு   எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றார்கள்.

இந் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) காங்கேசன் துறைக்  கடற்பரப்பில் இந்தியா மீனவர்கள் அத்துமீறி வருகை தந்து  மீன்பிடியில்  ஈடுபட்டிருக்கிறார்கள்.

அவர்களை கைது செய்வதற்காக கடற்படையினர் சுற்றிவளைத்து அவர்களின் படகுக்குள் கடற்படையினர் ஏறியுள்ளனர்.

இவ்வாறு ஏறிய மீனவர்களை படகுடன் இழுத்துச் செல்வதற்கு இந்திய மீனவர்கள் தயாரானபோது கடற்படையினர் தடுத்து நிறுத்துவதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்திய அத்துமீறிய மீன்பிடி விவகாரம்  இன்று நேற்று உருவானது விடயம் அல்லை பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை.

இந்த பிரச்சனைக்கு எமது ஆட்சியில் தீர்வை காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனெனில் மக்களை  தொடர்ச்சியாக  கண்ணீர் விட வைக்க முடியாது.

நாங்கள் பலமுறை இந்திய மீனவர்களை தயவாகக் கேட்டுள்ளோம் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள் எமது மீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று.

அண்மையில் கூட நெடுந்தீவு மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் இந்திய இழுவைப்  படகுகள் அத்து மீறி உள் நுழைந்து அப்பகுதி மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தியதுடன் அவர்களை பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களாக ஆக்குகின்றனர். 

நான் அந்த பகுதிக்கு விஜயம் சென்றபோது மக்கள் கண்ணீர் மல்க இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துங்கள் எங்களால் வாழ முடியாது உள்ளது என கூறுகிறார்கள். 

எமது மீனவ மக்களை இந்திய அத்துமீறிய மீனவர்கள்  துன்பப்படுத்தும் செயற்பாடுகளை எக் காரணத்தினாலும்  அனுமதிக்க முடியாது.

எமது இலங்கை கடற்படை தமது கடல் எல்லையை பாதுகாப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அத்துமீறும் இந்திய மீன்பிடிப் படகுகளை கைது செய்வது வழமையான செயற்பாடு. 

கைது நடவடிக்கைகளில் ஒத்துழைக்காத படகுகளை துரத்தும் போது சில அசம்பாவிதங்கள் கடலில் ஏற்படுகின்றன இவை  கடந்த காலங்களிலும் இடம் பெற்றுள்ளன. 

ஆகவே இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை   தாண்டாது மீன்பிடியில் ஈடுபடுவது தேவையற்ற அனர்த்தங்களை தவிக்கும்  என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதே அனர்த்தங்களுக்கு வழிவகுக்கிறது ; அமைச்சர் சந்திரசேகரன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வொன்று கிடையாது - வெளிவிவகார பேச்சாளர்

Published By: DIGITAL DESK 7   29 JAN, 2025 | 08:42 PM

image

(எம்.மனோசித்ரா)

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வொன்று கிடையாது. தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளே தற்போதும் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய இராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிலுக கதுருகமுவ தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் காயமடைந்தமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக பத்தரமுல்லையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் புதன்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை குறித்து நீண்ட காலமாக அதிகாரிகள் மட்டத்திலிருந்து அரச தலைவர்கள் மட்டம் வரை இந்தியாவுடன் மிக ஆழமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவை தவிர இரு நாட்டு கடற்றொழில் அமைச்சுக்களின் செயலாளர்களால் தலைமைத்துவம் வகிக்கப்படும் ஒன்றித்த செயற்குழுவும் காணப்படுகிறது.

2015ஆம் ஆண்டு இக்குழு நியமிக்கப்பட்டது. இதுவரை 6 சந்தர்ப்பங்களில் இந்த குழு கூடியுள்ளது. இறுதி கலந்துரையாடல் கடந்த ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.

இதன் போது இவ்வாறான சகல விடயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும். அந்த வகையில் தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளே தற்போதும் இடம்பெற்று வருகின்றன.

இது ஒரு நாளில் நிறைவடையும் பிரச்சினையல்ல. இந்த பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்காக இராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்திருக்கின்றோம். ஆனால் இதற்கு தீர்வு என்ற ஒன்று இல்லை. இழுவைப் படகு முறைமை என்பது இலங்கையில் மாத்திரமின்றி இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட ஒரு மீன்பிடி முறைமையாகும்.

எனினும் அந்த முறைமையைப் பயன்படுத்தியே இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர். சட்டதுடன் தொடர்புடைய தரப்புக்களின் ஊடாகவே கைதுகள், அதனையடுத்த சட்ட நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படுகின்றன. வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த சம்பவம் தொடர்பில் எம்மிடம் நேரடியாக கேள்வியெழுப்பவில்லை. எனினும் டில்லியிலுள்ள பதில் உயர்ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இது குறித்து அறிவித்துள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/205266

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய உறவுகளை பாதுகாக்கும் முயற்சிக்கு வேட்டு வைப்பதாகவே இந்திய மீனவர்களது செயற்பாடு உள்ளது

பேச்சுவார்த்தை மூலம் இலங்கை – இந்திய மீனவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் அதற்கு இரண்டு கரங்களையும் உயர்த்தி நாங்கள் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணம் – சங்கானை பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீனவர்களின் தலைவர்களை நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால், நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயார்.

உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய தொப்புள்கொடி உறவுகள், எங்களுக்கு அண்மித்த நாடு அந்தவகையில் நாங்கள் நல்ல முறையில் எங்களுடைய உறவுகளை பேணி பாதுகாப்பதற்கே முயற்சிக்கின்றோம்.

அந்த முயற்சிக்கு வேட்டு வைக்கின்ற வேலையாகவே இந்திய தமிழ்நாட்டு மீனவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/315041

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of fishing, boat, sail and text that says 'INDIA C INDIA T morning 志 COAST INDIAN GUARD INDIAN NAVY Puccep 31.01.2025. さL'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.