Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளிகள்

Featured Replies

அமாவாசை இரவுகளில்..

அவளோடு புறப்பட்டால்..

நிலவை மறந்து விடுகிறேன்...

பனித்துளிகள் படர்வதனால்...

நான் ஏக்கப்பட்டும்

பூக்களைப் பறிப்பதில்லை..

சலங்கைகள்..

அடிபட்டுக்கொள்வதை..

தலையாட்டி ரசிப்பவன்..

விமர்சகன்..

மழைத்துளி விழுந்து வழிந்து..

ஓடாவிட்டால்....

நதிகள் பாவம்..

இரவில் மட்டும் பெருமையடிக்கும்..

மின்மினிப்பூச்சிகளுக்கு..

அருந்ததி..நகர்வது..

தெரிவதில்லை..

என் திருவிழா நாட்கள்..

என் செல்வத்தைக் கரைப்பதில்லை..

இதயத்தை..

தந்தை சொன்னது போல்..

நண்பர்கள்..துன்பத்தில்..

உதவிட வரவில்லை

உயிர் விட வந்தார்கள்..

கசக்கிய காகிதத்தைப் பார்த்து

பேனா சிரிக்கிறது..

அதன்..மை முடிவது தெரியாமல்.

Edited by vikadakavi

உங்கள் கைகூர் துளிகள் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்.

என் திருவிழா நாட்கள்..

என் செல்வத்தைக் கரைப்பதில்லை..

இதயத்தை..

இதன் அர்த்தம் என்ன?? :rolleyes:

  • தொடங்கியவர்

திருவிழா நாட்கள்...

பொதுவாக சில்லறையை காலி செய்யும்..

என் போன்ற காளைகளுக்கு :rolleyes: .. தாவணி பெண்களிடம்..இதயம் தொலைந்துவிடும் என்பதை சொல்ல நினைத்தேன்..

சரி வர சொல்லவில்லைப் போலும்.. :unsure:

திருவிழா காலம் ஏன் வெல்வத்தை காலி செய்யும் என்று தான் முதலில் புரியவில்லை.... சரி ஏனோ பணத்தை செவவு செய்வீங்க போல... :lol:

  • தொடங்கியவர்

திருவிழா நாட்களில் உங்களுக்கு பணவிரயம் ஏற்படாதா கவரிமான்...

சரி போகட்டும் விடுங்கள்... :lol:

விகடகவி,

//கசக்கிய காகிதத்தைப் பார்த்து

பேனா சிரிக்கிறது..

அதன்..மை முடிவது தெரியாமல். //

கடைசியில் நல்ல முத்திரை வைத்திருக்கிறீர்கள்... வாழ்க்கையின் பாடமும் அதுவே தான்... சொல்லாமல் சொல்லும் உத்தி.... நல்லது...

ஒரு சின்னச் சந்தேகம்... (உனக்குமா என்று கேட்காதீர்கள்..)

//அமாவாசை இரவுகளில்..

அவளோடு புறப்பட்டால்..

நிலவை மறந்து விடுகிறேன்...//

இதில் அமாவாசை இரவுகளில் என்று தொடங்கியிருக்கிறீர்கள்.... பெளர்ணமி இரவுகளில் என்று தொடங்கியிருந்தால் கன கச்சிதமாய் இருந்திருக்கும் போல் தோன்றுகிறது... பெளர்ணமி இரவில் தான் நிலாவின் அழகைப் பருகலாம்.... அவளோடு புறப்படுவதால் வானத்து நிலா எதற்கு என்ற சிந்தனையில் நிலாவை மறந்திருக்கலாம் என்று யோசிக்கலாம்.... (அது சரி வெண்ணிலா இல்லை தானே ;0) )

ஆனாலும் உங்கள் வரிகளை வைத்துக் கொண்டு படிக்கும் போதும் கருத்து சரியாக வருகிறது ... இல்லாத போது தானே நினைப்பு வரும்... இன்று அமாவாசை ...நிலா இருக்காது... அவளோடு நடப்பதால் அந்த நினைப்பை மறந்து விடுகிறேன் என்று கூட யோசிக்கலாம்... என்ன விகடகவி உங்கள் பெயரைப் போல எப்படிப் பார்த்தாலும் ஏதோ ஒரு பொருள் வருகிறதே... கவிஞர்கள் எழுதும் போது யோசிக்காத கருத்தை வாசகன் இப்படி நினைந்து தான் கவிஞர் எழுதியிருக்கிறார் என்று கருதிக்கொள்வதுமுண்டு...!

