Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக கூடிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது – ரோகிங்யா அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
01 Feb, 2025 | 06:57 PM
image
 

அனைத்து நபர்களையும் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக கூடிய நாட்டிற்கு மீள செல்லுமாறு நிர்ப்பந்திக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் தடுத்துவைக்கபட்டுள்ள ரோகிங்யா அகதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

அனைத்து நபர்களையும் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு நபர் பலவந்தமாக காணாமலாக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்வார் என கருதுவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளபட்சத்தில் அந்த நபரை வேறு நாட்டிற்கு நாடு கடத்தவோமுடியாது என  இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் ரோகிங்யாமக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது குறித்த எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது இலங்கை அரசாங்கம்பலவந்தமாக காணாமல்செய்யப்படுதல் குறி;த்த ஆபத்தை கருத்தில் கொள்ளவேண்டும் இலங்கை அரசாங்கம் உள்நாட்டு சட்டத்திற்கு கட்டுப்படவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக கூடிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது – ரோகிங்யா அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த குடிமக்களையே கொன்றும், புதைத்தும்,  பலவந்ததாக காணாமல் ஆக்கியும், சொந்த இருப்பிடங்களை விட்டு பலாத்காரமாக  வெளியேற்றிவிட்டு அவர்களின் பூர்வீக காணிகளில் விகாரைகளை கட்டி அபகரித்துக்கொண்டு, அதிகாரத்தை காட்டி மிரட்டும் நாடு இது. அது, மற்றைய நாட்டு மக்களை பாதுகாத்து, தனது அடாவடியை மறைத்து, பிரச்சாரம் செய்யுதாம். 

"ஓதுறது பிரித்,  இடிக்கிறது சிவன் கோயில்."

  • கருத்துக்கள உறவுகள்+
29 minutes ago, satan said:

"ஓதுறது பிரித்,  இடிக்கிறது சிவன் கோயில்."

அருமையான வசனம்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

சொந்த குடிமக்களையே கொன்றும், புதைத்தும்,  பலவந்ததாக காணாமல் ஆக்கியும், சொந்த இருப்பிடங்களை விட்டு பலாத்காரமாக  வெளியேற்றிவிட்டு அவர்களின் பூர்வீக காணிகளில் விகாரைகளை கட்டி அபகரித்துக்கொண்டு, அதிகாரத்தை காட்டி மிரட்டும் நாடு இது. அது, மற்றைய நாட்டு மக்களை பாதுகாத்து, தனது அடாவடியை மறைத்து, பிரச்சாரம் செய்யுதாம். 

"ஓதுறது பிரித்,  இடிக்கிறது சிவன் கோயில்."

அது பழைய அரசாங்கம் ...புது அரசாங்கம் சொக்க தங்கமான‌ அரசாங்கமாம்...ஐக்கிய நாடுகள் ம்னித உரிமை பேரவையில் இவையளுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுப்பதற்க்காக  இதை சில மேற்கு நாடுகள்  கை தட்டி வரவேற்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

.புது அரசாங்கம் சொக்க தங்கமான‌ அரசாங்கமாம்.

இவர்கள் தங்கள் பதவியை விட்டு விலகும்போது, மக்கள் சொல்ல வேண்டும். அப்படி இவர்கள் சொர்க்க தங்கமாய் இருந்தால்; இலங்கையில் வேறொரு அரசாங்கம் இனிமேல் பதவியேற்கவேண்டிய தேவையில்லை என்கிறீர்கள்? எனது எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் நம்மடையள் சிலதுகள் அதை தடுக்குதுகள் போலிருக்கே தமது பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக.    

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2025 at 16:33, satan said:

 ஆனால் நம்மடையள் சிலதுகள் அதை தடுக்குதுகள் போலிருக்கே தமது பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக.    