என் சந்தேகம் என்னவென்றால் இதில் நீங்கள் எதை யோசித்து எழுதினீர்கள்...? ஆரோக்கியமான கேள்வியாகக் கருதி பதில் சொல்லுங்கள்...

  • தொடங்கியவர்

பசிக்கும்போதுதானே உணவின் எண்ணம் தோன்றும்..

நிலவின் வெளிச்சம் இருளில்தானே கைகொடுக்கும்..

அந்த நிலா இல்லாத குறையை.. நிரப்புகின்ற என்னவள்..

இருளில் ஒளி வீசும் தேவதை போல.. :lol:

அவள் வெளிச்சத்தில் நிலா பற்றிய சிந்தனை வருவதில்லை என்று சொல்லவந்தேன்.. :lol:

சொல்ல வந்தது சரியாக சேராவிட்டால் கவிதை சரியாக எழுதப்படவில்லை என்று பொருள்..

ஆனால் புதுக்கவிதைக்கு இப்படியான வரைமுறை விலக்கு இருக்கிறது..

வாசகர்கள் தங்கள் கருத்தை பன்முகமாகத் திருப்பிக்கொள்ளலாம்..

ரசித்திட ஒரு கவிதை வாழ்த்துக்கள்

தந்தை சொன்னது போல்..

நண்பர்கள்..துன்பத்தில்..

உதவிட வரவில்லை

உயிர் விட வந்தார்கள்..

சூப்பர் துளிகள்.

அதிலும் என் மனதை தொட்டது நட்பின் துளி.

தொடர்ந்து தூறட்டும் விகடகவியாரே உங்கள் துளிகள்.

(அது சரி வெண்ணிலா இல்லை தானே ;0) )

ரூபன் க்கு இப்ப எல்லாம் நக்கல் கூடிட்டு. வாறன் இருங்கோ

கசக்கிய காகிதத்தைப் பார்த்து

பேனா சிரிக்கிறது..

அதன்..மை முடிவது தெரியாமல்]

:lol::lol:

நன்றாக உள்ளது....

  • தொடங்கியவர்

நன்றி.. கஜந்தி..வெண்ணிலா..இனியவள்.

//ரூபன் க்கு இப்ப எல்லாம் நக்கல் கூடிட்டு. வாறன் இருங்கோ //

வெண்ணிலா எங்க வரப்போறியள்... :lol:

//ரூபன் க்கு இப்ப எல்லாம் நக்கல் கூடிட்டு. வாறன் இருங்கோ //

வெண்ணிலா எங்க வரப்போறியள்... :D

:D லண்டனுக்குத்தான். :lol:

  • தொடங்கியவர்

ஐயோடா.. அப்ப கனடாக்காரர்?. :D

ஐயோடா.. அப்ப கனடாக்காரர்?. ^_^

:D:lol: ஆரம்பிச்சிட்டாங்க.

கனடாக்காரர் இப்ப லண்டனுக்கு வந்துட்டார் :D

  • தொடங்கியவர்

:D:lol: ஆரம்பிச்சிட்டாங்க.

கனடாக்காரர் இப்ப லண்டனுக்கு வந்துட்டார் ^_^

அட சொல்லியிருந்தா போய் சந்திச்சு இருப்பேன்லா.. :D

அட சொல்லியிருந்தா போய் சந்திச்சு இருப்பேன்லா.. :D

:lol: நீங்கதான் பிசி ஆச்சுதே. ஏன் சிரமம் கொடுப்பான் என்று சொல்லாமல் இருந்துட்டேன். :D

மாமோய் கவிதை சூப்பரா இருக்கு அதிலும் இந்த துளி மிகவும் நன்றாக இருகிறது வாழ்த்துகள்!! :)

கசக்கிய காகிதத்தைப் பார்த்து

பேனா சிரிக்கிறது..

அதன்..மை முடிவது தெரியாமல்.

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நன்றி ஜம்மு என்ன பஞ்ச் கவிதையக்காணோம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.