நம்மடையதுகளை விடுங்கோ,ஆனால் வேறு புற சக்திகள் இவர்கள் அரசாங்கத்தை தொடர விடுவார்களா? இதே இடதுசாரி கொள்கையுடன்? ஒன்றில் தோழரின்ட கோஸ்டிகள் புரோ,மச்சி ,மச்சான் என மாறவேண்டும்...இவர்கள் புரோ ஸ்டைலுக்கு மாறினால் மற்ற புரோக்கள் இவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

நம்மடையதுகளை விடுங்கோ,ஆனால் வேறு புற சக்திகள் இவர்கள் அரசாங்கத்தை தொடர விடுவார்களா? இதே இடதுசாரி கொள்கையுடன்? ஒன்றில் தோழரின்ட கோஸ்டிகள் புரோ,மச்சி ,மச்சான் என மாறவேண்டும்...இவர்கள் புரோ ஸ்டைலுக்கு மாறினால் மற்ற புரோக்கள் இவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்...

கரணம் தப்பினால், இவர்கள் அவர்களுக்கு எதிராக எடுக்கும் ஆயுதம் இவர்களை அழிக்கும். ஆகவே, இவர்கள் நிதானமாக, விரைவாக அவர்களை உள்ளே அனுப்பவேண்டும். அவர்கள் படுகிற அவஸ்தை, விடுகிற அறிக்கைகளை பாத்தா: இந்தமுறை தப்பமுடியாது போலிருக்கு. மக்களும் கைவிட்டு விட்டார்கள். பிச்சை எடுத்து வீடு கட்டுவோம், இறந்த உடலை பதப்படுத்துவோம் என அறிக்கைகள் தூள் கிளப்புகிறது. உடலை பதப்படுத்துவோம் என்றவரை உள்ளுக்கை சேர்க்க வேண்டாமென எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம். ஊழல்வாதிகளெல்லாம் மஹிந்தாவுக்காக அழுகிறார்கள், அவர் நிழலில் தாங்கள் தப்பிப்பதற்காக. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

கரணம் தப்பினால், இவர்கள் அவர்களுக்கு எதிராக எடுக்கும் ஆயுதம் இவர்களை அழிக்கும். ஆகவே, இவர்கள் நிதானமாக, விரைவாக அவர்களை உள்ளே அனுப்பவேண்டும். அவர்கள் படுகிற அவஸ்தை, விடுகிற அறிக்கைகளை பாத்தா: இந்தமுறை தப்பமுடியாது போலிருக்கு. மக்களும் கைவிட்டு விட்டார்கள். பிச்சை எடுத்து வீடு கட்டுவோம், இறந்த உடலை பதப்படுத்துவோம் என அறிக்கைகள் தூள் கிளப்புகிறது. உடலை பதப்படுத்துவோம் என்றவரை உள்ளுக்கை சேர்க்க வேண்டாமென எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம். ஊழல்வாதிகளெல்லாம் மஹிந்தாவுக்காக அழுகிறார்கள், அவர் நிழலில் தாங்கள் தப்பிப்பதற்காக. 

ஜெ.ஆர் சிறிமாவுக்கு ஏற்படுத்திய நிலை அதாவது குடியுரிமையை இல்லாமல் செய்து அவர்கள் தொடர்ந்து அரசியல் செய்ய விடாமல் தடுப்பார்கள்...ஆனால் 
கைது நடவடிக்கையில்  இன்னும் மகிந்தா,கோத்தா,நாமல் போன்ற அரசியல்வாதிகளை கைது செய்யாமல் ஏன் ஜோசிதாவை கைது செய்துள்ளனர் என்ற கேள்வியும் எழுகின்ற்து

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களும் கைது செய்யப்படுவார்கள். எடுத்தவுடன் பெரிய தலையில் கைவைக்காமல் சின்னவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று, ஆறுதலாக இறுதியாக, உறுதியாக கைவைக்கும்போது எதுவும் சொல்லி தப்பிக்க முடியாது. அதாவது அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கல் அது இதென்று.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.